Jump to content

வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் டெலோவி;ன் தலைமைக்குழு கூட்டத்தில் தீர்மானம்


Recommended Posts

வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் டெலோவி;ன் தலைமைக்குழு கூட்டத்தில் தீர்மானம்

 
deniswaran.jpg
 
வடமாகாண சபையின் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அமைச்சு பதவியை உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைமைத்துவ குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
வவுனியாவில் சனிக்கிழமை கூடிய அந்தக் கட்சியின் தலைமைத்துவ குழு ஐந்து மணித்தியாலங்கள் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளது.
 
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டெனிஸ்வரனின் இராஜிநாமா விடயம் முக்கியமாக ஆராயப்பட்டதாக அந்தக் சட்சியின் செயலாளர் சிறிகாந்தா கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசகையில் தெரிவித்தார்.
 
செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
 
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக சில வாரங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வடமாகாண சபையில் உள்ள ஆறு உறுப்பினர்களிலே அமைச்சர் டெனிஸ்வரன் கையெழுத்திட்டிருந்தார். அவருடைய அந்த நடவடிக்கை எங்களுடைய கட்சியினுடைய அனுமதி இல்லாமலும் கட்சித் தலைமையினுடைய ஆலோசனையைப் பெறாமலும் தன்னிச்சையாக எடுக்கப்பட்டிருந்த காரணத்தினாலே நாங்கள் அவரிடமிருந்து இது தொடர்பிலே விளக்கம் கோரி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தோம்.
 
கட்சியினுடைய அனுமதியில்லாமல் வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திலே கையெழுத்திட்ட காரணத்துக்காக அவர் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்பதற்கு காரணம் ஏதாவது இருந்தால் அதனை கடிதம் கிடைத்து இரண்டு வாரங்களுக்குள்ளே எழுத்து மூலமாக எங்களுக்கு சமர்ப்பிக்குமாறு கட்சியின் சார்பில் என்னால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இருந்தும் அமைச்சர் டெனிஸ்வரனிடமிருந்து எழுத்து மூலமான விளக்கம் எதுவும் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றிருக்க வில்லை. இருந்தாலும் இன்றைய தலைமைக்குழு கூட்டத்திலே அவர் சமூகமளித்து, தன்னுடைய நடவடிக்கை தொடர்பிலே விளக்கமளித்திருக்கின்றார். நாங்களும் அவரிடம் சில விடயங்கள் தொடர்பிலே கேள்விகளை எழுப்பி தெளிவுபடுத்தல்களைப் பெற்றிருக்கிறோம்.
 
இந்த நிலையிலே நாங்கள் எற்கனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களுடனும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களோடும் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட சந்திப்பின் போது எட்டப்பட்ட முடிவின் பிரகாரம் வடமாகாண அமைச்சரவையை முதலமைச்சர் மீள அமைப்பதற்கு ஏதுவாக டெனிஸ்வரன் வகித்து வருகின்ற அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்யும்படி நாங்கள் கேட்டிருக்கிறோம்.
 
கட்சியின் கட்டுப்பாட்டை மீறினார் என்கிற அந்த ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு புறம்பாக இந்த வேண்டுகோள் அவருக்கு இன்றைய தினம் விடுக்கப்பட்டிருக்கின்றது.
 
அதைப் பரிசீலிப்பதாகவும் அதன் முடிவை நாளைய தினம் அறிவிப்பதாக அவர் எங்களுக்குத் தெரிவித்திருக்கி ன்றார்.
 
அவருடைய முடிவைப் பொறுத்துத்தான் ஒழுங்கு நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதா அல்லது ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவதா என்பதுபற்றி நாங்கள் தீர்மானிக்க வேண்டியிருக்கும்.
 
இப்போது விவகாரம் முற்று முழுக்க டெனிஸ்வரனிடம் விடப்பட்டிருக்கின்றது. கட்சியினுடைய வேண்டுகோளை மதித்து, அவர் ஏற்கனவே எமது கட்சியும் கூட்டமைப்பினுடைய ஏனைய மூன்று கட்சிகளும் முதலமைச்சரோடு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற உடன்பாட்டிற்கு ஏதுவாக தனது அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்வார் என்றும் அதனூடாக வடமாகாண அமைச்சரவையை மீள் அமைப்பதற்கான சந்தர்ப்பம் முதலமைச்சருக்குக் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறிகாந்தா.
 
