Jump to content

’சின்ன பின் சார்ஜர் இருக்கா? ‘ கலகலப்பான முதல் வார தெலுங்கு பிக் பாஸ்! #BiggBossTelugu


Recommended Posts

’சின்ன பின் சார்ஜர் இருக்கா? ‘ கலகலப்பான முதல் வார தெலுங்கு பிக் பாஸ்! #BiggBossTelugu

 
 

சேவ் பரணி, ஓவியா ஆர்மி, பிந்து மாதவி என வாரம் ஒரு ட்ரெண்டாக லீடிங்கில் போய்க்கொண்டிருக்கிறது பிக் பாஸ். தமிழ் போலவே தெலுங்கு பிக் பாஸிலும் பரபரப்புக்குப் பஞ்சம் கிடையாது. ப்ராங்குகள், தண்டனைகள் என செம ஸ்ட்ரிக்ட் காட்டுகிறார் தெலுங்கு பிக் பாஸ். இரண்டு வாரங்களை நிறைவு செய்திருக்கும் தெலுங்கு பிக் பாஸின் முதல் வாரத்து ஹைலைட்ஸ் இதோ...

16 ஜூலை

பிக் பாஸ் Bigg Boss

தமிழ் போலவே முதல்  நாள் ஜூனியர் என்.டி.ஆர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று ''இது கிச்சன், இங்கே சமைக்கலாம், காய்கறி நறுக்கலாம், பால் காய்ச்சலாம். இது பெட்ரூம்... படுக்கலாம், உறங்கலாம்'' என வீட்டைச் சுற்றிக்காட்டுவதிலிருந்து தொடங்கியது முதல் எபிசோடு. அர்ச்சனா, சமீர், முமைத் கான், ப்ரின்ஸ், பாடகி மது ப்ரியா, 'பர்னிங் ஸ்டார்' சம்பூர்னேஷ் பாபு, ஜோதி, பாடகி கல்பனா, மகேஷ் கத்தி, கத்தி கார்த்திகா, சிவ பாலாஜி, ஹரிதேஜா, ஆதர்ஷ், தன்ராஜ் என 14 போட்டியாளர்களையும் வீட்டுக்குள் அனுப்பிவைத்து விதிமுறைகளை ஸ்பீக்கர் வழியாகச் சொல்லியது அந்த ரிக்கார்டட் குரல். ''மைக் மாட்டியிருக்கணும், தெலுங்குலதான் பேசணும், லைட் அணைக்கும் முன்னர் தூங்கக் கூடாது'' என ரூல்ஸ்களை அடுக்கினார் பிக் பாஸ்.

17 ஜூலை

லிவிங் ரூமுக்கு வரும்படி போட்டியாளர்கள் அழைக்கப்பட, அத்தனை பேரும் அவசர அவசரமாக ஓடினார்கள். இரவு 3 மணி.  வந்து ஒருநாள்கூட நிறைவடையவில்லை. இந்தச் சூழலில் இப்படி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது,  ''பிக் பாஸ் வீட்டில் வசிக்க, தகுதி குறைவாக உள்ளவர் யார்?''  சம்பூர்னேஷ், கார்த்திகா, ஜோதி ஆகிய பெயர்களே அதிகம் சொல்லப்பட, ''இந்த மூவரில் ஒரு பெயரைச் சொல்லுங்கள்'' என்ற கேள்வி, சமீரிடம் வைக்கப்படுகிறது. கொஞ்சமும் தயங்காமல் அவர் ''சம்பூ'' எனக் கூற, "பிக் பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக சம்பூர்னேஷை நியமிக்கிறேன்" எனச் சொன்னார் பிக் பாஸ். சம்பூ முகத்தில் அத்தனை பிரகாசம்.

Sampoornesh Babu

கேப்டனுக்கு எலிமினேஷனிலிருந்து விலக்கு, எந்த வேலையும் செய்யத் தேவையில்லை, அவருக்கு என ஸ்பெஷலான படுக்கை எனச் சில சிறப்புச் சலுகைகள் கேப்டனான சம்பூவுக்கு.  

