Jump to content

“எவ்வளவு செலவானாலும் கட்சியைக் கைப்பற்ற வேண்டும்!” - சசி குடும்ப சபதம்


Recommended Posts

மிஸ்டர் கழுகு: “எவ்வளவு செலவானாலும் கட்சியைக் கைப்பற்ற வேண்டும்!” - சசி குடும்ப சபதம்

 

 

p2.jpg

மூவண்ணக் கொடியைச் சிறகுகளில் செருகியபடி வந்தார் கழுகார். அச்சு அவசரம் கருதி, சுதந்திர தினக் கொடியேற்ற நிகழ்ச்சியைப் பெட்டிச் செய்தியாகக் கொடுத்து விட்டுப் பேசத் தொடங்கினார்.

‘‘மேலூரில் இருந்து தொடங்குகிறேன்... ‘கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்; எடப்பாடி பழனிசாமிக்குப் பாடம் புகட்ட வேண்டும்’ என்றுதான் டி.டி.வி.தினகரன் மதுரை மேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அவர் எதிர்பார்த்தது போலவே பிரமாண்டக் கூட்டத்தை மேலூர் முன்னாள் எம்.எல்.ஏ சாமி கூட்டிவிட்டார். ஒருபக்கம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திகைப்பு... இன்னொரு பக்கம் ஷீர்டி, டெல்லி என்று சுற்றிவந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிர்ச்சி. தினகரன் திரட்டிய கூட்டத்தையும் அவர் பின்னால் இருக்கும் கட்சி வி.ஐ.பி-க்களையும் கணக்கெடுத்துக் கலங்கியிருக்கிறார்கள் இருவரும். ‘அணிகளின் இணைப்புக்கு பி.ஜே.பி வைத்திருந்த ஆகஸ்ட் 14-ம் தேதி கெடுவுக்குள் நல்ல செய்தியைச் சொல்லிவிட வேண்டும்... டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டத்துக்கு முன்பாக அணிகள் இணைப்பு குறித்து ஏதாவது தகவலைக் கொடுத்துவிட வேண்டும்’ என்று இரு அணிகளுமே முனைப்பு காட்டிவந்தன. அதனால்தான், வெங்கைய நாயுடு துணை ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற விழாவுக்கு டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், உடனே சென்னை திரும்பவில்லை.’’

‘‘டெல்லியில் நடந்தது என்ன?’’

‘‘துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் டெல்லி சென்றிருந்தனர். இருவரும் பிரதமரைச் சந்திக்க முயற்சி எடுத்தனர். இதில் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியைச் சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு சென்னை திரும்பினார். ஆனால், ஓ.பி.எஸ்ஸால் பிரதமரை உடனே சந்திக்க முடியவில்லை. ‘இரு அணியினரும் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு இணைந்து வந்து என்னைச் சந்தியுங்கள்’ என்று பிரதமர் கூறியதாகத் தெரிகிறது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் பிரதமரைச் சந்திக்க முடியாமல் ஷீர்டி சாய்பாபா கோயில், சனி சிங்னாபூர் கோயில் என்று ஆலயப் பயணம் சென்று சாமி தரிசனம் செய்தார். ஷீர்டியில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு 13-ம் தேதி அழைப்பு வந்தது. 14-ம் தேதி காலை 11 மணிக்கு வந்து பிரதமரைச் சந்தியுங்கள் என்று கூறினார்கள்.’’

‘‘அப்போதுதான் பன்னீருக்கு நிம்மதி வந்திருக்கும்!”

p2a.jpg

‘‘ஆமாம்! ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பும் பயணத்தை ரத்து செய்துவிட்டுப் புனே வழியாக டெல்லி சென்றார். பிரதமர் மோடியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். பிரதமரைச் சந்தித்தபோது சனி சிங்னாபூர் கோயில் பிரசாதத்தையும் பிரதமருக்கு வழங்கினார் ஓ.பி.எஸ். அவருடன் மைத்ரேயன் எம்.பி. மற்றும் நிர்வாகிகளும் சென்றிருந்தனர். இந்தச் சந்திப்பில் அ.தி.மு.க உள்கட்சி பிரச்னைகள் பற்றியே பிரதமரிடம் முறையிட்டுள்ளதாக பன்னீர் செல்வத்துக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.’’

‘‘என்னதான் பேசினார்கள்?’’

