Jump to content

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதித்தது என்ன?


Recommended Posts

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதித்தது என்ன?

 

2009 ஆம் ஆண்டு முள்­ளி­வாய்க்கால் பேர­வ­லத்­துடன் தமிழ் மக்­க­ளுக்­கான உரிமைப் போராட்டம் வேறு வடி­வத்தை பெற்­றி­ருந்­தது. கடந்த காலத்தில் அஹிம்சை ரீதி­யாக போரா­டிய தமிழ் தேசிய இனத்தின் கோரிக்­கை­க­ளையும், அபி­லா­ஷை­க­ளையும் தென்­னி­லங்­கையின் இரு பிர­தான கட்­சி­களும் கண்­டு­கொள்­ள­வில்லை. மாறாக தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட ஜன­நா­யக ரீதி­யான போராட்­டங்­களை அடக்­கு­வ­திலும், அவற்றை இழி­வு­ப­டுத்­து­வ­தி­லுமே  கவனம் செலுத்­தி­யி­ருந்­தனர். இதன்­கா­ர­ண­மாக தென்­னி­லங்கை ஆட்­சி­யா­ளர்கள் மீது அதி­ருப்தி அடைந்த இளை­ஞர்கள் ஆயு தம் ஏந்திப் போராட வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. ஆயுத ரீதி­யாக தமிழ் மக்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட போராட்­டத்தை பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான யுத்தம் என்ற பேரில் மஹிந்த அர­சாங்கம் சர்­வ­தேச நாடு­களின் உத­வி­யுடன் முடி­வுக்கு கொண்­டு­வந்­தி­ருந்தது. அதன்­பின்­ன­ரான தமிழ் தேசிய அர­சியல் என் ­பது மீண்டும் ஜன­நா­யக வழி­யையே நம்பி இருக்க வேண்­டிய சூழலை உரு­வாக்­கி­யுள்­ளது. 

யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் தமிழ் மக் கள் தமது தலை­மை­யாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பையே நம்பிச் செயற்­பட்­டி­ருந்­தனர். தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­த­துடன், தமிழ் மக்­க­ளது அபி­லா­ஷை­களை முன்­னி­றுத்­தியே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் தேர்­தல்­களில் போட்­டி­யிட்டு இருந்­தது. அதன் அடி­ப­்ப­டை­யி­லேயே தமிழ் மக்­களின் ஆணை­யையும் அது பெற்­றி­ருந்­தது. ஆனால் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கடந்த 8 ஆண்­டு­களில் எதைச் சாதித்து இருக்­கின்­றது என்ற கேள்வி இன்று எல்லோர் மனங்­க­ளிலும் எழுந்­தி­ருக்­கின்­றது. 2013 ஆம் ஆண்டு நடை­பெற்ற வட­மா­காண சபைத் தேர்­தலின் போது பல்­வேறு அழுத்­தங்­க­ளுக்கு மத்­தியில் தமிழ் மக்கள் அலை அலை­யாக திரண்டு வந்து வழங்­கிய ஆணையின் அடிப்­ப­டையில் அதிக பெரும்­பான்மை பலத்­துடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கு மாகா­ண ­ச­பையில் ஆட்­சி­ய­மைத்­தது. மாகா­ண­ ச­பைக்குள் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் சிலர் இருக்­கின்ற போதும் ஆளும் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­களே எதிர்க்­கட்சி போன்றும் செயற்­பட்டு வந்­தி­ருந்­தனர். இதன் கார­ண­மா­கவே மாகாண சபைக்குள் பல்­வேறு குழப்­பங்கள் ஏற்­பட்­டி­ருந்­தன. இந்த நிலையில் அந்த குழப்­பங்­களை கட்­டுப்­ப­டுத்த வேண்­டிய தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மை­யாக இருந்­தாலும் சரி அல்­லது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருந்­தாலும் சரி அதனை கட்­டுப்­ப­டுத்­து­வதை விடுத்து அந்த பிரச்­ச­ினைகள் கட்­சிக்குள் விஸ்­வ­ரூபம் எடுக்கும் வகையில் செயற்­பட்­டி­ருக்­கின்­றனர். 

