Jump to content

கவிதைகள்


Recommended Posts

மழைக்கோப்பை

 
கவிதை: சுகுணா திவாகர் - ஓவியம்: ஹாசிப்கான்

 

58p1_1531737422.jpg

கோப்பை நிறைய தேநீரும்
கோப்பை நிறைய மழையும்
மேஜையின் எதிரெதிரே வைத்தேன்.
நீ மழைக்கோப்பையை எடுத்துக்கொண்டாய்.
புன்னகையுடன் உறிஞ்சத்தொடங்கினாய்.
ஒவ்வொரு துளியும் மழை...
ஒவ்வொரு துளியும் காலம்...
`மழையைக் கண்ணீரோடு ஒப்பிடுவதில்
உடன்பாடில்லை எனக்கு' என்றபடி
கோப்பையை வைத்தாய்.
பிரார்த்தனையும் வாழ்த்துகளுமாய்
இரு பூக்கள் முளைத்திருந்தன.
காலிக் கோப்பை பூந்தொட்டியாகியிருந்தது.
`மழை ஒரு மந்திரச்சொல்' என்றபடி விடைபெற்றாய்.
மழையின் கால்களுக்கு இரண்டு கொலுசுகள்.
வலதுகால் வைத்து வரும்போது மண்வாசம் கிளர்த்துகிறது.
மழை திரும்பிச்செல்லும்போது
எல்லாவற்றையும் ஈரப்படுத்திவிடுகிறது
நம் பாதைகளை...
நம் ஆடைகளை...
நம் பிரார்த்தனைகளை...
நம் வாழ்த்துகளை...
நம் கண்களை...
மழைவாசம் மெல்லப் பரவுகிறது.
பூத்திருக்கும் இரு மலர்கள் அசைகின்றன
உன் கண்களென.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • Replies 212
  • Created
  • Last Reply

எச்சரிக்கை

தர்கா வாசலில் யானை
முடியை விலைக்குக் கேட்டு
பாகனைச் சூழ்ந்திருந்தது
வட மாநில சுற்றுலாக் கூட்டம்
வாலிலிருந்து ஒவ்வொரு
முடியாகப் பிடுங்கி
பணம் பண்ணிக்
கொண்டிருக்கிறான் பாகன்
அது அவனுக்குக்
கொஞ்சம் அபினாகும்
மிச்சமிருந்தால்
படிப்படியாக
ஃபுல், ஆஃப், குவார்ட்டர்
எனவும் மாறும்
மறுநாள் வசூலில்
தன் தும்பிக்கையை
உயர்த்தவேயில்லை யானை
பாகன்தான் யாசகனாகி
கை நீட்டிக்கொண்டிருக்கிறான்
நீங்கள் யானைமுடி
மோதிரத்துடனோ
தங்கக் காப்புடனோ
தர்காவிற்கு வந்திருந்தால்
பாகன் அருகில்
சென்றுவிடாதீர்கள்
வலியை உங்களிடம்
காட்டிவிடக்கூடும் யானை.
 

- வலங்கைமான் நூர்தீன்


6.jpg
குளியல்

சாக்கடைகள் கடந்து
வந்த ஆறு
கடலைச் சேர்ந்தவுடன்
முதல் வேலையாக
உப்பு நீரில்
உடல் தேய்த்து
ஒரு குளியல் போடுகிறது.

http://www.kungumam.co.in

Link to comment
Share on other sites

யாசகன்

 
 

மௌனத்துக்கு அனுமதியில்லை
எனக்கும் அவளுக்குமான
பயணங்களில்

பிரபஞ்சம் வியாபித்த என்னை
இறுக்கி அணைத்த உங்கள்
இடைவெளிகளிலிருந்து மட்டும்
பிரித்து விடாதீர்கள் என
காற்று எங்களிடம்
யாசகம் கேட்கிறது

கழற்றி வைக்கப்பட்ட
அவள் பாதணிகள்
பிரிவு துயர் தாளாமல்
காவு கொள் என்னை என
கடலிடம் யாசிக்கிறது

பளிங்கு பாதங்களை
அலை கழுவி போனதால்
கடலோடு முரண்பட்டு
ஆலய வாசல் யாசகர்களாய்
கரையேறி கிடக்கிடக்கின்றன- அவள்
பாதம் பட்ட மணல் துகள்கள்.

நீண்ட நேரம்
தீண்டப்படாமையால்
ஒருமுறையேனும் சிணுங்கு என
கை தொலைபேசியிடம்
யாசகம் கேட்கிறது- அவள்
ஸ்பரிசத்துக்காய் தவமிருக்கும்
என்னவளின் கைப்பை

காத்திருந்து களைத்துப்போன
அத்தனையும்; ஒருசேர
என்னை பார்க்கின்றன
எம்மையெல்லாம் புறந்தள்ளி
இத்தனை நாழியும்
கொஞ்சுகிறாயென
கோபத்தை உமிழ்கின்றன

பாவம் அவைக்கு
எப்படி தெரியும்
இவ்வளவு நேரம் அவளின்
ஒற்றை முத்தத்தை
வேண்டி யாசிக்கும் நானும்
அவர்களில் ஒருவன்தான் என

http://athavannews.com

Link to comment
Share on other sites

சொல்வனம்

 
ஓவியம்: செந்தில்

 

