Jump to content

'மெர்சல்' புதிய போஸ்டர் வெளியீடு: ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் பாடல்


Recommended Posts

'மெர்சல்' புதிய போஸ்டர் வெளியீடு: ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் பாடல்

 

 
mersal

‘மெர்சல்’ படத்தின் புதிய போஸ்டர்

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மெர்சல்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

'மெர்சல்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் விஜய் - சமந்தா சம்பந்தப்பட்ட சில காட்சிகளையும் ஒரு பாடலையும் படமாக்கவுள்ளனர்.

தீபாவளி வெளியீடு என்று முடிவு செய்திருப்பதால், ஆகஸ்ட் 20-ம் தேதி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் பாடல்கள் வெளியாகவுள்ளன. அதற்கு முன்னதாகவே ஒரே ஒரு பாடலை மட்டும் வெளியிட படக்குழு முடிவு செய்ததுள்ளது. ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அறிவித்து, படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெர்சல்' படத்தில் விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு, சத்யராஜ், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தங்களுடைய தயாரிப்பில் 100-வது படமாக பெரும் பொருட்செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

'மெர்சல்' பணிகளை முடித்துவிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19456086.ece

Link to comment
Share on other sites

விஜய் - ஏ.ஆர். ரஹ்மான் மெர்சல் காம்போ: 'ஆளப்போறான் தமிழன்' பாடல் டீசர் இதோ!

 

'தெறி' ஹிட்டுக்குப் பிறகு விஜய் - அட்லி காம்போவில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'மெர்சல்'. இந்தப் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் வடிவேலு, சமந்தா, காஜல் அகர்வால், மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் போஸ்டர்கள் ஏற்கெனவே நல்ல வரவேற்பைப் பெற்றன.

ஆளப்போறான் தமிழன்


இந்தப் படத்தின் பாடல்கள் வருகின்ற 20-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் 'ஆளப்போறான் தமிழன்' பாடலின் டீசரை படக்குழுவினர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டுள்ளனர்.  இந்தப் பாடலின் முழு வெர்ஷன் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையொட்டி, விஜய், ஆளப்போறான் தமிழன் ஆகியவற்றை ஹேஷ் டேக் ஆக்கி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

 

 

http://www.vikatan.com/news/cinema/98598-audio-teaser-of-aala-poraan-tamizhan-from-mersal-released.html

Link to comment
Share on other sites

‘ஆளப்போறான் தமிழன்’ பாடலில் மெர்சல் காட்டுகிறாரா ஏ.ஆர்.ரஹ்மான்? #MersalSongReview

 

ஏ.ஆர்.ரஹ்மான், விஜய். ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் களமிறங்கியிருக்கிறது மெர்சல் படத்தின் முதல் சிங்கிள். 

உதயா படத்திற்குப் பிறகு ‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை. அப்போது விஜய்யும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து கொடுத்த ஒரு பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் “அப்ப பண்ணின விஜய் வேற. இப்ப பண்ற விஜய் வேறயா இருக்கார். அதுனால அவர் மூலமா எதும் நல்ல மெசேஜ் சொல்லணும்னு ‘எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே’னு ஓபனிங் சாங் வெச்சேன்” என்று சொல்லியிருந்தார்.

 

ஆளப்போறான் தமிழன் மெர்சல்

விஜய்யும் அதே பேட்டியில் “ஃபுல் ஸ்பீட்ல போகற அந்தப் பாட்டுல கடைசி பல்லவில கொஞ்சம் ரேஞ்ச் அதிகமா முடியும். ரொம்ப பிடிச்ச இடம் அது. நல்ல மெசேஜ் சொல்ற பாட்டு’ என்றிருந்தார். 

அதன்பிறகு இருவருமே வேறு வேறு உயரங்களை அடைந்திருக்கின்றனர். மெர்சல் படத்தின், இந்தப் பாடல் எப்படி இருக்கிறது?

பெண்கள் கோரஸ் பின் ஆண்கள் கோரஸ் என்று துவங்கும் பாடல் ‘ஆளப்போறான் தமிழன்’ என்று உயர்கிறது குரல்.

மிருதங்கம், நாதஸ்வரத்துடன் வரும் முதல் இடையிசை ஃப்யூஷன் வித்தியாசம் என்றால், அதைத் தொடர்ந்து வரும் பீட்ஸ் விஜய்க்கென்றே டான்ஸ் ஸ்பெஷலாக ரஹ்மான் கொடுத்திருக்க வேண்டும். 

பல்லவியின் மெட்டு, வழக்கமாகத்தான் இருக்கிறது. வரிகளில் கொஞ்சம் ஸ்பீடெடுக்கும் என்றால் இல்லை.  ஆனால் அதே ஸ்பீடில் போகும் பாட்டிலும் ஏ.ஆர். இசைக்கருவிகளை மாற்றி மாற்றி வசீகரிக்கிறார். பல்லவி முடிந்ததும், பழைய பாணி இசை உட்புகுகிறது. திரையில் காட்சியாக கவரலாம். திடீரென்று தபேலா இசையுடன் வரும் பெண்குரல் தொகையறா.. மயிலிறகு.