வட­மா­காண சபை தொடர்­பாக பல்­வேறு விமர்­ச­னங்­களை கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் முன்­வைத்து வரு­கின்­றனர். வட­மா­காண சபை என்ன செய்­தது எனவும் அவர்கள் கேள்வி எழுப்­பியும் இருக்­கின்­றனர். வட­மா­கா­ண ­சபை என்­பது அதி­கா­ர­மற்ற ஒன்று. அதற்­கு­ரிய அதி­கா­ரங்­களைப் பெற்று மக்­க­ளுக்கு சேவை செய்ய அது இன்னும் போராட வேண்­டியே இருக்­கி­றது. மாகா­ண­சபை அதி­கா­ரங்­களை வைத்து எத­னையும் சாதித்து விட முடி­யாது என்­பது கடந்த கால வர­லாறு. இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போது வடக்கு, கிழக்கு இணைந்த சுயாட்சி, சமஷ்டி அடிப்­ப­டையில் ஒரு நிரந்­தர தீர்வு உள்­ளிட்ட மீள­்கு­டி­யேற்றம், காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம், அர­சியல் கைதிகள் பிரச்­சினை என தமிழ் மக்கள் முன்­னுள்ள பல பிரச்­ச­ினை­களை தமது தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மாக  முன்­வைத்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மக்கள் ஆணையைக் கோரி­யி­ருந்­தது. இத­ன­டிப்­ப­டையில் 14 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மக்­களின் ஆணை­மூலம் நேர­டி­யாக தெரிவு செய்­யப்­பட்­ட­துடன், இரு உறுப்­பி­னர்கள் தேசி­யப்­பட்­டியல் மூலமும் தெரிவு செய்­யப்­பட்­டனர். இதனால் கூட்­ட­மைப்பில் 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருக்­கின்­றார்கள்.

ரணில் –- மைத்­திரி அர­சாங்­கத்­திற்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி இந்த அர­சாங்­கத்தை சர்­வ­தேச அழுத்­தங்­களில் இருந்து காப்­பாற்­றிய கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அதன் மூலம் தமிழ் மக்­க­ளுக்கு பெற்றுக் கொடுத்­தது என்ன...? 2016 ஆம் ஆண்­டுக்குள் தீர்வுவரும் என கூட்­ட­மைப்பு தலைவர் இரா.சம்பந்தன் முன்னர் கூறி­யி­ருந்தார். ஆனால் தற்­போது 2017 ஆம் ஆண்டும் இறு­திக்­கா­லாண்டை அண்­மித்­துள்­ளது. எந்த தீர்வை அவரால் பெற முடிந்­தது. அல்­லது எந்த தீர்வைப் பெற முடியும் என நம்­பிக்­கையை வழங்க முடிந்­தது. குறைந்த பட்சம் தமிழ் அர­சியல் கைதி­க­ளை­யா­வது விடு­தலை செய்ய முடிந்­த­தா..? 

2015 ஆம் ஆண்டு  ஐ.நா. மனி­த­வு­ரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 30-1 தீர்­மானம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான அறி­கு­றிகள் எது­வு­மின்­றியே அதே தீர்­மா­னத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு 34-1 இன் மூலம் அர­சாங்­கத்­திற்கு மேலும் இரண்டு ஆண்­டுகள் கால அவ­காசம் வழங்­கப்­பட்டு இருக்­கி­றது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலை­மையின் ஆத­ர­வுடன் இந்த கால­நீ­டிப்பில் அர­சாங்கம் வெற்றி பெற்­றி­ருக்­கி­றது. அந்த கால நீடிப்பு வழங்கி 6 மாதங்கள் கடந்து விட்­டது. இதன் பின் கிடைத்த மாற்றம் என்ன..? 

