Jump to content

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மேலும் 8 இந்திய மொழிகளில் குரல் தேடல் சேவையை கூகுள் நிறுவனம் விரிவாக்கியுள்ளது.


Recommended Posts

தமிழிலும் கூகுள் வாய்ஸ் சர்ச்!

 
 

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மேலும் 8 இந்திய மொழிகளில் குரல் தேடல் சேவையை கூகுள் நிறுவனம் விரிவாக்கியுள்ளது. 

google_14264.png

 

உலகின் மிகப்பெரிய பயனாளர் பேஸ் கொண்ட கூகுள் நிறுவனம், தேடு பொறி சேவையிலும் முன்னணியில் இருக்கிறது. இணையதளத்தில் டெக்ஸ்ட் வடிவிலும், குரல் வழியிலும் கூகுள் தேடுபொறி மூலம் எந்த ஒரு தகவலையும் தேட முடியும். தேடல் வசதியில் இந்திய மொழிகளைப் பொறுத்தவரை, இந்தி மொழியில் மட்டுமே கூகுள் சேவை இதுவரை இருந்து வந்தது. இந்தநிலையில், குரல் தேடல் சேவையை மேலும் 30 மொழிகளில் மேற்கொள்ளலாம் என்று கூகுள் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அவற்றில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி,  குஜராத்தி, மராத்தி மற்றும் உருது ஆகிய 8 மொழிகளும் அடங்கும். அறிவிப்புக்கு முன்னரே இந்த சேவை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களை சென்றடைந்துவிட்டது. விரைவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ்-சில் இயங்கும் ஸ்மார்ட்போன்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. எழுத்துகள் மூலம் தேடுதலை விட குரல்வழி தேடல் மூன்று மடங்கு வேகமானது என்று கூறியுள்ள கூகுள், உலக அளவில் தேடுபொறியில் 20 சதவிகிதம் அளவுக்கு குரல்வழியே தேடப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

http://www.vikatan.com/news/information-technology/99077-google-voice-search-adds-support-for-more-indian-languages.html

Link to comment
Share on other sites

இணைய களம் - ஜி-போர்டு: எழுத்துகளாக மாறும் குரல்

 

 
nooveli

கூகுள் அட்டகாசமான ஒரு வேலை யைச் செய்திருக்கிறது. நண்பர்கள் சிலர், இணையத்தில் தமிழில் எழுதவேண்டும் ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை எனும்போது, என்.எச்.எம். மென்பொருளை கணினிக்கும், செல்லினம் (Sellinam) செயலியை அலைபேசிக்கும் பரிந்துரைப்பேன்.

இதுவல்லாமல் ‘கூகுள் இன்புட்’ வழியாக எழுதுகிறவர்களும் உண்டு. எனக்கு அது தோதாக இல்லை. அடுத்து என்ன எழுதவேண்டும் என்று ஒவ்வொரு சொல்லுக்கும் எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருந்தால், நாம் எதைச் சுயமாக எழுதுவது? செல்லினம் அப்படி இல்லை. ஒரு 'ஃ' வைத்தாலும் அதை நாமே எழுத வேண்டும். எங்கே எழுத்துப்பிழை விடுகிறோம் என்று நமக்குப் புரிபடும். சரி விஷயத்துக்கு வருகிறேன். ‘ஜி-போர்டு தி கூகுள் கீபோர்டு’ (G-Board the Google Keyboard) என்கிற புதிய செயலியை கூகுள் அறிமுகம் செய்திருக்கிறது. 22 எம்.பி. நிறை உள்ள இந்த செயலி மூலமாக இனி தமிழில் பேசினாலே அது எழுத்தாகத் தட்டச்சு ஆகிவிடும். முன்பு ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளுக்கு மட்டுமே இருந்த இவ்வசதி இப்போது ஜி-போர்டு வழியாக பிராந்திய மொழிகளுக்கும் அறிமுகமாகிறது.

இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ், சிங்கப்பூர் தமிழ் என்று மூன்று பிராந்திய மொழி இசைவுகளை கூகுள் நீங்கள் பேசப் பேச தமிழில் இடுகையிடுகிறது. இதே போல் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளில் குரல் தட்டச்சு முறையைக் கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் வாட்ஸப், ஃபேஸ்புக், ட்விட்டர், தேடுபொறி என்று எங்கும் பேசியே எழுத்தைப் பதிவாக்கலாம்.

