Jump to content

யாழில் இடம்பெற்ற உலக சைவ இளைஞர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்


Recommended Posts

அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நேற்று யாழில் ஆரம்பமாகிய உலக சைவ இளைஞர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.

அகில இலங்கை சைவ மகா சபையின் அமைப்பாளர் ப.நந்தகுமார் தலைமையில் இன்று காலை யாழ். நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இரண்டாம் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

இதன் போது மாநாட்டின் இருநாள் நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்த தமிழக பேரூர் ஆதீன இளைய பட்டம் தவத்திரு மருத்தாச்சலம் அடிகளார் விசேடமாகக் கெளரவிக்கப்பட்டார்.

மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம், இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தம் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

தமிழ் எங்கள் மொழி... சைவம் எங்கள் வழி எனும் மகுடவாக்குடனும், சைவத்தமிழ் மறுமலர்ச்சியில் இளைஞர்களின் பங்கும் பணியும் எனும் தொனிப் பொருளிலும் இந்த மாநாடு யாழில் எழுச்சியுடன் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

 

http://www.tamilwin.com/events/01/154993?ref=home-feed

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இத்தகைய நிகழ்வுகள் நடத்த அனுமதி கொடுத்தது யார் என தெரியவில்லை. இத்தகைய நிகழ்வுகளினால் சைவ சமயம் வளரும் 
பலர் குருக்களாக தீட்சை பெறுவார்கள். இந்து மதத்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பின்பு 83ல் போன்று கலவரம் நடக்கும்போது குருக்கள் / ஐயர்மாரை பிடித்து உயிருடன் தார் பீப்பவில் போடுவார்கள். 

மேலும் தமிழ் எங்கள் மொழி... சைவம் எங்கள் வழி எனும் மகுடவாக்குடனும் நடத்தபடுவதால் தமிழ் கிறிஸ்த்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் பிரச்சினையை உருவக்குவதற்காகவே
நடத்தப்படுகின்றது.

ஆக இது நிச்சயமாக சிங்கள பெளத்த பேரினவாதத்தின் ஒரு நிகழ்ச்சி நிரலே அன்றி வேறொன்றுமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

யாழில் இத்தகைய நிகழ்வுகள் நடத்த அனுமதி கொடுத்தது யார் என தெரியவில்லை. இத்தகைய நிகழ்வுகளினால் சைவ சமயம் வளரும் 
பலர் குருக்களாக தீட்சை பெறுவார்கள். இந்து மதத்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பின்பு 83ல் போன்று கலவரம் நடக்கும்போது குருக்கள் / ஐயர்மாரை பிடித்து உயிருடன் தார் பீப்பவில் போடுவார்கள். 

மேலும் தமிழ் எங்கள் மொழி... சைவம் எங்கள் வழி எனும் மகுடவாக்குடனும் நடத்தபடுவதால் தமிழ் கிறிஸ்த்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் பிரச்சினையை உருவக்குவதற்காகவே
நடத்தப்படுகின்றது.

ஆக இது நிச்சயமாக சிங்கள பெளத்த பேரினவாதத்தின் ஒரு நிகழ்ச்சி நிரலே அன்றி வேறொன்றுமில்லை. 

சார்! காத்தான்குடியில் என்ன நடக்குது சார்? 
பேரீச்சம்பழம் தானாய் கொட்டுதாக்கும்..:cool:

Link to comment
Share on other sites

8 hours ago, colomban said:

யாழில் இத்தகைய நிகழ்வுகள் நடத்த அனுமதி கொடுத்தது யார் என தெரியவில்லை. இத்தகைய நிகழ்வுகளினால் சைவ சமயம் வளரும் 
பலர் குருக்களாக தீட்சை பெறுவார்கள். இந்து மதத்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பின்பு 83ல் போன்று கலவரம் நடக்கும்போது குருக்கள் / ஐயர்மாரை பிடித்து உயிருடன் தார் பீப்பவில் போடுவார்கள். 

மேலும் தமிழ் எங்கள் மொழி... சைவம் எங்கள் வழி எனும் மகுடவாக்குடனும் நடத்தபடுவதால் தமிழ் கிறிஸ்த்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் பிரச்சினையை உருவக்குவதற்காகவே நடத்தப்படுகின்றது.

ஆக இது நிச்சயமாக சிங்கள பெளத்த பேரினவாதத்தின் ஒரு நிகழ்ச்சி நிரலே அன்றி வேறொன்றுமில்லை. 

"தமிழ் எங்கள் மொழி... சைவம் எங்கள் வழி" தமிழ் மொழியை அரைகுறையாக கற்றவர்களால், மட்டுமே இதை சைவர்கள்-கிறிஸ்தவர்கள் பிரிவினை என விளங்கிக்கொள்ள முடியும். தமிழ் மொழிப்புலமை உடையவர்கள் இதில் எந்தப் பிரிவினையையும் காண மாட்டார்கள்.

தமிழ் மொழியை அரைகுறையாக கற்று சிங்கள பெளத்த பயங்கரவாதத்தின் எடுபிடிகளாக இருப்பவர்களின் கனவும், கள்ளக்காணி பிடிக்கும் முஸ்லீம்களின் கனவும் பலிக்காது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.