Jump to content

கவிதைகள்


Recommended Posts

p78d_1519744705.jpg

மதுரை ஜி.ஹெச்

எவ்வளவு முயன்றும்
மதுரைப் பெரியாஸ்பத்திரியின்
பிணவறை இருளையும்
வராண்டாக்களின் ஓலங்களையும்
ஆதரவற்ற புண்களின் வலிகளையும்
மருந்துகளின் வாடைகளையும்
வரைய முடியவில்லையென

லாடனேந்தல் கரிக்கட்டை
கறுப்பு வண்ணமும்
தென்கரை விரலாகிய நானும்
புலம்பித் தவித்து ஒருகட்டத்தில்
ஒன்றானோம்
காலப்போக்கில்
கரிக்கட்டைக் கறுப்பைத் தின்று
கறுப்போடு தின்று
கறுப்பை உடுத்தி
கறுப்போடு மல்லுக்கட்டி
கறுப்பையே வீடாக்கி
கறுப்பும் நானும்
ஒன்றுக்குள் ஒன்றாகி
செருப்பில்லாமல்கூட
கடைவீதியெங்கும் சுற்றுவோம்
மழைநாளொன்றில்
கடையில் நின்று சிகரெட்
பற்றவைத்தபோதுதான்

அந்த ஓவியக் கண்காட்சியின்
பிரபல தைல வண்ண ஓவியம்
மூச்சிறைக்க ஓடிவந்து
எங்களோடு வந்துவிடுவதாகச் சொன்னது

மூவரும் மாறி மாறி முகம்
பார்த்துவிட்டு நடந்தோம்
‘பெரியாஸ்பத்திரிக்குள்ள போயிருக்கியா’ என
கறுப்பு, தைல வண்ணத்திடம் கேட்க
மூவரும் ஒருநிமிடம் நின்றோம்..!

- முத்துராசா குமார்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • Replies 212
  • Created
  • Last Reply

கலாய் கவிதைகள்!

 

ஆர்.சரண்

 

தைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!

p38a_1519736194.jpg

ஓங்கி உலகளந்த அலுமினிய ஆன்டெனாக்கள் போயாச்சு.கைக்கெட்டிய தூரத்தில் டிஷ் ஆன்டெனாக்கள்!

p38c_1519736229.jpg

  சிக்னலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுமிக்குத் தெரியாது தட்டில் விழுந்தது பழைய 500 ரூபாய் என்று!

p38d_1519736273.jpg

  ‘உண்மையான தமிழன் என்றால் ஷேர் செய்யவும்!’ - மெஸேஜைப் படித்துக்கொண்டிருந்தபோது கேப்பசினோ கொட்டியது,   ‘ஓ ஷிட்!’ என்றான்.

p38e_1519736326.jpg

  ‘இந்திர லோகத்து சுந்தரி.. மன்மதன் நாட்டு மந்திரி...’கனவில் நயனோடு பாட்டு பாடிக்கொண்டிருந்த என்னை ‘சீக்கிரம் எந்திரி!’ என்றது அம்மாவின் குரல்!

p38b_1519736584.jpg

`மேயுற மாட்டை நக்குற மாடு கெடுத்துச்சாம்... அப்புறம் என்ன..?’ ‘உங்க டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா’ என்று கேட்டதாம் மேயுற மாடு.

p38f_1519736371.jpg

  காதல் கொண்டேன் என்றுதான் சொன்னாள் ஆனால், காதல் கொன்றேன் என என் காதில் விழுந்தது.

p38g_1519736384.jpg

  மிலிட்டரியில் பார்டரைக் காத்து ரிட்டயர்ட் ஆனவனுக்கு செக்யூரிட்டி வேலை கிடைத்தது மிலிட்டரி ஓட்டலில்!

p38gg_1519736407.jpg

  மனப்பிராந்தி என்பது யாதெனில் டாஸ்மாக்கைக் கடக்கும்போது உள்ளெழும் குரல்! (வாந்தி என்பது வெளியே எழும் குரல்!)

p38hh_1519736453.jpg

`க்ளிண்ட் ஈஸ்ட்வுட் தெரியுமா?’ என்று கேட்டாள் ‘சாண்டல்வுட் தெரியும்!’ என்று கண்ணடித்தேன்.

 

p38ggg_1519736422.jpg

  என் பிரேக்கிங் நியூஸில் நீ ஓ.பி.எஸ்ஸா..? ஈ.பி.எஸ்ஸா..? இல்லை... ரஜினியா கமலா?

p38h_1519736439.jpg

  பிரதமரின் வெளிநாட்டுப் பயணம்

‘எவன் எப்படிப் போனால் என்ன.. நீ ரசத்தை ஊத்து!’

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

4.jpg
கந்தல்


அண்ணனுக்கோ அப்பாவுக்கோ
வாங்கிய சட்டை
தம்பியை
உடுத்திக்கொள்கிறது
சில சமயம் அக்காவையும்
அல்லது தங்கையையும்கூட
பாப்பாவை தூங்கச்செய்கிறது
பாட்டியின் சேலை
அம்மாவின் கைகளில்
நுழைந்து
பாத்திரங்களின் சூடு
தாங்கும் அப்பாவின் பனியன்
அவ்வப்போது
சைக்கிளும் துடைக்கிறது
முக்கோணமாகவோ
சதுரமாகவோ
அல்லது தனக்கென்ற
உருவமில்லாத
மிச்சங்களை
திணித்துக்கொண்டு
தைக்கப்பட்ட
தம்பியின் டிராயர்
அப்பாவின் டியூசன்
கிளாசில் போர்டு துடைக்கிறது
அம்மாவின் காட்டன்
சேலையை கிழித்து செய்யப்பட்ட
அக்காவின் தாவணி
தங்கையைத் தழுவுகிறது
தலையணைக்கு உறையாகிறது
அவ்வப்போது கறையுமாகிறது.

