Jump to content

இந்தியாவில் வாழ்ந்த வீட்டை 70 ஆண்டுக்குப் பிறகு வீடியோவில் பார்த்த பாகிஸ்தான் பெண்


Recommended Posts

இந்தியாவில் வாழ்ந்த வீட்டை 70 ஆண்டுக்குப் பிறகு வீடியோவில் பார்த்த பாகிஸ்தான் பெண்

 

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினம் தற்போது நெருங்குகிறது. பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி தொடரின் ஒரு பகுதி.

70 வருடங்களுக்கு பிறகு மூதாதையரின் வீட்டை பார்த்த பாகிஸ்தானின் சஃபியா Image captionசஃபியா ஹம்தானி

நாடு சுதந்திரம் அடைந்தது கொண்டாட்டங்களுக்கான காரணமாக இருந்தாலும், அந்த மகிழ்ச்சியின் நிழலில் படர்ந்திருந்த சோகம் பாகிஸ்தான்- இந்தியா பிரிவினை. நிழலின் அருமை வெயிலில் தெரியலாம், ஆனால் இந்த நிழலின் நினைவுகள் என்றும் மனதை வாட்டக்கூடியவை.

லட்சக்கணக்கான மக்கள் வீடிழக்க, நாடு மாற அடிகோலிய பிரிவினை நடந்து 70 ஆண்டுகள் முடியும் நிலையிலும் அதன் வலியை வேதனையை இன்னமும் உணரமுடிகிறது.

 

பிரிவினைக்கு முன் தங்கள் முன்னோர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த வீட்டை ஒருமுறையேனும் பார்க்க முடியாதா, என்று ஏங்கும் முதியவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

பிபிசி உருதுவில் பணிபுரியும் ரஜா ஹம்தானியின் தாய் சஃபியாவின் மனதிலும் அப்படி ஓர் ஆசை நிராசையாக இருந்தது.

70 வருடங்களுக்கு பிறகு மூதாதையரின் வீட்டை பார்த்த பாகிஸ்தானின் சஃபியா Image captionபிரிவினைக்கு முன் சஃபியா, இந்தியாவில் இருக்கும் பஞ்சாபின் ஃபிரோஜ்புரில் வசித்தார்

ஃபிரோஜ்புர்

பிரிவினைக்கு முன் சஃபியா தனது குடும்பத்தினரோடு தற்போது இந்தியாவில் இருக்கும் பஞ்சாபின் ஃபிரோஜ்புரில் வசித்தார்.

தனது தாயாரை அவரது மூதாதையரின் வீட்டுக்கு ஒரு முறையேனும் அழைத்து வரவேண்டும் என்று ரஜா மிகுந்த பிரயாசைகள் எடுத்தார். ஆனால் சஃபியாவுக்கு இந்தியா வருவதற்கான விசா கிடைக்கவில்லை.

நேரிடையாக வருவதற்காக விசா கிடைக்காவிட்டால் என்ன? தொழில்நுட்ப முன்னேற்றத்தின் உச்சத்தில் இருக்கும் இன்று எதுவும் சாத்தியமே!

சஃபியா ஹம்தானி என்ற தாயின், ஒரு முதியவரின் ஆசையை நிறைவேற்றும் எண்ணத்துடன் ஃபிரோஜ்புருக்கு சென்றேன்.

சஃபியாவிடம் பேசி, அவர் வசித்த தெருவின் குறிப்புகளை வாங்கிக் கொண்டேன். எழுபது ஆண்டுகள் ஆனாலும், தனது வீடு இருந்த வீதி, கடைகளின் பெயர் என அவருக்கு அனைத்தும் நீங்காமல் நினைவில் இருந்தன.

