Jump to content

கடைசி கட்டத்தில் ஒரு நடிகனின் வாழ்க்கை... உதவுங்கள் நல்லுள்ளங்களே


Recommended Posts

கடைசி கட்டத்தில் ஒரு நடிகனின் வாழ்க்கை... உதவுங்கள் நல்லுள்ளங்களே! - நடிகர் சங்கம் வேண்டுகோள் அல்வா வாசு எனும் நல்ல நடிகனின் வாழ்க்கை மருத்துவமும் கைவிட்ட நிலையில் கடைசி கட்டத்தில் நிற்கிறது. அவரது குடும்பத்துக்கு உதவுங்கள் நல்ல உள்ளங்களே என்று நடிகர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இயக்குநர் மணிவண்ணனால் அறிமுகமான நடிகர் அல்வா வாசு. 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக வாய்ப்பில்லாமல், உடல் நிலையும் சரி இல்லாமல் இருந்தவர், இன்று கவலைக்கிடமாக உள்ளார்.  

உடல்நிலை மோசம் :

இதுகுறித்து நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் விடுத்துள்ள அறிக்கை: 500 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகர் அல்வா வாசு. இயக்குநர் மணிவண்ணன் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனாரான அந்த பொறுப்பு கிடைக்காமல் நடிகராகவே பயணித்து பல படங்களில் அவர் நடித்துள்ளார். பெரிய அளவில் அவர் சம்பாதிக்கவே இல்லை. ரொம்ப எளிமையான இயல்பான ஒரு மனிதர். முகம் சுளிக்குமாறு எதுவும் பேசமாட்டார். வாய்ப்புக்காக எதுவும் பேசமாட்டார். தனக்கு கிடைத்த வாய்ப்பில் தனக்காக ஒரு சின்ன குடும்பத்தில் ஒரு சூழ்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஆறு மாதமாக அலைந்து கொண்டிருந்தார். மிக சிரமமான காலகட்டத்தில் சென்னையில் வந்து இருக்கவே முடியாத ஒரு சூழ்நிலையில் அவர் சொந்த ஊரான மதுரைக்கே சென்றுவிட்டார். அவருடைய துணைவியார்தான் மிகவும் கஷ்டப்பட்டு அவரை கவனித்து வந்தார். கடந்த மூன்று மாதமாக அவரது உடல்நிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வந்தது. ஒரு நல்ல சூழ்நிலைக்கு வந்துவிடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போதே மருத்துவத்தை அவர் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. மனிதர்களுடைய வாழ்கையில் கடைசி நம்பிக்கை என்று சொல்லக்கூடிய விஷயங்கள் இரண்டு உள்ளன. ஒன்று மருத்துவம், மற்றொன்று கடவுள் நம்பிக்கை. அதில் முதலாவது கைவிட்டுவிட்டது. மற்றொன்றான கடவுள் நம்பிக்கை நிச்சயம் காப்பாற்றும் என நாம் நம்பலாம். இப்போது நாம் செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு கலைஞன் சினிமாவை நம்பி வந்தான். நல்ல மனிதனாக வாழ்ந்தான். அவருடைய கடைசி காலத்தில் அவர் கண்முன்னாடியே அவர் குடும்பத்துக்கு பொருளாதார உதவி கிடைத்துவிட்டால் அவருடைய கடைசி காலம் மிக நிம்மதியாக இருக்கும். ஒரு வேளை அந்த நம்பிக்கையே கூட அவரை காப்பாற்றி விடும். அதனால் தயவு செய்து தங்களால் எவ்வளவு முடியுமோ அதை எங்கள் எங்களுடைய பிஆர்ஓ ஜான்சனிடம் கேட்டால் அவருடைய வங்கி கணக்கு முதலிய தகவல்களை தருவார். தங்களால் முடிந்ததை எவ்வளவு சீக்கிரம் தரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுத்து உதவுங்கள். நன்றி ! -பொன்வண்ணன் தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர்

Read more at: https://tamil.filmibeat.com/news/nadigar-sangam-requests-public-help-alwa-vasu-family-047867.html?utm_source=spikeD&utm_medium=LT&utm_campaign=adgebra

Link to comment
Share on other sites

நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நலக் குறைவால் காலமானார்

 

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த அல்வா வாசு கல்லீரல் பாதிப்பு காரணமாக மதுரையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.