18 ஜூலை

இரண்டாவது நாள், வீட்டில் ஒவ்வொருவரும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என தன்ராஜ் இமிட்டேட் செய்து காண்பிக்க, மொத்த கூட்டமும் விழுந்து விழுந்து சிரித்தபடி விடிகிறது அந்தக் காலை. "ட்ரெட்மில்லில் யாரு துண்டைக் காயப் போட்டது?" என தன்ராஜே பிரச்னையை  ஆரம்பிக்க, அதைச் செய்த முமைத் கான் அவரைக் கட்டிப்பிடித்துச் சமாதானம் செய்துவைக்க இன்ஸ்டன்ட் சமாதானம் நடக்கிறது. திடீரென கேமரா முன் நின்று கல்பனா, ''கனகாங்கி ராகத்துக்கும், ரத்னாங்கி ராகத்துக்கும் சின்ன வித்தியாசம்தான்'' எனச் சொல்லி குட்டியூண்டு கச்சேரியை நடத்திக்கொண்டிருக்க, ''நைட் செய்த சாப்பாடு அப்படியே ஃப்ரிட்ஜ்ல இருக்கு கொஞ்ச நேரத்துல கெட்டுப்போயிடும்'' என சீரியஸ் வாக்குவாதத்தை ஒரு பக்கம் நடத்திக்கொண்டிருக்கிறார் ஹரிதேஜா. சோலோ பெர்ஃபாமன்ஸாக நீச்சல்குளத்துக்கு அருகில், ''பிக் பாஸ், இங்கே எல்லாரும் வயசு அதிகம் இருக்கிறவங்கதான். எனக்கு பேச்சுத் துணைக்கு என் வயசு உடைய ஒரு பொண்ணு இருந்தா நல்லாயிருக்கும்'' என பவ்வியமாக வேண்டுகோள் வைக்கிறார் ப்ரின்ஸ்.

இந்த நேரத்தில், இரண்டாவது டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதைப் பற்றி விவரிக்கிறார் ஹரிதேஜா,

"நீங்கள் கொண்டுவந்திருக்கும் உடைகள், பொருள்களில் உங்களால் அணிந்துகொள்ள முடிந்த அளவுக்கான (அதாவது நான்கு பேன்ட் வேண்டும் என்றால், ஒன்றன் மீது ஒன்றாக அதை நீங்கள் அணிந்துகொள்ள வேண்டும். உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் உங்கள் உடலிலேயே அணிந்திருக்க வேண்டும்) பொருள்களை எடுத்துக்கொள்ளுங்கள். மீதம் இருக்கும் பொருள்களை பெட்டியில் வைத்து அடைத்து, எல்லோருடைய பெட்டிகளையும் ஸ்டோர் ரூமில் வைக்க வேண்டும்.

