Jump to content

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: 'ஆப்பிள், ஆரஞ்சு போல பெண்களை இடம் மாற்றினார்கள்'


Recommended Posts

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: 'ஆப்பிள், ஆரஞ்சு போல பெண்களை இடம் மாற்றினார்கள்'

 
இந்தியா பாகிஸ்தான் பிரிவினை

பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ம் தேதி தனது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியா ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடுகிறது.

இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி 

நாடு பிரிக்கப்பட்டபோது மக்கள் பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அடைந்தார்கள், அவை முழுவதுமாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது பேசப்பட்டவை, குறைந்தபட்சம் ஆதங்கத்தையாவது வெளிப்படுத்த முடிந்தவை.

உண்மை காதல் கதை

ஆனால், வெளியில் யாருக்கும் தெரியாத காதல் கதைகளும் அதில் சிதைந்து போயிருக்கலாம் என்பதை உணர வைக்கும் கதை இது.

காதலில் இணைவதற்காக மதத்தையும் நாட்டையும் மாற்றிய பிறகும், அரசாங்கத்துடன் போராடிய காதல் இது.

ராவல்பிண்டியில் படான் குடும்பத்தை சேர்ந்த 15 வயது இஸ்மத்தும், அமிர்தசரஸில் லாலாஜி குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது ஜீதுவும் காதலர்கள்.

விடுதலைக்கு ஓராண்டிற்கு முன்பு அதாவது 1946-இல் இரு குடும்பத்தினரும் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்துபோது, அங்கு சந்தித்து குடும்ப நண்பர்களானார்கள்.

இஸ்மத்தும், ஜீதுவுக்கும் இடையே காஷ்மீரில் காதல் ரோஜா மலர்ந்தது.

பிரிவினைப் புயல் காதலை வேரோடு சாய்த்துவிடும், ஜீதுவுடன் இணைவது கடினம் என்பதை இஸ்மத் புரிந்துக்கொண்டார்.

காதலுக்கு எல்லைகளும், அரசாங்க கொள்கைகளும் புரியுமா? சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்படாத காதல், இஸ்மத்தை வீட்டை விட்டு வெளியேறி இந்துக்களின் அகதிகள் முகாமில் அடைக்கலம் புக வைத்தது.

'நான் இந்துப் பெண். என் பெற்றோரை தொலைத்துவிட்டேன். தயவு செய்து என்னை இந்தியாவில் கொண்டு விட்டுவிடுங்கள்' அகதிகள் முகாமில் சேர இஸ்மத் சொன்ன பொய் இது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை Image captionவிடுதலைக்கு ஓராண்டிற்கு முன்பு இஸ்மத்தும், ஜீதுவுக்கும் இடையே காஷ்மீரில் காதல் ரோஜா மலர்ந்தது

பிரிவினைக்கு பிறகு இரண்டு மாதங்கள், இரு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் கடத்தப்பட்டனர். பல பெண்கள் கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டு, விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்விக்கப்பட்டனர்.

இதனால் இரு நாட்டு அரசுகளும், காணாமல்போன பெண்களை தேடி, மீண்டும் அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்த்து வைக்கும், 'ஆபரேஷன் ரிகவரி' திட்டத்தை தொடங்கின.

இரு நாடுகளின் அகதிகள் முகாம்களில் இருக்கும் பெண்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் பொறுப்பில் நியமிக்கப்பட்டார் சமூக சேவகி கமலா படேல்.

பிரிவினை காலகட்டத்தில் பஞ்சாபில் இந்து முஸ்லிம்களின் பேச்சு வழக்கு, உடுக்கும் பாணி எல்லாம் ஒன்றுபோலவே இருக்கும்.

எனவே இஸ்மத்தை இந்து என்று நம்பிய கமலா படேல், அகதிகளுடன் சேர்த்து அவரையும் ராவல்பிண்டியில் இருந்து அமிர்தசரசுக்கு அனுப்பினார்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை

அமிர்தசரஸில் இருந்து ஜீதுவின் வீட்டிற்கு தகவல் அனுப்பப்பட்டது. இஸ்மத் மைனராக இருந்தாலும், ஜீதுவின் பெற்றோர் அனுமதியோடு, அமிர்தசரஸ் பொற்கோவிலில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும் சுபம் போடுவது திரைப்படங்களில் தான் சாத்தியம், நிஜ வாழ்க்கையில் அதற்கு பிறகுதானே இன்னல்களும், இடர்பாடுகளும் ஏற்படும்?