சூத்திரம்

பள்ளிக்கூடத்தில்
ஸ்கேல் இல்லாமல்
நேர்க்கோடு இழுப்பது
எங்களுக்கெல்லாம்
ஒரு சாகசமாக இருந்தது...
என் தாத்தனின் ரகசியச் சூத்திரப்படி
நான் நேர்க்கோடு வரைந்து
பள்ளியில் வெற்றிபெற்றேன்.
தாத்தன்கள் இல்லாதவர்களுக்கு
வெற்றி அவ்வளவு சுலபமாயிருக்கவில்லை.
வளர்ந்த பிறகுதான் புரிந்தது
நான் வரைந்து வெற்றிபெற்ற
நேர்க்கோடுகளிலெல்லாம்
வளைவுகள் இருந்தன.
வளைவுகளின் மேல் வெயில் விழுந்து
கானல்நீராய்
நேர்க்கோடு தெரிந்தது
தெரிந்தபோது
என் பேரனுக்கு நேர்க்கோடு வரையும் சூத்திரத்தை
ஏற்கெனவே சொல்லிக்கொடுத்துவிட்டிருந்தேன்!


 - ராம்பிரசாத்


காட்சி

விளையாட்டின்போது
காணாமல்போன பந்தைத்
தேடிக்கொண்டிருந்தார்கள்
சிறுவர்கள்...
தொலைந்துபோன குளத்தில்!


- சாமி கிரிஷ்


20p1_1531735075.jpg

மாறும் வட்ட நிலவு

வட்ட நிலவைக்
கால்பந்தாக்கி விளையாடுகிறான்
விளையாட்டு வீரன் ஒருவன்

கறுப்பழகி ஒருத்தி
யாருக்கும் தெரியாமல் நெற்றிப்பொட்டென இட்டு
கண்ணாடியில் அழகு பார்க்கிறாள்

தன் அப்பளத்திற்கு அளவெடுக்கிறான்
வியாபாரி ஒருவன்

தாமதமாகி, பசியோடு வீடு திரும்புபவன்
வட்டலாக்கி எடுத்துக்கொண்டு
அவசரமாய் வீட்டுக்குள் நுழைகிறான்

சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிட்ட பிச்சைக்காரன்
திருவோடாக்கிக் கைகளில் ஏந்துகிறான்

நூறு ரூபாய்த்தாளை வைத்துக்கொண்டு
தேநீர் குடிக்க நினைப்பவன்
நாணயமாக மாற்றுகிறான்

புதிதாய் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போனவன்
ஊரிலிருக்கும் அம்மாவின் முகம் பார்க்கும்
கண்ணாடியாக்குகிறான்

புதிதாய்க் காதலிக்கத் தொடங்கியவன்
தன் காதலிக்குத் தூதனுப்பும்
வெள்ளைப் புறாவாக்குகிறான்

படிக்காமல் கணிதத் தேர்வெழுதிய
படிப்பேறாத ஒருவன்
வாங்கப்போகும் மதிப்பெண்ணாய்ப் பார்க்கிறான்

உணவு கிடைக்காத மூதாட்டியொருத்தி
பசி மிகுதியில்
அவசர அவசரமாய்ப் பிய்த்துத் தின்கிறாள்!


- சௌவி

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

வெண்புகையின் ரூபம் இதுவென - துர்க்கை

 
ஓவியம்: மணிவண்ணன்

 

p83a_1530164898.jpg

ரணம் சட்டென
ஓர் உடலில்
அதனை நிகழ்த்திவிடுவதில்லை
அது விதவிதமான வலிரூபங்களில்
நம்முன் சர்ப்பம்போல் நடனமாடுகிறது
நாம் சாவகாசமாகப்  பழகிக்கொள்ளும்படி
ரணங்களை ஏவிவிட்டு
முன்னோட்டம் பார்க்கிறது
பின்னொரு சமயம்
பெரும் மகிழ்ச்சியோடு
அணைத்து விலகுகிறது
சாமத்தில்
தூங்கும் கட்டில் கால்களைப்போல
அமைதியாக அருகில் ரூபத்தோடு நிற்கிறது
உறவில் ஆர்வமில்லை
சோம்பேறிக் காதலியைப்போல
படர்கிறது என்மீது
பின் கசிகிறது தன் வெண்புகையை.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

ஆம்... முகமழிந்துதான் போனது!

 
கவிதை: டேவிட் எக்ஸிம் - ஓவியம்: வேலு

 

வெளியில் பேய்மழை.
உள்ளிருப்பவர்கள் குடைகளை
மடக்கி வைத்திருக்கிறார்கள்.
இரவல் கேட்பவர்களின் குரல்கள் கேட்காவண்ணம்
கதவுகளை இறுக மூடிக்கொள்கிறார்கள்.

முகமூடி அணிந்திருப்பவர்கள்
தெறித்துவிழும் திவலைகளை வெறிக்கிறார்கள்.
அவர்கள் கண்களில் நனைதலின் பீதி.

99p1_1532414900.jpg

முக்காடிட்டுக் கடக்கும் மனிதர்களுக்கு
முகங்கள் இருந்தனவா என்று உற்றுப்பார்க்கிறார்கள்.
வாழ்வாதாரக் கவலைகள் அற்றவர்கள் முகங்களை
வண்ணங்கள் பூசி மறைத்துக்கொள்கின்றனர்.
என்றோ இறந்தவர்களின் முகங்கள்
கல்லறைகளில் நனைந்தபடி கரைந்துபோகின்றன.

