Jump to content

Recommended Posts

 
 

பாக்கி

 

‘‘என்னங்க, ஏதோ அன்பா எங்க அம்மாவை அழைச்சுட்டு வந்திருப்பீங்கனு நினைச்சேன். ‘வரதட்சணையா தர வேண்டிய பாக்கிப் பணத்தை எடுத்து  வையுங்க... இல்லாட்டி எங்க வீட்ல வந்து வேலைக்காரியா இருந்து அதைக் கழிச்சுடுங்க’னு சொல்லிக் கூட்டிட்டு வந்தீங்களாமே..?
5.jpg
எங்க அம்மாவை வேலைக்காரியா நினைக்கிற உங்களுக்கு நான் எப்படி பொண்டாட்டியா இருக்க முடியும்? இனி எனக்கும் இந்த வீட்ல வேலை இல்லை.  நாங்க ரெண்டு பேருமே கிளம்புறோம்!’’ - கணவன் சித்தேஷிடம் பத்மா எகிறிக் குதித்தாள்.அவளைத் தனியே அறைக்குள் அழைத்துப் போய்ப்  பேசினான் சித்தேஷ்.

‘‘நமக்கு கல்யாணமாகி ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு. வரதட்சணை பாக்கியிருக்குறதால இந்த வீட்டுப் பக்கமே வராம இருக்காங்க உங்க  அம்மா. ஒண்டிக்கட்டையா கஷ்டப்படுற அவங்களை நாம வீட்டுல வச்சி பார்த்துக்கறதுதான் முறை. ஆனா, அவங்க வரதட்சணை பாக்கியைக்  கொடுக்கறதுக்காக ஊர்ல ஒரு ஃபேக்டரி வேலைக்குப் போய் கஷ்டப்படுறதா கேள்விப்பட்டேன்.

மக வீட்டுக்கு வந்துடுங்கனு கூப்பிட்டா அதுக்கு அவங்க தன்மானம் இடம் தராதுனு தெரியும். அதனாலதான் இப்படி சொல்லிக் கூப்பிட்டேன். இனி,  அவங்களை நல்லா கவனிச்சிக்க வேண்டியது உன் பொறுப்பு!’’ என்ற சித்தேஷ், பத்மா மனதில் உயர்ந்து நின்றான்.

kungumam.co.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பத்மாவுக்கு எப்பவும் கண்ணை கசக்கத்தான் தெரியும், ஒரு புரிதலுமில்லை....! tw_blush:

எங்கயாவது மாமி மருமகன், மாமா மருமகள்,அத்தான் மச்சினிச்சி சண்டை நடக்குதா.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

இந்த பத்மாவுக்கு எப்பவும் கண்ணை கசக்கத்தான் தெரியும், ஒரு புரிதலுமில்லை....! tw_blush:

எங்கயாவது மாமி மருமகன், மாமா மருமகள்,அத்தான் மச்சினிச்சி சண்டை நடக்குதா.....!

சுவியர்,

ஒரு விசயத்தைச் கவனிச்சியளோ?

நம்மூரில மாப்பிள தான் மாமியார் வீட்ட வாழப்போவார். கேரளாவிலும் அப்படித்தானாம்.

தமிழகத்தில் மாறி. நாங்கள் சேரப்பாட்டன்ற ஆக்கள் போல...

:grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நம்மூரில மாப்பிள தான் மாமியார் வீட்ட வாழப்போவார். கேரளாவிலும் அப்படித்தானாம்

மாமியார் வீட்டில செட்டிலாகிறது ஒரு சுகம் தான்  பாருங்க:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தனி ஒருவன் said:

மாமியார் வீட்டில செட்டிலாகிறது ஒரு சுகம் தான்  பாருங்க:10_wink:

மாமியாருக்கு இன்னொரு இளைய மகள் இருந்தால்.... அந்த மாதிரி... :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தேஷ்! பயங்கர புத்திசாலி........

ஒரு எறியில் பல மாங்காய்கள் பறித்து உண்ணும் வல்லமை கொண்டவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனி ஒருவன் said:

மாமியார் வீட்டில செட்டிலாகிறது ஒரு சுகம் தான்  பாருங்க:10_wink:

ஐயையோ...அவசரப் பட்டு...அபிப்பிராயத்தைச் சொல்லீட்டீங்கோ...!

அனுபவம் இல்லாத பிள்ளை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

ஐயையோ...அவசரப் பட்டு...அபிப்பிராயத்தைச் சொல்லீட்டீங்கோ...!

அனுபவம் இல்லாத பிள்ளை...!

அனுபவம் இல்லை தான் ஆனால் சொன்னது சந்தோஷத்தை  சொன்னன் மச்சாள்  மார் இருந்தால் இன்னும் நல்ல சந்தோஷம் :10_wink::10_wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.