தங்கள் மகள் கடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசிடம் புகார் அளித்த இஸ்மத்தின் பெற்றோர், மகளை மீட்டுக் கொடுக்கும்படி கோரிக்கை வைத்தனர்.

கடத்தப்பட்ட பெண்களை அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் சேர்க்க இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம், இஸ்மத் - ஜீது காதல் தம்பதிகளின் திருமண ஒப்பந்தத்திற்கு தடைக்கல்லானது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை Image caption''பிரிவினை காலகட்டத்தில் நடந்த கொடுமைகளை நேரில் பார்த்தவர்களும், அதை கேட்டவர்களுக்கும் இதன் பொருள் மிகவும் நன்றாகவே விளங்கும்''

இஸ்மத்தின் பொய் நிரூபிக்கப்பட்டதால், அவர் பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. என்ன செய்வது என்று புரியாமல் அச்சமடைந்த ஜீது, கமால் படேலை சநதித்து பேசினார்.

'இது கடத்தல் இல்லை, இஸ்மத்தும் நானும் காதலிக்கிறோம், தன்னுடைய விருப்பத்தின்படியே அவள் என்னைத் தேடி வந்திருக்கிறாள். எங்களுக்கு எப்படியாவது உதவி செய்யுங்கள்.'

மேஜராகாத தங்கள் மகள் கடத்தப்படவில்லை, அவள் விரும்பியே வீட்டை விட்டு வெளியேறினாள் என்று இஸ்மத்தின் பெற்றோர் ஏன் நம்பவேண்டும்?

அதுவும் பிரிவினை காலகட்டத்தில் நடந்த கொடுமைகளை நேரில் பார்த்தவர்களும், அதை கேட்டவர்களுக்கும் இதன் பொருள் மிகவும் நன்றாகவே விளங்கும்.

எனவே இந்த விவகாரத்தில் சலுகை எதுவும் கொடுப்பதற்கான வாய்ப்பே இல்லை. இது காலத்தின் கோலம், பிரிவினையின் அலங்கோலம்.

இஸ்மத் மற்றும் அவரைப் போன்ற பெண்களை வலுக்கட்டாயமாக அடுத்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு கமலா படேல் மறுப்பு தெரிவித்தார்.

இந்த விவகாரம், 'அரசியலமைப்பு சட்டசபை' (constitutional assembly) வரை சென்றுவிட்டது. பல பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒப்பந்தம் தொடர்ந்தது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை

காவல்துறையிடம் இருந்து தப்பிப்பதற்காக காதல் கிளிகள் கல்கத்தாவுக்கு பறந்து சென்றன.

இங்கு, கமலா படேலின் குழுவினர் மீதான அழுத்தம் அதிகரித்தது.

இத நிகழ்வை பற்றி பிரிவினையின் நினைவுகளைப் பற்றி கமலா படேல் எழுதியுள்ள 'Torn from the Roots: A Partition Memoir' என்ற புத்தகத்தில், 'ஆப்பிள், ஆரஞ்சு போன்று பெண்கள் அங்கும் இங்கும் மாற்றப்பட்டனர்' என்று குறிப்பிடுகிறார்

'கடத்தப்பட்ட பெண்கள் அகதிகள் முகாமுக்கு அழைத்து வரப்பட்டபிறகு, அவர்கள் விருப்பப்பட்டால், மீண்டும் கடத்தப்பட்ட வீட்டிற்கே திரும்ப தப்பிக்க உதவி செய்தார் கமலா படேல்' என்று இந்த புத்தகத்தை வெளியிட்ட ரிது மேனன் என்னிடம் சொன்னார்.

அது அந்த காலகட்டத்தின் மனோபாவம். பெண்களின் விருப்பங்களையும் புரிந்துக் கொள்ள வேண்டியிருந்தது.