தொடர்ச்சியாய் வரைந்துகொண்டிருக்கும் அந்த ஓவியன்
முகம் வரையும்முன் நிதானித்து
பிராந்தியை ஒரு மிடறு பருகிக்கொள்கிறான்.
வீடு நுழைந்து முகமூடி களைபவர்கள்
நிலைக்கண்ணாடியில் முகம் காணாமல் பதைத்துப் பின்
படுக்கையறையில் கண்டெடுத்துப் பொருத்திக்கொள்கின்றனர்.

அதோ அந்தப் பெட்டிக்கடையின் பின் நின்று
அழுக்காய் வானம் பார்த்துப் புகைப்பவனைப்போல்
மூடிகள் அவசியமில்லாத
ஒழுங்காய் சவரம் செய்யப்படாத
முகமுடையவர்கள் அரிதாய்த் தென்படுகின்றனர்.
அநேகமாய் அவர்கள்
அருகிவரும் இனத்தின்
பிரதிநிதிகளாய் இருக்கக்கூடும்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

ரெய்டு!

வீட்டில் ஒரு பொருள்
காணாமல்போனதும்
முதல்
ரெய்டு நடத்தப்படுவது
குழந்தைகள் அறையில்தான்!
அதில் பல
கிடைத்தும்விடுவதுண்டு
அப்பாவின் பேனா
தண்ணீர் பாட்டில் மூடி
அம்மாவின் சீப்பு
புதுசாய் வாங்கிய ரிப்பன்
தாத்தாவின் மூக்குக்கண்ணாடிப்பெட்டி
டி.வி ரிமோட்
காலையில் வந்த பேப்பர்
செல்போன் சார்ஜர்
பாட்டியின் ஜோதிடப் புத்தகம்
என நீளும் பட்டியலில்
குழந்தை தொலைத்த எதுவும்
அங்கு
காணக்கிடைப்பதில்லை
என்பது மட்டும்
இன்றுவரை
அவிழாத புதிர்!

- ப்ரணா

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

உரு

குழந்தையின்
பல் பதிந்த இடத்தில்
வெள்ளையாய்ச் சிரிக்கிறது ஆப்பிள்.                                   

- ந.சிவநேசன்

நொதி

மகளின் தற்கொலைக்குப்
பிறகான நாளொன்றில்
வாடகை வீட்டைக்
காலிசெய்ய வந்தவள்
யாரும் பார்த்திராத
ஒரு கணநேரத்தில் எடுத்துப்
பத்திரப்படுத்திக்கொள்கிறாள்
வெடித்த கழுத்து நரம்புகளின்
நொதி வாசனை அப்பியிருக்கிற
தூக்குக்கயிற்றை!

- வே.முத்துக்குமார்

ஒரு ராத்திரி, அப்பாவின் அழுகை

நிச்சயமாக அப்பா அழுவதை எனது
இருபத்தேழு வயதில் காண்பதென்பது
அதிர்ச்சி பொதிந்த ஆச்சர்யம்தான்!
தாத்தா இறந்தப்போ வராத அழுகை
நேற்று இரவு ஏன் வந்தது
வீட்டுச் சுவர்களே நீங்கள் நிச்சயமாக
அறிந்துவைத்திருக்க முடியும்
அந்த இரவிடம் பேசிப்பயனில்லை
அது மௌனமாக நிற்கிறது.
அம்மா, சாப்பாட்டில் உப்பு சேர்க்கவில்லை
அப்பா, சாப்பாட்டைக் குறைகூறவுமில்லை.
பாட்டி, வெற்றிலையைச் சப்பி தன் கடைவாயில்
வழியும் எச்சிலைத் துடைக்க மறந்து பேசுகிறார்.
நடக்கும் தரையில் சிந்திய எச்சிலை மிதித்த அப்பா
பாட்டியைக் கோபிக்கவேயில்லை.
அழுகை எதற்காக என்பது மர்மமாகவே இருக்கு
அப்பாவின் நாளாந்தச் செயலில் மாற்றமில்லை.
அப்போ அழுகைக்கும் அப்பாவுக்குமான உறவுதான் என்ன?
அம்மாவிடம் நான் கேட்டுடப்போறேன்
`அப்பா புன்னகைக்க உன்னிடம் ஏதாவது
வழி இருக்கா?’ என்று.

- ஜே.பிரோஸ்கான்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

93p1_1532347145.jpg



ஒரு ராத்திரி, அப்பாவின் அழுகை

நிச்சயமாக அப்பா அழுவதை எனது
இருபத்தேழு வயதில் காண்பதென்பது
அதிர்ச்சி பொதிந்த ஆச்சர்யம்தான்!
தாத்தா இறந்தப்போ வராத அழுகை
நேற்று இரவு ஏன் வந்தது
வீட்டுச் சுவர்களே நீங்கள் நிச்சயமாக
அறிந்துவைத்திருக்க முடியும்
அந்த இரவிடம் பேசிப்பயனில்லை
அது மௌனமாக நிற்கிறது.
அம்மா, சாப்பாட்டில் உப்பு சேர்க்கவில்லை
அப்பா, சாப்பாட்டைக் குறைகூறவுமில்லை.
பாட்டி, வெற்றிலையைச் சப்பி தன் கடைவாயில்
வழியும் எச்சிலைத் துடைக்க மறந்து பேசுகிறார்.
நடக்கும் தரையில் சிந்திய எச்சிலை மிதித்த அப்பா
பாட்டியைக் கோபிக்கவேயில்லை.
அழுகை எதற்காக என்பது மர்மமாகவே இருக்கு
அப்பாவின் நாளாந்தச் செயலில் மாற்றமில்லை.
அப்போ அழுகைக்கும் அப்பாவுக்குமான உறவுதான் என்ன?
அம்மாவிடம் நான் கேட்டுடப்போறேன்
`அப்பா புன்னகைக்க உன்னிடம் ஏதாவது
வழி இருக்கா?’ என்று.

