Jump to content

உலகின் தலையீடு நடக்கக்கூடியதா?


Recommended Posts

உலகின் தலையீடு நடக்கக்கூடியதா?

 
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தனது கடைசி ஆயு­தத்­தைக் கையில் எடுத்­துள்­ளது. சிங்­கள அர­சு­கள் தாமா­கத் தீர்­வைத் தரப்­போ­வ­தில்லை என்­ப­தால் உலக நாடு­கள் மற்­றும் ஐக்­கிய நாடு­கள் போன்ற உலக அமைப்­பு­கள் தலை­யிட்டு தமி­ழர்­க­ளுக்­கும் சிங்­க­ள­வர்­க­ளுக்­கும் இடை­யில் நடு­நிலை வகிக்­க­வேண்­டும் என்­பதே அந்த ஆயு­தம்.

2015ஆம் ஆண்டு மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டன் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் ஒரு
கூட்டு இணக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­னார். அரச தலைவருக்கான தேர்­த­லில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிப்­பது என்­பது அந்த இணக்­கம். முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வைப் பத­வி­யி­லி­ருந்து அகற்றி ரணி­லின் ஆத­ர­வு­டன் மைத்­தி­ரி­பா­லவை அரி­யணை ஏற்­று­வ­தற்­குப் பதிலீடாக தமி­ழர்­க­ளுக்கு என்ன கிடைக்­கப்­போ­கி­ றது என்­கிற கேள்வி அப்­போதே எழுப்­பப்­பட்­டது.

தமி­ழர்­க­ளுக்­குக் கிடைக்­கப்­போ­கும் நன்­மையை உறு­திப்­ப­டுத்­தும் விதத்­தில் மைத்­திரி மற்றும் ரணி­லு­டன் எழுத்து மூல உடன் ப­டிக்கை ஒன்றை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டது. கூட்­ட­மைப்­புக்கு உள்­ளே­யும் வெளி­யே­யும் இது தொடர்­பில் சம்­பந்­த­ருக்கு அதிக அழுத்­தங்­கள் கொடுக்­கப்­பட்­டன.

ஆனால் அவற்றை ஒதுக்கி வைத்­து­விட்டு எழுத்து மூல உடன்­ப­டிக்கை ஒன்று இல்­லா­ம­லேயே சம்­பந்­தர் ஆத­ரவு வழங்­கி­னார். தமிழ் மக்­க­ளின் ஆத­ர­வை­யும் திரட்­டிக்­கொ­டுத்­தார். இது இத­யங்­கள் இடை­யி­லான ஒப்­பந்­தம் என்று அதனை அவர் வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்­தி­னார்.

எழுத்து மூல ஒப்­பந்­தத்­தையே மதிக்­காத வர­லாற்­றைக் கொண்ட சிங்­க­ளத் தலை­மை­கள், இத­யங்­க­ளின் இணைப்­பையா மதிக்­கப்­போ­கின்­றன என்­கிற விமர்­ச­னங்­கள் அப்­போதே எழுந்திருந்தன. என்­றா­லும் மைத்­தி­ரிக்­குப் பல­வீ­ன­மா­க­வும், மகிந்­த­வுக்­குப் பல­மா­க­வும் மாறி­வி­டக்­கூ­டி­ய­தான ஓர் எழுத்து மூல ஒப்­பந்­தத்தை சம்­பந்­தர் ஒரு­போ­தும் வலி­யு­றுத்­த­வில்லை.

அதற்­கான கார­ணம், இலங்­கை­யில் ஆட்சி மாற்­றம் உல­கின் சக்­தி­மிக்க நாடு­க­ளி­ன­தும் தேவை­யாக இருந்­த­தால், அத­னோடு ஒத்­தோ­டு­ வ­தன் மூலம் உலக நாடு­களை தனக்­குப் பக்­கத்­து­ணை­யாக, பக்­க­ப­ல­மாக மாற்­றிக்­கொள்­வ­து­தான்.

போருக்­குப் பின்­ன­ரான காலத்­தில் உலக நாடு­கள் தமி­ழர்­க­ளோடு நிற்­கின்­றன என்­பதை உறு­தி­யாக நம்­பிய கூட்­ட­மைப்­புத் தலை­வர்­கள், சிங்­களத் தலை­வர்­களை நம்­பா­விட்­டா­லும் பலம்­மிக்க உலக நாடு ­களை நம்­பித்­தான் இத­யங்­க­ளின் ஒப்­பந்­தத்­திற்­குள் கால் வைத்­தனர்.