- சுபா செந்தில்குமார்

நினைவுகள்

நகரத்து மளிகைக்
கடையில்
இரண்டு ரூபாய்க்கு
விரல் நீள தேங்காய்
கீற்று வாங்குகையில்
மனதில் நிழலாடும்
ஊரில் சொற்ப
காசுக்கு
விற்று வந்த
தென்னந்தோப்பின்
நினைவுகள்.
 

http://www.kungumam.co.in

Link to comment
Share on other sites

பிரியங்கள் வழியும் பெரும்பொழுது

பிழைப்பிற்காய்க் கடல்கடந்து
வெளிநாடேகியிருக்கும் தந்தைக்கு
மகளாய் இருத்தல்
எத்துணை துர்பாக்கியம் என்பதை
என்னிடம் கேட்டால்
எடுத்துரைக்கவே ஏராளமுண்டு.

p70a_1520332307.jpg

பகல் வெறுத்து
அப்பாவின் குரல் கேட்க
இரவுக்காய்க் காத்துக்கிடக்கும் கணங்கள்
எத்துணைக் கொடியது என்பது
என்னைப் போன்ற மகள்கள் மட்டுமே
அறிந்ததாய் இருக்கும்.

வேண்டுவனவெல்லாம்
வீட்டில் கொட்டிக்கிடந்தாலும்
விரும்பி நிறைத்துக்கொள்ள இயலாமல்
வெற்றிடமாய்க் கிடப்பதென்னவோ
அப்பாவின் வாசமே.

ஒலித்த கைப்பேசி கடத்திவரும்
அப்பாவின் பிரியங்கள் வழியும் நொடிகளே
எனக்கான பெரும்பொழுது.
நாளின் பிற மணித்துளிகளெல்லாம்
சிறுபொழுதே.

- எஸ்.ஜெயகாந்தி

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

p70b_1520332354.jpg

உயிர்மூச்சு

விரையும் ரயிலில்
கையேந்தும் விழியிழந்தோன்
உயிர் உருக்கப்
புல்லாங்குழல் வாசித்தவாறும்
திருவிழாக் கூட்டத்தில்
சிறார்களைத் தேடும் பலூன்காரன்
ஊதி ஊதிப் பெருக்கவைத்த
பலூன்களைச் சுமந்தவாறும்
விற்றுக்கொண்டிருக்கிறார்கள்
அவரவர் உயிர்மூச்சை.

- தி.சிவசங்கரி

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

p70c_1520332337.jpg

ஒற்றைக்குரல்

நகரத் தொடங்கிய
எருமையின் நிழலை மேகக்கூட்டமென நினைத்துப் பின்தொடரும் தட்டான்.

தன் தொந்தரவு தாங்காமல்
ஆடும் எருமையின் வாலை
ஊஞ்சலென நினைத்து மகிழும் ஈ.

எருமையின் குளம்படி
பதிந்ததில் தேங்கியநீரை
கிணற்று நீரென நினைத்து
நீந்தும் ஆதவன்.

இத்தனையும் காட்சியாயின
சாட்டையின் சொடுக்கிற்கு
அசையாது நிற்கும் எருமையொன்றை
என் மகளின்
‘என்ன லட்சுமி’ என்ற ஒற்றைக்குரல்
நகர்த்தத் தொடங்கியதால்.

- தமிழ்த்தென்றல்


p70d_1520332374.jpg

பிளிறல் பரிசு

குன்றொன்று அசைந்து வருவதைப் போல
குறுகலான கடைவீதியில்
அச்சமும் ஆர்வமுமான சரிபாதிக் கலவையோடு
எதிர்ப்படுவோர் ஒதுங்கி விலகும்படி
ஊர்ந்து வந்த யானை
வனந்தொலைத்த விரக்தியினை வெளிக்காட்டாமலே
அனிச்சையாய் ஆசிவழங்கிச் செல்கிறது
பாகனின் சமிக்ஞையை ஏற்று.
சாலை விரிவாக்கத்தில் படுகொலையான
மரங்களின் சுவட்டையும் அறிய மாட்டாமல்
இளந்தளிர் கிளையுடைத்து
இரைப்பை நிரப்பிய நினைவுகள் உசுப்ப
காட்சிப் பொருளாகிப்போன
துதிக்கை சுமந்து
ஏக்க நடையிடுகிறது மௌனமாய்.
கால நீட்சிக் கணமொன்றின்
ஓர் ஊரெல்லைச் சாலையில்
இருமருங்கும் கன்றுகளைப் பதியனிடும்
சிறுவர்களைப் பார்த்த உற்சாகத்தில்
ஒரு பிளிறலைப் பரிசளித்துப் போகிறது.

- பாப்பனப்பட்டு வ.முருகன்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

கலாய் கவிதைகள்!