அமைச்சர் டெனிஸ்வரன் இராஜிநாமா செய்வதனால் ஏற்படுகின்ற வெற்றிடத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் மற்றுமொரு உறுப்பினராகிய விந்தன் கனகரட்னமே நியமிக்கப்படுவார் என்பதையும் தலைமைக்குழு தீர்மானித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
 
அமைச்சர் டெனிஸ்வரனுடைய விவகாரத்திற்கு அடுத்ததாக அரசாங்கம் கொண்டு வரவுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் விடயம் என்பன குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
 
 
இருபதாவது திருத்தமும் அரசியல் தீர்வு விவகாரமும்
 
 
அரசியலமைப்புக்குக் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டிருக்கின்ற 20 ஆவது திருத்தம் தொடர்பிலே விவாதித்து கூட்டமைப்பு ஒரு நிலைப்பாட்டுக்கு வருவதற்கு ஏதுவாக கூட்டமைப்பினுடைய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை உடனடியாக விரைந்து கூட்ட வேண்டும் என நாங்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுப்பது என தீர்மானித்திருக்கின்றோம்.
 
குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு எழுத்து மூலமான இந்த வேண்டுகோள் அடுத்து வரும் இரண்டொரு தினங்களிலே அனுப்பி வைக்கப்படும்.
 
மேலும் அரசியலமைப்பு தொடர்பான விவகாரங்கள் சம்பந்தமாகவும் எங்களுடைய அடிப்படை கோரிக்கைகளில் சமரசம் செய்து கொள்ளாமல், அதேநேரத்தில் இரண்டு பிரதான சிங்கள பிரதான கட்சிகளும் கூட்டாக அரசை அமைத்து அந்த அரசு நீடித்துக் கொண்டிருக்கி;ன்ற இன்றைய அரசியல் சூழ்நிலை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் கிடைத்திருக்கின்ற ஓர் அரிய சந்தர்ப்பம் என்பதையும் கருத்தில் கொண்டு, இந்த அரசியல் தீர்வ முயற்சிகளைத் தொடர்ந்து விரைவாக முன்னெடுப்பதற்கு ஏதுவாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உரிய நடவடிக்கைகளi எடுக்க வேண்டும் எனவும் நாங்கள் விரும்புகிறோம்.
 
இதுதொடர்பாக எற்கனவே ஒரு சந்திப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களோடும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அந்தக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறப்பினர் சுமந்திரன் ஆகியோருடன் நடத்தப்பட்டிருக்கின்றது.
 
இருந்தாலும்கூட நாங்கள் முழுமையான பிரதிதித்துவத்தைக் கொண்ட ஒரு குழு தமிழரசுக்ட்சியின் சார்பிலும் எங்களுடைய கட்சியின் சார்பில் இன்னுமொரு குழுவுமாக  இந்த பேச்சுவார்த்தை முயற்சிகளை முன்னெடுப்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல் தீர்வு முயற்சிகளைப் பொருத்தமட்டிலே காத்திரமான சில முடிவுகளை எடுத்து நடவடிக்கைகளை முன் நகர்த்துவதற்கு உதவியாக இருக்கும் என்றும் அதனைத்தொடர்ந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டத்தின் ஊடாக ஒடடுமொத்தமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டிலே ஒன்றாக இந்த அரசியல் தீர்வு விடயத்திலே குரல் எழுப்பக் கூடிய சூழல் உருவாகும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

http://globaltamilnews.net/archives/36505

Link to comment
Share on other sites

8 hours ago, நவீனன் said:
கட்சியின் கட்டுப்பாட்டை மீறினார் என்கிற அந்த ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு புறம்பாக இந்த வேண்டுகோள் அவருக்கு இன்றைய தினம் விடுக்கப்பட்டிருக்கின்றது.
 
அதைப் பரிசீலிப்பதாகவும் அதன் முடிவை நாளைய தினம் அறிவிப்பதாக அவர் எங்களுக்குத் தெரிவித்திருக்கி ன்றார்.

மானம், ரோஷம், சூடு, சுரணையில்லாதவர் என்பதை டெனீஸ்வரன் இதுவரை நிரூபித்துவந்துள்ளார்.
இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.