Jump to content

''சாகுற வரைக்கும் என் உழைப்புல வயிறு நிறையணும்!'' - 78 வயது வைராக்கிய பால்காரம்மா


Recommended Posts

 

''சாகுற வரைக்கும் என் உழைப்புல வயிறு நிறையணும்!'' - 78 வயது வைராக்கிய பால்காரம்மா

 
 

பால்காரம்மா பத்மாவதி

"எனக்கு வயசு 78. மூணு பொண்ணுங்க இருந்தாலும், என் உழைப்பில் கிடைக்கும் வருமானத்துலதான் என் வாழ்க்கையை நடத்திட்டிருக்கேன். இந்த உசுரு இருக்கிற வரை இப்படித்தான் வாழ்வேன்" என வைராக்கியக் குரலில் பேசுகிறார் பத்மாவதி. சென்னை, கோடம்பாக்கம் பகுதியின் 'பால்காரம்மா'. 

பால்காரம்மா பத்மாவதி

"நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். ரொம்பவே கஷ்டமான குடும்பம். நல்லா படிப்பேன். ஆனாலும் வசதி இல்லாத காரணத்தால் ஆறாவதுக்கு மேல பெற்றோர் என்னைப் படிக்க அனுப்பலை. அக்கம் பக்கத்துல வீட்டு வேலைகள் செய்துட்டிருந்தேன். 21 வயசுல கல்யாணமாச்சு. வீட்டுக்காரருக்கு பிரின்ட்டிங் பிரஸ்ல வேலை. நான் தொடர்ந்து வீட்டு வேலைக்குப் போய்ட்டிருந்தேன். திடீர்னு வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லாமல் 1973-ம் வருடம் இறந்துட்டார். அப்போ, எனக்கு 34 வயசு. மூணு பொண்ணுங்களோடு எதிர்கால வாழ்க்கையை நினைச்சுப் பார்த்தேன். 

நான் பட்ட கஷ்டங்களை பொண்ணுங்க படக்கூடாதுன்னு படிக்கவெச்சேன். ஆனாலும், சில வருஷம்தான் படிக்கவைக்க முடிஞ்சுது. பால் வியாபாரம் செய்ய ஆரம்பிச்சேன். கோடம்பாக்கம் டிரஸ்டுபுரம் பகுதியில் இருக்கிற பல தெருக்களுக்கும் பால் சப்ளை செய்ய ஆரம்பிச்சேன். என்னோட அணுகுமுறை பிடிச்சுப்போய், நிறையப் பேர் அவங்க வீட்டுக்குப் பால் போடச் சொன்னாங்க. காலையும் சாயங்காலமும் பால் போடுறதோடு, மத்த நேரங்களில் வீட்டு வேலைக்கும் போவேன். அப்படித்தான் என் பொண்ணுங்களை வளர்த்து, கல்யாணம் பண்ணிக்கொடுத்தேன். நூத்துக்கும் அதிகமான லிட்டர் பாலை வண்டியில்வெச்சு தள்ளிட்டுபோய் வீடுகளுக்குக் கொடுத்தே என் வாழ்க்கையின் பெரும்பகுதியை கழிச்சிருக்கேன்" என்கிற பத்மாவதி அம்மா, துளிர்க்கும் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார். 

பத்மாவதி

"எனக்குன்னு பெருசா சொந்த பந்தங்கள் கிடையாது. கஷ்டமோ, நஷ்டமோ எதுவா இருந்தாலும், நானும் பொண்ணுங்களும்தான் பங்கு போட்டுக்கணும். பொண்ணுங்களின் கல்யாணத்துக்குப் பிறகு தனியா வாழ ஆரம்பிச்சேன். என் வாழ்க்கையோடு, அப்பப்போ தாய் வீட்டுச் சீதனம் செய்யணுமே. அதுக்காக, பால் சப்ளை வியாபாரத்தை இப்போவரை தொடர்ந்துட்டிருக்கேன். வயசாகறதால் என் உடம்பு சரியா ஒத்துழைக்கறதில்லை. அதனால், வீட்டு வேலை செய்யறதை விட்டுட்டேன். 40 வருஷத்துக்கும் மேல பால் சப்ளை மட்டும் செய்துட்டிருக்கேன். 

பத்மாவதி

விடியற்காலையில் நாலு மணிக்கு எழுந்துடுவேன். நாலறை மணிக்குப் பால் டெம்போ வரும். வண்டியிலிருந்து பாலை இறக்கி, என் தள்ளுவண்டியில் போட்டுக்கிட்டு கிளம்பினால், ஏழரை மணிக்குள்ளே நூறு வீடுகளுக்கும் மேலே சப்ளை செஞ்சு முடிச்சுடுவேன். கோடம்பாக்கம் டிரஸ்டுபுரத்தில் அப்பார்ட்மென்ட்கள் அதிகம். காம்பவுண்ட் வெளியே வண்டியை நிறுத்திட்டு, தேவையான பால் பாக்கெட்டுகலை ஒரு குண்டாவில் எடுத்துக்கிட்டு பல மாடிகளில் ஏறி இறங்கி ஒவ்வொரு பிளாட்டிலும் போடுவேன். வாங்கின செலவு போக ஒரு வீட்டுக்கு மாசத்துக்கு 50 ரூபாய் வருமானமா கிடைக்கும். 

இப்போ காலை நேரத்தில் மட்டும் நூற்றி ஐம்பதுக்கும் அதிகமான வீடுகளுக்குப் பால் சப்ளை செய்றேன். முன்னே மாதிரி நடக்கவும் வண்டியைத் தள்ளவும் முடியலை. என் ரெண்டுப் பொண்ணுங்க அப்பப்போ உதவிக்கு வருவாங்க. அவங்களுக்கு மாசத்தில் குறிப்பிட்ட தொகையை பிரிச்சுக் கொடுத்துடுவேன்" என்கிற பத்மாவதி அம்மா, இப்போது வரை தனியாகவே வாழ்ந்துவருகிறார். 

பத்மாவதி

 

"வீட்டுக்காரர் போனதிலிருந்து யார் நிழலையும் நம்பி நிற்கக் கூடாதுன்னு முடிவுப் பண்ணிட்டேன். இப்பவும் என் உடம்புல வலு இருக்கு. பால் வண்டியைத் தள்ளி பிழைச்சுட்டிருக்கேன். சாகுற வரை என் உழைப்புலதான் என் வயிறு நிறையணும்னு நினைக்கிறேன். அடிக்கடி உடலளவிலும் மனசளவிலும் ஏற்படும் வலிகளைத் தாங்கிக்கிறேன். வலியைவிட எனக்கு வைராக்கியம்தான் பெருசு. இங்கே பலரும் 'பால்காரம்மா பத்மா'னு என் மேலே பாசத்தைக் காட்டுறாங்க. அது போதும் எனக்கு'' எனச் சிரிக்கிறார் பத்மாவதி அம்மா. 

http://www.vikatan.com/news/tamilnadu/97865-this-78-year-old-woman-has-an-inspiring-message-to-the-world.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது உழைப்பிலேயே இறுதிவரை வாழனும் என்கிறது வைராக்கியம் மட்டுமல்ல அது ஒரு போதையும் கூட , ஆச்சியை வாழ்த்த வயசில்லை வணங்குவோம்....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.