Jump to content

காலம் கடத்தும் சந்தர்ப்பம்


Recommended Posts

காலம் கடத்தும் சந்தர்ப்பம்

 

பிறழ் நடத்­தைகள் கார­ண­மாக கட்­டுக்­க­டங்­காமல் அதி­க­ரித்துச் செல்­கின்ற குற்­றச்­செ­யல்­க­ளையும், சமூ­க­வி­ரோதச்  செயற்­பா­டு­க­ளையும் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளாக உரு­வ­கப்­ப­டுத்தி, அதன் மூலம் பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முதன்­மைப்­ப­டுத்தி, இரா­ணு­வத்தின் வெளி­யேற்றம், இரா­ணு­வத்தின் வச­முள்ள காணி­களை விடு­வித்தல், உள்­ளிட்ட அவ­ச­ர­மாகத் தீர்க்க வேண்­டிய பிரச்­சி­னை­க­ளையும் அர­சியல் தீர்வு காணும்  அவ­சி­யத்­தையும் புறந்­தள்ளி, காலம் கடத்­து­வ­தற்­கு­ரிய  சந்­தர்ப்­பத்தை அர­சாங்­கத்திற்கு ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்கும்  இந்த நிலை­மைகள்  துணை­பு­ரியக் கூடும்.  

 

வாள்­வெட்டுக் குழு­வி­னரின் செயற்­பா­டுகள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­துள்ள போதிலும் உண்­மை­யா­கவே வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் யாழ்ப்­பா­ணத்தில் முடி­வுக்கு வந்­து­விட்­ட­னவா என்­பதை உறு­தி­யாக நம்ப முடி­யா­துள்­ளது. யாழ்ப்­பா­ணத்தில் அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்ற வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் வட­மா­கா­ணத்தை மட்­டு­மல்­லாமல், தென்­னி­லங்­கை­யிலும் அர­சியல் ரீதி­யாகப் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. சாதா­ரண சமூக விரோதச் செயற்­பா­டா­கவும் சாதா­ரண இளை­ஞர்­களின் ஒழுக்கப் பிறழ்வு செயற்­பாடு சார்ந்த குற்றச் செயல்­க­ளா­க­வுமே வாள்­வெட்டுச் சம்­ப­வங்­களை பொலிஸார் முதலில்  நோக்­கி­யி­ருந்­தனர். 

யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­யனை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட நல்லூர் துப்­பாக்­கிப்­பி­ர­யோக சம்­ப­வத்­தை­ய­டுத்து, மோட்டார் சைக்­கிளில் சென்று கொண்­டி­ருந்த இரண்டு பொலிஸார் மீது துரத்தி துரத்தி நடத்­தப்­பட்ட வாள்­வெட்டுச் சம்­ப­வமே பொலிஸ் திணைக்­க­ளத்தை தூக்­கத்­தி­லி­ருந்து விழித்­த­வனைப் போன்ற நிலைக்குத் தள்­ளி­யி­ருந்­தது.

யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் அங்­குள்ள இளை­ஞர்­களை படு­கா­யப்­ப­டுத்தி நேர­டி­யாகப் பாதித்­தி­ருந்­தன. குழுக்­க­ளாக இயங்கும் இளை­ஞர்­க­ளி­டையே ஏற்­பட்­டி­ருந்த போட்டிச் செயற்­பா­டுகள் மற்றும் கண்­ட­றி­யப்­ப­டாத பல கார­ணங்­களே இந்த வாள்­வெட்டுச் சம்­ப­வங்­க­ளுக்கு அடிப்­படைக் கார­ணங்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றது.

பயங்­க­ர­வாதம் குறித்த உரு­வகம் 

அதே­நே­ரத்தில் பட்­டப்­ப­கலில் மக்கள் நட­மாட்டம் மிகுந்த கடை­வீதி உள்­ளிட்ட பல பகு­தி­களில் இடம்­பெற்ற துணி­க­ர­மான வாள்­வெட்டுச் சம்­ப­வங்­க­ளினால் பொது­மக்கள் பெரிதும் பீதி­ய­டைந்­தி­ருந்­தார்கள். அடுத்த வாள்­வெட்டுச் சம்­பவம் எங்கு நடக்கப் போகின்­றதோ, யாரை வெட்டிச் சரிக்கப் போகின்­றார்­களோ, அடுத்­த­டுத்து என்ன நடக்கப் போகின்­றதோ என்று சாதா­ரண மக்கள் பெரும் அச்­சத்தில் ஆழ்ந்­தி­ருந்­தார்கள். 

