Jump to content

இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினம்: பிரிட்டனை பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?


Recommended Posts

இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினம்: பிரிட்டனை பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?

 
பிரிட்டனைப் பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளான நிலையில், பிரிட்டன் இந்தியாவிடம் ஒரு மிக நெருக்கமான வர்த்தக உறவை எதிர்பார்க்கிறது. ஆனால், பிரிட்டன் பற்றி நவீன இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?

பிபிசியின் தெற்கு ஆசிய செய்தியாளர் ஜஸ்டின் ரௌலட் எழுதுகிறார்.

``இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கும் எனது குடும்பத்திற்கு நெருக்கமான உறவு இருக்கிறது. இதில் பெருமைப்பட எதும் இல்லை என்பதால், இதை பற்றி நான் வழக்கமாகப் பேசுவதில்லை.

இந்தியா தனது 70 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வேளையில், பிரிட்டன் உடனான இந்தியாவின் சிக்கலான மற்றும் பெரும்பாலும் முரண்பாடான அணுகுமுறைகள் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பிரெக்ஸிட்க்கு பிறகு இந்தியாவுடன் புதிய வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்த பிரிட்டன் முயன்றுவரும் நிலையில், பிரிட்டன் பற்றி இந்தியா என்ன நினைக்கிறது என்பது முன்பை விட முக்கியமான ஒன்றாகும்.

தெற்கு டெல்லியில் உள்ள எம்.பி சசி தரூரின் பங்களாவிற்கு நான் சென்றிருந்த போது மழை பெய்திருந்தது.

பிரிட்டனைப் பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆங்கிலம் பேசும் பல லட்சம் இந்தியர்களின் வாழ்க்கை முறையினை வடிவமைக்க, இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சி உதவியது என்பதை அவர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறார்.

` இந்தியர்கள் படிக்கும் புத்தகங்கள், உணவு உண்ணும் முறை, சில சமயம் ஆடை உடுத்தும் முறை, பழக்கவழக்கம் என இந்தியர்களின் அன்றாட வாழ்கையில் கலந்த பலவற்றையும் காலனித்துவம், பிரிட்டிஷ் நிறுவனங்கள் மற்றும் ஆங்கில மொழியில் இருந்து வந்தது`` என என்னிடம் கூறினார் சசி தரூர்.

``எடுத்துக்காட்டாக, பெரும்பாலான இந்தியர்கள் பிஜி வோட்ஹவுஸ் புத்தகங்களைப் படிக்க விரும்புவார்கள். கிரிக்கெட்டை விளையாடவும் பார்க்கவும் விரும்புவார்கள்`` என்றார்.

தற்போது இந்தியாவின் தேசிய பானமாக இருக்கும் தேநீரை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய பிரிட்டனை அவர் புகழ்கிறார்.

இருப்பினும், பிரிட்டனின் ஏகாதிபத்திய மரபு குறித்து வலுவான விமர்சனங்களை சசி தரூர் வைக்கிறார்.

பிரிட்டிஷ் காலனியாதிக்கம் குறித்து இன்னும் இந்திய மக்களிடம் கோபங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.

ப்ரிட்டனைப் பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசிட்னி ரௌலட்

எனது கொள்ளுத்தாத்தாவால் எழுதப்பட்ட அவரது பெயரை கொண்ட ஒரு கொடூரமான சட்டத்தின் காரணமாக, இந்தியர்கள் மீது மிக மோசமான அட்டூழியத்தை பிரிட்டிஷார் நடத்தினர் என்பது எனக்குத் தெரியும்.

ஏப்ரல் 13-ம் தேதி 1919-ம் ஆண்டு ஜாலியன்வாலா பாக்கில் 379 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எனது கொள்ளுத்தாத்தா சிட்னி ரௌலட் கொண்டுவந்த `ரௌலட் சட்டமே` முக்கிய காரணமாக அமைந்தது.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு ஜாலியன்வாலா பாக்கில் நடந்த நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கும் போது, அவை எவ்வளவு வெட்கக்கேடானவை என்பது தெரிகிறது.

ஜாலியன்வாலா பாக் படுகொலை இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. பள்ளி வரலாற்றுப் புத்தகங்களிலும் `ரௌலட் சட்டம்` இடம்பெற்றுள்ளது.

ப்ரிட்டனைப் பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?படத்தின் காப்புரிமைALAMY Image captionஜாலியன்வாலா பாக் படுகொலை குறித்து 1982-ம் ஆண்டு வெளிவந்த காந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி

ரௌலட் சட்டமே காந்தியை வலுவான தேசிய தலைவராக மாற்றியது என லட்சக்கணக்கண மாணவர்கள் படிக்கும் பாடப் புத்தகங்கள் கூறுகின்றன.