‘‘பிரதமர் இல்லத்தில் சுமார் அரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்தது. அணிகள் இணைப்பு குறித்தும், தமிழக அரசியல் சூழல் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். பிரதமர் இந்த முறை பன்னீரிடம் கொஞ்சம் கடுமையாகப் பேசியதாகச் சொல்கிறார்கள். ‘எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர். அவர் எப்போது வந்தாலும் அப்பாயின்ட்மென்ட் வாங்கி என்னைச் சந்திக்க முடியும். ஆனால், உங்களுக்கு ஒவ்வொரு முறையும் நேரம் ஒதுக்கித் தருவதில் எனக்குச் சங்கடங்கள் உள்ளன. அடுத்தமுறை இப்படி இரண்டு அணியினரும் தனித்தனியே வராதீர்கள்’ என்று கண்டிப்புடன் மோடி சொன்னாராம். மோடியுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்தேன். அரசின் நிலைப்பாடு, தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்தும் பேசினோம். தமிழக மக்களின் நலன் கருதி முடிவுகளை எடுக்க உள்ளேன்’ என்று சொன்னார்.’’

‘‘ஓஹோ...’’

‘‘நிருபர்கள் விடாமல், ‘அணிகள் இணைப்பு குறித்து பேசப்பட்டதா?’ என்று கேட்டனர். பன்னீர்செல்வத்தை முந்திக்கொண்டு இதற்குப் பதில் சொன்னார், எம்.பி மைத்ரேயன். ‘தமிழகத்தில் நிலவும் பொதுவான அரசியல் சூழல் குறித்தே பேசினோம். மற்றொரு கட்சியின் உள்விவகாரங்களில் பிரதமர் தலையிடுகிறார் என்ற கருத்து குறித்துப் பேசுவதை நாம் நிறுத்த வேண்டும். தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் பிரதமரைச் சந்தித்துப் பேசினோம்’ என்று கோபமாகச் சொன்னார் அவர்...’’

‘‘எடப்பாடி பழனிசாமி அணி என்ன நினைக்கிறது?’’

‘‘டெல்லியில் ‘அணிகள் இணைப்பு’ குறித்து பன்னீர் சொன்ன தகவலை எடப்பாடி பழனிசாமி அணியினர் மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள். அதனால்தான், உடனே அமைச்சர் ஜெயக்குமாரைப் பேட்டி கொடுக்க சொன்னார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சென்னை சாந்தோம் வீட்டுக்கு உடனே பத்திரிகையாளர்களை அழைத்தார் ஜெயக்குமார். ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது போல ஓ.பன்னீர்செல்வத்துக்கும் டி.டிவி.தினகரனுக்கும் சேர்த்தே அந்தப் பேட்டியில் அறிவிப்பு வெளியிட்டார் ஜெயக்குமார். ‘டெல்லியில் ஓ.பன்னீர்செல்வம் கூறியது அணிகளை இணைக்க உதவும் வகையில் உள்ளது. அவருக்கு நன்றி. எங்களுக்கு மகிழ்ச்சி. அதே நேரத்தில் மதுரையில் கூட்டம் நடத்தும் டி.டி.வி.தினகரன் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். பிரிந்து கிடப்பவர்கள் ஒன்றுசேர காலம் கனிந்து இருக்கிறது. அதை அவர் மறந்துவிடக் கூடாது’ என்றார்.”

‘‘எதனால் இறங்கி வந்தாராம் பன்னீர்?”