கொக்­குவில், நந்­தாவில் பகு­தியில் இரண்டு பொலிஸார் மீது நடத்­தப்­பட்ட வாள்­வெட்டுச் சம்­ப­வ­மா­னது, சாதா­ரண பொது­மக்­களில் இருந்து சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­கின்ற பொலி­ஸாரின் பக்கம் வாள்­வெட்டுக் குழுக்­களின் கவனம் திரும்­பி­யி­ருக்­கின்­றதே என்று பொலிஸ் திணைக்­களம் அச்­ச­ம­டை­யவும், வாள்­வெட்டுக் குழுக்கள் மீது அக்­கறை செலுத்திச் செயற்­ப­டவும் தூண்­டி­யி­ருந்­தது. 

இத­னை­ய­டுத்தே அவ­சர அவ­ச­ர­மாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர யாழ்ப்­பா­ணத்­திற்­கான அவ­சர விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தார். அந்த விஜ­யத்தின்போது யாழ்ப்­பா­ணத்தின் சிவில் பாது­காப்பு நிலை­மை­க­ளையும் சட்டம் ஒழுங்கு நிலை­மை­க­ளையும் நேர­டி­யாகக் கண்­ட­றிந்தார். அதற்கு முன்­ன­தாக பொலி­ஸாரின் அறிக்­கைகள் பொலிஸ் புல­னாய்வுப் பிரி­வி­னரின் அறிக்­கைகள் என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு யாழ்ப்­பா­ணத்தின் நிலை­மைகள் குறித்­ததோர் உரு­வ­கத்தை அவர் கொண்­டி­ருந்தார். பொலிஸார் மீதான வாள்­வெட்டுச் சம்­ப­வமும், யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­யனின் மெய்ப்­பா­து­கா­வ­லர்கள் மீது உயிரைப் பறிக்கும் அள­வுக்கு நடத்­தப்­பட்ட தீவி­ர­மா­ன­தொரு துப்­பாக்­கிப்­பி­ர­யோகத் தாக்­கு­தலும் யாழ்ப்­பா­ணத்தின் பாது­காப்பு நிலை­மைகள் குறித்த அவ­ரு­டைய உரு­வ­கத்­திற்கு உறு­து­ணை­யாக அமைந்­தி­ருந்­தது. யாழ்ப்­பா­ணத்தில் சட்டம் ஒழுங்கு சீர்­கு­லைந்து பயங்­க­ர­வாதம் தலை­தூக்­கி­யி­ருக்­கின்­றது என்ற உரு­வ­கத்­தையே பொலிஸ் மா அதிபர் கொண்­டி­ருந்தார் என்­பதை யாழ். பிர­தேச சிவில் பாது­காப்பு குழு­வினர் மற்றும் சமூகப் பெரி­யார்கள், முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொண்­டி­ருந்த கூட்­டத்­திலும், அதன் பின்னர் இடம்­பெற்ற செய்­தி­யா­ளர்கள் சந்­திப்­பிலும், அவர் கூறிய கருத்­துக்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

அதி­ர­டிப்­படை, இரா­ணு­வத்­தி­ன­ருடன் இணைந்த கூட்டுக் காவல் நட­வ­டிக்கை 

யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற சிவி­லி­யன்கள் சார்ந்த துப்­பாக்­கிச்­சூட்டுச் சம்­பவங்­களும், வாள்­வெட்டுக் குழுக்­களின் அடா­வ­டித்­த­னங்­களும் அங்கு மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­தூக்­கி­யி­ருப்­ப­தையே அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக பொலிஸார் கரு­தி­யி­ருந்­தனர். அதன் கார­ண­மா­கவே எந்தக் கார­ணத்தைக் கொண்டும் பயங்­க­ர­வாதம் மீண்டும் தலை­தூக்­கு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என அவர் அப்­போது கூறி­யி­ருந்தார். 