இப்­போது இத­யங்­க­ளின் ஒப்­பந்­தம் பல­வீ­ன­மாகி நொந்து நூலா­கி­வி­டும் நிலையை எட்­டி­விட்­டது தெளி­வா­கின்­றது. கடந்த இரண்டு வரு­டங்­க­ளில் நல்­லி­ணக்க நோக்­கில் தமி­ழர்­கள் தொடர்­பான நட­வ­டிக்­கை­க­ளில் கொஞ்­ச­மா­வது முன்­னே­றி­வந்த கூட்டு அர­சும் அதன் தலை­வர்­க­ளும் தற்­போது அதனை அனே­க­மா­கக் கைவிட்­டு­விட்­டார்­கள். காணி விடு­விப்பு, அர­சி­யல் கைதி­க­ளின் விடு­விப்பு, காணா­மற்­போ­னோ­ரின் விவ­கா­ரம் என்று எந்த முனை­யி­லும் முன்­னேற்­றம் ஏது­மில்­லாத நிலையே ஏற்­பட்­டுள்­ளது.

வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளில் எரி­யும் பிரச்­சி­னை­யாக இருக்­கக்­கூ­டிய இந்த விவ­கா­ரங்­க­ளுக்கே தீர்வு காணப்­ப­டாத நிலை­யில், அது­வும் அர­சோடு இத­யங்­க­ளின் இணைப்­பா­கப் பய­ணித்­தும் பய­னற்ற நிலை­யில் இந்த விவ­கா­ரத்­தில் தான் மலை­ய­ளவு நம்­பி­யி­ருந்த உலக நாடு­க­ளின் தலை­யீட்டை கோரி­யி­ருக்­கி­றார் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன்.

கேப்­பாப்­பி­லவு விவ­கா­ரத்­தில் ஐக்­கிய நாடு­க­ளின் செய­லா­ளர் நாய­கம் மற்­றும் ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் ஆகி­யோ­ருக்­கும் உலக நாடு­க­ளின் தூது­வர்­க­ளுக்­கும் அவர் கடி­தம் எழு­தி­யி­ருக்­கி­றார். நல்­லி­ணக்­கத்தை நோக்­கிய பாதை­யில் அரசு தேங்­கிக் கிடப்­பதை ஆதா­ர­பூர்­வ­மாக அதில் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றார். எனவே சிங்­க­ள­வர்­க­ளுக்­கும் தமி­ழர்­க­ளுக்­கும் இடை­யி­லான பிணக்­கில் உல­கம் தலை­யி­ட­வேண்­டிய நேரம் வந்­து­விட்­டது என்று அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றார்.

அவர் நம்­பி­யி­ருந்­த­தைப் போலவே உலக நாடு­கள் இந்த விட­யத்­தில் கொழும்­புக்கு அழுத்­தம் கொடுத்து நில­மை­யைத் தமி­ழர்­க­ளுக்­குச் சாத­க­மா­கத் திருப்ப முடி­யுமா என்­பது கேள்­விக்­கு­றியே. ஏனெ­னில் இரா­ஜ­தந்­தி­ரத்­தில் உலக நாடு­களை வளைத்­துப்­போ­டு­வ­தில் தமி­ழர்­க­ளை­விட சிங்­க­ளத் தலை­வர்­கள் திற­மை­சா­லி­கள் என்­பதை வர­லாற்­றில் பல தட­வை­கள் அவர்­கள் நிரூ­பித்­தி­ருக்­கி­றார்­கள்.

கொழும்­பின் தற்­போ­தைய ஆட்­சி­யைத் தக்­க­வைப்­ப­தற்­கான தேவை உல­கத்­திற்­கும் இருக்­கும் நிலை­யில், ஓர­ள­வுக்கு மேல் உலக நாடு­கள் கொழும்­புக்கு அழு­த்தங்­க­ளைக் கொடுக்­கும் என்று எதிர்­பார்ப்­பது யதார்த்­தத்துக்கு அப்­பாற்­பட்­டது.

அத்­த­கைய நிலை­யில், ஐக்­கிய நாடு­க­ளின் செய­லா­ளர் நாய­கம் பான்கீமூனிடம் சம்­பந்­தர் யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து, அரசு இந்­தத் தட­வை­யும் ஏமாற்­றி­னால் தமி­ழர்­களை ஆள்வதற்கு கொழும்பை ஒரு­போ­தும் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை என்று சொன்­ன­தற்கு ஏற்ப, அடுத்த கட்­டப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தா­க­வேண்­டும்.

அதற்கு இப்­போதே தமிழ் மக்­க­ளைத் தயார்ப்­ப­டுத்­தும் பணி­களை அது ஆரம்­பிக்­க­வேண்­டும். அதி­லேயே தமிழ் மக்­க­ளின் எதிர்­கா­லம் தங்­கி­யி­ருக்­கி­றது.

http://newuthayan.com/story/20221.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.