சங்கடம் என்னவென்றால், பொதுத் தமிழ் என்கிற பாடத் தமிழில்தான் அதில் எழுத முடியும்போல. ‘‘இங்கன நிக்கேன்.. நீ எப்ப வார. சீக்கரம் வந்து தொல’’ என்றால் திணறிவிடும் ஜி-போர்டு! மற்றபடி பயன்படுத்திப் பார்த்ததில் ‘இனிய காலை வணக்கம் தோழி‘ எல்லாம் ஒரே நொடியில் குரலில் இருந்து எழுத்துகளாக மாறுகிறது. ‘சாட்டையடிப் பதிவு தோழி’ என்று பின்னூட்டம் இடுவதும் இனி எளிதாகிவிடும்!

தமிழில் தட்டச்சு செய்வது கஷ்டமாக இருக்கிறது என்று இனிமேல் யாராவது கூறுவார்களா என்ன?

http://tamil.thehindu.com/opinion/columns/article19515398.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

சங்கடம் என்னவென்றால், பொதுத் தமிழ் என்கிற பாடத் தமிழில்தான் அதில் எழுத முடியும்போல. ‘‘இங்கன நிக்கேன்.. நீ எப்ப வார. சீக்கரம் வந்து தொல’’ என்றால் திணறிவிடும் ஜி-போர்டு! மற்றபடி பயன்படுத்திப் பார்த்ததில் ‘இனிய காலை வணக்கம் தோழி‘ எல்லாம் ஒரே நொடியில் குரலில் இருந்து எழுத்துகளாக மாறுகிறது. ‘சாட்டையடிப் பதிவு தோழி’ என்று பின்னூட்டம் இடுவதும் இனி எளிதாகிவிடும்!

இன்னும் மெருகேரனும் தமிழ் சில முக்கியமானதுகளை சொல்ல அடையாளம் காண கஷ்ட்டபடுகிறது.

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

இன்றைய நவீன உலகில் எல்லாமே இலகுவாகிவிட்டது. நமது தேவையை விட வேகமாக தொழில்நுட்பம் வளர்ந்தது வருகிறது. இந்த கட்டுரை மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தொழில்நுட்பத்தை எழுதுவதில் சந்தோசமாக இருக்கிறது. இன்று நாம் “மிக இலகுவாக ஆன்ட்ராய்ட் இல் வேகமாக தமிழில் டைப் செய்யலாம்… இனி கஷ்டம் இல்லை…” என்ற தலைப்பில் பார்க்க இருக்கின்றோம்.

முன்னொரு (ஒரு ஐந்து வருடத்திற்கு முதல்) பொழுதில் தமிழ் டைப் பண்ண தேவையானால் அதற்கென்று Kalaham என்றொரு font மற்றும் அதற்கான Keyboard Map ஒன்றும் (என்னென்ன எழுத்து எந்தெந்த keyக்கு வரும் என அறிய) தேவைப்படும். பலமணி நேரம் எடுத்து டைப் பண்ணி முடிப்போம்.

பின்னர் யுனிக்கோட் அறிமுகமான போதும் அதெற்கென சில எழுத்துருக்கள் (Fonts) தேவைப்பட்டன. உதாரணமாக சில தமிழ் தளங்களை பார்வையிட சில எழுத்துருக்கள் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டிய தேவையும் இருக்கும். இதெல்லாம் அறியாவிட்டால் எல்லா எழுத்துக்களும் கட்டம் கட்டமாக தோன்றும். (Square)

தற்போது அதிகமானவர்கள் ஸ்மார்ட் போன் உபயோகிப்பதால் தமிழ் மொழியின் தேவையும் அதை வேகமாக டைப் பண்ண வேண்டிய தேவையும் அதிகரித்திருக்கிறது. தமிங்கிலீஷ் கீபோர்ட், தமிழ் கீபோர்ட் மேப், கூகிள் கீபோர்ட், எழுத்தாணி கீபோர்ட் என பலவகை கீபோர்ட் அப்ளிகேஷன்ஸ் வந்திருக்கும்போதிலும் நமக்கு அதன் வேகம் போதவில்லை. அப்படித்தானே?

ஆம். நாம் இன்று பார்க்கப்போகும் முறை மூலம் நாம் தமிழில் பேசுவதை தமிழில் நமக்கு டைப் பண்ணித்தரும் ஒரு முறையை கற்றுக்கொள்ளப்போகின்றோம். இதற்காக தனியான அப்ளிகேஷன்ஸ் எதுவும் தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட் போனில் சில செட்டிங்களை செய்வதன் மூலம் இதை செயற்படுத்திக்கொள்ளலாம்.