அத்­துடன் நிலை­மையைக் கட்­டுப்­பாட்டில் கொண்டு வரு­வ­தற்­காக பொலிஸார் அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரு­டனும், இரா­ணு­வத்­தி­ன­ரு­டனும் இணைந்து கூட்டுக் காவல் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­வ­தற்கு ஏற்­க­னவே தீர்­மா­னிக்­கப்­பட்டு, சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு அதற்­கு­ரிய பணிப்­பு­ரைகள் விடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் பொலிஸ் மா அதிபர் கூறி­யி­ருந்தார். அது மட்­டு­மல்­லாமல், இத்­த­கைய கூட்டுச் சுற்­றுக்­காவல் நட­வ­டிக்­கைக்கு அரச தலை­வர்­க­ளான பிர­தமர் மற்றும் ஜனா­தி­பதி ஆகி­யோரின் அங்­கீ­கா­ரமும் பெறப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற அடா­வ­டித்­த­ன­மான சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் இருப்­ப­தாகத் தாங்கள் கண்­ட­றிந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தி­ருந்த பின்­ன­ணியில், ஆயுதப் பயிற்சி பெற்று இரா­ணு­வத்­தி­ன­ருடன் சண்­டை­களில் ஈடு­பட்­டி­ருந்த முன்னாள் விடு­த­லைப்­பு­லி­க­ளிடம், பொலி­ஸா­ரையும் படை­யி­ன­ரையும் எதி­ரி­க­ளாகக் கருதிச் செயற்­ப­டு­கின்ற மன­நி­லையில் மாற்றம் ஏற்­ப­ட­வில்லை என்­ப­தையும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். 

படைத்­த­ரப்­பிலும் மனப்­பாங்கில் மாற்­ற­மில்லை 

சண்­டை­யி­டு­கின்ற மனப்­பான்­மையில் மாற்றம் காணாத முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் மீண்டும் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தற்கு, யாழ். பிர­தே­சத்தில் அர­சுக்குத் தெரிந்தும் தெரி­யாத இடங்­க­ளிலும் மறைத்து வைக்­கப்­பட்­டுள்ள பெருந்­தொ­கை­யான ஆயு­தங்­களும் ஊக்­கு­விக்கும் அம்­ச­மாக இருக்­கின்­றன என்ற தொனியில் பொலிஸ் மா அதி­பரின் கருத்­துக்கள் அமைந்­தி­ருந்­தன. 

மிகவும் பிர­ப­ல­மாக பேசப்­பட்ட ஆவா குழு­வி­னரே பொலிஸார் மீது வாள்­வெட்டுத் தாக்­கு­தலை நடத்­தி­யி­ருந்­தனர் என்­பதைக் கண்­ட­றிந்த பொலிஸார், பொலிஸா­ரைத்தான் தாக்க வேண்டும் என்று ஏற்­க­னவே திட்­ட­மிட்ட வகையில், இந்தத் தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தல்ல என்­ப­தையும் கண்­ட­றிந்­தி­ருக்­கின்­றார்கள். பொலிஸார் மீதான கொக்­குவில் வாள்­வெட்டுச் சம்­ப­வத்­தை­ய­டுத்து, ஒரு வாரத்­துக்கும் சற்று அதி­க­மான தினங்­க­ளி­லேயே அந்த வாள்­வெட்டு குழு­வி­னரை இனங்­கண்டு, அவர்­களின் நட­மாட்­டங்­களைப் புல­னாய்வு செய்து, அந்தத் தாக்­கு­தலின் சூத்­தி­ர­தா­ரி­களை கொழும்பில் வைத்து அவர்­க­ளுக்கு சற்றும் சந்­தேகம் ஏற்­ப­டாத வகையில் சாது­ரி­ய­மாக, பொலிஸார் திடீ­ரென கைது செய்­துள்­ளனர். 