மீண்டும் ஸ்பீடெடுத்து பெண்கள் கோரஸில் பல்லவி.

’ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்’, ‘வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே’ வரிகளில் விவேக் பளிச்சிடுகிறார். வரிகளெல்லாமே எதோ ஒரு ஐடியாவுடனே எழுதப்பட்டிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.    

ஹீரோயிச இண்ட்ரோவாக விஜய்க்கு, வரிகளில் விவேக்கும், டான்ஸ் ஆடவென்றே பீட்ஸில் ரஹ்மானும்  விருந்து படைத்திருக்கிறார்கள். நிச்சயம் ஒரு செம மெலடியும் கொடுப்பார் என்று காத்திருக்கிறேன்.

பாடல் வரிகள்:-

கோரஸ்:
ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வரான்
மீச முறுக்கு
எங்க மண்ணு   தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு!

முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..

 பாடல்:

 ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
இன்னும் உலகம் ஏழ
அங்க தமிழப்பாட
பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி...

வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்

வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்

சரணம்: 
ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்தை தரிக்கிற  ழகரத்தை சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்
உலகத்தின்  முதல்மொழி உசுரெனக் காத்தோம்

தாய்நகரம் மாற்றங்கள் நேரும்
உன்மொழி சாயும் என்பானே
பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே
 
முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழுகண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும் 

நெடுந்தூரம் உன்இசை கேட்கும்
பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்
உயிர் அலையுமோ  நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசனை சேர்க்கும்

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழாலே ஒண்ணானோம்
மாறாது எந்நாளும்

http://www.vikatan.com/cinema/tamil-cinema/music-review/98695-how-is-arrahmans-aalaporaan-thamizhan-song-from-mersal-movie.html

Link to comment
Share on other sites

`மெர்சல்` பாடல் வெளியீடு: 'தமிழர்களுக்கான பாடல்' என விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் புகழாரம்

mersalபடத்தின் காப்புரிமைTWITTER

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்` படத்தில் இடம்பெற்றுள்ள `ஆளப்போறான் தமிழன்` என்ற பாடலின் வரிகள் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ள நிலையில், இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளை வெகுவாக புகழ்ந்து பல விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

`தெறி` படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்-அட்லீ கூட்டணி இணையும் இரண்டாவது திரைப்படம் இது என்பதால், படபூஜையிலிருந்தே `மெர்சல்` திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதால், அவருடைய ரசிகர்களும் இந்த படப்பாடல்களை பெரிதும் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் படத்தில் இடம்பெறும் `ஆளப்போறான் தமிழன்` என்ற பாடலின் வரிகள், ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கினர்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை `ஆளப் போறான் தமிழன்` பாடலின் வரிகள் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில், சமூக வலைத்தளங்கள் #mersal மற்றும் #AalaPoraanTamizhan ஆகிய ஹேஷ் டாக்குகள் டிரெண்டாகின.

இந்த பாடல் முழுவதும் தமிழர்களின் பெருமைகள் இடம்பெற்றுள்ளதாகவும், ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றிபெறச் செய்த இளைஞர்களை பாராட்டுவது போல அமைந்துள்ளதாகவும் விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

mersalபடத்தின் காப்புரிமைTWITTER

சிலர், இன்னும் ஒரு படி முன்னே போய், `வெற்றி மக வழிதான் இனி எல்லாமே` மற்றும் `ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்` போன்ற வழிகளை சுட்டிக் காட்டி, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அந்த பாடலில் குறிப்பிட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன.

 

inbarajanபடத்தின் காப்புரிமைINBARAJAN/FACEBOOK

விஜய் ரசிகர்களால் ஆளப்போறான் தமிழன் பாடல் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டாலும், `தமிழன் என்ற உணர்வை தூண்டிவிட்டு, அதன் மூலம் வியாபாரம் செய்ய நினைக்கிறார் விஜய்` எனவும் சிலர் தங்கள் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.

டிவிட்டர் பதிவுபடத்தின் காப்புரிமைSAI LAKSHMIKANTH/FACEBOOK Mohammed Farhanபடத்தின் காப்புரிமைTWITTER

மெர்சல் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.

 

http://www.bbc.com/tamil/arts-and-culture-40890432

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வெளியானது மெர்சல் படப் பாடல்கள்..!

