Jump to content

எப்போதும் இல்லாத ஆபத்தை நோக்கி நகர்கிறது வடகொரியா: சிஐஏ இயக்குநர்


Recommended Posts

அமெரிக்காவுடனான போரை கிம் தூண்டுகிறாரா?

 

 
NORTHKOREAajpg

கோப்புப் படம்: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்

அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கிடையேயான சண்டைகள் எப்போது அதிவேகமாக எழுகிறதோ, அதே வேகத்தில் மீண்டும் வீழ்ச்சியடைந்துவிடும்.

இதுதான் பல காலக் கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இம்முறை இரு நாட்டுக்கு இடையேயான சண்டை அவ்வளவு எளிதில் மங்கி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதற்கான காரணங்களும் வலுவாகவே அமைந்துள்ளன என்றுதான் கூற வேண்டும்.

இதற்கிடையில் அமெரிக்காவில் தொடர்ந்து நடந்து வரும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை, வடகொரியா மீதான கோபத்தை குறைக்கக்கூடும் சூழலும் உருவாகியுள்ளது.

ஆனால் வடகொரியாவோ இதற்கு சற்றும் எதிர்மாறான செயலில் ஈடுபட்டு வருகிறது. பசிபிக் பகுதியிலுள்ள அமெரிக்காவின் ராணுவ தளவாட பகுதியான குவாம் தீவை தாக்குவதற்கு அனைத்து திட்டங்களும் தயார், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஆணைக்காகவே காத்திருப்பதாக கொரியா ராணுவத்தினர் சமீபத்தில் கூறியிருந்தனர்.

ட்ரம்ப் நிர்பந்திக்கப்படுவாரா?

வடகொரிய அதிபர் கிம்மை பொறுத்தவரை அமெரிக்கவுடனான போருக்கு அவர் ஓப்புதல் வழங்கினால் அது மிக ஆபத்தானது என்று அவருக்கு நன்கு தெரியும். அதுமட்டுமில்லாது கிம் இதற்கு ஒப்புதல் அளித்தாலும், அளிக்கவிட்டாலும், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் கடுமையான வார்த்தை மோதல்கள் ட்ரம்ப் இந்த விவகாரத்தை கையில் எடுக்க நிர்பந்திக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுவதற்கான சூழலும் எழுந்துள்ளது.

எனினும் இதனை கணிக்க முடியாதவையாகவே தற்போதைய நிலைமை உள்ளது.

யார் முதலில் தொடங்க போகிறார்கள் என்பதுதான் இரு நாடுகளும் வெளிப்படையாக வெளியே சொல்லிக் கொள்ளாத போர் யுத்தியாகும்.

இதற்கு சிறந்த உதாரணம், வடகொரியா குவாம் தீவை தாக்க போவதாக முதலில் கூறியிருப்பது உண்மையில் அது வடகொரியாவின் பாசாங்கு நடவடிக்கையே.  ஏனெனில் வடகொரியாவுக்கு நன்கு தெரியும் இந்தப் போர் நிச்சயம் பேரழிவைத்தான் தரும் என்பது. வடகொரியா இந்தச் சண்டையை தானாக தொடங்க விரும்பவில்லை. அதனால்தான் அவர்கள் அமெரிக்காவுக்காக காத்து கொண்டிருக்கிறார்கள்.

விடுதலை நாள்

ஆக்ஸ்ட் 15 இரண்டாவது உலகப் போர் முடிவடைந்த தினமாகும். மேலும் ஜப்பானின் காலனித்துவ ஆட்சியின் விடுதலை பெற்ற நாளும் கூட.

இந்த தினத்தில் வடகொரியவின் ராணுவ நடவடிக்கை குறித்த அறிக்கையை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடுத்துக்காட்டுக்கு அமெரிக்காவின் சுதந்திர தினத்தில் வடகொரிய நடத்திய ஏவுகணை சோதனை போன்று இது இருக்கலாம்.

போர் விளையாட்டுகள்

அமெரிக்கா தென் கொரியாவுடன் இணைந்து வடகொரியாவுக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி போர் பயிற்சியில் ஈடுபட இருக்கிறது. அமெரிக்காவின் இந்தப் போர் பயிற்சிகள் வடகொரியா ஒரு ஒத்திகையாகவே பார்க்கிறது.

அமெரிக்காவை தடுத்து நிறுத்துவது என்பது வடகொரியாவின் நீண்ட கால திட்டமாகும். அதற்கான திட்டமாகவே இந்த போர் விளையாட்டுகள்  நடந்து கொண்டிருக்கின்றன.

http://tamil.thehindu.com/world/article19490657.ece

Link to comment
Share on other sites

எப்போதும் இல்லாத ஆபத்தை நோக்கி நகர்கிறது வடகொரியா: சிஐஏ இயக்குநர்

 
அமெரிக்கா வட கொரியா இடையே அணு ஆயுத போர்படத்தின் காப்புரிமைAFP

அமெரிக்கா - வடகொரியா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், வடகொரியாவுடன் உடனடியாக அணு ஆயுத போர் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என அமெரிக்க அரசின் உளவு நிறுவனத்தின் (சிஐஏ) இயக்குநர் கூறியுள்ளார்.

வடகொரியா தனது அணு ஆயுத திட்டத்தால் `எப்போதும் இல்லாத ஆபத்தை` நோக்கி நகர்வதாக சிஐஏ இயக்குநர் மைக் பாம்பேயோ கூறியுள்ளார்,

வட கொரியா மற்றொரு ஏவுகணை சோதனையை நடத்தினாலும் ஆச்சரிப்படுவதற்கு இல்லை என ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் `பொறுமை` இனி நீடிக்காது என்றும் வட கொரியாவை அவர் எச்சரித்தார்.

வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன், நாட்டின் ஆயுத திட்டத்தை அபிவிருத்தி செய்ய தொடர்ந்து முயற்சிப்பார் என்பதில் தான் `மிகவும் நம்பிக்கையுடன்` இருப்பதாக மைக் கூறுகிறார்.

அமெரிக்கா வட கொரியா இடையே அணு ஆயுத போர்படத்தின் காப்புரிமைAFP Image captionசிஐஏ இயக்குநர் மைக் பாம்பேயோ

அமெரிக்காவைத் தாக்கும் ஒரு அணு ஆயுதத்தை, அமெரிக்காவுக்கு எவ்வளவு நெருக்கமாக வட கொரியாவால் வைக்க முடியும் எனக் கேட்கப்பட்டதற்கு,`அவர்கள் நெருக்கமாக உள்ளனர்` என தெரிவித்துள்ளார்.

ஆனால், உடனடியாக அணு ஆயுத போர் ஏற்படுவதற்கான ஆபத்துகள் இருப்பதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார்.

`` எல்லோரும் ஒரு அணு ஆயுதப் போர் பற்றி பேசுவதைப் பற்றி நான் அறிவேன். ஆனால், அணு ஆயுதப் போர் இப்போதே நடக்கும் வாய்ப்புகள் இருப்பதாக உளவுத்துறை அறிக்கை கூறவில்லை`` என்கிறார் மைக்.

http://www.bbc.com/tamil/global-40924443

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.