 

 

தைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!

p38a_1520320448.jpg

* `நான் என்ன தக்காளித் தொக்கா?’ என்னிடம் கேட்கிறான் ஒருவன் `அடேய், தக்காளி தொக்கு எனக்குப் பிடிச்ச ஐட்டம்டா!’


p38b_1520320280.jpg

* வித் அவுட்டில் வந்தவனுக்கு அப்பர் என்ன சுந்தரர் என்ன..?


p38c_1520320293.jpg

* முற்றும் துறந்த முனிவர்தான் கேமராவுக்குப் பயந்தார்!


p38d_1520320307.jpg

* கண்ணாடி பார்த்துத் திருத்தம் செய்கிறாள் இனி கண்ணாடி திருத்திக்கொள்ளும்!


p38e_1520320321.jpg

* `என் இருமலை உறுமலாய் நினைத்து பயப்படாதே... தண்ணியக்குடி தண்ணியக்குடி..!’


p38g_1520320364.jpg

* விக்கிரவாண்டி மோட்டல்காரரே  `ஸ்வச் பாரத்’ அம்பாசிடராக சாலச் சிறந்தவர் 

‘ஏய், அங்க போகாத... டாய்லெட்ல போ!’


p38f_1520320340.jpg

* ஃபேஸ்புக்கில் உனக்கு இருக்கலாம் லட்சம் ஃபாலோயர்ஸ்... உன் வீடு வரை வரும் ஒரே ஃபாலோயர் நான்தான்1


p38h_1520320403.jpg

* ஒழுங்காகச் சாப்பிடாவிட்டால் மிலிந்த் சோமன்கூட மெலிந்த சோமனாகிவிடுவார்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

p80a_1521021671.jpg

வேப்பமர சாமி

வேப்பமரத்தை உதைக்கக் கூடாது
வேப்பமரத்தில்
ஊஞ்சல்கட்டி ஆடக் கூடாது
வேப்பங்கிளையைப் பிடித்துத்
தொங்கக் கூடாது
வேப்பமரத்தடியில்
மூத்திரம் போகக் கூடாது
வேப்பமரத்தின் மேல் எச்சில்
துப்பக் கூடாது
வேப்ப இலையைக் காலில்
மிதிக்கக் கூடாது
வேப்பமரத்துல சாமியிருக்கு
சாமி கண்ணைக் குத்திடும்
என்று
சொல்லிச் சொல்லி வளர்த்த
அம்மாவிடம் கேட்க
ஒன்று உள்ளது.
கடன் வாங்கி விதைச்சதெல்லாம்
மழையில்லாமக் கருகிடுச்சேன்னு
மனம் நொந்து
வேப்பமரத்தில்
தூக்கு மாட்டிக்கொண்ட அப்பாவை
ஏம்மா காப்பாத்தலை
வேப்பமர சாமி ?

- பிரபு

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

கலாய் கவிதைகள்!

 

 

தைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!

p64a_1521012141.jpg

* கை உடைந்த வலியைக்

கண்ணீர் கலந்து

ஹைகூவாக எழுதி

மொட்டை மாடியில் காயவைத்திருந்தான்

நல்லவேளை, காக்கா தூக்கிச் சென்றது.

- மனோ ரெட், சென்னை


p64c_1521012364.jpg

தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!

டாஸ்மாக்கில் சைட்-டிஷ் தேவையுடன் தமிழ்க் `குடிமகன்!’

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்,  தஞ்சாவூர்.


p64b_1521012350.jpg

வேங்கை மவன் பரட்டை ஒத்தையில நிக்கேன்.

 பின்னாடி ஆத்தா வளர்த்த சப்பாணியும் நிக்குதிலே!

- கோபிநாதன்.


p64d_1521012447.jpg

‘எந்த நடிகரும் ஓட்டைப் பிரிக்க முடியாது என் வீடு மாடி வீடு’ என்றார் அரசியல்வாதி!

- நிரவி கஜேந்திரன்


p64e_1521012461.jpg

அஞ்சலி செலுத்த முடியாது...

நாக்கு ‘செத்து’ப் போனதுக்கு!

- பாப்பனப்பட்டு வ.முருகன்


p64f_1521012474.jpg

அன்பே ஃபேஸ்புக்கில் நீ போடும்

மொக்கை ஸ்டேட்டஸ்க்கு லைக்

பண்றேன்

மொக்கைப் பையனான

என்னை லவ் பண்ணக் கூடாதா?!.

- எஸ்.சேக் சிக்கந்தர்.


p64g_1521012559.jpg

சுவையான தேநீரைக் கொடுத்தாலும் கழுவிக் கழுவித்தான் ஊற்றுகிறார்கள் கிளாஸை.

- தி.சிவசங்கரி


p64h_1521012571.jpg

ஆதார் போட்டோவை ஜெராக்ஸில் பார்ப்பதுவும் ‘ஜென் நிலை’தான்!

- எஸ்.ஜெயகாந்தி

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

p80b_1521021686.jpg

சாத்தானின் குரல்

சோலாப்பூர் போர்வையை விலக்கி
எழமாட்டேன் என
அடம்பிடிக்கிறது ஓர் அதிகாலை.

‘அம்மு’ என அதற்கு
செல்லமாய் வைத்த பெயரைச் சொல்லி அழைக்க
வளைந்து நெளித்து
`ம்’ என்ற குரலோடு
ஒருக்களித்து உறங்கக் கேட்கிறது

உப்புச்சப்பற்ற கதைக்கு உம் கொட்டிய இரவு
தட்டி எழுப்ப,
குனிந்த கழுத்தைக்
கட்டிக்கொண்டு உறங்க முடிகிறது

சுப்ரபாதம் பாடி எழுப்ப முடியாத எனது குல தெய்வம்

சாத்தானின் குரலாக ஒலிக்கும்
பள்ளி வாகனத்திற்கு
என்ன பதில் சொல்ல?

 - பி.கே.சாமி

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

p80c_1521021705.jpg

அடையாளம்

நகரப்பேருந்தில்
அருகில் அமர்ந்த அவன்
நிச்சயம் நம்மூர் ஆளாய்
இருந்திருக்க வாய்ப்பில்லை.

பல்லில் படிந்த காவியும்
பலநாள் அழுக்கேறிய உடையும்
கை நிறைய வண்ணக் கயிறுகளுமாய்
அவனை எனக்கு அப்படித்தான்
அடையாளப்படுத்த முடிந்தது.