 
நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நலக் குறைவால் காலமானார்
 
மதுரை:

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த அல்வா வாசு கல்லீரல் பாதிப்பு காரணமாக மதுரையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.

தமிழில் 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்கள், குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அல்வா வாசு. இவர் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் நகைச்சுவை, குணச்சித்திர நடிகரானார். `அமைதிப்படை', ரஜினிகாந்தின் `அருணாச்சலம்', `சிவாஜி', நடிகர் சத்யராஜ் உள்பட பல நடிகர்களின் படங்களில் இவர் நடித்த காட்சிகள் பிரபலம்.

குறிப்பாக வடிவேலு உடன் இவர் நடித்துள்ள நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை எப்போதும் சிரிக்க வைக்கக் கூடியது. சில மாதங்களுக்கு முன்பு அல்வா வாசு கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 6 மாதங்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் அவருக்கு அளித்த சிகிச்சையால் பலன் கிடைக்கவில்லை.

அவர் உயிரை காப்பாற்றுவது கடினம். எனவே அவரை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என்று டாக்டர்கள் கூறியதையடுத்து, அல்வா வாசு வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார். இந்நிலையில், உடல்நலம் கடும் மோசமானதால் இன்று அவர் காலமானார். 

நடிகர் அல்வா வாசுவுக்கு அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/08/17233627/1102922/comedy-actor-halwa-vasu-passed-away.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவன் முகம் கோணாமல் சிரிக்க வைத்த வாசுவிற்கு அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய பாத்திரங்களில்... அல்வா வாசு நடித்து இருந்தாலும்,
அந்த இடைவெளியில்.... இவர் உதிர்க்கும் நகை ச்சுவையும், இவரின் குரலும்... மறக்க முடியாதவை.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

கட்டணம் வாங்காத டாக்டர்... கண்டுகொள்ளாத கலையுலகம்... அல்வா வாசுவுக்கு ஃபேஸ்புக்கில் ஆதரவுக்குரல்!

 
 

காமெடி நடிகர்களின் வாழ்க்கை, கடைசியில் கண்ணீரில்தான் முடிகிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம் அல்வா வாசு. `அமைதிப்படை' படத்தில் சத்யராஜுக்கு அல்வா வாங்கிக் கொடுப்பதுபோல நடித்ததால், பெயருக்கு முன்னால் `அல்வா' என்கிற அடைமொழி ஒட்டிக்கொண்டது. பல படங்களிலும் நடித்திருந்தாலும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருந்தாலும்  வடிவேலுவுடன் இணைந்து நடிக்கத் தொடங்கிய பிறகுதான் இவர் பிரபலமானார். 

மறைந்த நடிகர் அல்வா வாசு

வடிவேலுவுடன் `அல்வா' வாசு நடித்த ஒருசில காமெடிக் காட்சிகள் எவராலும் மறக்க முடியாதவை. நடிகர் வடிவேலு வக்கீல் வண்டுமுருகனாக நீதிமன்றத்தில் வாதாடும் காமெடிக் காட்சியில் நீதிபதி, குற்றவாளிகளுடன் சேர்த்து வடிவேலுவையும் சிறையில் அடைத்துவிடுவார். வடிவேலுவுக்கு ஜூனியராக வரும் `அல்வா' வாசு, ஜாமீன் வாங்கி வரச் சென்றிருப்பார். கடைசியில் `கடல்லயே ஜாமீன் இல்லையாம்' என்று கண்ணை சுளித்துக்கொண்டு கூறும் காட்சி, நம்மை விழுந்து விழுந்து சிரிக்கவைத்தது. `ஒரு வாரம் ஆனாலும் எதிரிகளை நேருக்குநேர் சந்திக்கக்கூடிய போர்க்குணம்கொண்ட போர்வாள்', `பாஸ், நீங்க வில்லேஜ் விஞ்ஞானி' போன்ற காமெடி வசனங்களும் காலத்துக்கும் மறக்க முடியாதவையே. 

