Jump to content

‘இரண்டே வாரங்களில் ரஜினியின் புதுக்கட்சி வரும்’


Recommended Posts

‘இரண்டே வாரங்களில் ரஜினியின் புதுக்கட்சி வரும்’
 

 

இன்னும் இரண்டே வாரங்களில், நடிகர் ரஜினிகாந்த், தனது புதிய அரசியல் கட்சி, கொடி, கொள்கைகளை அறிவிப்பார் என்று, காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

பிரபல ஆங்கில செய்திச் அலைவரிசையில், “ரஜினிநேதா (தலைவர் ரஜினி) அரசியல் வருகை” என்ற தலைப்பில், ரஜினிக்கு நெருக்கமான நண்பர்கள், தமிழருவி மணியன் போன்ற தலைவர்களிடம் பேசி, ரஜினியின் அரசியல் வருகையை உறுதி செய்தது. 

இவர்களில், இன்னும் இரண்டு வாரங்களில் இந்தக் கட்சி அறிவிக்கப்பட்டுவிடும் என்றும் ரஜினி கட்சியின் கொள்கைகள் என்னவென்பது குறித்தும் விரிவாக தமிழருவி மணியன் கூறியுள்ளார். 

“இன்னும் 2 வாரங்களில், ரஜினி தனது புதிய கட்சியை தொடங்கி விடுவார். அப்போது, அவர் உறுதி மொழிகளாக சில அறிவிப்புகளையும் வெளியிடுவார். தென்னிந்திய நதிகளை இணைப்பது, ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை மக்களுக்கு தருவது ஆகியவை, அவரது உறுதி மொழிகளில் முக்கிய இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்” என்று அவர் கூறியுள்ளார்.  கட்சியின் பெயரைப் பதிவு செய்யும் வேலைகளை, ஒரு குழு புதுடெல்லியிலிருந்து கவனித்து வருகிறது. ரஜினி கட்சியின் கொள்கை, முன் வைக்கும் மக்களுக்கான திட்டங்கள், ரஜினி மக்களுக்குத் தரும் வாக்குறுதிகளை ஒரு குழு தயாரித்து வருவதாகவும் ரஜினியே நேரடியாக அதை மேற்பார்வை செய்வதாகவும் கூறப்படுகிறது. இரண்டே வாரங்களில், ரஜினி கட்சி அறிவிப்பு உறுதி என்று தமிழருவி மணியன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இரண்டே-வாரங்களில்-ரஜினியின்-புதுக்கட்சி-வரும்/50-202025

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நவீனன் said:
‘இரண்டே வாரங்களில் ரஜினியின் புதுக்கட்சி வரும்’
 

 

இரண்டே வாரங்களில், ரஜினி கட்சி அறிவிப்பு உறுதி என்று தமிழருவி மணியன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இரண்டே-வாரங்களில்-ரஜினியின்-புதுக்கட்சி-வரும்/50-202025

காலை விட்டால்தானே ஆழம் தெரியும்
சரி சரி வாங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாற்பதே நாள் நாடகம் ஆடிய ஓவியாவுக்கு குவியும் வாக்குகள் உள்ள இந்த தமிழகத்தில்  
நாற்பத்தியிரண்டு ஆண்டுகள் நடிக்கும் ரஜினிக்கு ஒட்டு குவியாமளா போகும் tw_anguished:

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் 
இல்லாதாள் பெண்காமுற் றற்று. ... குரல் 402 (கல்லாமை) 

கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, 
மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது
:8_laughing:

தமிழகத்தை தலைவிதி இப்படித்தான் இருக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 08/08/2017 at 4:27 PM, Sasi_varnam said:

நாற்பதே நாள் நாடகம் ஆடிய ஓவியாவுக்கு குவியும் வாக்குகள் உள்ள இந்த தமிழகத்தில்  
நாற்பத்தியிரண்டு ஆண்டுகள் நடிக்கும் ரஜினிக்கு ஒட்டு குவியாமளா போகும் tw_anguished:

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் 
இல்லாதாள் பெண்காமுற் றற்று. ... குரல் 402 (கல்லாமை) 

கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, 
மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது
:8_laughing:

தமிழகத்தை தலைவிதி இப்படித்தான் இருக்குமா?

வர்ணத்தார்... என்ன... இப்பெல்லாம்... குறள்ல இழுத்து விடுறியள்.

ரஜனி..... வேலைக்காக மாட்டார்.....

சராசரி ரசிகர் வயது 60. எப்படி தேறுவார்?

கட்டவுட்டுக்கு பால் ஊத்திற கொஞ்சப்பேர் கத்துவாங்க. மனைவி லதாவின் ஆஸ்ரம் 
பள்ளி டிரைவர்கள் இரண்டு மாத சம்பளம் ஒழுங்கா தரல்ல என்று ஸ்ரைக்.

இவரெல்லாம் கைக்காசை விட்டு கட்சி நடத்தப் போவதில்லை.

மதவாத பாஜக யுடன் சேர்ந்தால் வேறு பிரச்சனைகள் சந்திப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனியண்ணே, 
இப்படியெண்டாலும் இந்த திருக்குறளை ஒருமுறை முழுசா படிக்கலாம் என்ற நட்பாசை தான் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேர்மை பிடிச்சிருக்கு .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2017 at 6:29 PM, நவீனன் said:
‘இரண்டே வாரங்களில் ரஜினியின் புதுக்கட்சி வரும்’
 

இன்னும் இரண்டே வாரங்களில், நடிகர் ரஜினிகாந்த், தனது புதிய அரசியல் கட்சி, கொடி, கொள்கைகளை அறிவிப்பார் என்று, காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இரண்டே-வாரங்களில்-ரஜினியின்-புதுக்கட்சி-வரும்/50-202025

 

test.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Sasi_varnam said:

முனியண்ணே, 
இப்படியெண்டாலும் இந்த திருக்குறளை ஒருமுறை முழுசா படிக்கலாம் என்ற நட்பாசை தான் . 

சரியண்ண, சசியண்ண,

ஆனா, பாருங்க....  'வெவரமான' குறளா பிடிச்சு போடுறீங்க.... அங்கதான்னே நிக்கிறீங்க...:cool:

15 hours ago, ராசவன்னியன் said:

 

test.jpg

 

பாண்டே... சீமானை பேட்டி காணும் கானொளி பார்த்தேன்.

சீமான், ஏன் ரஜனி ஆள வரக்கூடாது என சொல்கிறார்..... 'ஆங்கிலேயரை எதுக்கு அனுப்புனீங்க' என்று கேட்கிறார்.

அவரை மடக்குவதாக நினைத்து, அதல முரண்பாடு இருக்கு... 'ரஜனி வாழ வந்தார்... ஆங்கிலேயர் ஆள வந்தனர்' எனகிறார் பீகாரிலிருந்து வந்த பாண்டே.

சீமானுக்கு அக்கணம் சொல்ல தோன்றவில்லை: ஆங்கிலேயர் எப்படா ஆளவந்தான்... ரஜனி மாதிரி... (வியாபாரம் பண்ணி) பிழைக்க வந்தவன் தான் ஆங்கிலேயன்.

சந்தர்ப்பம் வாய்த்தது. ஆண்டான். ரஜனியும் சந்தர்ப்பம் வாய்க்குமா என்று தானே பார்க்கிறார்.

தமிழருவிப் பேக்குகள் இருக்கும் வரை..... 'சரிதான்'.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.