காலில் படிந்திருக்கும் சேறு
அவனின் வாழ்க்கைக்கான
வேலைப்பளு என்ன என்பதை
விளக்கிக்கொண்டிருந்தது.

ஏதேனும் கேட்கலாமென
நினைத்துப் பின்வாங்கினேன்
மொழிதெரியா அவனிடத்தில்
பேசி என்னவாகப்போகிறது
சமாதானமாகிக்கொண்டேன் எனக்குள்.

எந்த உணர்வுகளையுமோ
உணர்ச்சிகளையுமோ அவனிடத்தில்
என்னால் படிக்க இயலவில்லை

மனம் என்னை
அழுத்திக்கொண்டிருக்கிறது
அடிக்கடி எனக்குவரும்
அலைபேசி அழைப்பைமட்டும்
அவன் ஆழ்ந்து கவனிப்பதும்
கோபமான என் பதில்களுக்கு
அவன் குனிந்துகொள்வதுமான
செயல்களில்...

எரிச்சலாய்
அவனிடத்தில் திரும்பி
`க்யா?’ என்றேன் எனக்கான வடமொழியில்...

`பொண்டாட்டிய ஆஸ்பத்ரில
சேத்திருக்காங்களாம்
ஒரு போன் பண்ணித்தர்றீங்களா’ என
சேறுபடிந்து கிழிந்திருந்த
காகிதத்திலிருக்கும் எண்ணைக்
காண்பித்து நீட்டிய
அவன் கையில்
`அம்முகுட்டி’ எனக் குத்தப்பட்டிருந்தது
பச்சையாய்த்
தமிழில்.

- பன்னீர்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 
 
E_1521015414.jpeg
 

இயற்கையின் மொழிகள்!

ஒவ்வொரு நாளும்
மறைந்தாலும்
தோன்றிக் கொண்டேதான்
இருக்கிறது சூரியன்!

அதன்
ஒளிக்கீற்றுகளும்
சொல்லித்தான்
தருகிறது
நம்பிக்கையை!

மேகத்திலிருந்து
விழும் மழைத் துளிகளும்
சொல்லியபடிதான்
பெய்கிறது
பாசத்தோடு
தாய்மையையும்!

எங்கிருந்தோ
பறந்து வரும்
சிட்டுக்குருவி கூட
சொல்லித்தான் தருகிறது
சுறுசுறுப்பை!

செடியில்
மலர்ந்திருக்கும்
பூக்களும்
சொல்லித்தான்
மரணிக்கிறது
சிரிப்பை!

எல்லாவற்றையும்
பார்க்கும்
மனிதனுக்குதான்
புரிவதே இல்லை
இயற்கையின்
மொழிகள்!
ர.சம்பத்குமார், பொள்ளாச்சி.

http://www.dinamalar.com

Link to comment
Share on other sites

போர் வந்த நாள்!

கவிதை: நிகோலா டேவிஸ்(Nicola Davies) மொழிபெயர்ப்பு: லீனா மணிமேகலைஓவியம்: செந்தில்

 

போர் வந்த அந்த நாளில்
சன்னல் நிலைகளில் பூக்கள் மலர்ந்திருந்தன.
என் அப்பா
என் இளைய சகோதரனைத்
தாலாட்டுப் பாடித்
தூங்கவைத்துக்கொண்டிருந்தார்
என் அம்மா
காலை உணவைச் சமைத்துவிட்டு
மூக்கில் செல்லமாக உரசி, முத்தமிட்டு,
பள்ளி வரை வந்து விட்டுச் சென்றார்

அந்த நாளின் காலையில்தான்
எரிமலைகளைப் பற்றிப் படித்திருந்தேன்.
தலைப்பிரட்டைகள் இறுதியில் தவளைகளாக மாறுவதைக் குறித்துப் பாடல் ஒன்றைக் கற்றிருந்தேன்.
என்  உருவ ஓவியத்திற்குச் சிறகுகள் வரைந்திருந்தேன்.
மதியம் சற்று ஆசுவாசமாக
டால்பின் வடிவிலிருந்த மேகத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த வேளையில்தான்
போர் வந்தது
ழுதலில் இடியிறங்கி, பின் ஆலங்கட்டி மழை தெறித்தது போல இருந்தது.
தீயும் புகையும் இரைச்சலுமாய் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
போர்
விளையாட்டுத் திடல் தாண்டி
என் ஆசிரியரின் முகத்திற்கு
வந்தது
வகுப்பின் கூரையில் விழுந்தது
நகரத்தை உடைத்து நொறுக்கியது.
ஒரு கறுப்பு ஓட்டையைப் போன்ற 
என் வீட்டைப் பற்றி
எந்த வார்த்தைகளைக் கொண்டு விளக்குவது?
போர்
எல்லாவற்றையும் கொண்டு போனது
எல்லோரையும் கொண்டு போனது
ரத்தம் கசியும் தனித்த
கந்தை மூட்டையானேன் நான்

p20a_1521539863.jpg

ஓடினேன்
லாரிகளுக்குப்பின்...
பேருந்துகளில் தொற்றிக்கொண்டு...
வயல்களில் சாலைகளில் மலைகளில்
குளிரிலும் மழையிலும் புழுதியிலும்
பொத்தல் படகுகளில்
மூழ்கி
தப்பி
குழந்தைகள் முகம் மணல் கவ்விக்கிடந்த கடற்கரைகளை அடையும் வரை
ஓடினேன்
இனி ஓடவே முடியாத நிலைவரை
எண் இட்ட குடிசை வரிசை
கண்ணில் படும்வரை
ஒரு மூலையும் 
அழுக்குப் போர்வையும்
காற்றில் முனகும் கதவும்
அகப்படும்வரை

