Jump to content

காவி அடி.. கழகத்தை அழி.. அதிமுகவை பிளவு படுத்திய பாஜக.. நமது எம்ஜிஆர் பரபரப்பு கவிதை!


Recommended Posts

காவி அடி.. கழகத்தை அழி.. அதிமுகவை பிளவு படுத்திய பாஜக.. நமது எம்ஜிஆர் பரபரப்பு கவிதை!

 

 சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் இதழிலில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வெளியாகியுள்ள கவிதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமது எம்ஜிஆர் நாளிதழில் கடந்த சில வாரங்களாகவே பாஜகவே திட்டி கவிதை எழுதி வருகின்றனர். முதல்வர், அமைச்சர்கள் பாஜகவின் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள நிலையில் நமது எம்ஜிஆரில் இன்று எழுதப்பட்டுள்ள கவிதை பாஜகவை கடுமையாக சாடியுள்ளது.

காவி அடி, கழகத்தை அழி என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த கவிதையில் உத்தர்காண்ட், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், பீகார், கோவா என பல்வேறு மாநிலங்களில் பாஜக பின் வாசல் வழியாக நுழைந்தது அதிகாரத்தை பிடித்ததாக எழுதப்பட்டுள்ளது.

ஆளுநர்கள்


ஆளுநர்கள்

புதுச்சேரி, மணிப்பூரில் ஆளுநர்களை அரசியல் ஏஜெண்டுகளாக்கியுள்ளதாகவும், நீதித்துறை, வருமானவரி, அமலாக்கப் பிரிவு, தேர்தல், ஆணையம், ஆகிய தன்னாட்சி அமைப்புகளை தலைகுனிய வைத்துள்ளது பாஜக என்று அந்த கவிதையில் குறிப்பிட்டுள்ளது.


விளைநிலங்கள்

 

விளைநிலங்கள்

பெட்ரோல் விலையை குறைப்போம், அமெரிக்க டாலரை 35 ரூபாய்க்குள் அடக்குவோம் என்று வாயாலே வடை சுட்டவர்கள். விளை நிலங்களை வெடிகுண்டு கிட்டங்கிகளாக்கியவர்கள் என்றும் கண்டித்துள்ளது அந்த கவிதை.

வெற்றுக்காகிதம்

 

வெற்றுக்காகிதம்

கரன்சியை வெற்றுக்காகிதமாக்கி கருப்புப் பணம் ஒழித்தோம் என்று கதையளப்பவர்கள் இவர்கள் முன்னின்று நடத்தியதெல்லாம் மோசடிகளே என்று குறிப்பிட்டுள்ளது.

மோடியா? லேடியா?

மோடியா? லேடியா? மோடியா? இந்த லேடியா என்று சவால் விட்ட இயக்கத்தை மூன்றாக பிளந்ததும் ஈரிலையை முடக்கி இன்னல்தந்ததும்தானே என்று கடுமையாக கண்டித்துள்ளது நமது எம்ஜிஆர்.


Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/namathu-mgr-goes-against-bjp-292565.html

Link to comment
Share on other sites

நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் ஆசிரியர் நீக்கம்

நமது எம்.ஜி.ஆர். இதழின் ஆசிரியர் நீக்கம் Image captionஜெயலலிதாவுடன் மருது அழகுராஜ்

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக செயல்பட்டுவந்த "நமது எம்.ஜி.ஆர்" ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக அவர் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக சசிகலா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மருது அழகுராஜிடம் கேட்டபோது, அந்தச் செய்தியை உறுதிசெய்த அவர், "2008ஆம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதாவால் பணியில் அமர்த்தப்பட்டேன். இப்போது எழுதுகோல் பறிக்கப்பட்டிருக்கிறது" என்று மட்டும் தெரிவித்தார்.

சென்னையில் புதன்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் இது குறித்துக் கேட்டபோது, "நிர்வாகத்தின் கொள்கைகளை மீறி அவர் செயல்பட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்றார்.

சில நாட்களுக்கு முன்பு நமது எம்.ஜி.ஆர் நாளிதழில், "காவி அடி, கழகத்தை அழி" என்ற பெயரில் கவிதை ஒன்று வெளியானது. அந்தக் கவிதையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

மேலும், "மோடியா, இந்த லேடியா? எனச் சவால் விட்ட இயக்கத்தை மூன்றாகப் பிளந்ததும் ஈரிலையை முடக்கி இன்னல்கள் தந்ததும்" என்று பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அந்த கவிதையை "சித்ரகுப்தன்" என்ற பெயரில் மருது அழகுராஜ் எழுதியிருந்தார். இந்த நிலையில், ஆசிரியர் பொறுப்பிலிருந்து மருது அழகுராஜ் நீக்கப்பட்டிருக்கிறார்.