Danraj

இந்தத் துணிகளை மறுபடியும் மீட்பதுதான் டாஸ்க். அதாவது நீச்சல்குளத்துக்கு அருகில் அக்னிக்குண்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கும். அதில் தீ வளர்க்கத் தேவையான விறகுகள், நெய் போன்றவை இருக்கின்றன. அந்த அக்னிக் குண்டம் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்க வேண்டும். இதனிடையில் சைரனை ஒலித்து 'யாருடைய சூட்கேஸைத் திருப்பித் தரவேண்டும்?' எனக் கேட்கப்படும். அனைவரும் ஒருமனதாக ஒருவருடைய பெயரைச் சொல்ல வேண்டும். இப்படியாக ஒவ்வொரு நபருடைய சூட்கேஸையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், அத்தனை பேருடைய சூட்கேஸும் திரும்பப் பெரும் வரை அக்னிக்குண்டம் எரிந்துகொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால், டாஸ்க் இன்கம்ப்ளீட்"  என விநோதமான டாஸ்க் கொடுக்கப்பட, அதற்கும் ''ரெடி'' என வருகிறார்கள் 14 பேரும். அக்னிக்குண்டம் பற்றவைக்கப்படுகிறது. இடையில் "கேப்டனுக்குப் பொறுப்பே இல்லை" என அலுத்துக்கொண்டு பாத்திரம் கழுவிக்கொண்டிருக்கிறார் முமைத் கான். எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு இரவு எல்லோரும் அக்னிக்குண்டத்துக்கு அருகில் கேம் ஃபயர் செட்டப்பில் அமர்ந்திருக்க, ஆதர்ஷ் மாத்திரம் சரிந்து விழுகிறார். எல்லோரும் என்ன ஆச்சோ எனப் பதறிக்கொண்டிருக்க, அது சும்மா ப்ராங்க் என முகத்தில் ஜாடை காட்டியவாறு ஆதர்ஷை அணைத்துக்கொள்கிறார் தன்ராஜ். இவரும் ஆதர்ஷும் சேர்ந்து போட்ட ப்ளான் உல்டாவாகி தன்ராஜைக் கடுமையாகக் கடித்துவைக்கிறார் ஆதர்ஷ். வலி தாங்க முடியாமல் தன்ராஜ் கதர, ஸாரி சொல்லி சமாதானப்படுத்தி, காயம் பட்ட இடத்தில் ஐஸ் வைத்துக்கொண்டிருக்க மறுபடி பதறவைக்கும் ரியாக்‌ஷன் கொடுக்கிறார் ஆதர்ஷ். அவரை அழைத்துக்கொண்டுபோய் படுக்கவைக்க "விஸ்கி விஸ்கி.... விஸ்கி வேணும்" என மூச்சு வாங்கியபடி கேட்கிறார். ''இங்கே அதெல்லாம் கிடைக்காது'' என எல்லோரும் சமாதானம் செய்தவாறு அந்த நாள் முடிகிறது.

19 ஜூலை

சூட்கேஸ் மீட்கும் டாஸ்கில் ஒவ்வொருவர் சூட்கேஸாகப் பெற்றுக்கொள்ளப்படுகிறது. மூன்றாவது நாள், அக்னிக்குண்டத்துக்கு அருகே ஹரிதேஜா, மது ப்ரியா இருக்க, அங்கு வரும் அர்ச்சனா. "நீயே எவ்வளோ நேரம் புகையில உட்கார்ந்திருப்ப" என்று கேட்கிறார். "சரி நீங்க இங்கே வாங்க அக்கா''. ''எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. உங்களுக்கு எதுவும் ஆகக் கூடாது" என்று சிடுசிடுத்தபடி புகையடிக்கும் பக்கம் வந்து அமர்கிறார். ''நான் அப்படி மீன் பண்ணலை மது'' என சமாதானப்படுத்துவதும்,  அதை மற்றவர்களிடம் அர்ச்சனா கூறுவதுமாக ஆரம்பிக்கிறது அந்த நாள். ஆதர்ஷ் ப்ரின்ஸுடன் "இங்கே இருக்கிறவங்கள்ல உனக்கு மட்டும்தான்டா கல்யாணம் ஆகலை" எனப் பேசிக்கொண்டிருக்க, "இப்போ இப்பிடியான பேச்செல்லாம் அவசியமா?" என சண்டையை ஆரம்பிக்கிறார் ஹரிதேஜா. அப்போது அங்கு வரும் சம்பூர்னேஷ் பாபு "ஏங்க,  யார்கிட்டயாவது சின்ன பின் சார்ஜர் இருக்கா?" எனக் கேட்டு அந்தச் சூழலை மாற்ற முற்படுகிறார். ஆனாலும், அதே பிரச்னையை விடாமல் தொடர்கிறார் ஹரிதேஜா.