p2b.jpg

‘‘இணைப்புக்கு வலியுறுத்திவரும் டெல்லி தலைகள் அச்சுறுத்தல் அஸ்திரத்தை எடுத்துவிட்டுள்ளன. ‘இனியும் காலம் தாழ்த்திக்கொண்டு இருப்பது உங்களுக்கு நல்லதல்ல. நீங்கள் இருவரும் பிரிந்து நிற்க நிற்க, தினகரன் செல்வாக்கு கூடிக் கொண்டே போகும்’ என்றார்களாம். அதனால்தான் பன்னீர் இறங்கி வந்ததாகச் சொல்கிறார்கள். அதோடு, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பும் விரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இப்போது அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக யாரையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘அதையே அறிவிப்பாக வெளியிட்டால் போதும்’ என்று இரண்டு அணியிலும் நினைக்கிறார்கள். ‘சசிகலா தேர்வு செல்லாது’ என்ற ஒற்றை அறிவிப்பைத்தான் எதிர்பார்க்கிறார்கள். தினகரன் நியமனம் செல்லாது என்ற தீர்மானத்தையும் கூடுதலாகத் தாக்கல் செய்து, ‘தன்னுடைய அணிதான் உண்மையான அ.தி.மு.க’ என்று தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். தனி ஆளாக மனு செய்துள்ள முன்னாள்         எம்.பி கோவை கே.சி.பழனிசாமியும் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது என்று வாதாடி வருகிறார். எனவே, இந்த மனுக்களை எல்லாம் விரைவாக விசாரித்து தேர்தல் ஆணையம் முடிவு சொல்லும் என்ற நம்பிக்கையோடு எடப்பாடியும் ஓ.பன்னீர் செல்வமும் இருக்கிறார்கள். அப்படி ஓர் உத்தரவு வந்தால் சசிகலாவை நீக்க வேண்டிய அவசியம், இவர்கள் இருவருக்கும் இருக்காது.’’

‘‘சசிகலா குடும்பம் என்ன திட்டம் வைத்துள்ளது?’’

‘‘அ.தி.மு.க-வில் தங்களது சகாப்தம் முடிவடைந்துவிட்டது என்ற நிலைக்கு வந்துவிட்டதாகவே அவர்கள் உணர்கிறார்களாம். ஆனாலும், குடும்ப உறவுகள், ‘ஒரு மாதத்தில் கட்சியை நாங்கள் எப்படியும் கைப்பற்றிவிடுவோம்’ என்று சொல்லிவருகிறார்கள். ‘எவ்வளவுப் பணம் செலவானாலும் பரவாயில்லை. கட்சியைக் கைப்பற்ற வேண்டும். வெறுங்கையோடு திரும்பக் கூடாது’ என்று சசிகலா உறவுகள் ஆக்ரோஷப் பட்டுள்ளார்கள். ‘எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் தங்களைவிட்டு நீண்ட தூரம் போய்விட்டார்கள்’ என்று டி.டி.வி.தினகரன் நினைக்கிறார். ‘ஆட்சிதான் முக்கியம்; கட்சியைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. இருக்கிற வரை வாரிச் சுருட்டிக்கொள்ள முடிவெடுத்து விட்டார்கள். எனவே, பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் ஆட்சியில் இருப்போர் பக்கம்தான் இருப்பார்கள். எனவே, இனியும் தாமதம் செய்யாமல் கட்சியைக் காப்பாற்றும் வேலைகளில் இறங்கிட வேண்டும்’ என்று தினகரனும் சொல்லி வருகிறார்.”

‘‘மேலூர் கூட்டத்தில் இருந்து தொடங்கியும் விட்டாரே?”

‘‘பிரிந்து செயல்பட்ட சசிகலா உறவுகள் ஒன்று சேர்கிறது. அனைவரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். திவாகரன், அவரது மகன் ஜெயானந்த், இளவரசியின் மகன் விவேக் எனச் சொந்தங்கள் எல்லாம் மதுரையில் முகாமிட்டு விழா ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தனர். டெல்டா மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் புக் செய்யப்பட்டனவாம். அனைத்துமே திவாகரன் ஏற்பாடுதானாம்.”

‘‘மதுரையில் கடுமையாகப் பேட்டி கொடுத்துள்ளாரே திவாகரன்?’’

‘‘ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மீது உள்ள கோபத்தின் வெளிப்பாடுதான் அது. ‘கட்சி நலன்தான் அனைவருக்கும் முக்கியம். கட்சி இருந்தால்தான் நமக்கு மரியாதை... இல்லையென்றால் நாம் பூஜ்யம்தான். ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் அவர்களுக்கு அது புரியவில்லை. ‘சசிகலா குடும்பத்தினர்’ என்று விமர்சித்து வரும்  கே.பி.முனுசாமி மீது வழக்குத் தொடரப்படும். தற்போது தினகரன் செயல்பாடுகள் முன்னேற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் இப்போது அவர் அறிவித்துள்ள பொதுக்கூட்டங்கள் முடிந்த பின்தான், தொண்டர்கள் யார் பக்கம் என்பது தெரியவரும். அமைச்சர்களை நம்பி அ.தி.மு.க இல்லை. அமைச்சர் பதவி என்பது காற்றுள்ள பலூன் போன்றது’ என்றார். திவாகரனும் தினகரனுக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்திருப்பதுதான் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.”