நமது எம்.ஜி.ஆர். இதழின் ஆசிரியர் நீக்கம் Image caption"நமது எம்.ஜி.ஆர்" நாளிதழில் வெளியான கவிதை

தமிழகத்தில் ஆளும் அதிமுக, தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக சசிகலா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் என மூன்று அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. இதில் "நமது எம்.ஜி.ஆர்" நாளிதழ், டிடிவி தினகரன் தரப்பு கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

இதில், முதல்வர் பழனிச்சாமி அணியும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சொல்படி செயல்படுவதாக விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இரு தரப்பினரும், தொடர்ந்து பிரதமர் மோதியைச் சந்தித்தும் வருகின்றனர்.

அண்மையில் நடந்து முடிந்த குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல்களின்போதும், மூன்று அணியினரும் பாரதிய ஜனதா கட்சி முன்னிறுத்திய வேட்பாளர்களான ராம்நாத் கோவிந்தையும், வெங்கய்ய நாயுடுவையும் முறையே ஆதரித்தன.

ஆனால், டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்திக்கும்போதெல்லாம் பழனிச்சாமி அணியினர், யாருக்கோ பயப்படுவதாக குற்றம்சாட்டி வந்தார். மேலும், நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் தொடர்ந்து மத்திய அரசை விமர்சிக்கும் கட்டுரைகளும் வெளியாகி வந்தன.

இந்நிலையில்தான், அந்தப் பத்திரிகையின் பொறுப்பிலிருந்து மருது அழகுராஜ் நீக்கப்பட்டிருக்கிறார்.

http://www.bbc.com/tamil/india-40951645

Link to comment
Share on other sites

சோனியா விசாரித்த ‘நமது எம்.ஜி.ஆர்’ கவிதை!

 

 

‘காவி அடி... கழகத்தை அழி..!’ - இது ஆகஸ்ட் 12-ம் தேதி    அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான ‘டாக்டர் நமது எம்.ஜி.ஆர்’ வெளியிட்ட கவிதை. அரசியல் சதுரங்க வேட்டையில் அந்தப் பத்திரிகையின் ஆசிரியரையே காவு வாங்க வைத்தது.

‘உத்தரகாண்ட்டில் ருத்ர தாண்டவமாடி... அருணாசல பிரதேசத்தில் அத்துமீறி அடாவடிகள் நடத்தி... கோவாவில் காங்கிரஸின் குடிகெடுத்து... பீகாரில் லாலு-நித்தீஷைப் பிரித்து பின்வழியே அதிகாரப் பீடத்தைப் பிடித்து... அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரச் செங்கோலை முடக்கி... புதுச்சேரி நாராயணசாமிக்குப் புதுசு புதுசா தொல்லைகளை அடுக்கி... மணிப்பூரில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக மகுடத்தைப் பறித்து... ஆளுநர்களை அரசியல் ஏஜெண்டுகளாக்கி அக்கிரமங்கள் நடத்தி... தன்னாட்சி அமைப்புகளைத் தலைகுனிய வைத்து... அரசியல் அரிப்புக்கு அவற்றை சொறிகின்ற ஆயுதமாக்கி... ஜனநாயகப் படுகொலைகளை சகஜங்களாக்கி...’ என்று காட்டமாக மத்திய அரசை விமர்சிக்கும் அந்தக் கவிதை, ‘மோடியா? இந்த லேடியா? எனச் சவால் விட்ட இயக்கத்தை மூன்றாகப் பிளந்தும், ஈரிலையை முடக்கி இன்னல்கள் தந்ததும்தானே!’ என்று முடிகிறது.

p36.jpg

‘நமது எம்.ஜிஆர்’ நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ், ‘சித்ரகுப்தன்’ என்ற புனைப்பெயரில் எழுதிய கவிதை இது. அன்று காலை நாளிதழ் வெளியான உடனே டெல்லி வரை பரபரக்க வைத்துவிட்டது இந்தக் கவிதை. அன்று காலையே ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் பணியாற்றும் ஒருவரை ப.சிதம்பரம் தொடர்புகொண்டு, ‘‘இன்று ஏதோ கவிதை வெளியாகி இருக்கிறதாமே! அதன் மொழியாக்கத்தை சோனியா காந்தி அவசரமாகக் கேட்டார்’’ என்று சொல்லி, ‘நமது எம்.ஜி.ஆர்’ பிரதியைக் கேட்டதாக சொல்லப்படுகிறது. ‘அதற்குள்ளாக டெல்லி வரை இது பரவிவிட்டதா?’ என எல்லோரும்  பரபரக்க  ஆரம்பித்தனர். சோனியா விசாரித்த தகவல் தெரிந்து, அரசியல் வட்டாரம் அலெர்ட் ஆகிவிட்டது. டெல்லி பி.ஜே.பி வட்டாரமும் கொந்தளித்தது. இதைத் தொடர்ந்து மத்திய உளவுத் துறையின் உயர் அதிகாரி ஒருவர், ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் மருது அழகுராஜைத் தொடர்புகொண்டு, ‘‘நீங்கள் கவிதை எழுதுவதில் எங்களுக்குப் பிரச்னை இல்லை. இந்தக் கவிதையை யார் சொல்லி வெளியிட்டீர்கள்?’’ என்று விசாரித்திருக்கிறார்.