போர்
என் தோலின் அடுக்குகளில்
என் கண்களுக்குப் பின்புறம்
என் கனவுகளில்
என்னைப் பின்தொடர்ந்தது
என் இதயத்தை ஆக்கிரமித்தது

என்னிடம் தங்கிவிட்ட போரைத் துரத்த
நடந்தேன்...
நடந்தேன்...
போர் போயிராத இடத்தைத் தேடி
நடந்தேன்
போன பாதைகளில்
அடைக்கப்பட்ட கதவுகளில் 
இறங்கிய சாலைகளில்
புன்னகையைத் தொலைத்து
திருப்பிக்கொண்ட முகங்களில்
போர் அப்பியிருந்தது

நடந்து நடந்து
ஒரு பள்ளிக்கூடத்தைக் கண்டுபிடித்தேன்
சன்னல் எட்டிப் பார்த்தபோது
அவர்கள் எரிமலைகளைப் படித்துக்கொண்டிருந்தார்கள்
பறவைகளை வரைந்துகொண்டும்
பாடிக்கொண்டும் இருந்தார்கள்

உள்ளே போனபோது
அறையில்
என் அடிச்சுவடுகள் எதிரொலித்தன
கதவைத் தள்ளித் திறந்ததில்
பல முகங்கள் என்னை நோக்கித் திரும்பின
ஆசிரியரின் முகம் இறுகியிருந்தது
இங்கே வேறு யாருக்கும் இடமில்லை என்றார்
உட்காருவதற்கு நாற்காலி இல்லை
என்றார்
என்னை வெளியேறச் சொன்னார்

போர் அங்கும் வந்துவிட்டது போலும்

குடிசைக்குத் திரும்பி
மூலைக்குத் தவழ்ந்து
போர்வைக்குள் சுருண்டுகொண்டேன்
போர், உலகம் முழுவதையும் எடுத்துக் கொண்டுவிட்டதென நினைத்தேன்

கதவு அடித்தது
காற்றுதானென நினைத்தேன்
ஆனால் ஒரு சிறுமியின் குரல் கேட்டது
“இது உனக்காகத்தான் கொண்டுவந்தேன்
நீ இனி பள்ளிக்கு வரலாம்” என்றாள்
அவள் கையில் ஒரு நாற்காலி இருந்தது.
நான் இனி அதில் அமரலாம்.
எரிமலைகளைப் பற்றிப்
பாடம் படித்து
தவளைகளைப் பாடி
என் இதயத்தை அடைத்துக்கிடக்கும்
போரை விரட்டலாம்
“என் நண்பர்களும்
நாற்காலிகள் கொண்டு வந்திருக்கிறார்கள்
இந்த முகாமில் இருக்கும்
எல்லாக் குழந்தைகளும்
பள்ளிக்கு வரலாம்”
அந்தச் சிறுமி புன்னகையோடு சொன்னாள்

குடிசைகளிலிருந்து
குழந்தைகள் இறங்கிவர
நாற்காலிகள் நிரம்பிய சாலையில்
கைகோத்து நடந்தோம்
நாங்கள் முன்வைத்த
ஒவ்வொரு அடிக்கும்
போர் பின்வாங்கியது.


p20b_1521539844.jpg

p20c_1521539828.jpg

பெற்றோர்களை இழந்த 3000 சிரியக் குழந்தைகளை அகதிகளாக ஏற்க மறுத்த பிரிட்டனை எதிர்த்து, சிறுவர் இலக்கியத்தில் பரந்துபட்டு அறியப்படும் எழுத்தாளர் நிக்கோலா டேவிஸ் எழுதி இக்கவிதை வாசிக்கப்பட்டவுடன் ஓவியர் ஜேக்கி மோரீஸ் ஏற்கெனவே எல்லாவற்றையும் இழந்துநிற்கும் குழந்தைக்கு, மறுக்கப்பட்ட நாற்காலியை வரைய, டிவிட்டரில் அது ‘#3000Chairs’ என்ற பேரியக்கமாகமாறி உலகமெங்கிலுமிருந்து 3000 ஓவியர்கள் நாற்காலிகளை வரைந்து அனுப்பி, தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

கால தேவதை

இப்போதும்
இரும்புக் கோடரியை
ஆற்றில் தவற விட்டு
அழுதுகொண்டிருந்தவனிடம்
முன்பொரு முறை 
மூன்று கோடரிகளை
அவன் நேர்மைக்குப் பரிசளித்த
அதே தேவதை
இம்முறை
மூன்று மரக்கன்றுகளைக் கையளித்தது
தன் தவற்றுக்கு வருந்தி..!

- வெள்ளூர் ராஜா

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

p44a_1521615274.jpg

வெறும் திரை

சினிமா போடுவதற்கு முன்னான
வெறும் திரை
ஆயிரம் கனவுகளைக் கொண்டதாய் இருக்கிறது.

இடைவேளையின் போதான
வெறும் திரை
சில பல கேள்விகளை முன்வைத்து நிற்கிறது
சிறுதீனிகளின் அவகாசமாக இருக்கிறது
இயற்கை உபாதையின் சாவியாக இருக்கிறது
யார் யாரெல்லாம் நம் சகரசிகன் ரசிகை என்ற தேடலின் வெண் பூங்காவாக இருக்கிறது.

தீர்ந்துபோன நேரமும் பணமும்
நம்மைக் கொண்டாடியதா
இல்லை கடிந்துகொண்டதா
என்பதாகவே என்றென்றும் நீள்கிறது
திரைப்படம் முடிந்ததுமான
வெறும் திரை.