பிறகு சிறிது நேரம் கழித்துதான் அவர்கள் பேசிக்கொண்டது சும்மா ப்ராங் எனச் சொல்லி விளக்கி எல்லோரையும் சமாதானப்படுத்துகிறார். இதற்கிடையில் சமீருக்கு ரகசிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது. ''ஆதர்ஷ், அர்ச்சனா, தன்ராஜ், முமைத் கான், ப்ரின்ஸ் ஆகியோரின் லக்கேஜுகளைத் திரும்பப் பெற முடியாதவாறு செய்ய வேண்டும். இதைச் செய்யவில்லை என்றாலோ, மற்றவர்களுக்கு சொன்னாலோ அடுத்த வார நாமினேஷனில் நேரடியாக உங்கள் பெயர் இடம்பெறும்'' எனச் சொல்லப்படுகிறது. ஆனால், அதில் பெரிய ஆர்வம் காட்டாத சமீர், வெளியில் வந்து சகஜமாவதோடு முடிகிறது எபிசோடு.

20 ஜூலை

Bigg Boss

அக்னிக்குண்டத்தில் போடுவதற்கு விறகுகள் தீர்ந்துபோய்விட, "இன்னும் விறகு கொடுங்க ப்ளீஸ்" என ப்ரின்ஸ் கேட்கிறார். "டாஸ்க் முடியும் வரை அக்னிக் குண்டம் எறிய வேண்டும் என்பதுதான் ரூல். ஆனால் நீங்கள், அதைக் கடைப்பிடிக்கவில்லை. சமீருக்குக் கொடுத்த சீக்ரெட் டாஸ்கில் அவரும் தோற்றுவிட்டார். எனவே, மொத்தத்தில் நீங்கள் இந்த டாஸ்கில் தோல்வியடைந்திருக்கிறீர்கள்" என பிக்பாஸ் குரல் ஒலிக்கிறது. இதனிடையில் லக்ஸுரி பாயின்ட்ஸ் பற்றியும் பொருள்கள் வாங்குவது பற்றியும் அறிவிப்பு வருகிறது. என்னென்ன தேவை என ஆலோசித்துக்கொள்கிறது குழு. தேவையானவற்றை முடிவுசெய்து போர்டில் எழுதி ஸ்டோர் ரூமில் வைக்கிறார்கள்.  

நான்காவது நாள், "வீட்டுக்குள் தெலுங்குதான் பேச வேண்டும் என்பதையும், ஸ்மோக்கிங் ரூமுக்குள் ஒரு நேரத்தில் ஒருவர்தான் செல்ல வேண்டும் என்பதையும் நீங்கள் மீறியிருக்கிறீர்கள். எனவே, ஒரு கேப்டனாக சம்பூ தன் கடமையை சரிவர செய்யவில்லை என அவர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவதோடு, இனி கேப்டனாக எப்போதும் ஆக முடியாது'' என்றும் தெரிவிக்கப்படுகிறது. ''இந்த ஷோவைப் பார்ப்பவர்கள் தெலுங்கு பேசும் மக்கள். ஆனால், நீங்கள் மற்ற மொழிகளில் பேசி ஆடியன்ஸைச் சிரமப்படுத்துகிறீர்கள். முமைத் கானுக்கு தெலுங்கு பேசத் தெரியாது என்பதால், அவருக்கு தெலுங்கு சொல்லிக்கொடுக்கும் பொறுப்பை ஜோதிக்குக் கொடுக்கிறேன். வீட்டிலிருக்கும் மற்றவர்கள் தெலுங்கு தவிர வேறு பாஷை பேசினால், முமைத் கான் அவர்களுக்கு தண்டனை கொடுப்பார். வீட்டில் அனைவரைவிடவும் அதிகமாகத் தூங்கிய ஆதர்ஷ், சிவ பாலாஜி, தன்ராஜ், சமீர், சம்பு ஆகியோர் கார்டன் ஏரியாவில் உள்ள சைக்கிளை இரவு முழுக்க ஓட்டவேண்டும். யாராவது சைக்கிள் ஓட்டுவதை நிறுத்தினாலோ, இறங்கினாலோ வீட்டுக்குள் விளக்குகள் எரியும், சைரன் ஒலிக்கும்" என பிக்பாஸ் கடுமையான குரலில் சொல்கிறார்.