 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மெர்சல்' படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகின. 

mersal_19082.jpg

தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் விஜய் இணைந்திருக்கும் இரண்டாவது படம் மெர்சல். இருவர் கூட்டணி அமைந்ததிலிருந்து ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பயங்கரமான எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. விஜயின் 61-வது படமான மெர்சலை படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தின் 'ஆளப் போறான் தமிழன்' மற்றும் 'நீதானே நீதானே' பாடல்கள் வெளியாகி வைரலாகியது. தற்போது இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. மெர்சல் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தின் பாடல்களை சாவன் இணையத்தில் கேட்கலாம். 

http://www.vikatan.com/news/cinema/99725-vijays-mersal-movie-songs-has-been-released.html

Link to comment
Share on other sites

"அத்தனை எளிதாக வாழ விடமாட்டார்கள்"- பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் 'மெர்சல்' பேச்சு

 
 

மெர்சல் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் விஜய்," எளிதாக வாழ விடமாட்டார்கள். நமது கடமை நம் வேலையை செய்வது மட்டும் தான்" என்று பேசினார் 

vijay

'தெறி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் விஜய் இணைந்திருக்கும் இரண்டாவது படம் 'மெர்சல்'. இருவரும் கூட்டணி அமைந்ததிலிருந்து ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பயங்கரமான எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. இந்தப் படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தின் 'ஆளப் போறான் தமிழன்' மற்றும் 'நீதானே நீதானே' பாடல்கள் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர். ரகுமான், அட்லி, இயக்குநர் பார்த்திபன், எஸ்.ஜே சூர்யா, சுந்தர் சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இந்த வருடம் நடிகர் விஜய் மற்றும் இசையமைப்பாளர் ரகுமான் ஆகியோருக்கு திரை உலகில் 25-ம் ஆண்டு ஆகும். விழாவில் பேசிய ரகுமான், "இந்த படத்தில் ஆழ போறான் தமிழன் என்ற பாடல் இருக்கு. அத உண்மை ஆக்கி காட்டுங்கள்" என்றார்.

 

 நிகழ்ச்சியில் நிறைவாக மேடை ஏறிய நடிகர் விஜய் தனது ஸ்டைலில் ரசிகர்களிடம் பேசினார். 100 வது படம் தயாரிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் 25 வது வருடத்தில் அடியடுத்து வைக்கும் ரகுமான் -க்கு வாழ்த்துக்கள் சொல்லி பேச தொடங்கினார். அப்போது அவர், "வாழ்கையில் எதிர்மறையான கருத்துகள் இருக்கும். அதை எல்லாம் எப்படி எடுத்துகிறீங்க ன்னு கேக்குறாங்க. அத விட்டு விலகி இருக்கிறது தான் சரியானதாக இருக்கும். ஆனாலும் அத்தனை எளிதாக வாழ விடமாட்டார்கள். நமது கடமை நம் வேலையை செய்வது மட்டும் தான். எதிரிகள் இல்லைனா வாழ்க்கை ரொம்பி போர் அடிச்சிடும் நண்பா" என்று பேசினார்.

http://www.vikatan.com/news/cinema/99730-they-do-not-let-you-live-so-easily--actor-vijay-in-audio-launch.html

Link to comment
Share on other sites

‘ரசிகர்களும் விஜய்யும் சேர்ந்தால் அவர்தான் சி.எம்’ - மெர்சல் விழாவில் பார்த்திபன் கொளுத்திய வெடி

 

விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் ‘ரசிகர்களும் விஜய்யும் சேர்ந்தால் அவர்தான் சி.எம்’ என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசியது பரபரப்பாகியுள்ளது.

 
 
201708202347342999_actor-parthipan-speec
 
விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் ‘ரசிகர்களும் விஜய்யும் சேர்ந்தால் அவர்தான் சி.எம்’ என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசியது பரபரப்பாகியுள்ளது.

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். படத்தின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்தில் இருந்து ஆளப்போறான் தமிழன் என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

201708202347342999_1_mersal33._L_styvpf.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை நடந்தது. படக்குழுவினர் மட்டுமல்லாது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் விழா அரங்கில் குவிந்திருந்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 'மெர்சல்' படத்தின் நான்கு பாடல்கள் விழா மேடையில் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், “ஓ.பி.எஸ்ஸும் ஈ.பி.எஸ்ஸும் ஒன்னு சேர்ந்தா என்ன ஆகும்னு தெரியாது. ஆனா விஜய்யும் அவரது ரசிகர்களும் சேர்ந்தால் விஜய் தான் இனி சி.எம்.” என்றார். இதனை கேட்டு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். பின்னர் (கொஞ்சம் இடைவெளிவிட்டு) “சி.எம்னா கலெக்‌ஷன் மன்னன்” என்றார்.

201708202347342999_2_mersal222._L_styvpf

மேலும், சமீபத்தில் விஜய் ரசிகர்களால் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்ட போது, விஜய் நடந்து கொண்டவிதம் பாராட்டத்தக்கது எனவும் பார்த்திபன் பேசினார்.

ஏற்கனவே, விஜய் அரசியலில் களமிறங்குவார் என ஸ்கூப் நியூஸ்கள் ரெக்கை கட்டி பறந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், பார்த்திபனின் இந்த பேச்சு, அரசியல் மற்றும் சினிமா அரங்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/08/20234732/1103456/actor-parthipan-speech-at-mersal-audio-launch.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.