கொழும்பில் கைது செய்­யப்­பட்ட முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யா­கிய நிசா விக்டர் என்­பவர் ப­யங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரி­வி­ன­ரு­டைய விசா­ர­ணை­யின்­போது அளித்­துள்ள வாக்­கு­மூ­லத்தில் "ஆவா" குழுவில் என்­னுடன் தர்க்­கப்­பட்­டுக்­கொண்டு பிரிந்து சென்று வேறு ஒரு குழுவை ஆரம்­பிக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்த தனு ரொக் என்­பவர் மீது வாள்­வெட்டு தாக்­குதல் நடத்­து­வ­தற்­காகச் சென்­ற­போது இரண்டு பொலிஸார் செல்­வதைக் கண்டு, அவர்கள் தங்­களைப் பிடிப்­ப­தற்­கா­கவே வந்­தனர் எனக் கருதி அவர்கள் இரு­வ­ரையும் துரத்தித் துரத்தி வாளினால் வெட்­டினோம்' என்று தெ­ரி­வித்­துள்ளார். இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­ய­வர்­களின் பெயர் விப­ரங்­க­ளையும் அவர் தனது வாக்­கு­மூ­லத்தில் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். 

நிலைமை இவ்­வா­றி­ருக்க அதி­க­மான குற்றச் செயல்­களைப் பயங்­க­ர­வாத முலாம் பூசி, முன்னாள் விடு­த­லைப்­பு­லிகள் மீண்டும் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களில் ஈடு­பட முயற்­சிக்­கின்­றார்கள் அல்­லது அவ்­வாறு பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள் என்று பொலி­ஸாரும் இரா­ணு­வத்தினரும் முடிவு செய்­து­வி­டு­கின்­றார்கள். இதனை ஆவா குழு சம்­பந்­த­மாக 13 பேர் கைது செய்­யப்­பட்டு நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­க­ளிலும், யாழ்ப்­பா­ணத்தில் அதி­க­ரித்­துள்ள குற்றச் செயல்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக பொலிஸார் அவ­சர அவ­ச­ர­மாக இரா­ணு­வத்தின் துணையை நாடிய செயற்­பாட்­டிலும் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது. 

விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான மோதல்­க­ளின்­போது, விடு­த­லைப்­பு­லி­களை எவ்­வா­றா­யினும் அழித்­து­விட வேண்டும் என்ற இரா­ணுவ முனைப்­புடன் செயற்­பட்ட மனப்­பாங்கில் இருந்து படைத்­த­ரப்­பி­னரும், பொலி­ஸாரும் இன்னும் விடு­ப­டாத போக்­கையே காண முடி­கின்­றது. இதன் கார­ண­மா­கவே,  வடக்கில் மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­யெ­டுக்­கின்­றது, முன்னாள் விடு­த­லைப்­பு­லிகள் மீண்டும் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களில் ஈடு­பட முயற்­சிக்­கின்­றார்கள் என்ற திடீர் முடி­வோடு பொலி­ஸாரும் இரா­ணு­வத்­தி­னரும் கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்த நேர்ந்­தி­ருக்­கின்­றது. 

இளை­ஞர்­களின் போக்கு 

படைத்­த­ரப்­பி­னரின் மனப்­பாங்கும், குற்றச் செயல்­களை முளை­யி­லேயே கிள்­ளி­யெ­றி­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை சரி­யான திட்­ட­மிட்ட செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­காத கார­ணத்­தி­னா­லேயே யாழ்ப்­பா­ணத்தில் குற்­ற­ச்­செ­யல்­களும் வாள்­வெட்டுச் சம்­ப­வங்­களும் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் சவால்­க­ளுக்கு உள்­ளாக்­கத்­தக்க வகை­யி­லான மணற்­கொள்ளை நட­வ­டிக்­கை­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­வதில் பொலிஸார் இறுக்­க­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­காத போக்கு ஒரு புற­மி­ருக்க, குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்த சமூ­க­மாக யாழ்ப்­பாண சமூகம் மாற்­ற­ம­டை­வ­தற்கு ஒரு சார­ரா­கிய இளை­ஞர்­களின் நடத்­­தை­களும் முக்­கிய கார­ண­மா­கி­யி­ருக்­கின்­றன. 