- ஜே.பிரோஸ்கான்

மாரல் ஆஃப் தி ஸ்டோரி

அந்த யானை அவ்வளவு
ஒல்லியாக இருந்தது
கரடிக்குக் கன்னம்
கொஞ்சம் அதிகம்தான்
சிறுத்தை, சற்று
நிறம் மாறி இருந்தது
நரி மறந்த வசனத்தை
நேரம் தவறி மான் பேசியது
நகைப்புக்குரியது
மற்றபடி சிங்கத்துக்குக் குரல் மட்டுமே இருந்தது
எவ்வளவு நேரம் படுத்தேயிருப்பது
பாம்பு அவ்வப்போது நின்றுகொண்டது
வாழ்வென்பது நம்பிக்கைகளால் ஆனது
பேசிய ஓநாய்க்குத் திக்குவாய்
திரை மூடிய பிறகும்
வழியெல்லாம் அரங்கேறிக்கொண்டிருந்தது
குழந்தைகளின் மாரல் ஆஃப் தி ஸ்டோரி!

- கவிஜி

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

பூ

சாலையோரப்
பூக்களோடு
தானும் ஒன்றென
நினைத்திருந்தது
அன்று பூத்த
தண்டவாளப்
பூவொன்று,
அந்த ரயில்
கடந்து
செல்லும் வரை.
 

- கிருத்திகா தாஸ்

10.jpg
தனித்திருந்த இரவு


அரபிக்கடல் இவ்விரவில்
யாருக்கும் தெரியாமல்
இம்மாநகருக்குள் நடந்து
என் அறை வந்து
கதவு தட்டுகிறது
அறைக்கதவு திறந்ததும்
உள் நுழையும் கடல்
கட்டிலில் பக்கத்தில் அமர்ந்து
கண்களைத் துடைத்து விடுகிறது
எனக்காக சில மீன்களையும்
யாரோ செய்து
விட்டுவிட்டுப்போன
சில காகிதக்கப்பல்களையும்
தந்துவிட்டு
என் தனிமைகளை
எடுத்துக்கொண்டு
வந்த வழியே
திரும்ப நடக்கிறது
சட்டென நதியென மாறி
கடல்போன திசையில்
ஓடத்துவங்குகிறேன்
 

- சௌவி

http://www.kungumam.co.in

Link to comment
Share on other sites

அழைப்பு மணி - கவிதை

 
தமிழச்சி தங்கபாண்டியன் - சிற்பம்: ராஜ்குமார் ஸ்தபதி

 

திகாலைக் கனவொன்றில் வந்த
ரயில்வண்டி அப்பாவை இறக்கிவிடுகின்றது.
எக்மோரிலிருந்து அண்ணாநகருக்கு
ஆட்டோவில் பலசரக்கு அட்டைப்பெட்டிகளுடன்
அன்று வந்திறங்கிய அப்பாவுக்காக
இன்று நீலாங்கரையில் காத்திருக்கிறேன்.

தீக்கொன்றைப் பூக்கள் கொட்டிக்கிடக்கின்ற
இந்தச் சாலையில்
இரண்டு வேப்பம்பழங்களோடு
மல்லாங்கிணற்று வெக்கையைக் கொண்டுவந்து
போட்டுப் போகின்றதொரு காக்கை.

வாலாட்டிச் சோம்பல் விலக்கி
முட்டி உரசுகிற தெருநாய்
அப்பாவின் ஆசை மணியேதான்.
ரொட்டித்துண்டுகளோடு தோட்டத்துக்கு
லூனாவில் போகும் அப்பாவை
அருகே கொண்டுவந்து நிறுத்துகிறார்
வேட்டியை மடித்துக் கட்டாமல்
சைக்கிளில் சுக்குக்காபி விற்கும் அண்ணாச்சி.

96p1_1533106791.jpg

கீரையை நிறம் மாறாமல் சமைத்தால்
கண்ணகல விரும்பிச் சாப்பிடும்
அப்பாவின் எச்சிலை
முத்தமெனத் தந்துவிட்டுப் பறக்கிறாள்
மூத்த மகள்.

கோமாளிக் கன்னம் வைத்தபடி
தொப்பையைக் குலுக்கிச் சிரிப்புக்காட்ட
எதிர்ப்படும் சின்ன மகளுக்காக
அப்பா அடிக்கும் மணியை
யாரோ அழுத்தி
``சார் இருக்காரா?” என்கிறார்.

வந்தவரது வெண்ணிறச் செருப்புகளின் துலக்கம்
அப்பாவின் நகங்கள் சீராக்கப்பட்ட
பாதங்களை நிழலாட்டுகிறது.
``சார் இருக்கார்.
ஆனால், பார்க்க முடியாது” என்ற என்னை
புரியாமல் வெறிக்கும்
அவரது சட்டைக் கைமடிப்பில்
அப்பாவின் நேர்த்தி குறைவுதான்.
அவர் ஏறிச் சென்ற வெள்ளை நிற அம்பாசிடர்
அப்பாவின் செல்லமான முயல்குட்டியேதான்.

