Jump to content

கருணாநிதி, மீண்டும் மருத்துவமனையில் அனுமதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

karunanidhi

கருணாநிதி, மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.

திமுக தலைவர் கருணாநிதி இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பொருத்தப்பட்ட உணவு குழாய் மாற்றப்பட்ட பின்னர் வீடு திரும்புவார் என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

கருணாநிதி கடந்த 7 மாதங்களாக முதுமை காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு குழாய் பொருத்தப்பட்டு அதன் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள்கள் செல்வி, கனிமொழி, மகன் தமிழரசு ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.

இது தொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் க. பொன்முடி, கருணாநிதிக்கு பொருத்தப்பட்ட உணவு குழாயை மாற்றவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் சில மணிநேரங்களில் வீடு திரும்புவார் என கூறினார்.

நன்றி தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.