Jump to content

''அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, பூச்சாண்டி காட்டும் தினகரன் தான், '420


Recommended Posts

 

''அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, பூச்சாண்டி காட்டும் தினகரன் தான், '420' எனப்படும், மோசடி பேர்வழி. ஸ்டாலின், நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வந்தால், நாங்கள் சந்திக்க தயார்,'' என, டில்லியில், நேற்று, முதல்வர் பழனிசாமி அதிரடி பேட்டி அளித்தார். மேலும், அ.தி.மு.க., அணிகள் இணையும் என, நம்பிக்கை தெரிவித்த அவர், பிரதமரை சந்தித்து, 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினார்.

 

பூச்சாண்டி,boogeyman, தினகரன் 420, Dinakaran 420, அ.தி.மு.க அரசு,ADMK government,  ஸ்டாலின்,Stalin, நம்பிக்கை யில்லா தீர்மானம் ,No confidence ,டில்லி, Delhi,முதல்வர் பழனிசாமி,Chief minister Palanisamy, நீட் தேர்வு , NEET Exam, தமிழகம், Tamilnadu, சென்னை, Chennai, தேர்தல் கமிஷன்,  Election Commission, லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரை,Lok Sabha Deputy speaker Thambidurai,,  தமிழக அரசு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், Tamil Nadu Chief Secretary Girija Vaidyanathan,

சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத் தில், நேற்று முன்தினம், முதல்வர் பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்ற, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், 'அ.தி.மு.க., துணை பொதுச்

செயலராக தினகரன் நியமிக்கப்பட்டது, சட்ட விரோத மானது; அவர் வெளியிடும் அறிவிப்பு கள், அ.தி. மு.க., தொண்டர்கள் எவரையும் கட்டுப்படுத் தாது' என,தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இது, தினகரன் அணியி னரிடம், கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தி யது. இது தொடர்பாக, முதல் வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களை, தினகரன் கடுமையாக சாடினார்.
 

'நீங்க தான்420


அ.தி.மு.க., பெயரை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ள நிலையில், கட்சி யின், 'லெட்டர் பேடில்' தீர்மானம் நிறை வேற்றி உள்ளனர். இந்த மோசடி குறித்து, தேர்தல் கமிஷனில் புகார் செய்தால், பதவி பறி போய் விடும். 'தீர்மானத்தில் கையெழுத்திட் டுள்ள, முதல்வர் உட்பட அனைவரும், 420' என்றும், காட்டமாக விமர்சித்தார்.

மோசடி, ஏமாற்றுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, இந்திய தண்டனை சட்டத் தின், 420வது பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்வது வழக்கம். அதனால், மோசடி

 

பேர்வழிகள், '420' என, அழைக்கப்படுகின்றனர். எனவே, தினகரனின் விமர்சனம், அரசியல் வட்டாரத்தில், பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற் காக, முதல்வர் பழனிசாமி, நேற்று முன்தினம், டில்லி சென்றார். டில்லியில், நேற்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரை, தமிழக அரசு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனி ருந்தனர். பிரதமரிடம் பேசிய முதல்வர், 'நீட்' தேர்வில், தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினார்.
 

நம்பிக்கை


பிரதமரை சந்தித்த பின், முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டி:

தினகரன், '420' என, குறிப்பிட்டது, அவருக்கு தான் பொருந்தும். ஏனென்றால், மூன்று மாத நிலையை, நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அதற்கு யார் பொருத்தம் என்றால், அவர் தான் பொருத் தமாக இருப்பார். அ.தி.மு.க., அணிகள் இணைப்பு குறித்து, எங்கள் தரப்பிலும் சரி, அவர்கள் தரப்பிலும் சரி, பேச்சு நடைபெற வில்லை; இணையும் என, நம்புகிறோம். ஸ்டாலின், ஏற்கனவே எங்கள் மீது, நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வந்தார்; அதில் வெற்றி பெற்றோம். பின், சபாநாயகர் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.

அதில், ஒரு ஓட்டு கூடுதலாக பெற்று, வெற்றி பெற்றோம். இப்போதும் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால், நிச்சயமாக அதிக ஓட்டுகளில், நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு முதல்வர் கூறினார். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1832104

Link to comment
Share on other sites

'அதிமுகவில் உள்ள அனைவருமே 420 தான்': ஜெ.அன்பழகன் சாடல்

 

 
anbazhagan

‘அதிமுகவில் உள்ள அனைவருமே 420 தான், அதில் யார் நம்பர் ஒன் 420 என்பதில் தான் அவர்களுக்குள் போட்டி நிலவுகிறது’ என திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் விமர்சித்துள்ளார்.

மேலும், தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதற்கும் கமல்ஹாசனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

முன்னதாக, டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என பழனிசாமி அணியினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தினகரன், "முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் ‘420-கள்’ என" தினகரன் கூறியிருந்தார். தினகரனின் கருத்தைச் சுட்டிக்காட்டி நிருபர்கள் முதல்வர் பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியபோது, "டிடிவி தினகரனின் 3 மாத செயல்பாடுகளைப் பார்த்தால், ‘420’ என்பது அவருக்குத்தான் பொருந்தும்" என்று கூறினார்.

அதிமுக உட்கட்சி பூசல் வலுத்துவரும் நிலையில், அதிமுகவில் உள்ள அனைவருமே 420 தான், அதில் யார் நம்பர் ஒன் 420 என்பதில் தான் அவர்களுக்குள் போட்டி நிலவுகிறது என திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் விமர்சித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19479636.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.