Jump to content

வவுனியாவில் கோர விபத்து! – ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!!


Recommended Posts

வவுனியாவில் கோர விபத்து! – ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!!

 
வவுனியாவில் கோர விபத்து! – ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!!
 

வவுனியாவில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் படுகாயமடை்நதனர்.

வவுனியா இ.போ.ச. சாலைக்கு முன்பாக இந்த விபத்து நடந்துள்ளது. கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஹையேஸ் வாகனமும், கொழும்பு நோக்கிச் சென்ற ஹன்ரர் ரக வாகனமும் விபத்துக்குள்ளாகின.

IMG_9761-750x400.jpg

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த காந்தன் (வயது-56) என்பவர் சம்பவ இடத்தில் உயிரழந்தார். இவர் ஹையேஸ் வாகனத்தைச் செலுத்தி வந்தார் என்று கூறப்பட்டது. மேலும் மூவர் காயமடைந்தனர். அவர்கள் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

IMG_9772-750x400.jpg

விபத்துத் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

IMG_9753-750x400.jpg

 

http://newuthayan.com/story/17514.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு விபத்து இன்னொரு தமிழன் பலி. போர்க்காலத்தில் கூட இப்படி பலி எடுப்பு நடந்ததாகத் தெரியவில்லை நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு. :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுமுறை காலம். பலரும் மகிழ்வைத்தேடி இலங்கை செல்லும் வேளையில் அதிக அவதானம் தேவை.
சாலை விபத்திற்கு முதன்மைக் காரணம் போதை என்கின்றார்கள்

Link to comment
Share on other sites

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து ; சம்பவயிடத்திலேயே சுவிஸ் பிரஜை பலி

Published by Vijithaa on 2017-08-08 15:23:44

 

வவுனியாவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Spot_photo.jpg

வவுனியா இலங்கை போக்குவரத்து சபை  வீதிக்கு முன்பாக விமானநிலையத்திலிருந்து வவனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் மற்றும் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுக் கொண்டிருந்த லொறியுடன்  மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

IMG_9765.JPG

விபத்தில் வாகன சாரதியாக சுவிஸ்நாட்டைந் சேர்ந்த காந்தன்  என்பவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த மூவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

IMG_9762.JPG

குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_9761.JPG

IMG_9757.JPG

IMG_9748.JPG

 

 
 

Tags

http://www.virakesari.lk/article/22880

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுமுறை இல்லாத காலங்களில் நடக்கும் விபத்துகள் விடுமுறைகால விபத்துக்கள் என்று பார்க்க முடியாது எல்லாத்திலும் சாவது தமிழனே நேற்றும் இயக்கச்சியில் ஒரு போராளி கிட்னி பழுதாய் மரணித்து உள்ளார் நம்ம தமிழ் ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே வீதியில் 40,50,70/km என்று வேக கட்டுப்பாட்டை வைத்தால் என்ன செய்வது?

தனியார் , அரச பேரூந்துகள் ஒன்றை ஒன்று முந்திச் செல்வதற்காக முன்னால் செல்லும் வாகானங்களை அவசரப்படுத்துவதும் எதிர் வரும் வாகானங்களுக்கான பாதையில் செல்வதும் நாளாந்தம் நடைபெறுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

ஒரே வீதியில் 40,50,70/km என்று வேக கட்டுப்பாட்டை வைத்தால் என்ன செய்வது?

தனியார் , அரச பேரூந்துகள் ஒன்றை ஒன்று முந்திச் செல்வதற்காக முன்னால் செல்லும் வாகானங்களை அவசரப்படுத்துவதும் எதிர் வரும் வாகானங்களுக்கான பாதையில் செல்வதும் நாளாந்தம் நடைபெறுகிறது.

உன்மை ஒன்று போட்டிதன்மையே சேவை மனப்பாங்கு இல்லை இங்கே உள்ள இரு போக்குவரத்து  துறைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தனி ஒருவன் said:

உன்மை ஒன்று போட்டிதன்மையே சேவை மனப்பாங்கு இல்லை இங்கே உள்ள இரு போக்குவரத்து  துறைக்கும்

சனி இரவு திருகோணமலையில் இருந்து கொழும்பு சென்று நேற்று இரவு திரும்பினோம். இங்கு வாகனம் ஓட்டுவது சவாலான மிகவும் ஆபத்தான விடயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

சனி இரவு திருகோணமலையில் இருந்து கொழும்பு சென்று நேற்று இரவு திரும்பினோம். இங்கு வாகனம் ஓட்டுவது சவாலான மிகவும் ஆபத்தான விடயம். 

