Jump to content

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: 'ஆப்பிள், ஆரஞ்சு போல பெண்களை இடம் மாற்றினார்கள்'


Recommended Posts

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: 'ஆப்பிள், ஆரஞ்சு போல பெண்களை இடம் மாற்றினார்கள்'

 
இந்தியா பாகிஸ்தான் பிரிவினை

பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ம் தேதி தனது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியா ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடுகிறது.

இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி 

நாடு பிரிக்கப்பட்டபோது மக்கள் பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அடைந்தார்கள், அவை முழுவதுமாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது பேசப்பட்டவை, குறைந்தபட்சம் ஆதங்கத்தையாவது வெளிப்படுத்த முடிந்தவை.

உண்மை காதல் கதை

ஆனால், வெளியில் யாருக்கும் தெரியாத காதல் கதைகளும் அதில் சிதைந்து போயிருக்கலாம் என்பதை உணர வைக்கும் கதை இது.

காதலில் இணைவதற்காக மதத்தையும் நாட்டையும் மாற்றிய பிறகும், அரசாங்கத்துடன் போராடிய காதல் இது.

ராவல்பிண்டியில் படான் குடும்பத்தை சேர்ந்த 15 வயது இஸ்மத்தும், அமிர்தசரஸில் லாலாஜி குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது ஜீதுவும் காதலர்கள்.

விடுதலைக்கு ஓராண்டிற்கு முன்பு அதாவது 1946-இல் இரு குடும்பத்தினரும் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்துபோது, அங்கு சந்தித்து குடும்ப நண்பர்களானார்கள்.

இஸ்மத்தும், ஜீதுவுக்கும் இடையே காஷ்மீரில் காதல் ரோஜா மலர்ந்தது.

பிரிவினைப் புயல் காதலை வேரோடு சாய்த்துவிடும், ஜீதுவுடன் இணைவது கடினம் என்பதை இஸ்மத் புரிந்துக்கொண்டார்.

காதலுக்கு எல்லைகளும், அரசாங்க கொள்கைகளும் புரியுமா? சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்படாத காதல், இஸ்மத்தை வீட்டை விட்டு வெளியேறி இந்துக்களின் அகதிகள் முகாமில் அடைக்கலம் புக வைத்தது.

'நான் இந்துப் பெண். என் பெற்றோரை தொலைத்துவிட்டேன். தயவு செய்து என்னை இந்தியாவில் கொண்டு விட்டுவிடுங்கள்' அகதிகள் முகாமில் சேர இஸ்மத் சொன்ன பொய் இது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை Image captionவிடுதலைக்கு ஓராண்டிற்கு முன்பு இஸ்மத்தும், ஜீதுவுக்கும் இடையே காஷ்மீரில் காதல் ரோஜா மலர்ந்தது

பிரிவினைக்கு பிறகு இரண்டு மாதங்கள், இரு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் கடத்தப்பட்டனர். பல பெண்கள் கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டு, விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்விக்கப்பட்டனர்.

இதனால் இரு நாட்டு அரசுகளும், காணாமல்போன பெண்களை தேடி, மீண்டும் அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்த்து வைக்கும், 'ஆபரேஷன் ரிகவரி' திட்டத்தை தொடங்கின.

இரு நாடுகளின் அகதிகள் முகாம்களில் இருக்கும் பெண்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் பொறுப்பில் நியமிக்கப்பட்டார் சமூக சேவகி கமலா படேல்.

பிரிவினை காலகட்டத்தில் பஞ்சாபில் இந்து முஸ்லிம்களின் பேச்சு வழக்கு, உடுக்கும் பாணி எல்லாம் ஒன்றுபோலவே இருக்கும்.

எனவே இஸ்மத்தை இந்து என்று நம்பிய கமலா படேல், அகதிகளுடன் சேர்த்து அவரையும் ராவல்பிண்டியில் இருந்து அமிர்தசரசுக்கு அனுப்பினார்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை

அமிர்தசரஸில் இருந்து ஜீதுவின் வீட்டிற்கு தகவல் அனுப்பப்பட்டது. இஸ்மத் மைனராக இருந்தாலும், ஜீதுவின் பெற்றோர் அனுமதியோடு, அமிர்தசரஸ் பொற்கோவிலில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும் சுபம் போடுவது திரைப்படங்களில் தான் சாத்தியம், நிஜ வாழ்க்கையில் அதற்கு பிறகுதானே இன்னல்களும், இடர்பாடுகளும் ஏற்படும்?

தங்கள் மகள் கடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசிடம் புகார் அளித்த இஸ்மத்தின் பெற்றோர், மகளை மீட்டுக் கொடுக்கும்படி கோரிக்கை வைத்தனர்.

