Jump to content

சசிகலா சீராய்வு மனு மீது இன்று விசாரணை: உச்ச நீதிமன்றம் தகவல்


Recommended Posts

சசிகலா சீராய்வு மனு மீது இன்று விசாரணை: உச்ச நீதிமன்றம் தகவல்

 

 

தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரும் சீராய்வு மனுவை மூவரும் கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்தனர். அதில், “அரசு ஊழியரான ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அரசு ஊழியர் அல்லாத எங்களை ஊழல் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் தண்டிக்க முடியாது. எனவே, எங்களையும் விடுவிக்க வேண்டும்” என முறையிட்டனர்.

கோடை விடுமுறை காரணமாக இந்த சீராய்வு மனு மீதான விசாரணை தள்ளிப் போனது. இந்நிலையில், நீதிபதிகள் அமிதவ ராய், ரோஹின்டன் நரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரிக்கும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

“நீதிபதி ரோஹின்டன் நரிமனின் தந்தையும், வழக்கறிஞருமான ஃபாலி நரிமன் இவ்வழக்கில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜராகி வாதிட்டுள்ளார். தந்தை வாதிட்ட வழக்கில் மகன் தீர்ப்பளிக்கக் கூடாது” என மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இவ்வழக்கில் இருந்து நீதிபதி ரோஹின்டன் நரிமன் விலகியதால், விசாரணை தள்ளிப்போனது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம், சசிகலா தரப்பின் சீராய்வு மனு நீதிபதி நவின் சின்ஹா தலைமையிலான அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது. பொதுவாக குற்றவியல் வழக்குகளில் சீராய்வு மனு தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் விசாரிக்கப்பட வேண்டும். இவ்வழக்கில் ஏற்கெனவே தாமதம் ஏற்பட்டுள்ளதால், இன்று விசாரணை நடைபெற வாய்ப்புள்ளது.

http://tamil.thehindu.com/india/article19471163.ece

Link to comment
Share on other sites

சசிகலாவின் சீராய்வு மனு மீதான விசாரணை தாமதமாவது ஏன்?

 

 
SASIKALA3129133f

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணை தாமதமாகி வருகிறது.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா தரப்பு கடந்த மே 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இதை பரிசீலணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் மே 10-ம் தேதி வழக்கு எண் ஒதுக்கியது. சீராய்வு மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே, மூல வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பினாகி சந்திரகோஷ் கடந்த மே மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

மற்றொரு நீதிபதியான அமிதவராய் தலைமையிலான அமர்வு சீராய்வு மனுவை விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இம்மனு விசாரணைக்கு வராமல் உள்ளது.

இந்நிலையில் கடந்த 18-ம் தேதி நீதிபதிகள் அமிதவ ராய், ரோஹின்டன் நரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பு காரணமாக இவ்வழக்கில் இருந்து நீதிபதி ரோஹின்டன் விலகியதால், விசாரணை தள்ளிப்போனது.

இந்நிலையில் நேற்று சசிகலா தரப்பின் சீராய்வு மனுவை நீதிபதி நவின் சின்ஹா விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றும் சீராய்வு இம்மனு விசாரிக்கப்படவில்லை. பொதுவாக குற்றவியல் வழக்குகளில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும். ஆனால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டு, 90 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை விசாரிக்கப்படவில்லை.

http://tamil.thehindu.com/india/article19479139.ece?homepage=true

Link to comment
Share on other sites

சசிகலாவின் மறு சீராய்வு மனு மீது 22-ம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம்

 

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா உள்ளிட்டவர்களின் மறு சிராய்வு மனு விரும் 22-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சசிகலாவின் மறு சீராய்வு மனு மீது 22-ம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம்
 
சென்னை:

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நரிமன் விசாரிக்க சசிகலா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால், சசிகலாவின் மறு ஆய்வு மனு அன்றைய வழக்கு விசாரணைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. 
201708182011064733_1_coourt._L_styvpf.jp
இந்நிலையில், சசிகலாவின் மறு சீராய்வு மனுவை நீதிபதிகள் அமித்தவா ராய், பாப்தே அடங்கிய அமர்வு வரும் 22-ம் தேதி விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/08/18201100/1103096/supreme-court-to-hear-sasikala-s-review-petition-on.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.