Jump to content

தோனி பங்களிப்பு செய்யாமல் இருந்தால்தான் மாற்று வீரர்களை பரிசீலிக்க முடியும்: எம்.எஸ்.கே.பிரசாத் கருத்து


Recommended Posts

தோனி பங்களிப்பு செய்யாமல் இருந்தால்தான் மாற்று வீரர்களை பரிசீலிக்க முடியும்: எம்.எஸ்.கே.பிரசாத் கருத்து

 

 
dhoni

தோனி.   -  படம். | ஏ.எப்.பி.

இலங்கை அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ‘தோனி, ஆட்டோமேட்டிக் தேர்வா’ என்று கேள்வி எழுப்பப்பட அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் ‘அப்படியல்ல’ என்று பதிலளித்தார்.

அதாவது அணித்தேர்வு செய்யும் போது கோலி, தோனி... சரி.. அடுத்தது என்ற ரீதியில் தேர்வு நடைமுறை செல்கிறதா என்று செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பிரசாத் பதில் அளிக்கும் போது,

“நான் இப்போதுதான் ஆந்த்ரே அகாஸியின் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அவரது டென்னிஸ் வாழ்க்கை உண்மையில் 30-வயதில்தான் தொடங்கியது. அதுவரை 2 அல்லது 3 முறை வென்றிருப்பார். ஆனால் அதன் பிறகுதான் அவரது ஆட்டம் களைகட்டியது. அவரும் ஊடக அழுத்தத்திற்கு ஆளானார். ’எப்போது ஓய்வு பெறப்போகிறீர்கள்? என்று கேட்டுக் கொண்டேயிருந்தனர், ஆனால் அவர் 36 வயது வரை ஆடி பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார். எனவே யாரும் எதுவும் கூறமுடியாது. நமக்குத் தெரியாது. எனவே ஆட்டோமேட்டிக் என்று நாங்கள் கூற மாட்டோம். ஆனால் பொறுத்திருந்து பார்ப்போம். இந்திய அணி நன்றாக ஆட வேண்டும் என்று நாம் அனைவருமே விரும்புகிறோம். அவர் பங்களிப்பு செய்ய முடியும் போது ஏன் அவர் நீடிக்கக் கூடாது? அப்படியில்லையெனில் மாற்றுகளை பரிசீலிக்கலாம்.

தோனி மட்டுமல்ல அனைத்து வீரர்கள் பற்றியும் விவாதிப்போம், அணிச்சேர்க்கை என்று வரும்போது அனைவரையுமே விவாதிப்போம்” என்றார்.

2019 உலகக்கோப்பையில் தோனி பற்றி எவ்வளவு தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது என்ற கேள்விக்கு பிரசாத், “நாம் பார்ப்போம், பார்ப்போம். அவர் ஒரு லெஜண்ட், ஆனாலும் எங்களிடம் திட்டம் உள்ளது.

ரிஷப் பந்த்தை பொறுத்தவரையில் எதிர்காலத்திற்காக பார்க்கப்பட வேண்டிய வீரர் ஆவார். அவரை ஏ தொடர்களில் வளர்த்தெடுத்து வருகிறோம். தென் ஆப்பிரிக்கா ஏ தொடருக்கு அவர் சென்றார், ஆனால் அங்கு அவரது ஆட்டம் சாதாரணமாக இருந்தது. அதற்காக அவர் தேர்வுப் பரிசீலனையில் இல்லை என்று அர்த்தமல்ல. இன்னொரு ஏ தொடர் வருகிறது, ரிஷப் பந்த் டி20 வீரர் என்பதையும் கடந்தவர் என்பதை அறிவோம், எனவே அவரை எப்போதும் பரிசீலிப்போம்.

என் இதயத்தில் கை வைத்துச் சொல்ல வேண்டுமெனில் சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகே வலுவான அணி வேண்டுமென்றே நாங்கள் அனைவரும் கருதினோம். நம் அணியினர் உடல்தகுதியை மேலும் வலுவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். பீல்டிங் தரத்தை முன்னேற்ற வேண்டும். 2019 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யும் முன் 2-3 அளவுகோல்களை வைத்துள்ளோம். எனவே இந்த அளவுகோல்களை பூர்த்தி செய்யாத வீரர்கள் 2019 உலகக்கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்பில்லை. அது யாராக இருந்தாலும் சரி.

ஏ அணி மட்டத்தில் ராகுல் திராவிடை பயிற்சியாளராக அடைந்தது ஆசீர்வாதம்தான். அவர் முழுதும் தயாரான வீரர்களை இந்திய அணிக்காக ஏ அணியிலிருந்து அளித்து வருகிறார். வரும் வீரர்கள் நேரடியாக அணியுடன் இணைந்து செயல்பட முடியும். ராகுல் திராவிடை நியமித்ததன் ஒட்டுமொத்த பெருமையும் பிசிசிஐ-யே சாரும். ராகுல் திராவிட் நாள் முழுதும் வீரர்களுக்கு பந்துகளை வீசி பயிற்சி அளித்துக் கொண்டிருப்பதை பார்க்கிறேன், தன்னிடமே அனைத்துப் பொறுப்பையும் வைத்துள்ளார். அந்த மட்டத்தில் ராகுல் திராவிட் போல் ஒருவர் கிடைத்திருப்பது அதிர்ஷ்டமே.

இவ்வாறு கூறினார் அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்.

http://tamil.thehindu.com/sports/article19492261.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.