வடக்கு, கிழக்கு இணைந்த சுயாட்சி பற்றி தேர்தல் மேடை­களில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் பேசி­வந்­தனர். ஆனால் இன்று அர­சாங்கம் வடக்கு, கிழக்கு இணைப்பு கிடை­யாது என கூறி­வ­ரு­கின்­றது.  தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிலரும் வடக்கு, கிழக்கு இணைப்பு தற்­போ­தைக்கு சாத்­தியம் இல்லை என கூறு­கின்­றனர். ஒற்­றை­யாட்சி முறைக்­குள்­ளேயே தீர்வு என அர­சாங்கம் கூறு­கின்­றது. பௌத்த சம­யத்­திற்கே முன்­னு­ரிமை வழங்க வேண்டும் என பௌத்த மகா­நா­யக்­கர்கள் கோரு­கின்­றனர். ஜனா­தி­பதி, பிர­த­ம­ரு­டைய கருத்­துக்கள் கூட அதனை ஆமோ­திப்­ப­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை முழு­மை­யாக மீறிய நிலையில் ஒரு தீர்வை அர­சாங்கம் திணிக்க முற்­பட்­டுள்­ளது. நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி வரு­கின்ற தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இந்த விட­யத்தில் காத்­தி­ர­மாக என்ன செய்­தி­ருக்­கின்­றது. குறைந்த பட்சம் மக்­க­ளையும், சமூக செயற்­பாட்­டா­ளர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த அழுத்­தத்தை வழங்­கி­யி­ருக்­கின்­றதா..?

கடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று தற்­போதும் திட்­ட­மிட்ட சிங்­கள குடி­யேற்றங்கள், இன­வி­கி­தா­சா­ரத்தை குழப்பும் வகை­யி­லான குடிப்­ப­ரம்­பல்கள், தமி­ழரின் ஆட்­புல அடை­யா­ளத்தை சிதைக் கும் எல்லை மீள்­நிர்­ணயம் என்­பன மேற்­கொள்­ளப்­பட்டு வரு­ கின்­றது. கிழக்கு மாகாணம் முழு ­மை­யாக பறிபோய்விட்டது. வவு னியா, மன்னார், முல்லைத் தீவு என வடக்­கிலும் நிலப்­ப­றிப்புக்கள் தீவி­ர மாக இடம்­பெ­று­கி­றது. இதைத்­த­டுப்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் என்ன செய்ய முடிந்­தது. குறைந்த பட்சம் பொருத்து வீடு வட பகு­திக்கு பொருத்­த­மற்­றது என கூறி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் அதனை எதிர்த்து வந்­தனர். நீதி­மன்­றத்­திலும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பால் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனால் வடக்கில் 6000 பொருத்து வீடுகள் மத்­திய மீள்­கு­டி­யேற்ற அமைச்­சினால் நேர­டி­யாக வழங்­கப்­ப­டு­கி­றது. அதற்­கான நட­வ­டிக்­கைகள் இறு­திக்­கட்­டத்தை அடைந்­தி­ருக்­கின்­றது. இதைக் கூட 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒன்று சேர்ந்து தடுக்க முடி­யாமல் போய்­விட்­டது. பொருத்து வீட்டைக்கூட தடுக்க முடி­யாத இவர்கள் தீர்வை பெற்றுத்தரு­வார்கள் என்று எவ்­வாறு நம்ப முடியும்..?