தமி­ழர்­களின் கலா­சாரத் தலை­ந­க­ராகக் கணிக்­கப்­ப­டு­கின்ற யாழ்ப்­பா­ணத்­தி­லேயே பல்­வேறு குற்றச் செயல்­களும் வாள்­வெட்டு, போதைப்­பொருள் பாவனை, போதைப்­பொருள் கடத்தல், சிறு­மியர் பெண்கள் மீதான பாலியல் வன்­முறைச் செயற்­பா­டுகள் உள்­ளிட்ட சமூ­க­வி­ரோதச் செயற்­பா­டு­களும் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. குற்றச் செயல்­களும் சமூ­க­வி­ரோதச் செயற்­பா­டு­களும் கட்­டுக்­க­டங்­காமல் யாழ்ப்­பா­ணத்தில் அதி­க­ரித்­தி­ருப்­பது என்­பது தமி­ழர்­களின் கலா­சா­ரத்­தையும் வாழ்க்கைப் பண்­பாடு, பழக்க வழக்­கங்கள் என்­ப­வற்­றையும் இழி­நி­லைக்குத் தள்ளிச் செல்­வ­தற்கு வழி­ச­மைத்­தி­ருக்­கின்­றது. இது கவ­லைக்­கு­ரி­யது.

அதற்கும் அப்பால், ஒரு சாரா­ரா­கிய இளை­ஞர்­களின் இத்­த­கைய போக்கு தமிழ் மக்­களின் எதிர்­கால நல்­வாழ்க்­கை­யையும், தமிழ்ச்­ச­மூ­கத்தின் எதிர்­கால சுபீட்­சத்­தை­யும்­கூட கேள்­விக்கு உள்­ளாக்கச் செய்­தி­ருக்­கின்­றது என்றே கருத வேண்­டி­யுள்­ளது. இந்த நிலை­மை­யா­னது, தமிழ் மக்கள் யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் எதிர்­கொண்­டுள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கும், தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களின் ஆணி­வே­ரா­கிய அர­சியல் தீர்வு ஒன்றைக் காண்­ப­தற்­கும்­கூட ஒரு முக்­கிய சவா­லாக மாற்றம் பெறத் தொடங்­கி­யி­ருக்­கின்­றது என்­ப­தையும் குறிப்­பிட வேண்­டி­யது கட்­டா­ய­மா­கின்­றது. 

பிறழ் நடத்­தைகள் கார­ண­மாக கட்­டுக்­க­டங்­காமல் அதி­க­ரித்துச் செல்­கின்ற குற்­றச்­செ­யல்­க­ளையும், சமூ­க­வி­ரோதச் செயற்­பா­டு­க­ளையும் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளாக உரு­வ­கப்­ப­டுத்தி, அதன் மூலம் பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முதன்­மைப்­ப­டுத்தி, இரா­ணு­வத்தின் வெளி­யேற்றம், இரா­ணு­வத்தின் வச­முள்ள காணி­களை விடு­வித்தல் உள்­ளிட்ட அவ­ச­ர­மாகத் தீர்க்க வேண்­டிய பிரச்­சி­னை­க­ளையும் அர­சியல் தீர்வு காணும் அவ­சி­யத்­தையும் புறந்­தள்ளி, காலம் கடத்­து­வ­தற்­கு­ரிய சந்­தர்ப்­பத்தை அர­சாங்­கத்திற்கு ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்கும் இந்த நிலை­மைகள் துணை­பு­ரியக் கூடும். 

பழை­மையும் நவீ­னமும்

குற்றச் செயல்­க­ளையும், சமூ­க­வி­ரோதச் செயற்­பா­டு­க­ளையும் வெறு­மனே பொலி­ஸாரின் சட்டம் ஒழுங்கு நட­வ­டிக்­கை­களின் மூலம் மட்டும் முழு­மை­யாகக் கட்­டுப்­ப­டுத்தி ஒரு நல்ல சமூ­கத்தை உரு­வாக்­கி­விட முடி­யாது. யுத்­தத்­திற்கு முந்­திய காலப்­ப­கு­தியில் சமூ­கக்­கட்­டுப்­பா­டுகள் இறுக்­க­மாக இருந்­தன. கிரா­மங்­க­ளிலும் பிர­தே­சங்­க­ளிலும் வாழை­யடி வாழை­யாக வாழ்ந்­த­வர்­களே வசித்து வந்­தார்கள். அத்­துடன் கலை, கலா­சாரம் பண்­பாடு, வாழ்க்கை முறைகள் என்­ப­னவும் ஆன்­மீக உணர்­வு­க­ளுடன் கூடிய மனிதப் பண்பும் மேலோங்­கி­யி­ருந்­தன. அப்­போது கல்­வி­யிலும் பொருள் தேட்­டத்­திலும், சமூக அந்­தஸ்து மிக்க உயர்­வான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்­ணமும் நோக்­கமும் பொது­வாக சமூ­கத்தில் மேலோங்­கி­யி­ருந்­தன. 

