Jump to content

வல்வெட்டித்துறை படுகொலையின் 28 ஆவது ஆண்டு நினைவு நாள்


Recommended Posts

வல்வெட்டித்துறை படுகொலையின் 28 ஆவது ஆண்டு நினைவு நாள்

5981ab1439723-IBCTAMIL.jpg
 
 
5981ab141e0eb-IBCTAMIL.jpg
 
 

1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் இன்னமும் அழியாத ஆறாத காயங்களாக தமிழ் மக்கள் உள்ளங்களில் நிலைத்திருக்கின்றன.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்ட நாள்.

ஜெயவர்த்தனா, இராஜீவ் கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த என இந்திய அமைதி காக்கும் படை (IPKF-Indian Peace Keeping Force) என்ற பெயரில் 1987இல் இலங்கைக்கு வருகை தந்தது.

இந்திய அமைதி காக்கும் படை ஆக்கிரமிப்பு படையாக உருமாறி ஈழ தமிழர்கள் பலரின் உயிர் குடித்தது.

இந்திய அமைதி காக்கும் படையை ஈழ மண்ணில் இருந்து விரட்ட தமிழீழ விடுதலை புலிகள் போராடினர்.

ஈழ தமிழ் மக்களுக்கு இந்த ஆக்கிரமிப்பு படை செய்த கொடுமைகளை எதிர்த்து தமிழ் மக்கள் அறவழி போராட்டங்களையும் நிகழ்த்தினார்.

அதன் உச்ச கட்டமாக   தியாகி திலீபன் யாழ்ப்பாணம் நல்லூரில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து மகாத்மாவானார்.

அவரை தொடர்ந்து தென்தமிழீழத்தில் பெற்ற பத்து பிள்ளைகள் இருக்க பாரதத்தை விரட்ட அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்து தியாகி ஆனார்.

அவரை தொடர்ந்து மேலும் பலர் உயிர் கொடுத்து போராட முன்வந்தனர். இவ்வாறாக தமிழ் மக்கள் போராட்டம் வலிமை பெற்று இந்திய எதிர்ப்பை வெளிப்படுத்தியதனால் தமிழீழ விடுதலை புலிகள் அப்போதைய சிறிலங்கா
ஜனாதிபதி பிரேமதாசாவுடனான சில உடன்பாடுகளை தொடர்ந்து பின்னர் மார்ச் 31, 1990 இல் இலங்கை அதிபர் பிரேமதாசவினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஈழத்தில் இந்திய படைகள் நீங்கினாலும் அவை விட்டு சென்று பாதக கொடுமைகளின் தடங்கள் 28 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அழியவில்லை. அவை ஆறாத காயங்களாக தமிழ் மக்கள் உள்ளங்களில் நிலைத்திருக்கின்றன.

https://news.ibctamil.com/ta/internal-affairs/28th-anniversary-of-the-Velvettuthurai-massacre

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.