காணாமல் ஆக்­கப்­பட்டோர் தமக்கு நீதி கோரி மேற்­கொண்டு வரும் போராட்டங்­களை அரை­யாண்டை எட்­டி­யுள்­ளது. போராட் ­ட­க்க­ளங்கள் அவர்­க­ளது சொந்த இடங்கள் போல் மாறி அந்த மக்கள் அந்த இடத்தி­ லேயே நிரந்­த­ர­மாக இருந்து போராட வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அவர்கள் உளரீதி­யா­கவும் கடு­மை­யாக பாதி­ப்­ப­டைந்து வரு­கின்­றனர். 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் கள் இருந்தும் அவர்­க­ளது போராட்­டத்தை முடித்து வைக்க முடிந்­ததா..? அர­சாங்­கத்­திற்கு அழுத்­தத்தைக் கொடுத்து அந்த மக்கள் நம்பும் படி­யான வாக்­கு­று­தியை வழங்­கி­யா­வது அந்தப் போராட்­டத்தை முடித்து வைக்க முடி­யாத நிலையே தொடர்­கி­றது. தமது வாகனக் கொள்­வ­னவு தொடர்­பிலும்,  பாரா­ளு­மன்ற விவா­தங்­களின் போது சம்­மந்தம் இல்­லா­மலும் சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பேசி வரு­கின்­றனர். வடக்கில் இளைஞர், யுவ­திகள் வேலை­வாய்ப்புக் கோரி மாதக்­க­ணக்கில் போரா­டு­கி­றார்கள். அவர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பை வழங்க பாரா­ளு­மன்­றத்தில் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முன்­வைத்த திட்டம் என்ன...? யுத்தம் மௌனிக்கச் செய்­யப்­பட்ட போது தமிழ் மக்கள் எதிர்­நோக்­கி­யி­ருந்த பிரச்­ச­ினைகள் இன்றும் தொடர்­கி­றது. இணக்க அர­சியல் எனக் கூறி அர­சாங்­கத்­து­ட­னான உறவை வலுப்­ப­டுத்தி அந்த மக்­க­ளுக்­காக செய்­தவை என்ன...?

மாறாக வடக்­கிற்கு கொண்டுவரப்­பட்ட சில அபி­வி ­ருத்தி திட்­டங்­களைக் குழப்பி மத்­திய அமைச்சர் சார்­பாக ஒரு குழுவும், பாதிக்­கப்­பட்ட மக்கள் சார்­பாக ஒரு குழுவும் என பிரிந்து அத் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தாமல் விட்­டதே மிச்சம். வவு­னியா பொரு­ளா­தார மத்­திய நிலைய விவ­கா­ரத்தில் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் செயற்­பா­டுகள் யாவரும் அறிந்­ததே. ஆக, ஆட்சி மாற்­றத்­திற்கு பின்­ன­ரான இணக்க அர­சியல் மூலம் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வரிச்­ச­லு­கை­ளையும், சொகுசு வாக­னங்­க­ளையும், பாரா­ளு­மன்ற பத­வி­க­ளையும், வெளிநாட்டு பயணங்களையும், மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைமைப் பதவிகளையும் பெற்றுக் கொண்டதை தவிர மக்களுக்காக அவர்களால் முழுமையாக எதை செய்ய முடிந்திருக்கின்றது. ஜனாதிபதி, பிரதமருடன் விருந்துகளிலும், வீட்டு வைப வங்களிலும் பங்குபற்றியதுடன், அவர் களை தமது வீடுகளுக்கும் அழைத்து கொண் டாட்டங்களை செய்ய முடிந்திருக்கின்றது. தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன் அந்நி யோன்னியமாக பழக முடியும் என்றால் அந்த நட்பையும், தொடர்பையும் பயன்படுத்தி மக்களுக்கான பிரச்சினைகளை ஏன் தீர்க்க முடியாது...? தமிழ் மக்களுக்காகவும் இவர்க ளால் எதையும் செய்ய முடியவில்லை. தமது கட்சியின் ஒற்றுமையையும் காக்க முடியவில்லை. இவ்வாறான நிலையில் இவர்களை நம்பி தீர்வுக்காக தமிழ் தேசிய இனம் காத்து இருப்பதன் மூலம்  அதனை அடைய முடியுமா...? மக்கள் விழிப்படைந்து தமது தலைமைக்கும், பிரதிநிதிக்கும் அழுத் தம் கொடுக்காத வரை தமிழ் மக்களால் எதனையும் பெறமுடியாது என்பதே கள ஜதார்த்தம்

ருத்திரன்-

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-12#page-5

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.