ஆனால் முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்த யுத்தம் சமூ­கக்­கட்­டுப்­பா­டு­க­ளையும், தனியார், குடும்­பங்கள் மற்றும் சமூக வாழ்க்கை நெறி­மு­றை­களைத் தகர்த்­தெ­றிந்­து­விட்­டது. இடப்­பெ­யர்வு கார­ண­மாக ஏற்­பட்­டி­ருந்த மனம்­போன வழி­யி­லான வாழ்க்கை நடை­மு­றை­களும், இரா­ணுவ மேலா­திக்கம் மிக்க நடை­மு­றைகள் செலுத்­திய மோச­மான செல்­வாக்கும் தகர்த்­தெ­றி­யப்­பட்ட வாழ்க்கை முறை­களை மீளெழச் செய்­வ­தற்குத் தடைக்­கற்­க­ளாகிப் போயின.  மீள்­கு­டி­யேற்­றத்­தின்­போது பிர­தே­சங்­க­ளுக்குத் திரும்பி வந்­த­வர்கள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருந்த மன­மாற்­றங்கள், மாறு­பட்ட வாழ்க்கை முறைகள் என்­ப­னவும் பண்­பா­டுகள் நிறைந்த வாழ்க்­கையை மீளக்­கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு உத­வ­வில்லை.

தொலைக்­காட்­சியின் தாக்­கமும், தவிர்க்க முடி­யாத கைத்­தொ­லை­பே­சியின் பயன்­பாடும், நவீன தொலைத்­தொ­டர்பு வச­தி­களின் ஆதிக்­கமும், மக்­க­ளு­டைய வாழ்க்­கையில் வலி­மை­யோடு வந்து நுழைந்த இணை­யத்­தளப் பயன்­பாடும், பாரம்­ப­ரிய பண்­பாடு, வாழ்க்கை முறை­க­ளுக்கு நேர்­மா­றான வழி­மு­றை­களில் சமூ­கத்தை இட்டுச் சென்­றி­ருக்­கின்­றன.  இந்த நிலை­மையும் இன்­றைய இளை­ஞர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­களை பிறழ் நடத்­தை­ கொண்­ட­வர்­க­ளாக்­கு­வ­தற்குத் தூண்­டி­யி­ருக்­கின்­றன என்றே கூற வேண்டும்.

 

என்ன செய்­யலாம்? 

யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­யனை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் இருந்து அவர் தப்­பு­வ­தற்கு நல்லூர் முரு­கனின் அருள் முக்­கிய கார­ணமாய் இருந்­தது என தெரி­வித்­துள்ள மட்­டக்­க­ளப்பு நீதிவான் எம்.கணே­ச­ராஜா, வன்­முறை கலா­சா­ரத்தில் மூழ்­கி­யுள்ள இளை­ஞர்கள் நல்­வ­ழிக்குத் திரும்­பு­வ­தற்கு இறை­பக்­தியே அவ­சியம் என வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்ப்பு சொல்லும் நீதி­ப­தி­க­ளா­கிய நாங்­களும் இறை­வனின் சக்­தியை மேலாக நம்­பு­கிறோம் என அவர் குறிப்­பிட்­டுள்ளார். மட்­டக்­க­ளப்பு, புளி­யந்­தீவு, வாவிக்­கரை வீதி அருள்­மிகு சித்­தி­ர­வே­லா­யுத சுவாமி ஆல­யத்தின் வரு­டாந்த உற்­ச­வத்­தின்­போது அவர் தெரி­வித்­துள்ள கருத்­துக்கள் காத்­தி­ர­மா­னவை. 