நின்றிருப்பது நீலாங்கரை என
இன்னோர் அழைப்பு மணி நினைவூட்டுகிறது.

எக்மோரிலிருந்து இனி வரவே வராத
அந்த ஆட்டோவும் அப்பாவும்
ரயில் புகையாய் மேலெழுப்பிப்
பவளமல்லிப் பூக்களாய் கீழுதிர்கிறார்கள்.

அழைப்பு மணியை அகற்றுகிறேன்.
அத்தனை பேர் கைரேகையிலும்
அப்பாவுடையது இல்லையெனும்போது
அது எதற்கு இனி?

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

 

 

26p1_1533107189.jpg

பயணம்

ஒரு கடல் தாண்டி
மறுகரையை அண்மித்துவிட்டேன்.
இதுவரை வழிநடத்தி வந்த பறவை
ஏனோ எனக்கான பயணத்தைத்
தொடர விருப்பமின்றி அமர்ந்திருக்கிறது கரையில்.
நெருங்கி `தொடரலாமா?’ என்றேன்.
`மிகவும் சோர்ந்துபோயுள்ளேன். என்னால் இனிமேல் உனக்கு உதவ முடியாது
என்னை மன்னிப்பது சிறந்தது’ என்கிறது.
`நான் இந்தக் கடலையும் கடந்தாகணும்’ என்றேன்.
யோசித்த பறவை.
`அப்போ,
என் சிறகுகளை எடுத்துக்கொள்’ என்றது.
மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டு புறப்படுகிறேன்.
பறவை என் கைகளை வைத்துக்கொண்டு
எப்படி அந்த இருப்பிடத்தை அடையுமோ!

 - ஜே.பிரோஸ்கான்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites


26p2_1533107200.jpg

பூத்தல்

தினமும்
கடந்து செல்லும் வழியில்
தனிமையில் இருந்த
அந்தச் செடியிடம்
ஓரிரு வார்த்தை அவசரமாகப்
பேசிவிட்டுச் சென்றேன்.
மாலையில்
திரும்பி வரும்போது
எனக்காக
அந்தச் செடியே
பூத்திருந்தது.
ஏதேனும் ஒரு பெயருக்குள்ளும்
ஏதேனும் சில வண்ணங்களுக்குள்ளும்
சிறைப்படாமல்!

- தோழன் பிரபா


26p3_1533107212.jpg

ஈரம்

ஓரத்தில் உடைந்த 
எட்டுக்கண் பாலத்தில்
எழுதிவைத்து...
பன்னெடுங்காலமாய்
வேகாத வெயிலில்
காய்ந்து
சருகாய்ப்போய்க் கிடந்த
அந்த ஜோடியின் பெயரை
ஆசை தீர
தழுவிச் சென்றது
ஆற்றுவெள்ளம்!

- பழ.அசோக்குமார்


26p4_1533107230.jpg

நவீன மனிதர்கள்...

எதற்கெடுத்தாலும்
கோபப்படுகிறார்கள்...
பொசுக்கென அழுதும்விடுகிறார்கள்...
யார்மீதும் எளிதில்
பொறாமைகொள்கிறார்கள்...
ஆனால்,
பதாகைகளில் மட்டும்
சிரிக்கப் பழகியிருக்கிறார்கள்.

- சாமி கிரிஷ்


26p5_1533107243.jpg

மயக்கம்

எனது தோள்பட்டை
நிழலின் மீது
புழு ஒன்று ஊர்கிறது
புழுவின் நிழல்மேல்
ஊர்வது யார்?

- கிருபா

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பிடுங்கப்பட்ட பூர்வீகக் கனவு - கவிதை

 

p48a_1533560453.jpg

பிடுங்கப்பட்ட நிலத்தின் நினைவோடு அங்கிருந்து புறப்படுகிறோம்
அப்பாவின் முதுகில் கிணறு தொங்குகிறது.
அதனுள் ஆமையும் மீன்களும் நீந்துகின்றன
அம்மாவின் விரலில் களிமண் ஒட்டியிருக்கிறது.
அதன்மீது நெல்லும் கரும்பும் நடப்பட்டுள்ளன
அண்ணனின் தோள்களில் மாடு மேய்கிறது.
அதன் காம்பைக் கவ்வியுள்ளன கன்றுக்குட்டிகள்
அக்காவின் கழுத்தில் ஆடு தொங்குகிறது.
அதன் கால்களைப் பற்றியுள்ளன குட்டிகள்
தங்கையின் இடுப்பின்மீது அடிகுழாயும் நீர்பொங்கும் பானைகளும்
தம்பியின் சட்டைப்பையில் பூனையும் டவுசரில் கோழிகளுமாக...
எல்லோர் தலையிலும் சமமாகப் பகிர்ந்து சுமக்கிறோம்
பாட்டன் கட்டிய வீட்டை...

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

 

 

p30a_1533643922.jpg

வனம் உருவாக்குதல்

ரையை
அலகுகளால் நழுவவிட்டபடி
பறந்து செல்லும் பறவைகள்
சத்தமில்லாமல்
சந்ததிகளுக்கான ஒரு
வனத்தை
உருவாக்குகின்றன.

