Jump to content

இரண்டு மொழிகள் ஓர் உணர்வு...


Recommended Posts

கடந்த வாரத்தில் இரண்டு அருமையான திரைப்படங்களைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.ஒன்று மலையாளப் படம்.மற்றொன்று கன்னடப்படம்.

1. கோதி பன்ன சாதாரண மைக்கட்டு (2016) (Wheatish Complexion, Average Built)

இது ஒரு சென்ட்டிமென்ட் கலந்த திரில்லர். அல்ஸீமர் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் அவருடைய பராமரிப்பு இல்லத்திலிருந்து தொலைந்து போகிறார். அவருடைய மகனும், அந்த பராமரிப்பு இல்லத்தின் பெண் மருத்துவரும் தொலைந்துபோன அந்த முதியவரைத் தேட ஆரம்பிக்கிறார்கள். அந்தத் தேடலில் தந்தைக்கும் மகனுக்குமான உறவு நெருக்கமடைகிறது. இதை இரண்டரை மணிநேரம் சலிப்படையாத வண்ணம், சிறு சிறு திருப்பங்களுடன் அருமையாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஹேமந்த்.

godhi banna sadharna mykattu

படம் பார்த்துக் கொண்டிருந்த பொழுதே மிகப்பெரிய ஒரு ஆச்சரியம் உண்டானது. அது அந்த முதியவராக நடித்திருந்தவரின் நடிப்பு. ஏதேனும் புதுமுகமாக அவர் இருப்பாரோ எனத் தேட ஆரம்பித்தால் அப்பொழுதுதான் தெரிந்தது அவர் கன்னட சினிமாவில் தனது நடிப்பிற்கென தனி இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் என்று. அவர் பெயர் ஆனந்த் நாக். இந்த வருடம் கண்டிப்பாக நடிப்பிற்கு தேசியவிருது பெறும் அளவு சிறந்த நடிப்பை அவர் வழங்கியிருக்கிறார். அவரின் மகனாக நடித்திருப்பவர் இயக்குனரும் நடிகருமான ரக்ஷித் ஷெட்டி. வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார்.

பார்க்க வேண்டிய படம்.

2. ஆனந்தம்(2016)

வினித் சீனிவாசனின் தயாரித்து கணேஷ்ராஜ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வெளியான இளமைத் துள்ளலான ஒரு மலையாளப் படம் "ஆனந்தம்".

இயக்குனர் உட்பட நிறையபேர் புதுமுகங்கள். படமோ நூறு நாட்கள் வசூல் சாதனை புரிந்தது.

anandam 600

ஒரு தனியார் பொறியியல் கல்லூரியின் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் நான்குநாட்கள் கல்விச் சுற்றுலாவிற்கு செல்கிறார்கள். அந்த நான்குநாட்களில் மாணவர்களின் முக்கியமான நான்கு கதாப்பாத்திரங்களுக்குள் ஏற்படும் பல்வேறு வகையான அனுபவங்கள்தான் இந்தப் படம்.

படத்தின் கேமிரா கோணங்கள் படத்தை வேறுவிதாமாகக் காட்டுகிறது. பிரேமம் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆனந்த்.சி.சந்திரன்தான் இதற்கும் ஒளிப்பதிவு.

பல காட்சிகள் நம்முடைய கல்லூரி நாட்களை நினைவுபடுத்தி விடுகிறது. கல்லூரி நாட்களுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய, சில இடங்களில் மட்டும் செயற்கையான அதே சமயம் ஜாலியான படம்.

- சாண்டில்யன் ராஜூ

http://keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/32704-2017-03-20-07-09-24

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.