உறவுகள் உருவாகும் சூழ்நிலைகளும் விசித்திரமாகவே இருந்தது. ஆனால், உருவான உறவுகளை விட்டு வெளியேறுவதைவிட அதிலேயே தொடர்வதே சிறந்ததாகவும் இருந்தது.

இன்றைய சூழ்நிலையில் இதைப் புரிந்துக் கொள்வது விசித்திரமாக இருந்தாலும், அந்த காலகட்டத்தில் இருந்த சமூக சூழ்நிலை, மக்களின் மனோபாவம் அது.

விருப்பத்திற்கு எதிராகவே என்றாலும்கூட, பிறரின் மனைவியாக சில நாட்கள் இருந்துவிட்டு திரும்பிவந்தால் எதிர்கால வாழ்க்கை என்ன என்பது உட்பட பெண்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை

இஸ்மத்-ஜீது விவகாரமும் இதுபோன்றே சிக்கலானது என்றாலும், அரசாங்க இயந்திரம் இதை நெருக்கமாக பார்க்க விரும்பவில்லை.

காதலர்கள் வரவழைப்பதற்கான உபாயமாக, 'பாகிஸ்தான் அரசு இந்த வழக்கை முடித்துவிட்டது' என வதந்தி பரப்பப்பட்டது. காதல் பறவைகள் தங்கள் கூட்டிற்கு திரும்பின.

இஸ்மத்திடம் பேசிய கமலா படேல், அவரை ஒரு வாரத்திற்கு மட்டும் லாகூருக்கு செல்லும்படி அறிவுறுத்தினார்.

அங்கிருக்கும் காவல்துறை ஆணையரின் முன்னிலையில் பெற்றோருடன் பேசிவிட்டு, அங்கேயே இறுதி முடிவை சொல்லலாம், இதுவே சட்டப்படி சாத்தியமான தீர்வு என்றார் கமலா படேல்.

இது கமலா படேலின் கருத்துக்கு எதிரானதாக இருந்தாலும், சட்டத்தின்படியே நடக்கவேண்டும். வருத்தத்துடனே கமலா படேல் இந்த முடிவை எடுத்தார்.

"அவர் மீது மிகப்பெரிய அழுத்தம் இருந்தது, பலரின் வாழ்க்கை முடிவுகளை எடுக்க வேண்டிய அழுத்தம், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் இந்த அகதிகள் முகாமில் இருந்த அவருக்கு உண்பதைக்கூட மறக்கடித்துவிட்டது" என்று கமலா படேலின் உறவினர் நைனா படேல் கூறுகிறார்

'ஆபரேஷன் ரிகவரி'யின் கீழ் ஏறக்குறைய 30 ஆயிரம் பெண்கள் தேடி கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களில் இஸ்மத்-ஜீது போன்ற நூற்றுக்கணக்கான காதலர்களும் அடங்குவார்கள், ஆனால் அவர்கள் பற்றி அதிகாரபூர்வமாக ஆவணப்படுத்தப்படவில்லை.

கமலா படேலின் புத்தகத்தில் இஸ்மத்-ஜீது என்ற ஒரு காதல் ஜோடி பற்றிய குறிப்பு மட்டுமே காணப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை

அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இஸ்மத்தை லாகூரில் ஒப்படைத்த ஜீது, காதல் மனைவியின் வருகையை எதிர்பார்த்து நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார்.

இஸ்மத்தின் பெற்றோர், மகளை தங்களுடனே அழைத்துச் சென்றுவிட்ட செய்தியைக் கேட்ட கமலா படேலுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

உடனே கமலா படேல், இஸ்மத்தை சந்திக்க பாகிஸ்தான் சென்றார், ஆனால் அங்கு கதை மாறியிருந்தது. இஸ்மத்தின் நடை உடை பாவனைகள் மாறியிருந்தன.

கமலா படேலை நோக்கி விரலை நீட்டி இஸ்மத் சொன்னார், "நான் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று திரும்பத்திரும்ப கேட்டும், இந்த பெண்மணி என்னை பாகிஸ்தானுக்கு வரவிடாமல் தடுத்தார்".

