Jump to content

உதைபந்தாட்டமும் இடக்குமுடக்கான கேள்விகளும் நடுவரின் சரியான தீரப்புக்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உதைபந்தாட்டமும் இடக்குமுடக்கான கேள்விகளும்
நடுவரின் சரியான தீரப்புக்களும்

உதைபந்தாட்ட விதிமுறைகள் பலதும் மேலெழுந்தவாரியாக  எப்போதும் ஒரேமாதிரியாக இருந்தாலும்

உள்ளே சென்று பார்த்தால் அவ்வப்போது  பல சிறிய திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கும்.

அவற்றை விளங்கிக்கொள்ளவும்  அறிந்துகொள்ளவும்

இந்திரியை ஒரு கேள்வி பதில் திரியாக ஆரம்பித்துள்ளேன்.

உங்களிடம் இருக்கும் கேள்விகளையும்  இங்கே முன்வைக்கலாம்.
நகைச்சுவையாகவும் மற்றவர்களுக்கு உதவும் வகையிலும்

இத்திரியைக் கொண்டுசெல்வதற்கு உங்கள் ஆதரவை வேண்டுகின்றேன்.

கேள்வி
தண்டனை உதை

சாதாரண 90  நிமிட விளையாட்டு நேரத்தில்  விளையாட்டுவீரர்  இலக்கம் 9 இனால்  சரியானமுறையில்  உதைக்கப்பட்ட தண்டனை உதை இலக்கு கம்பத்தில் பட்டு மீண்டும் மைதானத்திற்குள்  வருகின்றது.

அப்போது  இலக்கு காப்பாளரும் தண்டனை உதையை உதைத்தவரும் (9 )  அந்தப் பந்தை நோக்கி ஓடி வருகின்றனர். இலக்கம் 9 . பந்தை மீண்டும் இலக்குக்குள் உதைப்பதற்கு முன்னர் இலக்கு காப்பாளர் அவரைத்  தனது கைகளால் பிடித்து இழுத்து விட்டார்.
மத்தியஸ்த்தர் விளையாட்டை இடைநிறுத்துகின்றார்.
அடுத்து ஏன், எப்படி விளையாட்டைத் தொடர வேண்டும் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17.8.2017 at 1:08 PM, வாத்தியார் said:

உதைபந்தாட்டமும் இடக்குமுடக்கான கேள்விகளும்
நடுவரின் சரியான தீரப்புக்களும்

 

கேள்வி
தண்டனை உதை

சாதாரண 90  நிமிட விளையாட்டு நேரத்தில்  விளையாட்டுவீரர்  இலக்கம் 9 இனால்  சரியானமுறையில்  உதைக்கப்பட்ட தண்டனை உதை இலக்கு கம்பத்தில் பட்டு மீண்டும் மைதானத்திற்குள்  வருகின்றது.

அப்போது  இலக்கு காப்பாளரும் தண்டனை உதையை உதைத்தவரும் (9 )  அந்தப் பந்தை நோக்கி ஓடி வருகின்றனர். இலக்கம் 9 . பந்தை மீண்டும் இலக்குக்குள் உதைப்பதற்கு முன்னர் இலக்கு காப்பாளர் அவரைத்  தனது கைகளால் பிடித்து இழுத்து விட்டார்.
மத்தியஸ்த்தர் விளையாட்டை இடைநிறுத்துகின்றார்.
அடுத்து ஏன், எப்படி விளையாட்டைத் தொடர வேண்டும் ? 


விளக்கம்
பனால்ட்டியை அடித்தவர் இரண்டாவதுமுறையும் அந்தப்பந்தை அடிப்பது தவறு. இடையில் இன்னொருவீரர் மீது பந்து முட்டியிருக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து இரண்டாவது முறையாக உதைக்கப்படும் பந்து இலக்கை எட்டினாலும் அது இலக்காகச் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.
ஒன்பதாம் இலக்க வீரர் பந்தை அடிக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளவேண்டும் அடிக்க முயற்சி மட்டுமே செய்தார். அது தவறல்ல.

ஆனால் பந்தை அடிக்க முன்னரே
பந்தை அடிக்கவரும் வீரரை அவர்  யாராக இருந்தாலும்  தடுப்பாளர் இழுத்துப்பிடித்தது  தவறு.


இந்தத் தவறுக்காக இலக்குத்  தடுப்பாளருக்கு மஞ்சள் அட்டை மூலம்   எச்சரிக்கை வழங்கப்படும் .
அத்துடன் மீண்டும் 9  ஆம் இலக்க வீரரின்  அணிக்கு சார்பாகத்   தண்டனை உதை அளிக்கப்பட்டு விளையாட்டுத் தொடரும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகளாவியரீதியில் விளையாடப்படும் ஒரு உதைபந்தாட்ட மைதானத்தின் நீளம் எத்தனை மீற்றர்? அகலம் எத்தனை மீற்றர்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.