Jump to content

கனடா ரொறண்டோ நகரில் உலகத் தமிழ் இணைய மாநாடு!


Recommended Posts

கனடா ரொறண்டோ நகரில் உலகத் தமிழ் இணைய மாநாடு!

 
 
net_07082017_SPP_GRY.jpg

உத்தமம் எனும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் சார்பில் 16வது உலகத் தமிழ் இணைய மாநாடு எதிர்வரும் 25 முதல் 27 வரை, கனடா நாட்டின் ரொரண்டோ நகரில் நடைபெறுகிறது. இம்மாநாட்டின் கருத்தரங்கில் படிப்பதற்காக அனுப்பப்பட்ட 90-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் 34 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

"கற்றல் கற்பித்தல், பேசுவதை புரிந்து கொள்ள உதவும் ஒலி-வரி வடிவமாற்ற நுட்பங்கள், தகவல் கிடங்குகள், வணிகப் பயன்பாடு, மின்னூல்கள் ஆகியவை தொடர்பாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன” என்று உத்தமம் அமைப்பின் செயல் இயக்குநர் த.தவரூபன் தெரிவித்தார்.

சிங்கப்பூர் சிவகுமாரனின் ‘கற்பித்தலில் தரவக மொழியியலின் பங்கு’, இலங்கை மு.மயூரனின் ‘இலங்கையில் அலுவலக மொழிகள் நடைமுறையாக்கத்தின் ஒரு பகுதியான தமிழ்மொழி நடைமுறையாக்கத்தில் தகவல்நுட்பத்தின் பங்கு’, மா.ஜெயகானந்தன், கு.வினுஜனன், செ.ஜெயபாலன் ஆகியோரின் ‘அடுத்த தலைமுறைக்கான தமிழ்மொழி நூல்களின் ஒருங்கிணைக்கப்பட்ட தேடு’, இந்தியாவைச் சேர்ந்த முனைவர் விஜயராணியின் ‘ பார்வை மாற்றுத்திறனாளிகளின் தமிழ் மென்பொருள் பயன்பாட்டில் தேவைகள், சிக்கல்கள், தீர்வுகள்’, சாய்ராம் ஜெயராமந், முருகானந்தம் சுந்தர்ராஜன் ஆகியோரின் '2016 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலும் தமிழக இளைஞர்களின் அரசியல் சார்ந்த சமூக இணையதளப் பயன்பாடும்’, மலேசிய எஸ்.புஷ்பராணியின் ’இலக்கணப் பிழைகளின்றி தமிழ் எழுத எட்மோடோ வழி மெய்நிகர் கற்றல் கற்பித்தல் அணுகுமுறை’, கஸ்தூரி இராமலிங்கத்தின் ‘ஊடாடல், நகர்ப்படங்கள் கலந்த மின்னூல்கள் வழி குழந்தைகளுக்கான தமிழ்க் கல்வி’ ஆகியவை உட்பட்ட கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கட்டுரை தேர்வுக்குழுவின் தலைவரான கனடா பேரா. செ.இரா.செல்வகுமார் கட்டுரைத் தேர்வு குறித்து கருத்துத் தெரிவித்த போது "முன்பு நடந்த உத்தமம் நடத்திய மாநாடுகளின் ஆய்வரங்கக் குழுவில் தலைவராக இருந்த நான்கு பேர், இந்தக் கட்டுரைத் தேர்வுக்குழுவில் இருந்தார்கள். எங்களுக்கு ஏறத்தாழ 90 கட்டுரைச் சுருக்கங்கள் வந்தன. அவற்றுள் 34 கட்டுரைச் சுருக்கங்களே ஏற்கும்படியாக இருந்தன.

எட்டு கட்டுரைகள் மேம்படுத்தக் கூடியனவான இருந்தன. அவற்றின் ஆசிரியர்களுடன் தொடர்புகொண்டு அவர்களில் சிலர், தங்களின் கட்டுரைகளை இருமுறையுங் கூட செம்மைப்படுத்தி அனுப்பிய பிறகு அவற்றில் 3 கட்டுரைகளை ஏற்றோம். முதலில் 31, பின்னர் 3 என்று இறுதியில் 34 கட்டுரைகள் தேர்வாகின. பெரும்பாலான கட்டுரைகளில் ஆய்வுத்தன்மை போதுமான அளவுக்கு இல்லாமல் இருந்ததைப் பார்க்க முடிந்தது.

அடிப்படை ஆய்வுத் தரமே இல்லாமல் பல கட்டுரைச் சுருக்கங்கள் வந்திருந்தன. வரும் ஆண்டுகளில் ஆய்வுக் கட்டுரை எழுதுவது பற்றியும் ஆய்வு செய்வது பற்றியும் பட்டறைகள் நடத்துவது பற்றிப் பேசியிருக்கிறோம்” என்று கூறினார்.

டொரண்டோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தில் நடக்கும் இம்மாநாட்டுக்கு, வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பாங்கு அறிதிறன் இயந்திர அறிவுத்திறனுக்கான மையம், கனடா நாட்டு மின் மற்றும் மின்னணுப் பொறியியல் கழகம்- (IEEE Canada), அண்ணாமலைப் பல்கலைக்கழக கனடா கிளை ஆகியவை துணை செய்கின்றன.

தொடக்கவிழா, சிறப்புச் சொற்பொழிவுகள் உட்பட மற்ற நிகழ்ச்சிகளில் அனைவரும் இலவசமாகப் பங்கேற்கலாம். மூன்று சிறப்புச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் வடிவமைப்பாளரும் ‘உத்தமம்’ அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான மலேசியாவின் முத்து நெடுமாறன், மதுரைத் திட்ட முன்னோடியும் உத்தமம் அமைப்பின் முன்னோடிகளில் ஒருவருமான சுவிட்சர்லாந்து பேராசிரியர் முனைவர் கு. கல்யாணசுந்தரம், வாட்டர்லூ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆன்றூவாங்கு ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்வான், இங்கிலாந்து, கனடா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர். இது தொடர்பான விவரங்களை இம்மாநாட்டின் இணையதளத்தில் (https://tamilinternetconference.infitt.org/home/) விரிவாகக் காணலாம். முன்னதாக, இந்த தமிழ் இணைய மாநாட்டுக்கான அடையாளம் வடிவமைப்புப் போட்டி நடத்தப்பட்டதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மெர்லின் ஃப்ளோரன்சின் வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர், திருப்பத்தூர், தூய நெஞ்சக் கல்லூரியில் பணிபுரிகிறார் .

அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட உத்தமம் அமைப்பானது, 2000ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டதாகும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்த மு. ஆனந்தகிருஷ்ணன், இதன் நிறுவன காலகட்டத் தலைவர் ஆவார். தற்போதைய தலைவராக தமிழ்நாட்டின் செல்வமுரளியும், செயல் இயக்குநராக இலங்கையைச் சேர்ந்த த.தவரூபனும் செயல்பட்டு வருகின்றனர். 

http://www.thinakaran.lk/2017/08/08/கட்டுரைகள்/19119

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.