வடிவேலுவின் உடல்மொழிபோலவே, `அல்வா' வாசுவும் தனக்கென்ற தனி உடல் மொழியுடன் நடிக்கும் திறன் படைத்தவர். வடிவேலுவுடன் இணைந்து தொடர்ச்சியாக நடித்த இவர், தமிழக மக்களை மட்டுமல்லாமல், தென்னிந்திய ரசிகர்களையே சிரிப்புக் கடலில் ஆழ்த்தினார். இவர் உடல்நிலை சரியில்லாமல் ஆறு மாத காலமாகக் கஷ்டப்பட்டாலும், இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான், அவர் கவலைக்கிடமாக இருக்கும் தகவலே வெளியே வந்தது.

சுமார் 700-க்கும் மேற்பட்ட படங்களில் `அல்வா' வாசு நடித்திருந்தாலும், இவரைப் போன்ற காமெடி நடிகர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கிடைத்திருக்கவோ, சொத்து, சுகம் என வாழ்ந்திருக்கவோ வாய்ப்பில்லை. `அல்வா' வாசுவுடன் நடித்த துணை நடிகர்களும் அப்படித்தான். அந்த டீமில் நடிகர் வடிவேலு ஒருவர்தான் `அல்வா' வாசுவுக்கு உதவக்கூடிய நிலையில் இருப்பவர். ஆனால், அவர்கூட கடைசிக் கட்டத்தில் வாசுவுக்கு எந்த உதவியும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. `அல்வா' வாசு இறந்த பிறகு இறுதி அஞ்சலி செலுத்தக்கூட நடிகர் வடிவேலு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுத்துள்ளது. 

இதுகுறித்து படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியிருப்பதாவது, `சுமார் 36 ஆண்டு காலம் கலை உலகில் பன்முகத் தோற்றங்களில் நடித்துள்ள `அல்வா' வாசுவின் இறுதி நாள்கள், எண்ணற்றத் துயரங்களைக்கொண்டவையாகவே அமைந்துள்ளன. இவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு, மருத்துவம் பார்க்கப் போதிய நிதி இல்லாமல் நெருக்கடியில் இருந்தபோது, கோடிகளில் புரளும் எந்தக் கோமாளிகளும் முன்வரவில்லை. ஏன்... இறுதிச் சடங்குக்குக்கூட யாரும் போகவில்லை. காரணம், இவர்களின் அளவுக்கு இறந்தவரிடம் வசதி இல்லை என்பதுதான்.

இவரின் இறுதிநாளில் உடன் இருந்து தன்னால் இயன்ற உதவிகளைச் செய்த நடிகரும் இயக்குநருமான சரவணசக்தி, மேனேஜர் கண்ணன், மயில்சாமி, அண்ணன் சத்யராஜ் போன்ற சில நல்ல உள்ளங்களே உதவி செய்துள்ளனர். சகநடிகனின் கண்ணீரைத் துடைக்கவே எவருக்கும் துணிவில்லை. இதில் சில பேர் `சிஸ்டம் சரி இல்லை' என்கிறார்கள். பலர் `அரசியலுக்கு வருகிறேன்' என்கிறார்கள். காலக்கொடுமை! `அல்வா' வாசு, வடிவேலுவுடன் சேர்ந்து எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். அவர்கூட இவருக்கு உதவ முன்வரவில்லை. யார்... எவர் என்றே தெரியாமல் இவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தணிகாச்சலம், `கட்டணமே வேண்டாம்' என்று சென்றுள்ளார்.

 ஆரோக்கியமாக இருக்கும்போது சந்தா வாங்குவதோ, ஓட்டுக்காக வீடு வரை வந்து தாஜா பண்ணுவதோ முக்கியமல்ல; இறப்பின் பிடியிலிருக்கும்போது உதவுவதும், எங்கள் கலைக்குடும்பம் உங்களோடு உள்ளது என உடன் நிற்பதும்தான் சந்தா கட்டியதற்கான மரியாதை என்று நான் நினைக்கிறேன். சங்கங்கள், சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும்' எனக் கூறியிருக்கிறார்.

 

மக்களைச்  சிரிக்கவைப்பவர்களின் வாழ்க்கை, கண்ணீர்த் துளிகளில் முடிவதற்குக் கடைசி உதாரணமாக `அல்வா' வாசு இருக்க வேண்டும் என்பதே நமது ஆசையும்!

http://www.vikatan.com/news/tamilnadu/100011-support-from-facebook-for-halwa-vasu.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.