- இளந்தென்றல் திரவியம்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

ஒற்றைச் செருப்பு

பார்த்தும் பாராமல்
அவ்வளவு எளிதாய்க் கடந்துவிட
இயலாமல்
பதைபதைக்கும் நெஞ்சுக்குள்
இனம்புரியா பாரத்தை ஏற்றிவைக்கிறது
விரைவுச்சாலையில் விழுந்து கிடக்கும்
குழந்தையின் ஒற்றைச் செருப்பு.

- எஸ்.ஜெயகாந்தி

அன்று... அப்போது...

காலம் அதன்
வெள்ளை இழைகளை லேசாக
தலையில் இழைத்துவிடும்
இவ்வேளையில்தான்
சற்றே மங்கலாய்ச்
சில விஷயங்கள்
நினைவுக்கு வருகின்றன...
கல்லூரியின்
சிறப்புப்பேச்சாளர்
தம் வாழ்க்கையையே மாற்றியதாகக்
குறிப்பிட்டாரே
அது என்ன புத்தகம்...
25 வருடங்களுக்கு முன்
அப்படி ஓடிய படமாயிற்றே
அதைப் பார்க்கவில்லையா
என்று கேட்கப்பட்ட திரைப்படம்...
ஒன்றாய் உண்டு உறங்கி
கூடித்திரிந்த நண்பன்
இப்போது எந்த வலைதளத்திலும்
சிக்காது இருக்கிறானே
எங்கே அவன்...
படித்து ரசித்து நெகிழ்ந்து
சற்றே கிழிந்திருந்தாலும்
பரணில் பத்திரமாய் வைத்த கடிதங்கள் அப்படியே இருக்கின்றனவா...
மேலும்,
எப்போதாவது
சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால்
கேட்க வேண்டும் உன்னிடமும்,
கல்லூரியின் கடைசி நாளன்று
ஏதோ சொல்ல வந்தாயோ?

- இளங்கோ ஏழுமலை

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 
 
E_1521780017.jpeg
 

நகைப்பிற்குரியவர்கள்!

சாலை விதிகளை
சகட்டு மேனிக்கு மீறும்
நாங்கள் தான்
சகல கலா வல்லவர்கள்!

விளை நிலங்களை
வீட்டு மனைகளாக விற்று தரும்
நாங்கள் தான்
விற்பன்னர்கள்!

காணும் பொருட்களிலெல்லாம்
கலப்படம் செய்யும்
நாங்கள் தான்
கண்ணியம் மிக்கவர்கள்!

போதைப் பொருட்கள்
பொதுவுடமை ஆக்கும்
நாங்கள் தான்
போற்றுதலுக்குரியவர்கள்!

அனைத்து போராட்டங்களுக்கும்
ஆள் திரட்டித் தரும்
நாங்கள் தான்
அசகாய சூரர்கள்!

வரதட்சணை என்ற பெயரில்
வாங்கிக் குவிக்கும்
நாங்கள் தான்
வருங்கால இந்திய துாண்கள்!

ஊழியம் எதுவும் செய்யாமல்
ஊதியம் வாங்கும்
நாங்கள் தான்
உழைப்பாளர்கள்!

கொடுத்த வாக்குறுதியை
குழி தோண்டி புதைக்கும்
நாங்கள் தான்
கோமான்கள்!

கல்விக்கு, கணக்கு வழக்கின்றி
கட்டணம் வசூலிக்கும்
நாங்கள் தான்
கல்வி தாளாளர்கள்!

நல்லதே நடக்குமென்று
நம்பிக் கொண்டிருக்கும்
நாட்டு மக்களே
நகைப்பிற்குரியவர்கள்!

பெ.கருணைவள்ளல்,
சென்னை.

http://www.dinamalar.com

Link to comment
Share on other sites

கலாய் கவிதைகள்!

 

 

எதைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!

p94a_1522151521.jpg

ருள்மணியை விட்டுவிட்டு.வெற்றிமணியைக் காதலித்தாள்...
மணி ட்ரான்ஸ்ஃபர்!

- கலைவாணன்


p94b_1522151536.jpg

சிரிப்பூட்டும் வாயு
நைட்ரஸ் ஆக்ஸைடு...
அப்ப...
மீத்தேன், ஹைட்ரோகார்பன்,
ஷேல் கேஸ்...?
சரி... சரி...
இருக்கவே இருக்கு
கேஸ் ட்ரபுளுக்கு பூண்டு லேகியம்...
தண்ணியக் குடி... தண்ணியக் குடி..!

- கே.லக்‌ஷ்மணன்


p94c_1522151553.jpg

நெப்போலியனை
உள்ளே அனுப்பினால்
அரிச்சந்திரன் வெளியே வந்துவிடுவார்!

- எஸ்.ஜெயகாந்தி


p94d_1522151566.jpg

மாதக்கடைசி தேதி
வாஸ்து மீன் ஆனாலும்
வறுவலுக்கு  ஆகும்!

- ‘சீர்காழி’ வி.வெங்கட்


p94e_1522151588.jpg

ம்மா சீரியல்
அப்பா கம்ப்யூட்டர்
பெரியவன் கேம்ஸ்
சிறியவன் ரைம்ஸ் வீடியோ
பார்த்துச் சிரித்துக்கொண்டது
குடும்பப் போட்டோ

- ரா.அருண் பிரகாஷ்


p94f_1522151686.jpg

ண்ணாடி முன் நின்றபோது,
கண்ணாடி அழகாய்த் தெரிந்தது.

- வே.புனிதா வேளாங்கண்ணி


p94g_1522151699.jpg

ரத்தை வெட்டியவன் மீதும்
மழை கொட்டிக்கொண்டிருந்தது.

-  ரா.அருண் பிரகாஷ்


p94h_1522151712.jpg

னைவியிடம் இத்தனை வருடமாய் குப்பை கொட்ட இரண்டே வார்த்தைகள்
‘சரிம்மா’, ‘ஸாரிம்மா..!’
 