ஜீதுவின் பெயரை கேட்டதுமே சீறிவிழுந்த இஸ்மத், "அந்த நாஸ்திகனின் முகத்தை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை, என்னால் முடிந்தால் அவனை வெட்டி துண்டுகளாக்கி நாய்களுக்கு இரையாக போடுவேன்"

கமலா படேலுக்கு என்ன சொல்லமுடியும்? ஆனால் அதன்பிறகு இஸ்மத்தின் குடும்பம் எங்கே போனது என்று தெரியவில்லை.

உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையிலும், லாகூரிலேயே தங்கி இஸ்மத்தை தேடினார் ஜீது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை Image caption''நான் முற்றிலுமாக உடைந்து நடைபிணமாகத்தான் என்னவளை தேடிக்கொண்டிருக்கிறேன்''

பிரிவினையின் அனல் கனலாக கனன்று கொண்டிருந்த நேரம் அது. ஜீதுவிற்கு நிலைமையை புரிய வைக்க கமலா படேல் செய்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போயின.

"நான் முற்றிலுமாக உடைந்து நடைபிணமாகத்தான் என்னவளை தேடிக்கொண்டிருக்கிறேன், பிணமானால் தான் என்ன?" என்பதே ஜீதுவின் பதிலாக இருந்தது. நிறைய பணம் செலவானது, அந்த அப்பாவிக் காதலனை காசநோயும் விட்டுவைக்கவில்லை.

ஐந்து ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜீதுவை மீண்டும் கமலா பார்த்தபோது, அவர் மிகவும் தளர்ந்து போயிருந்தான். முகத்தில் மஞ்சள் பூத்திருந்தது, அவர் தனியாகவே இருந்தார்.

பிரிவினை நிர்ணயித்த எல்லைக் கோடுகள் பிரித்தது நாடுகளை மட்டுமா? மக்களின் வாழ்க்கையை, இடத்தை, வாழ்வாதரத்தை மட்டுமா? இல்லை, காதலனிடம் இருந்து காதலியை, கணவனிடம் இருந்து மனைவியை, பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளை… சொல்லப்படாத கதைகள் இன்னும் எத்தனை எத்தனையோ!

