Jump to content

தினகரன் கூட்டத்துக்கு கட்சி நிர்வாகிகள் செல்வார்களா? - அதிமுகவில் நடக்கும் கடைசி நேர குழப்பங்கள்


Recommended Posts

தினகரன் கூட்டத்துக்கு கட்சி நிர்வாகிகள் செல்வார்களா? - அதிமுகவில் நடக்கும் கடைசி நேர குழப்பங்கள்

 

 
dinakaran3144897f

டிடிவி தினகரன்   -  கோப்புப் படம்

மதுரை மாவட்டம், மேலூரில் நாளை தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலாளர்களும், தொண்டர்களும் பங்கேற்க செல்வதை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என முடிவெடுக்க முதல்வர் பழனிசாமியின் உத்தரவுக்காக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் காத்திருக்கிறார்கள்.

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் நாளை மேலூரில் நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். கடந்த வாரம் வரை முதல்வர் பழனிசாமியும், தினகரனும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரே அணியில் இருந்தனர். அதனால், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் சிறை சென்றபோது தினகரனுக்கு ஆதரவாக, மதுரை உட்பட பல மாவட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களுக்கு யாரையும் செல்ல வேண்டாம் என முதல்வர் அணி தரப்பினர் தடுக்கவும் இல்லை. கட்டுப்படுத்தவும் இல்லை. அதனால் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏ-க்களை தவிர நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

 

மேலூரில் நடத்த காரணம்

அதனால், அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில், இதற்கு முன் இதே மேலூரில் தினகரனுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டனர். தற்போதும் அதுபோல் கூட்டம் திரளும் என்ற எதிர்பார்ப்பிலேயே தினகரன் தான் பங்கேற்கும் முதல் கூட்டத்தை மேலூரில் அறிவித்தார். ஆனால், அதிமுகவில் தலைகீழான மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி ஆதரவு அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் ஒரு கோஷ்டியாகவும், தினகரன் தரப்பினர் மற்றொரு கோஷ்டியாகவும் வெளிப்படையாக ஒருவரை ஒருவர் வசைபாடி எதிரும், புதிருமாக செயல்படுகின்றனர்.

 

தினகரன் மீது அனுதாபம்

இந்நிலையில் தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மேலூர் முன்னாள் எம்எல்ஏ சாமி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கட்சியின் கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி, தேனி மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏ உள்ளிட்ட தினகரனின் ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர்.

எனினும், இந்தக் கூட்டத்தை முதல்வர் தரப்பு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏ-க்கள் புறக்கணிப்பார்கள் எனக் கருதப்படுகிறது. ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலாளர்கள், அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முன்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதுபோல் பங்கேற்பார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

ஆனால், இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தினகரன் சிறை சென்றதை, கட்சிக்காகவே சென்றதாக தொண்டர்கள் அவர் மீது அனுதாபத்தில் உள்ளனர் என்றும், அதனால், அவர்கள் கண்டிப்பாக பங்கேற்பார்கள் எனவும் தினகரன் ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

 

முதல்வரிடம் ஆலோசனை

இதுகுறித்து மதுரை மாநகர் செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூவிடம் கேட்டபோது, ‘‘இதுவரை கட்சி நிர்வாகிகள் தினகரனின் மேலூர் கூட்டத்தில் பங்கேற்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முதல்வரிடம் ஆலோசித்துவிட்டு நாளை (இன்று) தகவல் தெரிவிப்போம்’’ என்றார்.

தினகரன் கூட்டம் நடக்கும் மேலூருக்குட்பட்ட மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் விவி.ராஜன்செல்லப்பா எம்எல்ஏவிடம் கேட்டபோது, ‘‘கூட்டத்துக்கு போக வேண்டாம் என யாருக்கும் எந்த உத்தரவும் இடவில்லை. எல்லோரும் புரிந்து கொள்வார்கள்’’ என்றார்.

அமைச்சர், மாவட்டச் செயலாளர் தரப்பிலேயே குழப்பம் இருப்பதால் மதுரை மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் முதல்வரை நம்பி போவதா? சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளரை நம்பி போவதா என குழப்பத்தில் உள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19485066.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.