70 வருடங்களுக்கு பிறகு மூதாதையரின் வீட்டை பார்த்த பாகிஸ்தானின் சஃபியா Image captionஃபிரோஜ்புரில் சஃபியாவின் வீட்டுக்கு செல்லும் வழி

ஃபிரோஜ்புர் சென்று சேர்வது சுலபமாகவே இருந்தது. ஆனால் புதிய ஊரில் எழுபது ஆண்டுக்கு முந்தைய வீட்டை கண்டறிவதற்காக உள்ளூர் பத்திரிகையாளர் மல்கீத் சிங்கின் உதவியைக் கோரினேன்.

பிறந்ததில் இருந்து ஃபிரேஜ்புரில் வசிக்கும் மல்கீத் சிங்குக்கு அங்கிருக்கும் மூலை முடுக்குகள் அனைத்தும் அத்துப்படி என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை. அவரின் உதவியில்லாமல் சஃபியாவின் வீட்டை என்னால் கண்டுபிடித்திருக்கமுடியாது.

சஃபியா கொடுத்த குறிப்பின்படி, 'குச்சா காதிர் பக்‌ஷா வீதி'க்கு அழைத்துச் சென்றார். ஆனால் சஃபியா சொன்னவற்றில் பல மாறுதல்கள் இருந்தஃன. வீதியின் பெயரே தற்போது 'கூச்சா டாகூர் சிங் தமீஜா' என்று மாறிவிட்டது.

70 வருடங்களுக்கு பிறகு மூதாதையரின் வீட்டை பார்த்த பாகிஸ்தானின் சஃபியா Image captionஃபிரோஜ்புரின் கூச்சா டாகூர் சிங் தமீஜா வீதி

அங்கு வசித்தவர்களிடம் குறிப்புகளைச் சொல்லி வழி கேட்டோம். வீதியில் இருந்து திரும்பியதுமே வலது புறத்தில் வீடு இருக்கும் என்றும், மிகப்பெரிய கதவு இருக்கும் என்றும் அடையாளம் சொல்லியிருந்தார் சஃபியா.

அவர் சொன்ன அடையாளம் அப்படியே மாறாமல் இருந்தது.

வீட்டை அடையாளம் கண்டோம்

நாங்கள் தேடிய வீட்டை கண்டுபிடித்துவிட்டோம் என்று எனக்கு புரிந்துவிட்டது. ஆனால் அதை உறுதி செய்ய வேண்டியவர் பாகிஸ்தானில் இருக்கும் சஃபியா.

வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு சஃபியாவுக்கு வீட்டைக் காட்டினோம். அதுதான் குழந்தைப் பருவத்தில் வாழ்ந்த வீடு என்பதை பார்த்த கணத்திலேயே சொல்லிவிட்டார் சஃபியா.

70 வருடங்களுக்கு பிறகு மூதாதையரின் வீட்டை பார்த்த பாகிஸ்தானின் சஃபியா Image captionசஃபியா இழந்த வீடு

வெளியில் பார்த்ததுமே அவர் வீட்டை அடையாளம் கண்டு கொண்டாலும், வீட்டிற்கு உள்ளே சென்று பார்க்க விரும்பினோம். அதை சஃபியாவுக்கும் காட்ட ஆசைப்பட்டோம்.

ஆனால் தற்போது அந்த வீட்டின் உரிமையாளரிடம் அனுமதி வாங்கவேண்டும்.

அண்டை அயலாரிடம் பேசினோம். தற்போது கிடங்காக மாற்றப்பட்டிருக்கும் சஃபியாவின் வீட்டின் தற்போதைய உரிமையாளர், கபூர் எலக்ட்ரிகல்ஸின் கபூர் குடும்பத்தினர் என்பது தெரியவந்தது.

கபூர் எலக்ட்ரிகல்ஸுக்கு சென்றோம். உரிமையார் சஞ்சீப் கபூரும் அவருடைய அண்ணனும் இருந்தார்கள். நாங்கள் விசயத்தை விவரித்தோம்.

நாங்கள் சொன்னதில் முதலில் நம்பிக்கை ஏற்படவில்லை என்பதால் தயக்கம் காட்டினார்கள். எங்களுடைய அடையாள அட்டையைக் காட்டினோம்.