Bigg boss telugu

சொன்னதுபோல கார்டன் ஏரியாவில் இருவர் அமர்ந்து ஓட்டும் சைக்கிள் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. லைட்ஸ் ஆஃப் சைரன் எல்லாமும் சில முறை நடக்க, பிறகு ''தண்டனை முடிந்துவிட்டது. நீங்கள் உள்ளே செல்லலாம்'' என்றபடி முடிகிறது அந்த நாள்.

21 ஜூலை

ஐந்தாம் நாள், தெலுங்கு தவிர வேறு மொழியில் பேசிய ப்ரின்ஸுக்கு முமைத் கான் தண்டனை தருவதிலிருந்து தொடங்குகிறது அந்த நாள். "முமைத் கான் மாதிரி பொண்ண இதுவரை, எங்கேயும் பார்த்ததே இல்லைனு, இங்கே இருக்கும் பத்து கேமராவுக்குப் போய் சொல்லு" என தண்டனை கொடுக்கிறார் முமைத் கான். அதைக் கடுப்புடன் செய்யும் ப்ரின்ஸை, சிரிச்சுக்கிட்டே ''சொல்லுப்பா'' என நக்கலடிக்கிறார் முமைத் கான். வீட்டில் இருக்கிறவங்க ஞாபகமாவே இருக்கு என அழுதபடி, எல்லோரிடமும் புலம்பிக்கொண்டிருக்கிறார் மது ப்ரியா. அவரைச் சமாதானப்படுத்த முமைத் கான், இந்தி டு தெலுங்கு டிரான்ஸ்லேட்டர் ஜோதியிடம் கேட்டு பேசுகிறார். "அழுதைனா நீ, அடிப்பேன் உன்ன" என கூகுள் டிரான்ஸ்லேட்டர்போல தத்தக்கா பித்தக்கா தெலுங்கில் பேசுவதைப் பார்த்து ஏரியாவே கலாட்டாவாகிறது. இடையில் "எனக்கு ஜோதி தெலுங்கு டீச்சரா வேணாம், மகேஷ் காரூவை டீச்சரா மாத்துங்க" என கேமராவைப் பார்த்து கொஞ்சுகிறார் முமைத் கான். அடுத்த டாஸ்காக வீட்டுக்கு கேப்டன் நியமனம் குறித்த அறிவிப்பு வருகிறது. நீச்சல்குளத்தில் உள்ள ஸ்மைலி பாலை வாயால் எடுத்து வந்து வாளியில் போட வேண்டும். இந்தப் போட்டியில் இருவர் கலந்துகொள்ள வேண்டும். ஜெயிக்கும் ஒருவரே கேப்டன். அந்த இருவரை நீங்கள் தேர்ந்தெடுங்கள் என அறிவிப்பை வாசித்து முடிக்கிறார் மது ப்ரியா.

