Jump to content

வடகொரியாவை சந்திக்க அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது: டிரம்ப் எச்சரிக்கை


Recommended Posts

வடகொரியாவை சந்திக்க அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது: டிரம்ப் எச்சரிக்கை

டொனால்ட் டிரம்ப் மற்றும் மைக் பென்ஸ்படத்தின் காப்புரிமைREUTERS

வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பனிப்போரை மேலும் தீவிரமாக்கும் வகையில், வட கொரியாவை சமாளிக்க அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

`அமெரிக்க ராணுவப் படைகள் முழு அளவில், தகுந்த இடங்களில் தயாராக உள்ளன. வட கொரிய அதிபர் கிம்-ஜாங்-உன் புதிய வழியை தேர்ந்தெடுப்பார் என நம்புகிறேன்` என டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத போர் மூளுவதற்கு டிரம்ப் முயல்வதாக வட கொரியா குற்றம்சாட்டியிருந்ததற்கு பதிலடியாக அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஒரு பகுதியான குவாமிற்கு அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வட கொரியா தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து பசுபிக் தீவுகளுக்கான உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு, ஏவுகணைத் தாக்குதல்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுரைகள் அடங்கிய அறிவுப்புகளை அங்கிருக்கும் மக்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை விநியோகம் செய்தது.

அந்த அறிவுரைகளில்,` எந்த ஒளிப்பிழம்பையும், தீப்பந்துகளையும் பார்க்காதீர்கள். அது உங்கள் கண்களை குருடாக்கக் கூடும்` என தெரிவிக்கப்பட்டிருந்தது.

`தரையில் படுத்து உங்கள் தலையை மறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவில் வெடிகுண்டுகள் இருந்தால், அவை வெடித்துச் சிதற குறைந்தது 30 நொடிகள் அல்லது அதற்கும் மேலும் நேரம் எடுத்துக் கொள்ளும்.` என அந்த அறிவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாஷிங்டனும், பியாங்காங்கும் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை விடுத்துக் கொள்வது ` மிகமிக கவலையளிப்பதாக` மாஸ்கோ தெரிவித்துள்ளது.

ராணுவ மோதல் மூள்வதற்கான ஆபத்து மிக அதிக அளவில் இருப்பதாக கணக்கிட்டுள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ், ரஷ்யா-சீனா இணைந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற திட்டத்தை முன் வைத்துள்ளார்.

வடகொரியாவுக்கு எதிரான தனது இரண்டாவது டிவீட்டில் பியாங்யாங் மீது `நெருப்பும்,கோபமும் ` மழையாக பொழியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், வடகொரியாவுடனான பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என டிரம்பின் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மேட்டிஸ் கூடிய அடுத்த சில மணி நேரங்களில் டிரம்பின் இந்த டிவீட் பதிவுகள் வெளியாகியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை கலிஃபோர்னியாவில் பேசிய பெண்டகனின் தலைவர், போருக்கு தயாராக இருப்பது எனது பணி என தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்க உள்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் ஐ.நாவுக்கான அமெரிக்க தூதரான நிக்கி ஹாலே ஆகியோரின் முயற்சிகள் ` ராஜதந்திரமான முடிவுகளை பெற்றுத்தரும்` என அவர் கூறியுள்ளார்.

`போரில் எவ்வளவு அழிவுகள் ஏற்படும் என்பது போதுமான அளவு அனைவரும் அறிந்திருக்கிறோம். இது பேரழிவைத்தான் தரும் என்பதைத் தாண்டி அதற்கு புதிய காரணத்தை கூறத் தேவையில்லை.` என மேட்டிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தின் போருக்கான தயார் நிலை குறித்து கேட்ட போது, ` நாடு தயாராக உள்ளது. ஆனால் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து எதிரிகளுக்கு முன்கூட்டியே கூற முடியாது` என தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று, வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையான கே.சி.என்.ஏ, கொரிய நாட்டின் மீது அணு ஆயுத பேரழிவை திணிக்க அமெரிக்கா முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருந்தது. தனது அணு ஆயுதங்களை கொரிய தீபகற்பத்தில் சோதித்து பார்க்க, மிகப்பெரிய முயற்சிகளை அமெரிக்கா எடுத்து வருவதாகவும் அந்த செய்தி முகமை தெரிவித்திருந்தது.

`அணு ஆயுத தாக்குதலின் மூலகாரணம், கொடிய அணு ஆயுதப் போரின் வெறியர்கள்` என அமெரிக்காவை அந்த அறிக்கை விமர்சித்துள்ளது.

அமெரிக்காவின் பசிபிஃக் பிராந்தியத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்த பரிசீலினை: மிரட்டும் வட கொரியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கடந்த ஜூலை மாதம் கண்டம் விட்டு கண்டம் தாக்கக்கூடிய இரண்டு பேலிஸ்டிக் ரக ஏவுகணைகள் மீது வட கொரியா சோதனை நடத்தியதிலிருந்து, பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த வாரம் வட கொரியா மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது.

இதனைத் தொடர்ந்து 1,60,000 அமெரிக்க மக்கள் வாழக்கூடிய, அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ள குவாம் பகுதியில், நடுத்தர மற்றும் நீண்ட தூர ராக்கெட்டுகளை ஏவுவதற்கான திட்டத்தை ஒரு சில நாட்களில் இறுதி செய்ய உள்ளதாக வட கொரியா தெரிவித்திருந்தது.

வட கொரியா குறித்து இதுவரை தான் வெளியிட்ட அறிக்கைகள் கடினமானவை அல்ல எனவும், வட கொரியா மிக, மிக பதட்டமான சூழலை விரைவில் சந்திக்கும் எனவும் டிரம்ப் கடந்த வியாழன்று தெரிவித்துள்ளார்.

ஆனால் எப்போதும் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வட கொரியாவின் கூட்டாளியான சீனாவை கடிந்து கொண்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் அந்த நாட்டினால் நிறைய செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் வட கொரியா தாக்குதல் நடத்தினால், சீனா நடுநிலை வகிக்கும் என அந்நாட்டின் அரச செய்தித்தாளான `குளோபல் டைம்ஸ்` தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து வட கொரியாவின் மீது தாக்குதல் நடத்தி, அங்கு ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த முயற்சி செய்தால், சீனா தலையிட்டு, அதனை தடுக்கும் என அந்த செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரத்தில், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், வட கொரியாவுக்கு எதிரான போரில் இணையத் தயாராக உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global-40903807

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.