‘‘எனக்கு யாரும் சொல்லவில்லை. எதையெல்லாம் எப்படி எழுதலாம் என ஜெயலலிதா எனக்குப் பலமுறை வழிகாட்டுதல்கள் கொடுத்திருக்கிறார். அந்த அடிப்படையில் எழுதப்பட்ட கவிதையே அது’’ என விளக்கம் கொடுத்திருக்கிறார் மருது அழகுராஜ். விஷயம் இதோடு முடிந்துவிடும் என அவர் நினைத்தார். ஆனால், அப்படி ஆகவில்லை.

‘நமது எம்.ஜி.ஆர்’ முழுக்க முழுக்க சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இப்போது உள்ளது. இதன் நிர்வாகியாக இருப்பவர், இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன். இந்த நாளேட்டில் தினகரனுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்பான செய்திகள், இடையில் இருட்டடிப்பு செய்யப்பட்டன. சில நாள்களில் மீண்டும் எடப்பாடி தொடர்பான செய்திகள் இடம்பெற்றன. ‘தினகரன் நியமனம் செல்லாது’ என  எடப்பாடி அணியினர் தீர்மானம் போட்டபிறகு, எடப்பாடி அணியின் அரசியல் செய்திகள் வருவதில்லை. ஆனால், மத்திய அரசின் தவறான கொள்கை முடிவுகளை எதிர்க்கும் கவிதைகளும் கட்டுரைகளும் தவறாமல் இடம்பெற்றுவந்தன.

p36a.jpg

பி.ஜே.பி., பல்வேறு மாநிலங்களில் பின்புறவழியாக ஆட்சியைப் பிடிப்பதாகவும், வருமானவரித் துறை மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் அந்தக் கவிதையில் விமர்சிக்கப்பட்டுள்ளது. ‘‘ஏற்கெனவே பல வழக்குகளில் சிக்கியிருக்கும் இந்தப் பிரச்னையான சூழலில், இந்தக் கவிதையே உங்களை உள்ளே தள்ளிவிடும்’’ என்று டி.டி.வி.தினகரனிடம் அவரைச் சுற்றியிருப்பவர்கள் அச்சத்தைக் கிளப்பியிருக்கிறார்கள். இந்தக் கவிதையை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து டெல்லிக்கு மத்திய உளவுத்துறை அனுப்பியதாகவும், அது ஆட்சியாளர்கள் கண்ணில்பட்டதும், அவர்கள் கொதித்துப் போனதாகவும் தினகரனுக்கும் சொல்லப்பட்டது. பதறித் துடித்த தினகரன், மேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ‘‘இப்போது ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளேட்டின் பொறுப்பை உறவினர் விவேக் ஜெயராமன் கவனித்துவருகிறார். அந்த நாளேட்டின் கறுப்பு ஆடுகளாக இருந்தவர்களை அவர் நீக்கிவிட்டார். பி.ஜே.பி-க்கு எதிராக எழுதியவர்களையும் இந்நேரம் அவர் நீக்கியிருப்பார்” என்று அறிவித்தார்.

அவர் ‘கறுப்பு ஆடு’ என்றெல்லாம் சொல்லியிருப்பது மருது அழகுராஜையே என்கிறார்கள். அவரை சசிகலா குடும்பத்தினர் அவமானப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு ‘சில நாள்கள் ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள்’ எனச் சொல்லி அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது. மருது அழகுராஜைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர், ‘‘தொண்டர்களின் மனக்குமுறலைத்தான் கவிதை வடிவில் எழுதியிருந்தேன். அது, தினகரனுக்கு மனவருத்தத்தையோ நெருடலையோ தந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் மதுரையில் அவ்வாறு தினகரன் பேசியிருக்கிறார் என்று கருதுகிறேன். இந்த விஷயத்தில் இதற்கு மேல் பேசும் மனநிலையில் நான் இல்லை” என்றார்.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.