http://www.bbc.com/tamil/global-40924437

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த‌ முறை மூளைய‌ க‌ச‌க்கினால் ந‌டுவில் இருந்து மிதி ப‌ட‌லாம்   என்ர‌ த‌லைவ‌ர் சுவி அண்ணாவின் போட்டி கேள்விக்கான‌ ப‌திலை பார்க்க‌ த‌லைவ‌ர் கீழ‌ நின்று மிதி ப‌டுகிறாரோ தெரியாது.............................................................
    • மூவரின் சந்திப்பும் தித்திப்பாக சிறப்புடன் நடைபெற்றதையிட்டு யாம் மிகவும் மகிழ்ச்சி யடைந்தோம்....... தொடரட்டும் உங்களின் உறவு........! பாகம் ஒன்று முற்றுப்பெற்றது...பகம் இரண்டாவது படத்துடன் வருமா?>..ஆவலைத்தூண்டி விட்டீர்கள்...தொடருங்கள்..
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 30 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்ரேலியா அருகேயுள்ள பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சுமார் 670 பேர் பூமிக்கடியில் புதையுண்டு விட்டதாக ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோப்ராக் கூறுகையில், "நாட்டின் எங்கா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் தாக்கம் முதலில் நினைத்ததை விட அதிகமாக இருந்தது." என்றார். "இப்போது 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார். தென்மேற்கு பசிபிக்கில் உள்ள பப்புவா நியூ கினி தீவுகளின் வடக்கே எங்கா பிராந்தியத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இந்த பாதிக்கப்பட்ட இடங்கள் உள்ளன. "நிலச்சரிவு இன்னும் நீடிப்பதால் மீட்புப் பணியாளர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். தண்ணீர் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பெரிய ஆபத்தை உருவாக்குகிறது."அக்டோப்ராக் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வருகின்றனர். ஆனால், நிவாரண முயற்சிகளுக்கு உதவும் மனிதாபிமான நிறுவனமான கேர் ஆஸ்திரேலியா, "அண்டை பகுதிகளில் பழங்குடியின மோதல்களில் தப்பி வரும் மக்களும் இருந்திருக்கக் கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்" என்று கூறுகிறது. பேரழிவின் விளைவாக குறைந்தது 1,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு) மக்கள் தூங்கிக் கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அனைத்து வழிகளையும் மீட்புப் பணியாளர்கள் பயன்படுத்துவதாக அக்டோப்ராக் கூறினார்: "மண்ணுக்கு அடியில் புதைந்த உடல்களை மீட்பதற்கு குச்சிகள், மண்வெட்டிகள், பெரிய விவசாய முள்கரண்டிகள் என கிடைக்கும் அனைத்தையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர்." என்று அவர் தெரிவித்தார். இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. https://www.bbc.com/tamil/articles/c2xxg4m2xz4o
    • கொல்கத்தா vs சன்ரைசர்ஸ்: ஐபிஎல் சாம்பியனை தீர்மானிக்கும் சென்னை ஆடுகளம் யாருக்கு சாதகம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 26 மே 2024, 03:05 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு இறுதிப்போட்டியில் நடைபெறுகிறது. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ள அணிகள் எந்த பாலபாடத்தையும் கற்காமல் இந்தக் கட்டம் வரை வரவில்லை. ஏறக்குறைய இரு மாதங்களாக நடந்த லீக் சுற்று ஆட்டம், கடும் வெயில் காலம், ஒவ்வொரு அணி நிர்வாகத்தையும், வீரர்களையும் பரிசோதித்து பார்த்துவிட்டது. அணியின் கலாசாரம், பெஞ்ச் பலம், பல்வேறு சூழல்கள், எதிரணிகளுக்கு எதிராக வியூகம், திட்டம் வகுத்தல் ஆகியவற்றை 2 மாத காலம் ஆய்வு செய்ய வைத்தது. இதுவரையிலான சவால்களையெல்லாம் தாண்டி இறுதிப்போட்டிக்கு வந்துள்ள இரு அணிகளில் கோப்பை யாருக்கு? இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டால் யாருக்கு கோப்பை? பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய கொல்கத்தா கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து பேட்டர் ஜேஸன் ராய் விலகியதால் அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்டவர் பில் சால்ட். இங்கிலாந்து அணிக்கு விளையாட செல்லும் முன் கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு தூணாக இவர் இருந்தார். அவர் இல்லாத