‘‘ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் இணைந்தால் தினகரன் என்ன முடிவு எடுப்பார்?’’

‘‘இருவரும் இணைந்துவிடுவார்கள். இவர்கள் இணைய மறுத்தாலும் டெல்லி தலைமை இவர்களை இணைத்துவிடும் என்று உறுதியாக நம்புகிறார் தினகரன். அப்படி இணைந்தாலும், அவர்களால் நீண்ட நாள்கள் ஒன்றிணைந்து செயல்பட முடியாது என்று நினைக்கிறாராம் தினகரன். ‘யார் தலைவர்’ என்ற போட்டி இருவருக்கும் வந்துவிடும் என்று நம்புகிறார். அ.தி.மு.க என்ற இயக்கத்தை இவர்கள் இருவரால் வலிமையாக வழிநடத்த முடியாது என்று உறுதியாக நம்புகிறார். இவர்கள் இணைந்தாலும், ‘சசிகலா தலைமையில் இயங்கும் கட்சிதான் உண்மையான அ.தி.மு.க’ என்று  வலியுறுத்தும் நடவடிக்கைகளில் தினகரன் இறங்குவாராம். ‘இரட்டை இலை எங்களுக்குத்தான் சொந்தம்’ என்று தினகரன் கிளம்புவார் என்கிறார்கள். ‘இரட்டை இலை திருப்பித் தரப்பட்டாலும் தினகரனால் மீண்டும் முடக்கப்படும்’ என்கிறார்கள். இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஏராளமான களேபரங்கள் நிகழக்கூடும். எல்லாவற்றையும் பார்க்கத் தயாராகுங்கள்’’ என்று நிறுத்திய கழுகாரிடம், மற்ற விஷயங்களைக் கேட்டோம்.

‘‘அமித் ஷாவின் வருகையால் தமிழகத்தில் திருப்புமுனை ஏற்படும் என்று தமிழிசை சொல்கிறாரே?’’

‘‘பி.ஜே.பி பெரிய திட்டத்தோடுதான் இருக்கிறது. ‘அமித் ஷாவின் வருகை, அ.தி.மு.க-வுக்குப் பெரிய ஷாக்காக இருக்கப் போகிறது’ என்று சொல்கிறார்கள். அ.தி.மு.க-வில் ஒதுங்கிக்கிடக்கும் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் விசுவாசிகளை அமித் ஷா முன்னிலையில் பி.ஜே.பி-யில் இணைக்கும் முயற்சியில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். பெரிய பட்டியலே தயாராகி உள்ளதாம். தென் மாவட்டங்களில் இருந்துதான் அ.தி.மு.க வி.ஐ.பி-க்கள் அதிகமாக பி.ஜே.பி பக்கம் படையெடுக்க உள்ளார்கள். அ.தி.முக-வை ஒரு பக்கம் கட்டுப்படுத்திக்கொண்டே, அந்தக் கட்சியில் இருந்தே ஆட்களை இழுக்கும் பி.ஜே.பி-யின் தந்திரம் பலேதான்.”

‘‘கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற முரசொலி பவள விழா நிகழ்ச்சி மழை காரணமாக நிறுத்தப்பட்டதே?”

‘‘ஆகஸ்ட் 10-ம் தேதி பத்திரிகையாளர்களை அழைத்து முரசொலி பவள விழாவை ஸ்டாலின் நடத்தினார். கமல், ரஜினி, வைரமுத்து ஆகியோரும் வந்து விழாவைக் கோலாகலமாக்கினர். இரண்டாம் நாள் கூட்டம் ஆகஸ்ட் 11-ம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஏற்பாடு செய்து இருந்தார்கள். அன்று மாலை பெய்த திடீர் மழை காரணமாகக் கூட்டம் அரை மணி நேரத்தில் முடிந்தது. முரசொலி பவள விழா செப்டம்பர் 5-ம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். 12-ம் தேதி ஸ்டாலின் லண்டன் சென்றுவிட்டார். 8 நாள்கள் அங்கு இருப்பாராம். அவர் திரும்பிய பிறகு இன்னும் பல திருப்பங்கள் இருக்கும் என்கிறார்கள்.’’

p2e.jpg

‘‘என்ன திருப்பம்?’’