அதற்குமுன் பின்வரும் சில விடையங்களை கட்டாயம் பின்பற்றவேண்டும். அவற்றை சரியாக செய்யாமல் “எவ்வளவு லேசா சொன்னான் ஒண்டும் நடக்கல பாருங்க” என்று எனக்கு திட்டக்கூடாது.

1. இவ்வசதியை பயன்படுத்த கட்டாயம் இன்டர்நெட் அவசியம்.
2. செந்தமிழோ, பைந்தமிழோ, எழில்தமிழோ, குறைதமிழோ கொஞ்சம் நிதானமாகவும் மெதுவாகவும் சரியாகவும் பேச வேண்டும்.
3. பெயர் ஸ்மார்ட் போன் என்றாலும் அது உங்கள் அளவுக்கு ஸ்மார்ட் இல்லை என்பதை கவனத்தில் கொள்க.

என்னடா இவன் பேசிக்கிட்டே இருக்கான் விசயத்த சொல்ரான் இல்ல என்று (உங்கள் மைண்ட் வாய்ஸ்) கவலைப்பட வேண்டாம். வாங்க வந்த விசயத்த பார்ப்போம்…

அன்ரோயிடில் இலகுவாக தமிழ் டைப் செய்ய

1. உங்கள் அண்ட்ராய்டு போன் இல் Settings க்கு செல்லவும்
2. அங்கு Language and Input என்பதை திறக்கவும்
3. அதில் காணப்படும் Google Voice Typing என்பதை திறக்கவும்
4. அதில் காணப்படும் Languages என்பதை திறக்கவும்
5. அங்கு காணப்படும் Choose Input Languages என்பதை திறக்கவும்
6. அதில் Automatic என்பது சரி “டிக்” செய்யப்பட்டிருந்தால் அதையும் மற்ற அனைத்து சரி “டிக்” எடுத்துவிடவும்.
7. Languages இல் “தமிழ் ( இலங்கை)” or “தமிழ் ( இந்தியா)” என்பதை (எதாவது ஒன்றை மட்டும்) செலக்ட் செய்து டிக் பண்ணவும்.
8. Back பண்ணி பின்னர் எங்கு டைப் பண்ண தேவை உள்ளதோ அந்த Application ஐ திறக்கவும் (Eg: Whatsapp)
9. Typing சென்றவுடன் வரும் Keyboard இல் உள்ள ஒலிவாங்கி (MIC) ஐ 3 செக்கன்கள் அழுத்திப்பிடித்து பின் விடுவிக்கவும் (Long Press)
10. இப்போது மேலே கூறப்பட்ட விதிமுறைகளுடன் பேசவும்.
11. Pause என்பதை தொட்டால் Typing நிறுத்தப்படும். தொடர மீண்டும் அதே பட்டனை தொடவும்.

அவ்வளவுதான்… உங்கள் கருத்துக்களை முடிந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்.

இந்த கட்டுரையின் பெரும் பகுதி இம்முறை மூலம் HTC 816G மூலம் டைப் பண்ணப் பட்டது என்பதையும் இதில் எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் உள்ளடங்கி இருப்பதையும் கவனத்தில் கொள்ளவும். தமிழ் எழுத்துப்பிழைகள் இருந்தால் என்னை மன்னிப்பதோடு எனது மின்னஞ்சலுக்கு சுட்டிக்காட்டவும்.

மபாஸ் முஹைதீன்
mafazbinmohideen@gmail.com

https://config.lk/tips/ஆன்ட்ராய்ட்-இல்-வேகமாக-த/

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பரிமளம் எண்டு செல்லமாய் சொல்லிப்பாத்தன்....அது பனிமரம் எண்டு எழுதிக்காட்டுது..tw_dizzy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

பரிமளம் எண்டு செல்லமாய் சொல்லிப்பாத்தன்....அது பனிமரம் எண்டு எழுதிக்காட்டுது..tw_dizzy:

ம்ம்  பேச ஒன்று வந்து விழுவது  வேற சொல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

பரிமளம் எண்டு செல்லமாய் சொல்லிப்பாத்தன்....அது பனிமரம் எண்டு எழுதிக்காட்டுது..tw_dizzy:

காமிராவை நிறுத்திவிட்டு முயற்சியுங்கள், சரியாக சொல்லுமென எண்ணுகிறேன், ஐயா..! :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.