-  சீர்காழி வி.வெங்கட்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

சந்திரபாபுவின் ஹேங் ஓவர் ஆலாபனை!

 
 

கவிதை: வெய்யில், ஓவியம்: செந்தில்

 

“அந்த இசைத்தட்டை ரத்தத்தால் கழுவிக்கொண்டிருக்கிறாள்
விநோதம் அடைமழையெனப் பெய்கிறது!”
நீண்ட உறக்கத்திலிருந்த சந்திரபாபு விழித்துக்கொண்டார்
நலம்தான் என்றாலும்,
அவ்வப்போது நினைவிழக்கிறார் அல்லது நினைவுபெறுகிறார்.
“கண்ணீரின் பயணத்தைத் தடுக்கக் கூடாது!”
இளையராசா தந்தனக்குயில்களை
வேட்டைக்கு அனுப்பியிருக்கிறார்
அதன் பசியிடமிருந்து
நம் கபாலக்கூழைப்
பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.
வயலின் இசையில் கருவுற்றவள்
மதுவிடுதியிலிருந்து கிளம்ப மறுக்கிறாள்
அவளுக்குள்தான் எவ்வளவு பெரிய பனிக்குடம்.
சுவர்ணலதாவுக்கு நுரையீரல் பிரச்னையென்று
ஏன் டாக்டர் முதலிலேயே சொல்லவில்லை?
வெள்ளிவீதியின்
வெண்ணையுணங்கு பாறையில்
கனா இலைகள் உலர சாட்சியிருக்கும் பாணன்
வீழ்த்தப்பட்ட காட்டெருதின் உடலில்
யாழ் நரம்புகளைத் துழாவுகிறான்.
பெருகும் வைகையைக்
கனவில் சுமக்கும் புள்ளாய்
ஒருமுறை ரஹ்மான் வானில் மிதந்தார்
மேகம் கனியும் நறுமணத்தை
நாம் ஆனந்தித்தோம்.
யாவரும் கைவிட்ட தீவின் துயரை
விளரி யாழேற்றி அரற்றுகிறார் விஸ்வநாதன்
“சின்னஞ்சிறிய கடல் மின்மினிகளே...
ஒரு தூதுப்பாவாகச் சென்று
ஊழின் சிரசை மொய்ப்பீரோ?!”
யாரின் சிதையிலோ
பறைக்கு வார்பிடிக்கிறான் ராவணன்

p72a_1522143766.jpg

பாருங்கள் சந்திரபாபு
அவன் நீந்திவந்த கடலை
அதன் தீரா உப்புக்கரிப்பை.
இந்த நூற்றாண்டின் தமிழ்ச்சித்திரம்
பிடரியில் துளையுள்ள மண்டையோடுகள்,
போர்ப்புழுதி நீங்கா சிறிய விழிகளை
முலைப்பால் பீச்சிக் குளிர்வித்துக்கொண்டிருக்கும் சூர்ப்பணகைகள்.
பனையேறியரின் லாகவத்தோடு
நினைவைப் பற்றி ஏறி
மங்கலான மன ஒளியில்
இசைக்குறிப்புகளைக் காவுகிறேன்
“உழுகுடிகளுக்கு
அன்னக்கிளி புள் நிமித்தமானது!”
குணகடல் துள்ளும் தூங்கும்
சந்திர ஒளி வற்றும் பெருகும்
நாயனம் இசைக்கும்போது முகூர்த்தம் அவ்வளவுதானே சந்திரபாபு

இந்தத் தேநீரை ருசித்துவிட்டு
காயத்தின் தையல் பிரிந்துவிடாமல்
சற்று ஹம் பண்ணுங்கள்
வாழ்வில் மட்டுமல்ல
நியாயமற்ற முறையில்
கவிதையிலும் காட்சிகள் மாறும்தானே?!

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

அம்மாவின் அடி!

அணில் வேட்டைக்குப் போன நாளில் எல்லாம்
பிறந்தநாள் கொண்டாடிவிடுவாள்.
அம்மாவிடம் அடி வாங்கும் நாளைத்தான்
‘பிறந்தநாள்’ எனப் பெயர் வைத்திருந்தாள் மூத்தவள்!
கிளித்தட்டு விளையாடச் சென்றதற்காக
மந்தையில் இருந்து வீடு வரை அடித்துவந்தாள்.
நல்ல தண்ணி எடுத்து வைக்கவில்லையென
பருத்தி மாரில் பின்னியெடுத்தாள்
அன்று திருக்கார்த்திகை.
பெரியம்மா தடுக்கத் தடுக்க,
கணுக்காலில் பட்டு சூரியகாந்தி பிரம்பு
சில்லு சில்லாய்ச் சிதறியது மட்டும்தான் நினைவிருக்கிறது
`உன்னை அடிச்சு அடிச்சு என் கைதான் வலிக்குது’ என
கிடைத்ததையெல்லாம் கொண்டு அடிப்பாள்.
எத்தனை வயசானாலும் அம்மா அடிக்கும்போது
தடுக்க மனசு வராது என்பார் ராஜாராம் அண்ணன்
அவர் கல்யாணம் முடிக்கும் வரை அடி வாங்கியவர்!
ஆனாலும், 
`கைலி கட்டிட்ட... இன்னுமாடா அம்மாட்ட அடி வாங்கிட்டிருக்க...’
ஒவ்வொருநாளும் ஊராரின் கிண்டல் பேச்சு வெறியேற்றும்.
ஒருநாள்... மிளகாய் பழச் சாக்கைத் தூக்கப்
புஞ்சைக்கு வரவில்லையென ஓங்கியபோது
துணிந்து சாட்டைக் கம்பைப் பிடித்து விட்டேன்
அதற்குப்பின் என்னைத் தொட்டதேயில்லை!