‘‘சட்டமன்றத்துக்கு எப்போதும் தேர்தல் வரலாம் என்று தி.மு.க-வினர் மீண்டும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘தினகரன் தரப்பின் வேகம் கண்டிப்பாக ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்’ என்று உறுதியாக நம்புகிறாராம் ஸ்டாலின். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட ‘தேவைப்பட்டால் நாம் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவரலாம்’ என்று ஸ்டாலின் வாய் திறந்திருப்பதே தொண்டர்களுக்கு மகிழ்ச்சிதான். அதனால்தான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலையைத் தீவிரப்படுத்தியுள்ளார் ஸ்டாலின். இதன் தொடர்ச்சியாகத்தான் வைகோவுக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான பரஸ்பர உறவு அதிகரித்துள்ளது. பவள விழாவுக்கு வாழ்த்து சொன்ன வைகோ, வைர விழா நாயகனைக் காண கோபாலபுரமே வர இருப்பதாகச் சொல்கிறார்கள்.’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம்! ஸ்டாலின் சென்னை திரும்பியதும் கருணாநிதியைப் பார்க்க கோபாலபுரம் வருகிறாராம் வைகோ. ‘அண்ணன் கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் போனதில் இருந்தே, அவரைப் பார்க்க வேண்டும் என்ற நினைத்து வருகிறேன். அதற்கான காலச் சூழ்நிலை இப்போது கனிந்திருப்பதாக உணர்கிறேன்’ என்று உருக்கமாகச் சொல்லியுள்ளார் வைகோ. இந்தத் தகவல் ஸ்டாலினுக்குச் சென்றதும், ‘தாராளமாக வந்து பார்க்கட்டுமே, தலைவருக்குப் பிரியமானவராக இருந்தவர் வைகோ’ என்று ஸ்டாலினும் பச்சைக் கொடி காட்டியுள்ளார். அடுத்த வாரத்தில் இந்தக் காட்சிகளும் அரங்கேறலாம்!”

‘‘ஓஹோ!”

‘‘அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி உறுதியாகிவிடும் என்பதால், தி.மு.க கூட்டணியில் மற்ற கட்சிகளைச் சேர்க்கும் காரியங்களை ஸ்டாலின் தொடங்கி விட்டார். ஏற்கெனவே கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் நெருங்கி வந்துவிட்டார்கள். பா.ம.க-வை எதிர்கொள்வதற்காக வேல்முருகன் அழைக்கப்பட்டுவிட்டார். பன்னீர் அணியுடன் நெருக்கமாக இருக்கும் ஜி.கே.வாசனுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பி.ஜே.பி-யுடன் பன்னீர் காட்டும் நெருக்கம், அங்கு ஜி.கே.வாசனை இருக்க விடாது. அவரும் தி.மு.க பக்கமாக வரலாம் என்று சொல்லப்படுகிறது. இப்படியாக அணிச் சேர்க்கைகளும் இந்த மாதத்தில் அதிகம் இருக்கலாம்” என்று சொன்ன கழுகார் பறக்கத் தயாரானார்.

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதீஷ்குமார், வி.ஸ்ரீனிவாசுலு


p2d.jpg

உன்னியை மிரட்டிய டக்ளஸ்!

பாடகர் உன்னிகிருஷ்ணனும் அவருடைய மகள் உத்ராவும் சில நாள்களுக்கு முன்னர் இலங்கையின் தமிழீழப் பகுதிகளில் இசை நிகழ்ச்சி நடத்திவிட்டு வந்துள்ளனர். ஆகஸ்ட் 11 அன்று மட்டக்களப்பிலும், 12-ம் தேதி யாழ்ப்பாணத்திலும், 13-ம் தேதி திரிகோணமலையிலும், 14-ம் தேதி நீர்க்கொழும்புவிலும் நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் போஸ்டர்கள் ஒட்டியதால், அங்கு மட்டும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 2012-ம் ஆண்டு நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாவில் பாடிய உன்னிகிருஷ்ணனுக்கு, அப்போது இலங்கை அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்தினார். டக்ளஸின் மரியாதையை ஏற்றதற்கு, வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், `நடந்த சம்பவத்துக்கு’ வருத்தம் தெரிவித்தார் உன்னிகிருஷ்ணன். அதற்காக இப்போது உன்னிகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் என டக்ளஸின் ஆட்கள் செல்வாக்காக உள்ள யாழ்ப்பாணத்தில் மிரட்டல் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.


காவிக் கூண்டுக்குள் இரட்டைப் புறா!