இரண்டரை வருடங்களுக்கு முன்பு பிபிசியின் தெற்கு ஆசிய நிருபராக எனது மனைவி மற்றும் குழந்தையுடன் இந்தியா வந்தபோது, `ரௌலட்` என்ற எனது குடும்ப பெயர் எனக்குச் சுமையாக இருக்கும் என நினைத்து வருத்தப்பட்டேன்.

ஆனால், இந்தியாவில் யாரும் என் மீது கோபத்தையோ வெறுப்பையோ காட்டியதில்லை.

இளம் இந்தியர்கள் பிரிட்டன் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய நினைத்தேன். இந்தியா பிரிட்டன் இடையே எது வலுவான நாடு என 16-17 வயதுடைய மாணவர்களிடம் கேட்டேன்.

``எங்களது பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்கிறது`` என சேகால் என்ற மாணவர் கூறினார்.

ப்ரிட்டனைப் பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் 2013ல் அமிர்தசரஸ் வந்திருந்த போது

`` இந்தியாவிற்கு பிரிட்டனை விட, பிரிட்டனுக்கு தான் இந்தியா முக்கியமான நாடு`` என மற்றோரு மாணவர் கூறினார்.

வெறும் நாட்டு பற்றுடன் மட்டும் இல்லாமல், அவர்களது கருத்துகளுக்கான திடமான காரணங்களையும் என்னிடம் கூறினார்கள்.

மூத்த பத்திரிக்கையாளரும், எம்.பியுமான ஸ்வபன் தாஸ்குப்தா, பிரிட்டன் குறித்து இளம் இந்தியர்களின் மன ஓட்டத்தை பிரதிபலித்தார்.

`` இன்றைய காலத்தில் நடுத்தர இந்தியர்கள், பிரிட்டனை விட அமெரிக்காவையே அதிகம் விரும்புகின்றனர். நிறைய இந்தியர்கள் அமெரிக்காவில் படிக்கிறார்கள், அதனால் அமெரிக்க கலாசாரம் இந்தியாவிலும் எதிரோலிக்கிறது`` என்கிறார் தாஸ்குப்தா.

ப்ரிட்டனைப் பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தனிநபர் வருமானத்தை வைத்துப்பார்த்தால், இந்தியா இன்னும் ஏழை நாடாகவே உள்ளது. அனால், வர்த்தகத்தில் இந்தியா பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது.

எழு சதவிகித வளர்ச்சியுடன், இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக வளர்ச்சியடைந்து வருகிறது.

  •  
  •  

இந்தியாவின் தொழில்மயமாக்கலில், இரும்பு மற்றும் எஃகு ஆலை மிக பெரிய மாற்றத்தை உருவாக்கும் என நினைத்த ஜாம்ஷெட் டாடா 19-ம் நூற்றாண்டில் அதற்கான பணிகளை ஆரம்பித்தார்.

கடந்த ஒரு நூற்றாண்டில், டாடாவின் வளர்ச்சி அபரிதமாக இருக்கிறது.

ப்ரிட்டனைப் பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிரிட்டனில் அதிக வேலைப்பாய்ப்புகளை வழங்கும் தொழில்துறை நிறுவனமாக டாடா உள்ளது

பிரிட்டனில், ஜாகுவார் லாண்ட் ரோவர் மற்றும் கோரசஸ் ஸ்டீல்ஸ்க்கு உரிமையாளராக இருக்கும் டாடா குழுமம், பிரிட்டன் தொழில்துறையில் அதிகளவு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனமாகவும் உள்ளது.

``இந்தியாவிற்குத் தவறிழைத்த பிரிட்டிஷ் மீது கோபத்தில் இருக்கும் இந்தியர்கள், பிரிட்டனை பழிவாங்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை.`` என சசி தரூர் கூறுகிறார்.

``பிரெக்ஸிட்க்கு பிறகு பிரிட்டனின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியாக, இந்தியாவுடன் கைகோர்க்க பிரிட்டன் பிரதமர் தெரிசா மே முன்வருகிறார். பலிவாங்கல்களை விட எவ்வளவு மேலானது`` எனவும் என்னிடம் கூறினார் சசி தரூர்.

70 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் விட்டுச் சென்ற இந்தியாவிலிருந்து, தற்போதைய இந்தியா வித்தியாசமான நாடாக இருக்கலாம்.

ஆனால், இந்தியர்களின் இதயத்தில் பிரிட்டிஷுக்கும், பிரிட்டனுக்கு ஒரு தனி இடம் உள்ளது.''

இவ்வாறு எழுதியுள்ளார் பிபிசி செய்தியாளர் ஜஸ்டின் ரௌலட்.

http://www.bbc.com/tamil/india-40915884

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.