நிலையில் குர்பாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சுனில் நரைன் இந்த சீசனில் பேட்டிங்கில் விஸ்வரூபமெடுத்து எதிரணிகளுக்கு சவால் அளித்து வருகிறார். இதுவரை 482 ரன்கள் சேர்த்து 180 ஸ்ட்ரைக் ரேட்டில் நரைன் பேட் செய்து வருகிறார். கடைசி இரு போட்டிகளைத் தவிர்த்து லீக் ஆட்டங்களில் மற்ற அணிகளுக்கு நரைன் பேட்டிங் சிம்மசொப்பனமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES நடு வரிசையில் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ், நிதிஷ் ராணா மற்றும் பின்வரிசையில் ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸல், ராமன்தீப் சிங் என அடுத்தடுத்து பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய அணியாக கொல்கத்தா இருக்கிறது. இந்த ஆட்டத்தில் இம்பாக்ட் ப்ளேயர் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார். அந்த வகையில் நிதிஷ் ராணா, வைபவ் அரோரா ஆகிய இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக இருக்கலாம். முதலில் பேட் அல்லது சேஸிங்கைப் பொருத்து இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்படலாம். கொல்கத்தா அணியில் முதல் 7 வரிசை பேட்டர்கள் சுழற்பந்துவீச்சுக்கும், வேகப்பந்துவீச்சுக்கும் எதிராக 150 ஸ்ட்ரைக் ரேட்வைத்துள்ளனர் என்கிறது கிரிக்இன்ஃபோ வலைதள புள்ளிவிவரம். பந்துவீச்சில் மிட்ஷெல் ஸ்டார்க் முதல் தகுதிச்சுற்றில் தன்னுடைய பந்துவீச்சின் வீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை எளிதாக்கினார். அந்த தாக்கம் சன்ரைசர்ஸ் அணியில் இன்றும் இருக்கும். இது தவிர பந்தை நன்கு ஸ்விங் செய்யும் வைபவ் அரோரா, நடுப்பகுதி ஓவர்களில் பந்துவீச்சில் வேரியேஷன்கள் செய்யும் ஹர்ஷித் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல், தேவைப்பட்டால் பந்துவீச வெங்கடேஷ் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் புதிரான பந்துவீச்சாளரான வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் இருவரும் எந்த அணியையும் நடுப்பகுதி 8 ஓவர்களில் ரன் குவிக்க விடாமல் செய்து விடுகிறார்கள். இருவரின் பந்துவீச்சு கொல்கத்தாவுக்கு பெரிய பலமாகும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களும் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார்கள். கடந்த 5 போட்டிகளில் மட்டும் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் 47 விக்கெட்டுகளை சாய்த்து, 7.95 எக்னாமி வைத்துள்ளனர். முதல் 8 போட்டிகளில் 31 ரன்கள் சராசரி வைத்திருந்த கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் கடைசி 5 போட்டிகளில் 16 என முன்னேறியுள்ளனர். ஆதலால், கடந்த முதல் தகுதிச்சுற்றில் விளையாடிய அதே ப்ளேயிங் லெவன் மாறாமல் வர அதிக வாய்ப்புள்ளது. சன்ரைசர்ஸ் மீது எதிர்பார்ப்பு சன்ரைசர்ஸ் அணி பரிசோதனை முயற்சியாக ஷாபாஸ் அகமது, அபிஷேக் ஷர்மாவை ராஜஸ்தானுக்கு எதிராக பந்துவீசச் செய்து வெற்றி பெற்றது. ஆனால், அதே பந்துவீச்சாளர்களுடன் வலிமையான கொல்கத்தாவை எதிர்கொள்வது ஆபத்தானது. அதேசமயம், கொல்கத்தா அணியில் சுனில் நரைன், வெங்கடேஷ், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் என 4 இடதுகை பேட்டர்கள் இருக்கிறார்கள். இவர்களைச் சமாளிக்க ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர் தேவை என்பதால், விஜயகாந்த் அல்லது மார்க்ரம் இம்பாக்ட் ப்ளேயராக வரலாம். கடந்த சில போட்டிகளாக மார்க்ரம் பந்துவீச்சு, பேட்டிங்கில் ஜொலிக்காததால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார். இந்த ஆட்டத்தில் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. வேகப்பந்து வீச்சுக்கு உனத் கட்டுக்குப் பதிலாக யான்சென் அல்லது கிளென் பிலிப்ஸ் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், தொடர்ந்து 2 டக்அவுட் ஆகியிருக்கிறார். கடந்த போட்டியிலும் சொதப்பலாக பேட் செய்தது சன்ரைசர்ஸ் அணிக்கு கவலை தரும் விஷயம். அபிஷேக் ஷர்மாவும் கடந்த ஆட்டத்தில் சொதப்பிவிட்டார். ஆதலால் இருவர் மீதான எதிர்பார்ப்பு பைனலில் அதிகரிக்கும். ரஸ்ஸல் பந்துவீச்சுக்கு எதிராக அபிஷேக் ஷர்மா மோசமான ரெக்கார்ட் வைத்துள்ளார். ரஸல் பந்துவீச்சில் 12 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ள அபிஷேக் 2 முறை விக்கெட்டை இழந்துள்ளார். ஆனால், வருண், நரைனுக்கு எதிராக அபிஷேக் 175 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். ஆதலால், இன்று அபிஷேக்கை ஆட்டமிழக்கச் செய்ய தொடக்கத்திலேயே ரஸ்ஸல் கொண்டுவரப்படலாம். கொல்கத்தா அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பேட்டர் ஹென்ரிச் கிளாசன். ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் கிளாசன் திருப்பிவிடுவார். முதல் தகுதிச்சுற்றில் வருண், ஸ்டார்க் ஓவருக்கு எதிராக 200 ஸ்ட்ரைக் ரேட்டை கிளாசன் வைத்திருந்தார். சுனில் நரைனுக்கு எதிராக 166 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள கிளாசன் 42 பந்துகளில் ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார். கிளாசன் நங்கூரமிட்டால் சன்ரைசர்ஸ் அணிக்கு பெரிய பலமாகும், அதேநேரத்தில் கொல்கத்தாவுக்கு தலைவலியாகும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ்க்கு 2வது வாய்ப்பு சன்ரைசர்ஸ் அணி இதுவரை 2016ம் ஆண்டு மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2018ம் ஆண்டுக்குப்பின் 3வது முறையாக பைனலுக்கு சன்ரைசர்ஸ் முன்னேறியுள்ளது. 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கடைசி இடத்தையும், 2022ம் ஆண்டில் 8-வது இடத்தையும் சன்ரைசர்ஸ் பிடித்தது. கடந்த 2 சீசன்களிலும் கொல்கத்தா அணி 7-வது இடத்தைப் பிடித்தது. ஆனால், ஏலத்தில் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20 கோடிக்கு வாங்கி கேப்டனாக்கியது சன்ரைசர்ஸ். ஆனால், பதிலடியாக ஐபிஎல் ஏலத்தில் உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான மிட்ஷெல் ஸ்டார்க்கை ரூ.24 கோடிக்கு கொல்கத்தா வாங்கியது. ஸ்டார்க் 2015ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் தொடரில் விளையாடாத நிலையில் நம்பிக்கையுடன் அவரை கொல்கத்தா விலைக்கு வாங்கியது. ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர்(கம்மின்ஸ், ஹெட், ஸ்டார்க்) ஐபிஎல் தொடரில் இரு வெவ்வேறு அணியில் இடம் பெற்று அவர்களுக்குள் நடக்கும் யுத்தமாகவும் இந்த இறுதிப்போட்டி இருக்கப் போகிறது. இந்த சீசனில் அதிவேகமாக ரன்களைச் சேர்த்த இரு அணிகள் என்றால் அது கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள்தான். இந்த இரு அணிகளுக்கு இடையே சாம்பியன் கோப்பையை கைப்பற்ற நடக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கொல்கத்தா அணி கடந்த 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கவுதம் கம்பீர் கேப்டன்ஷியில் வென்றது. அதே கவுதம் கம்பீர்தான் இப்போது கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக வந்து, அந்த அணி வலுவாக உருவெடுத்து இறுதிப்போட்டி வரை வந்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES அது மட்டுமல்லாமல் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 2வது முறையாக தான் கேப்டனாக பொறுப்பேற்ற அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்துள்ளார். இதற்கு முன் டெல்லி கேப்டல்ஸ் அணியை பைனலுக்கு ஸ்ரேயாஸ் கேப்டன்ஷிப் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 2016ம் ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபின் 2வது முறையாக சாம்பியன் பட்டத்திற்காக மல்லுக்கட்டுகிறது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், தான் சார்ந்திருக்கும் ஆஸ்திரேலிய அணிக்காக ஆஷஸ் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றைப் பெற்றுக்கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக சன்ரைசர்ஸ் அணிக்கும் பொறுப்பேற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி? சென்னையில் நேற்று மாலை திடீரென மழை பெய்ததையடுத்து கொல்கத்தா அணியின் பயிற்சி பாதியிலேயே முடிக்கப்பட்டது. ஆனால் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் மழை பெய்ய சிறிதளவு மட்டுமே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய கணிப்பு கூறுகிறது. சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு மண் கொண்ட