ம் ம் ஒரு சில வருடங்களுக்கு முன் சந்தியில் வந்த நான் கோர்ண் அடித்துவிட்டு நிற்க எனது பைக்கை கொழுவி இழுத்து சென்றுவிட்டது ஓட்டோ ஒன்று நான் பாய்ந்து கிழே  விழ  பெரு  விரல் நகம் போய்விட்டது நண்பர்கள் சூழ   பைக்கை திருத்தி கொடுத்தார் அந்த ஓட்டோ சாரதி  நாம் சரியாக ஓடினாலும்  பின்னே வந்து முட்டுபவர்களை ஒன்றும் செய்ய இயலாது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனி ஒருவன் said:

ம் ம் ஒரு சில வருடங்களுக்கு முன் சந்தியில் வந்த நான் கோர்ண் அடித்துவிட்டு நிற்க எனது பைக்கை கொழுவி இழுத்து சென்றுவிட்டது ஓட்டோ ஒன்று நான் பாய்ந்து கிழே  விழ  பெரு  விரல் நகம் போய்விட்டது நண்பர்கள் சூழ   பைக்கை திருத்தி கொடுத்தார் அந்த ஓட்டோ சாரதி  நாம் சரியாக ஓடினாலும்  பின்னே வந்து முட்டுபவர்களை ஒன்றும் செய்ய இயலாது 

 

Giveway & Roundabout களில் நிற்க மாட்டார்கள் தொடந்து ஓடிக்கொண்டே இருப்பார்கள், ஒரு தடவை பொலிஸ் வந்து சத்தம் போட்டது ஏன் நிற்கிறாய் என்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனி ஒருவன் said:

ம் ம் ஒரு சில வருடங்களுக்கு முன் சந்தியில் வந்த நான் கோர்ண் அடித்துவிட்டு நிற்க எனது பைக்கை கொழுவி இழுத்து சென்றுவிட்டது ஓட்டோ ஒன்று நான் பாய்ந்து கிழே  விழ  பெரு  விரல் நகம் போய்விட்டது நண்பர்கள் சூழ   பைக்கை திருத்தி கொடுத்தார் அந்த ஓட்டோ சாரதி  நாம் சரியாக ஓடினாலும்  பின்னே வந்து முட்டுபவர்களை ஒன்றும் செய்ய இயலாது 

 

அரை மைலுக்கு ஒரு சென்றிபொயின்ட் இருந்து இறங்கு ஏறு வளைச்சு குலுக்கி எடுத்த பஸ்கள் புது ரோட்டை கண்டவுடன் தாங்கள் விமானம் என்று நினைத்து ஓடுகினம் போல் இருக்கு .

11 minutes ago, MEERA said:

Giveway & Roundabout களில் நிற்க மாட்டார்கள் தொடந்து ஓடிக்கொண்டே இருப்பார்கள், ஒரு தடவை பொலிஸ் வந்து சத்தம் போட்டது ஏன் நிற்கிறாய் என்டு.

வீதி ஒழுங்கு தெரியாத ஆளை போலிஸ் வேலைக்கு எடுத்து வைத்து இருக்கினம் ஆக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அரை மைலுக்கு ஒரு சென்றிபொயின்ட் இருந்து இறங்கு ஏறு வளைச்சு குலுக்கி எடுத்த பஸ்கள் புது ரோட்டை கண்டவுடன் தாங்கள் விமானம் என்று நினைத்து ஓடுகினம் போல் இருக்கு .

போட்டித்தன்மை அதிகம் தனியாருக்கும் அரசு பேருந்துக்கும்  யாழ்ப்பாணம் , வவுனியாவில் இருந்து வாரது இறைச்சிக்கு கோழி கொண்டுவருது போல்  தான் இருந்திச்சு ஏனென்றால் ஓட வேண்டிய இடத்தில்  ஓடாமல் உருட்ட வேண்டிய இடத்தில் ஓடுவார்கள்  எமனை அப்ப்டியே அண்ணாந்து பார்த்து கூப்பிடுவது போலே இருக்கும் பஸ்ஸிக்க இருக்கும் போது :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.