Jump to content

பத்து வயதில் எட்டு மாத கர்ப்பம்: - அர்ஜென்டீனாவில் சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜென்டீனாவில் 10 வயது சிறுமி தனக்கே தெரியாமல் 8 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் விடயம் குறித்த பொதுமக்களின் கருத்தால் நாடே அதிர்ந்துள்ளது.Mendoza மாகாணத்தில் வாழ்ந்து வரும் சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் இந்நிலைக்கு காரணமான உறவினரை பொலிசார் கைது செய்துள்ளனர்.அடையாளம் வெளியிடப்படாத சிறுமி வயிற்று வலி என தாயிடம் கூறியுள்ளார். உடனே தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

   
இந்நிலையில் சிறுமியை சோதித்த மருத்துவர்கள், சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனையடுத்து, சிறுமி மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார்.தான் கர்ப்பமாக இருப்பதை சிறுமி உணரவில்லை, அவர் உடல் பருமனாக இருப்பதால் 8 மாத கர்ப்பத்தை மற்றவர்களும் உணராததற்கு காரணம் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.நீதிமன்ற விசாரணையில் சில மாதங்கள் சிறுமியின் வீட்டில் தங்கியிருந்த 23 வயது உறவினரே காரணம் என தெரியவந்துள்ளது. உறவினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், அர்ஜென்டீனாவில் கருக்கலைப்பு சட்டப்படி குற்றம் என்றாலும், பாலியல் துன்புறுத்தலால் கர்ப்பமடைந்தவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏதும் இல்லையெனில் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்படும்.ஆனால், சிறுமி 8 மாத கர்ப்பம் என்பதால் மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சிறுமிக்கு பிறக்க போகும் குழந்தையை ஏற்றுக்கொண்டு வளர்ப்பது குறித்த சிறுமியின் பெற்றோர்கள் முடிவு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=188160&category=WorldNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நபருக்கு என்ன தண்டனையோ ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனி ஒருவன் said:

அந்த நபருக்கு என்ன தண்டனையோ ??

கல்யாணத்தை செய்து வைக்கிறதைவிட வேறென்ன பெரிசாய் தண்டனை குடுத்திட முடியும்.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சிறந்த தண்டனை ஆகிவிடுமா சுவி அண்ணை பாலியல் என்றால் என்ன தெரியாத வயது அது இவரின் இச்சயை  தீர்த்து கொள்ள ஒரு விபரம் அறியாத குழந்தையை பயன்படுத்தி உள்ளார் இவருக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் ஏனென்றால் இது போல வேறு யாரும் இப்படி சிறுவர்கள் மீது பாலியல் சார்ந்த வேலைப்பாடுகளை மேற் கொள்ளாத வண்ணம்   தண்டனை கொடுக்க வேண்டும் 

1 hour ago, suvy said:

கல்யாணத்தை செய்து வைக்கிறதைவிட வேறென்ன பெரிசாய் தண்டனை குடுத்திட முடியும்.....! tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறுவது பொதுவாக சரியே....! ஆனால் ஒரு வேற்று மனிதரால் நடந்து இருந்தால் அடியடா புடியடா என்று போய் இருப்பார்கள். இது நெருங்கிய உறவுக்குள் நடந்துள்ளது. எதிர்பாரா விதமாக போலீஸ் கேஸ் என்று போய் விட்டது. முதலே தெரிந்திருந்தால் விஷயம் வெளியே வராமலே போகவும் சாத்தியம் உண்டு. ஒரு அண்ணனாலோ, தம்பியாலோ/ அல்லது மனிசி வழியில் மைத்துனராலோ நடந்திருந்தால் முதலில்  கோபப்படலாம். அதனால் கொலைகூட நடக்கலாம். அதைக் கடந்து விட்டால் நாலுபேர் பேசி ஒரு முடிவுக்கு வரத்தான் பார்ப்பினம்....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

நீங்கள் கூறுவது பொதுவாக சரியே....! ஆனால் ஒரு வேற்று மனிதரால் நடந்து இருந்தால் அடியடா புடியடா என்று போய் இருப்பார்கள். இது நெருங்கிய உறவுக்குள் நடந்துள்ளது. எதிர்பாரா விதமாக போலீஸ் கேஸ் என்று போய் விட்டது. முதலே தெரிந்திருந்தால் விஷயம் வெளியே வராமலே போகவும் சாத்தியம் உண்டு. ஒரு அண்ணனாலோ, தம்பியாலோ/ அல்லது மனிசி வழியில் மைத்துனராலோ நடந்திருந்தால் முதலில்  கோபப்படலாம். அதனால் கொலைகூட நடக்கலாம். அதைக் கடந்து விட்டால் நாலுபேர் பேசி ஒரு முடிவுக்கு வரத்தான் பார்ப்பினம்....!  

ஆனாலும் குற்றம் குற்றமே தான்  ஆனால் குற்றம் கூட நீதி மன்றத்தில் குற்றமில்லை என்று நிருபிக்கப்பட்டு குற்றவாளி கூட சுற்ற வாளியாகிறான்  இது உறவு என்பதால் நிட்சயம்  பேசியே தீர்ப்பார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அர்ஜென்டீனா பிள்ளை இல்லை. சம்பவம் நடந்தது பாரத தேசத்தில். செய்தியை அப்படியே அஜென்டீனாவுக்கு கொண்டு போயிட்டாங்கள். :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.