விக்கெட்டுக்குப் பதிலாக சிவப்பு மண் கொண்ட விக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஆடுகளம் பேட்டர்களுக்கு விருந்தாக இருக்கும். இரவு நேரப் பனிப்பொழிவை சரியாகக் கணித்து டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்ய வேண்டும். சேப்பாக்கம் மைதானத்தைப் பொருத்தவரை ஐபிஎல் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிகள் 49 வெற்றிகளைப் பெற்றுள்ளன, அதாவது 58.33 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொடரில் தடாலடி பேட்டிங்கால் எதிரணிகளை கலங்கடித்த சன்ரைசர்ஸ் அணி முதல் பேட்டிங் செய்தே அதிக வெற்றிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சேஸிங் செய்த அணிகள் 35 வெற்றிகளைப் பெற்று வெற்றி சதவீதம் 35 % ஆக இருக்கிறது. இந்த சிவப்பு மண் விக்கெட் பயன்படுத்தப்பட்டால் சராசரியாக 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும். ஒருவேளை கருப்பு மண் விக்கெட்டாக இருந்தால் 165 ரன்கள்தான் சராசரி. பட மூலாதாரம்,GETTY IMAGES இதுவரை நேருக்கு நேர் கொல்கத்தா அணியும், சன்ரைசர்ஸ் அணியும் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 18 வெற்றிகளும், சன்ரைசர்ஸ் 9 வெற்றிகளும் பெற்றுள்ளன. இன்று ஆட்டம் நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒருமுறை மட்டுமே கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகள் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணியே வென்றுள்ளது. அது மட்டுமல்லாமல் கடைசியாக இரு அணிகளும் மோதிக்கொண்ட 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் கொல்கத்தா அணி வென்றுள்ளது, 2023, ஏப்ரல் 14ம் தேதி நடந்த ஆட்டத்தில் மட்டும் சன்ரைசர்ஸ் வென்றது. இந்த சீசனில் இருமுறை இரு அணிகளும் மோதிக்கொண்ட நிலையில் அதில் இரண்டிலுமே கொல்கத்தா அணிதான் வென்றது. ஆக, சன்ரைசர்ஸ் அணியை கடந்த காலங்களில் இருந்து தனது பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் மூலம் கொல்கத்தா அணி ஆதிக்கம் செய்துவருகிறது என்பது தெரியவருகிறது. இந்த சீசனில் கொல்கத்தா அணியிடம் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃபின் முதல் தகுதிச்சுற்றிலும் சன்ரைசர்ஸ் அணி தோற்று இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது. ஐபிஎல் வரலாற்றில் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃப் சுற்றிலும் ஒரு அணியிடம் தோற்ற அணி, பைனலில் வென்று சாம்பியன் பட்டம் ஒருமுறை மட்டும் வென்றுள்ளது. அது மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான். 2017ம் ஆண்டு புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியிடம் லீக், தகுதிச்சுற்றில் தோற்று பைனலில் மும்பை இந்தியன்ஸ் வென்றது. இந்த முறை கொல்கத்தா அணியை சன்ரைசர்ஸ் அணி வீழ்த்தினால், அந்த வரிசையில் இடம்பிடிக்கும் 2வது அணி என்ற புகழைப் பெறும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES மழை பெய்தால் என்ன ஆகும்? ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்காக நாளை ஒருநாள் (திங்கட்கிழமை) ரிசர்வ் டே-ஆக வைக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இன்று மழை பெய்து ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டால் நாளைய தினம் போட்டி விட்ட இடத்தில் அதாவது எந்த ஓவரில் போட்டி தடைபட்டதோ அதில் இருந்து அப்படியே தொடரும். ரிசர்வ் நாளிலும்(திங்கட்கிழமை) மழை பெய்தால் 5 ஓவர்கள் வீச வைத்து வெற்றியாளர் யார் என்பது முடிவு செய்யப்படும். ஒருவேளை 5 ஓவர்களும் வீச முடியாத அளவு காலநிலை இருந்தால், சூப்பர் ஓவர் வீசப்பட்டு வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார். ஒருவேளை சூப்பர் ஓவரும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், கொல்கத்தா அணிதான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தமையால், அந்த அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். https://www.bbc.com/tamil/articles/c511vew4781o
    • அங்கேயும் எப்படி கடைசி இடத்தை பிடிப்பது என மூளையை கசக்கிகொண்டிருக்கிறேன்🤣🤣🤣
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.