Kalpana

கல்பனா, முமைத் கான் கலந்துகொண்ட இந்த டாஸ்கில், கல்பனா வெற்றிபெற்று கேப்டனாகத் தேர்வாகிறார். ஸ்மோக்கிங் ஏரியாவுக்குள் ஒரே சமயத்தில் பலர் சென்றதால், சிகரெட்டை பிக் பாஸ் அனுப்பவில்லை. எனவே, தன்ராஜ், சிவ பாலாஜி மற்றும் சம்பூ ஆகியோர் கேமரா முன் நின்று தங்களுக்கு சிகரெட் வேண்டும் எனக் கேட்கிறார்கள். சிகரெட் வரும் வரை ரூல்ஸ் எதையும் ஃபாலோ செய்யப்போவதில்லை என, தன் பின்னால் ஒன்பது பேர்கொண்ட ஒரு புரட்சிப் படையை உருவாக்குகிறார் பாலாஜி. அதில் சப்போர்ட், சப்போர்ட் இல்லை என சில சலசலப்புகளும் உண்டாகின்றன. இது சம்பந்தமாகப் பேசுவதற்கு கேப்டன் கல்பனா பிக் பாஸால் அழைக்கப்படுகிறார். ''யாராவது ஒருவர் சிகரெட் பிடித்தாலும், வீட்டில் உள்ள மற்ற அனைவரும் பாத்ரூம் ஏரியாவுக்குச் செல்ல வேண்டும் என்பது, முன்பே கொடுக்கப்பட்ட தண்டனை. அதைக் கடைப்பிடிப்பதாக இருந்தால் சிகரெட் அனுப்புவேன்'' எனச் சொல்கிறார் பிக் பாஸ். எனவே, அதற்கு ஒப்புக்கொள்கிறோம் என்ற வாக்குறுதியை கேமரா முன் சொல்கிறார் தன்ராஜ். உடனே பிக் பாஸால் நான்கு பாக்கெட் சிகரெட் வழங்கப்படுகிறது. அதேபோல் 13 பேரும் பாத்ரூமில் காத்திருக்க சிகரெட் பிடிக்கவேண்டியவர்கள் ஸ்மோக்கிங் ஏரியாவுக்குப் போய் வந்தார்கள்.

Siva Balaji

இது தங்களுக்கு குற்ற உணர்வாக இருப்பதால், "இனி ஒருவருக்கு மேல் சென்று சிகரெட் பிடிக்க மாட்டோம். ப்ளீஸ், இந்த 13 பேர் கான்செப்டை மாற்றுங்கள்" எனக் கோரிக்கை வைக்கிறார்கள் தன்ராஜ், சம்பூ, ஆதர்ஷ், முமைத் கான், சிவ பாலாஜி, சமீர்.

ஜுலை 22

Bigg Boss

'பிக் பாஸ்' ஹிட்டானதில் சந்தோஷம் என்றபடி மேடையில் தோன்றுகிறார் என்.டி.ஆர். "இதுக்கு பரிசா பிக்பாஸுடைய கண்ணு எப்பிடி இருக்கும்னு காட்ட தோணுச்சு" எனச் சொல்லி, கேமரா கண்காணிப்பு அறைக்கு அழைத்துச் சென்று காட்டுகிறார். ஆறாவது நாள், "நீங்க ஏன் சிகரெட்டுக்கு சப்போர்ட் பண்ணீங்க?'' என கல்பனாவிடம் கேட்க, சம்பூ, மது ப்ரியாவுக்கு இங்கு தங்கவே பிடிக்கவில்லை என்ற பிரச்னைகளுடன் தொடங்குகிறது. ''நான் கிளம்புகிறேன். எனக்கு நெஞ்சு வலிக்கிறது'' என சம்பூ அழ ஆரம்பிக்கிறார். மருத்துவர் வரவழைக்கப்பட, சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் சம்பூ. "சம்பூவை இன்னும் ஒரு வாரம் இங்கே தங்கவைக்கிறேன். ஆனால், அடுத்த வாரம் அவரை நீங்களே வெளியே அனுப்பிடுங்க. அப்போ அவருக்கு இங்கே தங்கணும்னு தோணுச்சுனா தங்கட்டும், இல்லைன்னா அனுப்பிடுங்க" என சம்பூவுடன் சேர்ந்து கேமரா முன் சொல்கிறார் தன்ராஜ். இடையில் "ஒருவர் சிகரெட் பிடிக்கையில் மற்ற 13 பேரும் பாத்ரூமில் இருக்க வேண்டும் என்கிற தண்டனை தளர்த்தப்படுகிறது" என அறிவிக்கப்படுகிறது. தமிழில் 'அகம் டிவி' போல, தெலுங்கில் 'நா டிவி' வழியாக 14 பேருடனும் பேச ஆரம்பிக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். மகேஷ் கத்தின் பனிஷ்மென்ட் டான்ஸ், முமைத் கானின் தெலுங்கு, கார்பெட்டை சுத்தம் செய்தது துடைப்பமா... பிரெஷ்ஷா? என்று கார்த்திகா - ஜோதிக்கு இடையில் நடந்த வாக்குவாதம், சின்ன பின் சார்ஜர், பகல் தூக்கம், சிகரெட் போராட்டம், தன்ராஜ் - ஆதர்ஷ் ப்ரான்க், ப்ரின்ஸில் கேர்ள் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட், ஹரிதேஜா ப்ரான்க் என ஐந்து நாள்கள் நடந்தவற்றை ரிகேப் செய்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். பிறகு, ஜூனியர் என்.டி.ஆரின் கார லட்டு டாஸ்க் முடிந்த பிறகு மது ப்ரியா, கத்தி கார்த்திகா, ஜோதி, ஹரிதேஜா, மகேஷ் கத்தி ஆகியோர் நாமினேஷனில் இருப்பது தெரிவிக்கப்படுகிறது. அதில் மது ப்ரியா, கத்தி கார்த்திகா சேஃப் ஸோனில் இருப்பதாகவும், மகேஷ் கத்தி வெளியேறுகிறார் எனச் சொல்லப்பட, "நான்தான் இவர் வெளியேறணும்னு நாமினேட் பண்ணேன். ஆனா, இவரு ரொம்ப நல்லவர். வெளியே அனுப்பாதீங்க!" எனக் குழந்தைபோல அழ ஆரம்பிக்கிறார் முமைத் கான். ''சரி ஓகே, யார் வெளியேறப்போறாங்கனு நாளைக்குச் சொல்றேன்'' என்று நிகழ்ச்சியை முடிக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.