வெகுதொலைவில் இருந்து ஒரு முதியவரின் விருப்பத்தை நிறைவேற்ற வந்திருக்கிறோம் என்பதை புரிந்துக் கொண்ட பிறகு, மிகவும் மரியாதையாக உபசாரமும் செய்தார்கள்.

70 வருடங்களுக்கு பிறகு மூதாதையரின் வீட்டை பார்த்த பாகிஸ்தானின் சஃபியா Image captionபிரிவினைக்கு முன் சஃபியா வாழ்ந்த வீடு

சஃபியாவின் வீட்டிற்குள் சென்று அவரது வீட்டை வீடியோ மூலமாக அவருக்கு காட்டவேண்டும் என்று தாபம் மனதில் எழுந்தது. மகிழ்ச்சியுடன் கபூர் குடும்பத்தினருடன் நீங்கா நினைவில் இடம் பெற்ற அந்த வீட்டிற்கு செல்லும்போது மனதில் இனம்புரியாத ஓர் உணர்வு ஏற்பட்டது.

கபூர் எலக்ட்ரிகல்ஸின் கிடங்கிற்குள் சென்ற பிறகு, சஃபியாவிடன் மீண்டும் வீடியோ கால் செய்து பேசினோம். வீட்டின் உட்புறத்தையும் காட்டினோம்.

சஃபியாவின் குரல் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது. ஒரு குழந்தையாகவே மாறிப்போனார். எழுபது ஆண்டுகளுக்கு முன் விட்டுச் சென்ற இடத்தை பார்க்கும் ஆசை, நிராசையாகவே போய்விடுமோ என்று ஏங்கியவருக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆத்ம திருப்தி ஏற்பட்டது புரிந்தது.

எழுபது ஆண்டுகளுக்கு பிறகும் தனது வீட்டின் ஒவ்வொரு மூலையும் சஃபியாவுக்கு நினைவில் இருந்தது. இங்கிருந்து வலதுபுறமாக போங்கள், அங்கே அது இருக்கும் என்று சொல்லி குழந்தையை போல குதூகலித்து, ஆர்வத்துடன் வீட்டை சுற்றிப்பார்த்தார் வீடியோ மூலம்.

70 வருடங்களுக்கு பிறகு மூதாதையரின் வீட்டை பார்த்த பாகிஸ்தானின் சஃபியா Image captionவீட்டின் தாழ்வாரம்

வீட்டிற்குள் நுழைந்ததும் ஒரு கிணறு இருக்கும் என்றார் சஃபியா. அந்த கிணற்றை மூடிவிட்டதாக சஞ்சீவ் கூறினார்.

கிணற்றை அடுத்து தாழ்வாரம். சஃபியா சொன்னது இம்மியும் மாறவில்லை, அவரின் மனப்பதிவுகள் சரியாகவே இருந்தன. வீட்டைப்பற்றிச் சொல்ல அவரிடம் ஆயிரம் விடயங்கள் இருந்தன.

எந்த ஒரு மகிழ்ச்சிக்கும் கால வரையறை உண்டே!

இறுதியாக, 'என் அம்மா-அப்பாவுடன் வாழ்ந்த குழந்தைப்பருவ நினைவுகள் நினைவுக்கு வந்துவிட்டன, நிராசை நிறைவேறியது' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் சஃபியா.

மனமிருந்தால் மார்க்கமுண்டு. பிரிவினையால் பிரிந்து, அண்டை நாட்டினரானாலும், முந்தைய நினைவுகள் பசு மரத்தாணி போல் நினைவில் இருக்கும். அதை நிறைவேற்ற பல்வேறு தடைகள் இருந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியும், சிறிய பிரயாசையும் இருந்தால் போதும், நிராசைகள் நிறைவேறும்…

இந்த ஆண்டு சுதந்திர தினத்தை சஃபியா ஹம்தானி எழுபது ஆண்டுகளுக்கு பிறக்கு சற்றே மனநிறைவுடன் கொண்டாடுவார்.

http://www.bbc.com/tamil/global-40897498

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.