மேலூர் பொதுக்கூட்டத்தை மிரட்டலாகத் தொடங்கிய தினகரனைக் குளிர்விக்க கட்சிக்காரர்கள் சால்வை, நினைவுப் பரிசுகள் என்று வரிசை கட்டி நின்றார்கள். ‘அதெல்லாம் இந்த மேடையில் வேண்டாம்’ என்று தவிர்த்துவிட்டார். ஆனால், மேலூர் சாமி கொடுத்த வீரவாள், செங்கோலை மட்டுமே வாங்கிக் கொண்டார். கூட்டம் முடியும்போது, சென்னையில் இருந்து வந்திருந்த இளைய தலைமுறை மாணவர் அமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் இனியன் தலைமையிலான டீம் இரட்டை புறாக்களை அடைத்திருந்த கூண்டை தினகரனிடம் கொடுத்தனர்.

p2c.jpg

புறாக் கூண்டைச் சுற்றி இருந்த காவித் துணியை அகற்றிய டி.டி.வி.தினகரன், அந்த இரண்டு புறாக்களையும் பறக்க விட்டார். அப்போது அருகில் இருந்த தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ, ‘‘ஒரு புறா ஓ.பி.எஸ், இன்னொரு புறா இ.பி.எஸ்’’ என்று சத்தமாகச் சொல்லிக்கொண்டே இருந்தார். தினகரன் முகத்தில் சிரிப்பு மட்டுமே பதிலாக இருந்தது. ‘கூண்டில் ஏன் காவித் துணி சுற்றப்பட்டு இருந்தது?’ என்று இனியனிடம் பலரும் கேட்டபோது, ‘‘அவர்கள் இருவரும் காவிக் கூண்டில்தானே இருக்கிறார்கள்’’ என்றார்.


‘‘எதிரில் வரும் தடைகளைத் தகர்ப்போம்..!’’

கோட்டையில் எடப்பாடி பழனிசாமியைத் தேசியக் கொடி ஏற்ற தினகரன் விடுவாரா’ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதுரையில் 20 எம்.எல்.ஏ-க்களை மேடை ஏற்றி எச்சரிக்கை செய்துள்ளார். மேலூர் பொதுக்கூட்டத்தில், ‘‘கொல்லைப்புறமாக அ.தி.மு.க-வைக் கைப்பற்ற நினைத்தால் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள்...’’ என்று எச்சரித்தார் தினகரன். கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி வைத்தபோது அதற்குப் பதில் தந்தார் எடப்பாடி. ‘‘ஜெயலலிதா எங்களிடம் விட்டுச்சென்ற மக்கள் பணியை நாங்கள் சிறிதும் தொய்வில்லாமல் தொடர்ந்து வருகிறோம். ‘அம்மா வழியில் ஆட்சி... அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி...’ என்ற தாரக மந்திரத்தோடு, எங்கள் எதிரில் வருகின்ற தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு தமிழக மக்களுக்குச் சேவை ஆற்றுவது மட்டுமே இலக்காகக் கொண்டு உழைத்து வருகின்றோம்’’ என்றார் எடப்பாடி.

தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சுதந்திர தின விழாவுக்கு வரவில்லை என்பது ஒருபுறம் இருக்க, சொந்தக் கட்சியைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ-க்களே முதல்வரின் சுதந்திர தின விழாவைப் புறக்கணித்துவிட்டார்கள்.


தினகரனே ரிப்பீட்டு!

.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான ‘டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.’ முழுக்க முழுக்க தினகரன் அணி பக்கம் வந்துவிட்டது. மேலூர் பொதுக்கூட்ட போட்டோக்கள், செய்திகள், பேச்சுகளையே 12 பக்கம் வெளியிட்டுள்ளது ‘நமது எம்.ஜி.ஆர்.’ அதேபோல் மேலூர் பொதுக்கூட்டத்தை ஜெயா டி.வி நேரடி ஒளிபரப்பு செய்தது. இந்தக் கூட்டத்துக்கு மறுநாள் சுதந்திர தினம். கோட்டையில் கொடியேற்றிப் பேசினார் முதல்வர் எடப்பாடி. அதை லைவ் செய்யவில்லை ஜெயா டி.வி. அந்த நேரத்திலும் தினகரனின் மேலூர் கூட்டப் பேச்சையே ஒளிபரப்பினார்கள்.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.