 - பிரபு

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

p30b_1533643940.jpg

பதில் விளக்கு

னது நிறுத்தம் வந்துவிட்டது.
மேல்மூச்சு வாங்குகிறது.
அடுத்த அடியின் தாகத்தோடு
பாதங்கள் வழியோடு விழுந்துவிட்டன.
எங்கேதான் முடியவிருக்கிறதோ
இந்தப் பாதை.
வரும் வழியில் சற்றுமுன்தான் பார்த்தேன்
சொல்லாமல்போன வார்த்தைகளின் சாயலாய்
புரண்டு கிடக்கின்றன உன்மீது கேந்திப் பூக்கள்.
சரி போகட்டும்,
உனது மாடத்தில்
கடைசிச் சொட்டில் பரிதவிக்கும்
அகல்விளக்கின் பாஷைகளை
எனது
`ம்’ எனும் பதிலாகப் புரிந்து,
இன்னும் நிம்மதியாய்த் தூங்கு.

- இயற்கைசிவம்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பச்சைக் கிளி! - கலைஞரின் கவிதை 

 

 
k2

சுரைக்காய்ப் பிஞ்சின் தலையில் மிளகாய்ப்
 பழத்தைச் செருகி இடையில் மல்லிகை
 இலைகள் சிறகாய்ப் பின்புறம் தாழை
 மடலை வைத்தால் பச்சைக் கிளியே!
 உன்போல் படைப்பு! உன்போல் படைப்பு!
 வட்டத் தலையே! சிவப்பு மூக்கே!
 சின்ன இறகே! நீண்ட வாலே!
 கன்னற் கிளியே சொன்னது பிசகா?
 வர்ணனை கேட்க வாழ்த்த மறுப்பாய்
 புகழ்ச்சொல் கேட்டும் போற்றிட மாட்டாய்.
 காரணம் அறிவேன் சின்னக் கிளியே!
 கூண்டில் உன்னைப் போட்டத னாலே
 தூண்டிற் புழுவாய்த் துடிக்கிறாய் நீயும்
 சிறையில் உன்னை அடைத்து மகிழ்ந்தேன்
 இன்று தெரிந்தேன்-
 சிறைமிகக் கொடிது, சிறைமிகக் கொடிது!
 மன்னித் திடுவாய் மன்னித் திடுவாய்!
 பொன்மொழிப் பாவாய் மன்னித் திடுவாய்!
 என்சிறை முடிந்ததும் உன்சிறை உடைப்பேன்.
 சிறையின் கஷ்டம் சிறையால் உணர்ந்தேன்.
 அடிமைப் புள்ளே! அழகுக் கிள்ளாய்!
 அனுபவம் பெற்றேன்- அனுபவம் பெற்றேன்.
 வந்ததும் தருவேன் விடுதலை வாழ்வு!
 பறப்பாய், பறப்பாய், உயரப் பறப்பாய்!
 கட்டிய கால்கள் விடுபடும்; உடனே
 எட்டிய மட்டும் ஏறிப் பறப்பாய்!
 எழில்நிறப் பெண்ணே எங்கும் பறப்பாய்!
 கூண்டில் உன்னை அடைத்தேன் கிளியே!
 மன்னித்து விடுக! கூண்டின் கஷ்டம்
 புரிந்து கொண்டேன்; கூண்டின் கஷ்டம்
 புரிந்து கொண்டதால் கூண்டுக் கிளியுனைத்
 திறந்து விடுவேன். ஆனால் கிளியே
 கூண்டின் கஷ்டம் புரிந்தோர் இங்கு
 ஆண்டிட வந்தார்
 மாண்டிட எம்மைக் கூண்டினில் போட்டார்!
 ஏனோ கிளியே? ஏனோ கிளியே?
 பதிலும் சொல்வாய் பச்சைக் கிளியே!
 உன்னை நான் அடைத்ததால் என்னை அடைத்தார்
 என்றே சொல்வாய் நன்று கிளியே;
 நீ யாரை அடைத்ததால் நானுன்னை அடைத்தேனோ?

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

p30c_1533643962.jpg

அரண்

கோ
யில்,
கல்யாண மண்டபம்,
மருத்துவமனை
இப்படி வெளியே
கழற்றிவிட்டுப் போகும்
எல்லா இடங்களிலும்
அம்மாவின்
பெரிய காலணிக்குள்
பத்திரமாய்
ஒளிந்துகொள்கிறது
உடன் செல்லும்
குழந்தையின்
பிஞ்சுப் பாதங்கள்!

- பழ.அசோக்குமார்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 


p30d_1533643988.jpg

குறியீடு!

வீ
ட்டுவாசலில்
குழந்தை
போட்ட கோலத்தை
அழித்து விரைகிறது
துரிதமாய்ச் செல்ல
குடியிருப்புகள் தெருவில்
நுழைந்த
பள்ளிப் பேருந்து ஒன்று!

- ப்ரணா


p30e_1533644010.jpg

ஜங்கிள் புக்

யா
னையும் அங்குசமில்லாமல்
அடங்கிக்கிடக்கிறது
அங்கோர் ஒரமாய்...
வெறி நாயும் கடி வாங்கி
ஓடி ஒளிகிறது
பீரோவிற்குப் பின்னே...
சிங்கத்தின் பல்லுக்கும் வைத்தியம் பார்க்கப்பட்டுகிறது
சாப்பாடு மேஜை மேலே...
புலியின் தோலும் நிறம் மாற்றப்பட்டு
பதுங்கிக்கொண்டிருக்கிறது
பூனையைப்போலவே...
கரடி மட்டுமே பிடித்ததாய்
பக்கத்தில் படுத்துறங்குகிறது
கட்டிலின் மேலே...
பூனைக்குட்டி இப்படியும் அப்படியும்
நடமாடுகிறது பேசும் தோழனாய்
கூடவே...
குழந்தைகள் இருக்கும்
ஒவ்வொரு வீடும் இப்பொம்மைகளைக்கொண்ட
ஜங்கிள் புக்காகவே மாறி விடுகிறது
எப்பொழுதுமே...