கடத்தப்பட்ட பெண்களை அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் சேர்க்க இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம், இஸ்மத் - ஜீது காதல் தம்பதிகளின் திருமண ஒப்பந்தத்திற்கு தடைக்கல்லானது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை Image caption''பிரிவினை காலகட்டத்தில் நடந்த கொடுமைகளை நேரில் பார்த்தவர்களும், அதை கேட்டவர்களுக்கும் இதன் பொருள் மிகவும் நன்றாகவே விளங்கும்''

இஸ்மத்தின் பொய் நிரூபிக்கப்பட்டதால், அவர் பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. என்ன செய்வது என்று புரியாமல் அச்சமடைந்த ஜீது, கமால் படேலை சநதித்து பேசினார்.

'இது கடத்தல் இல்லை, இஸ்மத்தும் நானும் காதலிக்கிறோம், தன்னுடைய விருப்பத்தின்படியே அவள் என்னைத் தேடி வந்திருக்கிறாள். எங்களுக்கு எப்படியாவது உதவி செய்யுங்கள்.'

மேஜராகாத தங்கள் மகள் கடத்தப்படவில்லை, அவள் விரும்பியே வீட்டை விட்டு வெளியேறினாள் என்று இஸ்மத்தின் பெற்றோர் ஏன் நம்பவேண்டும்?

அதுவும் பிரிவினை காலகட்டத்தில் நடந்த கொடுமைகளை நேரில் பார்த்தவர்களும், அதை கேட்டவர்களுக்கும் இதன் பொருள் மிகவும் நன்றாகவே விளங்கும்.

எனவே இந்த விவகாரத்தில் சலுகை எதுவும் கொடுப்பதற்கான வாய்ப்பே இல்லை. இது காலத்தின் கோலம், பிரிவினையின் அலங்கோலம்.

இஸ்மத் மற்றும் அவரைப் போன்ற பெண்களை வலுக்கட்டாயமாக அடுத்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு கமலா படேல் மறுப்பு தெரிவித்தார்.

இந்த விவகாரம், 'அரசியலமைப்பு சட்டசபை' (constitutional assembly) வரை சென்றுவிட்டது. பல பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒப்பந்தம் தொடர்ந்தது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை

காவல்துறையிடம் இருந்து தப்பிப்பதற்காக காதல் கிளிகள் கல்கத்தாவுக்கு பறந்து சென்றன.

இங்கு, கமலா படேலின் குழுவினர் மீதான அழுத்தம் அதிகரித்தது.

இத நிகழ்வை பற்றி பிரிவினையின் நினைவுகளைப் பற்றி கமலா படேல் எழுதியுள்ள 'Torn from the Roots: A Partition Memoir' என்ற புத்தகத்தில், 'ஆப்பிள், ஆரஞ்சு போன்று பெண்கள் அங்கும் இங்கும் மாற்றப்பட்டனர்' என்று குறிப்பிடுகிறார்

'கடத்தப்பட்ட பெண்கள் அகதிகள் முகாமுக்கு அழைத்து வரப்பட்டபிறகு, அவர்கள் விருப்பப்பட்டால், மீண்டும் கடத்தப்பட்ட வீட்டிற்கே திரும்ப தப்பிக்க உதவி செய்தார் கமலா படேல்' என்று இந்த புத்தகத்தை வெளியிட்ட ரிது மேனன் என்னிடம் சொன்னார்.

அது அந்த காலகட்டத்தின் மனோபாவம். பெண்களின் விருப்பங்களையும் புரிந்துக் கொள்ள வேண்டியிருந்தது.

உறவுகள் உருவாகும் சூழ்நிலைகளும் விசித்திரமாகவே இருந்தது. ஆனால், உருவான உறவுகளை விட்டு வெளியேறுவதைவிட அதிலேயே தொடர்வதே சிறந்ததாகவும் இருந்தது.

இன்றைய சூழ்நிலையில் இதைப் புரிந்துக் கொள்வது விசித்திரமாக இருந்தாலும், அந்த காலகட்டத்தில் இருந்த சமூக சூழ்நிலை, மக்களின் மனோபாவம் அது.

விருப்பத்திற்கு எதிராகவே என்றாலும்கூட, பிறரின் மனைவியாக சில நாட்கள் இருந்துவிட்டு திரும்பிவந்தால் எதிர்கால வாழ்க்கை என்ன என்பது உட்பட பெண்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை

இஸ்மத்-ஜீது விவகாரமும் இதுபோன்றே சிக்கலானது என்றாலும், அரசாங்க இயந்திரம் இதை நெருக்கமாக பார்க்க விரும்பவில்லை.

காதலர்கள் வரவழைப்பதற்கான உபாயமாக, 'பாகிஸ்தான் அரசு இந்த வழக்கை முடித்துவிட்டது' என வதந்தி பரப்பப்பட்டது. காதல் பறவைகள் தங்கள் கூட்டிற்கு திரும்பின.