'யுத்­தத்தின் பின்பு இளை­ஞர்கள் மத்­தியில் நல்ல செயல்­களை நாம் எதிர்­பார்த்தோம். ஆனால், அவர்கள் மத்­தியில் வன்­முறை கலா­சா­ரமே அதி­க­ரித்­துள்­ளது. இறை­பக்தி இன்­மையே இதற்குக் காரணம். இறை­பக்தி இல்­லாத கார­ணத்­தினால் குற்றச் செயல்கள் அதி­க­ரித்­துள்­ளன. இறை­பக்­தியில் கரி­ச­னை­கொண்டு, அதனை வளர்ப்­பதன் மூலம், குற்­ற­மற்ற சமூ­கத்தை உரு­வாக்க முடியும். வெறு­மனே நீதி­மன்­றங்­க­ளினால் வழங்­கப்­ப­டு­கின்ற தண்­ட­னை­களால் மட்டும் குற்­றச்­செ­யல்­களை முற்­றாக ஒழிக்க முடி­யாது. நீதிமன்றத் தீர்ப்புக்கள் குற்றச் செயல்களை ஓரளவுக்கே கட்டுப்படுத்த முடியும்' என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்­துடன் யாழ்ப்­பா­ணத்தின் இன்­றைய நிலை­மையை அவர் சொற்­களில் படம்­பி­டித்துக் காட்­டி­யுள்ளார்.  'கல்­வியில் அதிகம் ஆர்வம் காட்­டிய யாழ்ப்­பா­ணத்தில் தற்­போது போதைப்­பொருள் கடத்தல், கசிப்பு உற்­பத்தி, போதைப்­பொருள் பாவனை, பாலியல் குற்றச் செயல்கள், விப­சாரம், வீதிப்போக்­கு­வ­ரத்து விதி­களை மீறிச் செயற்­ப­டு­வது, பெண்கள் மீதான பாலியல் குற்­றங்­களைப் புரிதல் போன்ற குற்­றச்­செ­யல்­களும், சமூ­க­வி­ரோதச் செயற்­பா­டு­களும் அதி­க­ரித்துக் காணப்படுகின்றமை வேதனையளிக்கின்றது. 

'தற்­போது மனி­தர்­க­ளி­டத்தில் மனி­த­நேயம் அற்று, மாறாக வன்­மு­றை­களைத் தூண்டும் மனப்­பாங்கும், வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­கின்ற மனோ­பா­வமும் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றன. வெறு­மனே நீதி­மன்­றங்­களில் வழங்­கப்­ப­டு­கின்ற தீர்ப்­புக்­களின் மூலம் மட்டும் இவற்­றுக்குத் தீர்வு காண முடி­யாது. குற்­றச்­செ­யல்­களைப் புரி­வோரின் மனங்­களில் மாற்றம் ஏற்­பட வேண்டும். குரோ­தங்­க­ளுக்குப் பதி­லாக அவர்­க­ளி­டத்தில் மனிதப் பண்­புகள் வளர்ந்து மேலோங்க வேண்டும். அதற்கு ஆன்­மீக உணர்வு அத்­தி­யா­வ­சியம். அதன் மூலம் குற்­றச்­செ­யல்­க­ளிலும் சமூ­க­வி­ரோதச் செயற்­பா­டு­க­ளிலும் ஈடு­ப­டு­கின்ற இளை­ஞர்­களின் மனங்­களில் மாற்றம் ஏற்பட வேண்டும் என நீதிவான் கணேசராஜா சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

சமூ­கத்­திலும், இளை­ஞர்கள் மத்­தி­யிலும் ஆன்­மீக உணர்­வையும் பண்­பாட்டுத் தன்­மை­யையும் நல்ல மனோ­பா­வத்­தையும் ஏற்­ப­டுத்­து­வதில் மதத் தலை­வர்­களும், ஆன்­மீ­க­வா­தி­களும், சமூகப் பெரி­யார்­களும் முன்­வர வேண்டும்.  சமூக சீர்­தி­ருத்தச் செயற்­பா­டு­களில் இவர்­க­ளுடன் அர­சியல் தலை­வர்கள் மற்றும் அர­சி­யல்­வா­தி­களின் பங்­க­ளிப்பும் மிக­மிக அவ­சியம். சமூக சீர்­தி­ருத்தச் செயற்­பா­டு­க­ளுக்­கான வேலைத்­திட்­டங்­க­ளையும் நிகழ்ச்­சி­க­ளையும் திட்­ட­மிட்ட வகையில் சமூ­கத்தில் பர­வ­லாக முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சியல் ரீதி­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதில் அவர்களும் கவனம் செலுத்திச் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

– செல்­வ­ரட்னம் சிறி­தரன் –

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-12#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.