- கௌந்தி மு 

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

ஞாயிறு என்பது! - கவிதை

 

 

p38a_1534327507.jpg

முதல் வீட்டில் திருமணம்
இரண்டாம் வீட்டில் வீடுபுகும் நாள்
மூன்றாம் வீட்டில் ஊருக்கு போயிருக்கிறார்கள்
நான்காம் வீட்டில் வழக்கமான சண்டை
ஐந்தாம் வீட்டில் பெண் காதல் பிரச்னை
ஆறாம் வீட்டில் புதுப்படம் ஓடுகிறது
ஏழாம் வீட்டில் பிரியாணி வாசம்
எட்டாம் வீட்டில் பெரும் மரணம்
வீதி ஏதோ ஒரு கிழமையில் இருக்கிறது
இன்று ஞாயிறில்.....!

பெரியம்மா வீட்டு ஞாயிறு
சித்தப்பா வீட்டு ஞாயிறு
மாமா வீட்டு ஞாயிறு
பாட்டி வீட்டு ஞாயிறு
அண்ணன் வீட்டு ஞாயிறு
தங்கை வீட்டு ஞாயிறு
ஆளுக்கொரு ஞாயிறுகளால்
நிரம்பி இருக்கிறது ஞாயிறு...
எங்கே போனதென்று
தெரியவில்லை
எல்லாரும் நிரம்பியிருந்த 
எங்கள் வீட்டு ஞாயிறு...?

தெரு முழுக்க
குறுக்கும் நெடுக்குமாக
பூனையாகிறது ஞாயிறு...

கவிஜி - ஓவியம்: ரமணன்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

இருந்தார்கள் இல்லாமல்! - கவிதை

 

 

p69a_1534242462.jpg

குளக்கரைப் பூங்காவொன்றில்
ஒளிந்து கொண்டவர்களை
ஒளித்துக் கொண்டவள்
கண்டறிந்த தருணம்
எழுந்தது பேரொலி.

கேட்டுக்கொண்டிருந்த தலைவனின்
பாடலை மிஞ்சியதால்
திட்டித் தீர்த்தார்
எரிச்சலுற்ற காவலாளி
பின்னிசையாக
ஒன்றே குலமென்று பாடுவோம்...

புங்கைப் பூக்கள்
மிதந்த நிலம் நின்றவள்
அலைபேசியைத் தடவியபடி நுழைவு
வாயிலைப் பார்த்திருந்தாள்.

இருந்தாற்போல் எதிர்ப்பட்டான்
ஆடை சரிசெய்யும் சாக்கில்
துளிர்த்த நாண வியர்வையை ஒற்றினாள்.

பொய்யான கோபம் மாயமாகிட
அங்கிருந்தோர்களை இல்லாமலாக்கி
செல்லமும் சிணுங்கலுமாக
காட்சிகள் மாறிக்கொண்டிருந்தன.

காத்திருந்த சூரிய ஒளி
குளிர்ச்சியடைந்தது.
குளத்தில் பறவைகள் மிதந்தன.
செங்கொன்றை
பூக்களை உதிர்த்துக்கொண்டிருந்தது.
நடையிட்ட பேரிளம் பெண்
எங்கேடா தொலைந்தாய்
பேசியோடு சலித்தாள்.
கலி முத்திப் போச்சென்றோர் கடக்க
கனிவில் ததும்பியது காவலாளி முகம்
அவரின் சட்டை ஒலித்தது
நிலவு ஒரு பெண்ணாகி...

என்னுள்ளோ
புகுமுகம் புரிதல்
பொறிநுதல் வியர்த்தல்
நகுநயம் மறைத்தல்
தலைவனும் தலைவிக்குமான
அகத்திணைக் காட்சிகள்.

பெரியசாமி - ஓவியம்: வேலு

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

`மண்டே’வின் நீள் விசும்பல்!

ஞா
யிற்றுக்கிழமை இரவுகள்
குழந்தைகளை உறங்கவிடாமல் அலைக்கழிக்கின்றன.
இரண்டு நாள் விடுப்பும் பயணமும் காடுகளும்,
விளையாட்டும் நினைவுச் சருகாகித்
தலைக்குள் சரசரக்கின்றன
இரவு முழுக்க.

மறுபடியும் அதே மேத்ஸ் மிஸ்ஸும்,
சயன்ஸ் மிஸ்ஸும்
`டெஸ்ட் நோட் எடுங்க...’ எனும் அதட்டலோடு
க்ளோசப்பில் முகம் காட்டி பயமுறுத்துகிறார்கள்.

அடுத்த விடுமுறைக்கு
இன்னும் ஐந்து முழு நாள்கள்
இருப்பதாகக் காட்டிய நாட்காட்டி,
கண்களில் நீர்முட்டவைக்கிறது.