ஜூலை 23

Jr NTR

எலிமினேஷன் பரபரப்புகளுக்கிடையே ஆரம்பிக்கிறது ஏழாம் நாள். அந்த ஏழு நாள்கள் நடந்தவற்றை எஸ் ஆர் நோ கேள்விகளாக என்.டி.ஆர் கேட்டு அவர்களை சகஜமாக்க முயற்சிக்கிறார். கூடவே பிக் பாஸ் எப்படி  இருப்பார் என கலர் ஸ்கெட்ச் பேப்பர் கொடுத்து வரைய சொல்கிறார். பிறகு, ''நாமினேஷனில் உள்ள மூவரில் ஜோதி வெளியேறுகிறார்'' என்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். தமிழ்போலவே எலிமினேட் ஆகிய ஜோதி, பிக் பாஸ் ஸ்டேஜில் ஏழு நாள்களைப் பற்றி நீதிமன்றக் கூண்டுபோல ஒரு செட்டப்பில் ஏற்றி விசாரிக்கப்பட்ட, ''எது நிஜம், இதுக்கு நீங்க என்ன நினைக்கிறீங்க?'' எனக் கேட்கப்பட்டு நிகழ்ச்சி முடிக்கப்படுகிறது. அதற்கு முன் ஜோதிக்கு ஒரு பவர் கொடுக்கப்படுகிறது. "நீங்க யார் பெயரைச் சொல்றீங்களோ, அடுத்த ஒரு வாரத்துக்கு எல்லோர் துணிகளையும் அந்த ஒருத்தர்தான் துவைக்கணும்" எனச் சொல்லவும் ப்ரின்ஸ் பெயரைச் சொல்கிறார். அப்படியே கையோடு ஜோதிக்கு ஒரு குறும்படத்தை டெடிகேட் செய்து நிகழ்ச்சியை முடிக்கிறார்கள்.

 

முதல் வாரம் தெலுங்கு பிக் பாஸில் நடந்தவை இவைதான்.   இரண்டாவது வாரம் நிகழ்ந்தவைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்!
டக்கு சிக்கு டக்கு சிக்கு பிக் பாஸ்

http://www.vikatan.com/cinema/tamil-cinema/television/97601-what-is-happening-in-bigg-boss-telugu-version.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

‛என்ன விளையாடுறீங்களா?’- டென்ஷனான பர்னிங் ஸ்டார்...! - தெலுங்கு பிக் பாஸ் அப்டேட்! #BiggBossTelugu

 
 

முதல் வாரம் போன்றே இரண்டாவது வாரத்திலும் அத்தனை எமோஷன்கள், சின்னச் சின்னத் தவறான புரிதல்கள், டாஸ்க்குகள், சில சர்ப்ரைஸ் எனக் கலவையாக இருந்தது தெலுங்கு `பிக் பாஸ்'. அதன் ஹைலைட்ஸ் இதோ...