இஸ்மத்திடம் பேசிய கமலா படேல், அவரை ஒரு வாரத்திற்கு மட்டும் லாகூருக்கு செல்லும்படி அறிவுறுத்தினார்.

அங்கிருக்கும் காவல்துறை ஆணையரின் முன்னிலையில் பெற்றோருடன் பேசிவிட்டு, அங்கேயே இறுதி முடிவை சொல்லலாம், இதுவே சட்டப்படி சாத்தியமான தீர்வு என்றார் கமலா படேல்.

இது கமலா படேலின் கருத்துக்கு எதிரானதாக இருந்தாலும், சட்டத்தின்படியே நடக்கவேண்டும். வருத்தத்துடனே கமலா படேல் இந்த முடிவை எடுத்தார்.

"அவர் மீது மிகப்பெரிய அழுத்தம் இருந்தது, பலரின் வாழ்க்கை முடிவுகளை எடுக்க வேண்டிய அழுத்தம், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் இந்த அகதிகள் முகாமில் இருந்த அவருக்கு உண்பதைக்கூட மறக்கடித்துவிட்டது" என்று கமலா படேலின் உறவினர் நைனா படேல் கூறுகிறார்

'ஆபரேஷன் ரிகவரி'யின் கீழ் ஏறக்குறைய 30 ஆயிரம் பெண்கள் தேடி கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களில் இஸ்மத்-ஜீது போன்ற நூற்றுக்கணக்கான காதலர்களும் அடங்குவார்கள், ஆனால் அவர்கள் பற்றி அதிகாரபூர்வமாக ஆவணப்படுத்தப்படவில்லை.

கமலா படேலின் புத்தகத்தில் இஸ்மத்-ஜீது என்ற ஒரு காதல் ஜோடி பற்றிய குறிப்பு மட்டுமே காணப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை

அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இஸ்மத்தை லாகூரில் ஒப்படைத்த ஜீது, காதல் மனைவியின் வருகையை எதிர்பார்த்து நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார்.

இஸ்மத்தின் பெற்றோர், மகளை தங்களுடனே அழைத்துச் சென்றுவிட்ட செய்தியைக் கேட்ட கமலா படேலுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

உடனே கமலா படேல், இஸ்மத்தை சந்திக்க பாகிஸ்தான் சென்றார், ஆனால் அங்கு கதை மாறியிருந்தது. இஸ்மத்தின் நடை உடை பாவனைகள் மாறியிருந்தன.

கமலா படேலை நோக்கி விரலை நீட்டி இஸ்மத் சொன்னார், "நான் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று திரும்பத்திரும்ப கேட்டும், இந்த பெண்மணி என்னை பாகிஸ்தானுக்கு வரவிடாமல் தடுத்தார்".

ஜீதுவின் பெயரை கேட்டதுமே சீறிவிழுந்த இஸ்மத், "அந்த நாஸ்திகனின் முகத்தை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை, என்னால் முடிந்தால் அவனை வெட்டி துண்டுகளாக்கி நாய்களுக்கு இரையாக போடுவேன்"

கமலா படேலுக்கு என்ன சொல்லமுடியும்? ஆனால் அதன்பிறகு இஸ்மத்தின் குடும்பம் எங்கே போனது என்று தெரியவில்லை.

உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையிலும், லாகூரிலேயே தங்கி இஸ்மத்தை தேடினார் ஜீது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை Image caption''நான் முற்றிலுமாக உடைந்து நடைபிணமாகத்தான் என்னவளை தேடிக்கொண்டிருக்கிறேன்''

பிரிவினையின் அனல் கனலாக கனன்று கொண்டிருந்த நேரம் அது. ஜீதுவிற்கு நிலைமையை புரிய வைக்க கமலா படேல் செய்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போயின.

"நான் முற்றிலுமாக உடைந்து நடைபிணமாகத்தான் என்னவளை தேடிக்கொண்டிருக்கிறேன், பிணமானால் தான் என்ன?" என்பதே ஜீதுவின் பதிலாக இருந்தது. நிறைய பணம் செலவானது, அந்த அப்பாவிக் காதலனை காசநோயும் விட்டுவைக்கவில்லை.

ஐந்து ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜீதுவை மீண்டும் கமலா பார்த்தபோது, அவர் மிகவும் தளர்ந்து போயிருந்தான். முகத்தில் மஞ்சள் பூத்திருந்தது, அவர் தனியாகவே இருந்தார்.

பிரிவினை நிர்ணயித்த எல்லைக் கோடுகள் பிரித்தது நாடுகளை மட்டுமா? மக்களின் வாழ்க்கையை, இடத்தை, வாழ்வாதரத்தை மட்டுமா? இல்லை, காதலனிடம் இருந்து காதலியை, கணவனிடம் இருந்து மனைவியை, பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளை… சொல்லப்படாத கதைகள் இன்னும் எத்தனை எத்தனையோ!

http://www.bbc.com/tamil/global-40924437

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.