அவர்களது கனவில் `மண்டே’,
தலைகுனிந்து குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.
`மண்டே’வை ஒருமனதாகச் சாடுகிறார்கள் குழந்தைகள்.
அந்த நாளே தங்களுக்கு வேண்டாமெனச்
சிறையிலடைக்கும்படி வாதிடுகிறார்கள்.

பல நூற்றாண்டுக்காலக்
குழந்தைகளின் சாபம் சுமக்கும் `மண்டே’,
அவர்களின் மன்னிப்பைப் பெறும்பொருட்டு
ஒரு பெரும் விசும்பலை உதிர்க்கிறது.

அந்நீள் விசும்பல் இரவைக் கடந்து
இன்னும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.
இப்போது குழந்தைகளும் விசும்பத் தொடங்குகிறார்கள்!

- விக்னேஷ் சி செல்வராஜ்

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

 

p94a_1534322657.jpg

விடுப்பு

மு
தல்முறை
தயக்கத்துடன் அழைத்து
இரண்டாம் முறை
சிறிது தைரியத்துடன் கூப்பிட்டு
மூன்றாம் முறை
கோபத்தைக் கொஞ்சம் சேர்த்து
இறுதியாய்... ஒருவழியாய்
அழைப்பினை எடுத்ததால்
தயங்கியபடி விடுப்புவேண்டினேன்
நீண்டநேரம் பேசிவிட்டு
அனுமதித்தார் மேலாளர்.
கடன் கேட்பதைவிடவும்
கொடுமையானது
திங்கட்கிழமை விடுப்பு கேட்பது!

- மணிகண்டபிரபு


விழுதுகளின் வலி!

ந்திசாயும் நேரத்தில்
ஆலமரம்
விழுதைத் தேடுகிறது
நள்ளிரவு தாண்டியதில்
விழுதுகளின்
ஊசலாட்டம்
பின்னிரவுச் சாமத்தில்
பனிகொண்ட நடுக்கம்
மரத்தை உலுக்குகிறது
அதிகாலை விழித்தலில்
கைக்குழந்தையோடு
கழுத்திறுகித் தொங்கிக்கொண்டிருந்தாள்
ஒருத்தி
ஆலமரம் இனி
பெயர் மாறும்
அழுதழுது சடங்கானாள்
செத்தவளின் தங்கை!

- கவிஜி

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

மொழி

நான் சூடாத பூக்களும்
வாடிடும் வேளைகளில்
மிஞ்சியிருக்கும்
மெளனம்
எங்கோ இடறி
விழுந்துவிட்டது
கோயில் மணி சத்தத்திலும்
கடல் அலைகளின்
ஓலத்திலும்
குழந்தையின்
அழுகையிலும்
வண்டுகளின்
ரீங்காரத்திலும்
கண்டெடுத்த
பெரு மெளனங்களை
காலத்தில் புதைந்துபோன
காதலுக்கெல்லாம்
பரிசளித்துவிட்டேன்
கொஞ்சம் வார்த்தைகள் கொடு
தொலைந்த
என் மெளனத்தைத்
தேடிக்கொள்கிறேன்.
 

- நவீனா

24.jpg
காத்திருப்பு


இப்போது பெய்த
மழையின்
இறுதித் துளியைக்
காட்டி
இதோ என்
காதல் என்கிறாய்
நான் என்
காதலைக் காட்ட
அடுத்து
பெய்ய இருக்கும்
மழையின்
முதல் துளிக்காகக்
காத்திருக்கிறேன்.

http://www.kungumam.co.in

Link to comment
Share on other sites

தன்னிலை மாறா இரவு

ரவின்மீது
விளக்குகளை ஏற்றி வெளிச்சமாக்குகிறார்கள்
இரவின் மௌனத்தின் மீது
பாடல்களை நிரப்பி மௌனம் கலைக்கிறார்கள்
தள்ளுவண்டியில் காய்ச்சிய தேநீரால்
இரவின் குளுமையைச் சூடாக்குகிறார்கள்
சாலையோரக் கடைகள்
ஆவி பறக்கும் உணவுகளோடு
இரவின் பூரணத்தில் பசியைக் கிளப்புகின்றன
மைதானங்களில் பகல்களை உருவாக்கிப்
போட்டிகள் நடத்துகிறார்கள்
விரையும் வாகனங்கள்
தங்கள் இயந்திரக் குரல்களைச் சற்றே உயர்த்திப்பேசி
இரவின் அமைதியில் கல்லெறிகின்றன
நாயொன்று தொடர்ச்சியாக எழுதுகிறது
தன்குரலால் மனிதர்களின் மீதான புகாரொன்றை
அத்தனை லாபம் வேண்டுமென உற்பத்தி ஆலைகள்
தங்கள் பற்களால் இரவைக் கடித்துக் குதறுகின்றன
வெட்டப்பட்ட மரங்களிலிருந்த கூடுகளை இழந்த பறவைகள்
அகதிகளாக அழுதபடி இரவு வானத்தில்
அலைந்துகொண்டிருக்கின்றன வேறிடம் தேடி
இரவைக் கத்தியால் குத்துகிறார்கள்
இரவை அரிவாளால் வெட்டுகிறார்கள்
இரவை நகங்களால் கிழிக்கிறார்கள்
இரவை நெருப்பு வைத்து எரிக்கிறார்கள்
என்னென்ன செய்தபோதும்
இரவு இரவாகவேயிருக்கிறது

- சௌவி

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.