- தா.ரமேஷ்

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

 
E_1522389864.jpeg
 

விடியும் வரை காத்திருக்காதே!

விடிவதற்குள் வேலையை
ஆரம்பித்து விடு
வேலை இல்லை என
துாங்கி சுகம் காணாதே!

ஓடும் மனிதர்களோடு
நீயும் சேர்ந்து கொள்
எந்த வேலையும் இழிவல்ல
குப்பையை சுமந்தாலும்
கூலி கிடைக்கும்!

பட்டதாரி என்பதை மற
பலதரப்பட்ட வேலைகள்
உன் முன்
கொட்டிக் கிடக்கின்றன!

சிறகடித்து பறந்து
திரிந்தால் தான்
பறவைக்கும் உணவு கிடைக்கும்
பதுங்கி, பாய்ந்து, ஓடி
உருண்டால் தான்
புலிக்கும் இரை கிடைக்கும்!

அழுதால் தான் பால் கிடைக்கும்
குழந்தைக்கும் தெரிகிறது
படிப்பிற்கு ஏற்ற வேலை
உழைப்பிற்கேற்ற ஊதியம்
யாரும் தருவதில்லை!

உழைப்பை முழுவதும்
ஊதியமாக்க கற்றுக்கொள்
உனக்கும் விடியும்
ஒருநாள் இனிதாக!
பாரதி சேகர், சென்னை.

http://www.dinamalar.com

Link to comment
Share on other sites

பிங்க் இரவு

மொட்டுகள் நாளை பூத்துவிடுமென
தொட்டியில் பதியமிட்ட
ரோஜாச்செடிகளைக் காட்டி
நம்பிக்கையூட்டுகிறாள் அம்மா.
அன்றைய அந்திக்குப் பின்
ரோஜா வாசத்தோடு
பிங்க் இரவுக்குள் துயில்கிறது குழந்தை.

- எஸ்.ஜெயகாந்தி

 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

நெல் வயல்

ஒரு வயல் வரைந்து
வயல் முழுக்க
நெற்கதிர்கள் வரைந்து
பச்சைப் பசேலென பச்சை நிற
பென்சிலால் வண்ணம் தீட்டி
வயல் ஓரமாய்க் கிணறு வரைந்து
கைக்கு  எட்டுவதுபோல்
கிணற்றில் நீர் வரைந்து
கிணற்றோரம் பம்புசெட்டில்
நீர் இறைப்பதுபோல் வரைந்து
நெல் வயலில் களையெடுப்பதுபோல்
ஆட்கள் வரைந்து
கொண்டுபோய்...
மழையின்றி
கிணறு வற்றி
நிலம் வெடித்து
விவசாயம் முடங்கி
மூலையில் முடங்கிக் கிடக்கும்
பாட்டியிடமும் தாத்தாவிடமும்
காண்பித்தாள் பேத்தி...
உற்று உற்றுப் பார்த்தபடி
கண்களாலேயே
நெல்லறுத்து
களத்துமேட்டில் கதிரடித்து
மூட்டை பிடிக்கிறார்கள்
பாட்டியும் தாத்தாவும்.

- பிரபு

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

p22a_1522823501.jpg

பிஞ்சுத் தூரிகை

மகனின் ஓவிய நோட்டில்
வளைந்தும் நெளிந்தும்
ஒற்றைக் கோடாகவே உடல் சுருங்கி
ஓடுகிறது நதி.

அந்த நதிக்கரையில்
எப்போதும் அருகருகே நின்றபடியே
நீரருந்தி தாகம் தணிக்கின்றன
பகை விலங்குகள்.

அவன் பிஞ்சுத் தூரிகை தொட்டெழுதிய
கானகத்தில்
அழிவின் விளிம்பில் நிற்கும்
அத்தனை உயிரினங்களும்
பாதுகாப்பாய் உலவுகின்றன.

அவன் வயல்களுக்கு மேலே
பொழிவதற்குத் தயாராய்
மிதந்தபடி காத்திருக்கின்றன
மழை மேகங்கள்.

ஒவ்வொரு முறையும்
சிட்டுக்குருவிகளை வரையும் அவன்
மறந்தும் அலைபேசிக் கோபுரங்களை மட்டும்
வரைவதேயில்லை.

- தி.சிவசங்கரி

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பின்னிரவின் பாதை

சோடியம் விளக்குகளின்
கீழ் தெரியும்
உலகென்பது
அவ்வளவு பரவசமானது
சாக்கடைப் பன்றி
மிருதுவான மஞ்சளில் மிளிரும்
மழை ஓய்ந்த ரோடு
தங்கத் துகள்களெனத் தகிக்கும்
நிரந்தரக் குடிகாரன்
சரிந்து காணப்படும்
கம்பமும் அவன் உருவமும்
ஒரு நவீன ஓவியம்போல் புலப்படும்
சரக்கொன்றை மரங்கள்
அவ்வப்போது
உடலசைத்துக்கொள்ளும்
யானைகளென இருக்கும்
தூக்கம் வாரா இப்பின்னிரவில்
கூடவே இளையராஜாவின் இசை
கூடப்பெறுகிறது
மெள்ள மெள்ள
வேர்ட்ஸ்வொர்த்தும் நானும்
ஒரு புள்ளியில் கூடப்பார்க்கிறோம்
ராமசந்திரன் தெருவை
வெஸ்ட் மினிஸ்டர் பாலமாக்கப் பார்க்கிறேன்
யாதொரு ஆட்சபேனையுமில்லை என்கிறான்
வில்லியம்...

- கோ.ஸ்ரீதரன்

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Riyan Parag 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         KKR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Jos Buttler 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK
    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.