இது ஒண்ணும் ஹாஸ்டல் கிடையாது:

பிக் பாஸ்

* புது கேப்டனான கல்பனா, “ரூமை நீங்க க்ளீன் பண்ணுங்க. நீங்க டாய்லெட்டைச் சுத்தமா வெச்சுக்கோங்க" என எல்லோருக்கும் வேலைகளைப் பிரித்துக் கொடுக்க ஆரம்பித்தார். இது முமைத் கானுக்குப் பிடிக்கவில்லை, ``க்யாரே... க்யூ இத்னே ஸ்ட்ரிக்ட்மே, இது ஹாஸ்டல் கிடையாதுல. எதுக்கு இப்படி ஸ்ட்ரிக்டா இருக்காங்க?" என முமைத் அழ, அவரை கல்பனா சமாதானப்படுத்தியது தனிக்கதை.

* தொடர்ந்து அடுத்த நாளும் ``ஏம்மா, எழுந்ததும் பெட்டை மடிச்சு வைக்க எவ்வளோ நேரம் ஆகப்போகுது?" எனக் கல்பனா க்ளாஸ் எடுக்க, இதையே அன்றைக்குப் பெரிய டாப்பிக்காக எல்லோரும் பேசினார்கள்.

காபி பொடியைக் காணோம்:

Dhanraj

* தன்ராஜ் சமைத்துக்கொண்டிருக்கும்போது ஜாலியாகப் பாட ஆரம்பிக்க, எசப்பாட்டை ஸ்பானிஷ் மொழியில் பாடிக்கொண்டே கல்பனா வருகிறார். கல்பனா பாட, தன்ராஜ் பாலே ஆட ஒரே ரகளையானது இடம்.

* `வீட்டில் இருக்கும் பெண்களிடம், ஆண்கள் எல்லோரும் ப்ரப்போஸ் செய்ய வேண்டும். போட்டி முடிந்ததும், யார் மிக அழகாக ப்ரப்போஸ் செய்தார் என, பெண்கள் ரிசல்ட் கூற வேண்டும்' என்று டாஸ்க் கொடுக்கப்பட, வீடு முழுக்க ப்ரப்போஸ்கள் பறக்கின்றன. அதில், ``உன்னை நான் காதலிக்கிறேன். நீ உடனே பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை. நான் உன்னோட கல்யாணம் வரை காத்திருப்பேன். அது என்கூட நடக்கும்கிற நம்பிக்கையில" என தன்ராஜ் செய்த ப்ரப்போஸ்தான் ஹைலைட்.

Mumaith Khan

* முமைத், அர்ச்சனா இருவரும் காபிப்பொடியை ஒளித்துவைத்தது, வீட்டுக்குள் நடந்த நாடகம், கேப்டனுக்கான போட்டி, சிவபாலாஜி குளிக்காதது என ஐந்து நாள்களில் நடந்தை எல்லாம் ஜூனியர் என்.டி.ஆர் ரீகேப் செய்ய, வீட்டில் இருப்பவர்களுக்குள்ளேயே ``இதெல்லாம் எப்ப நடந்துச்சு... சொல்லவே இல்ல!" என்ற ரியாக்‌ஷன்கள். 

* அர்ச்சனா மற்றும் சமீர் கேமரா முன் நின்று ``எங்களுக்கு இந்த டாஸ்கெல்லாம் போரடிக்குது. ஒருநாள் முழுக்க நடக்கிற மாதிரி பார்ட்டி ஏற்பாடு பண்ணுங்க. ஒயின், சாக்லேட் எல்லாம் குடுக்கச் சொல்லுங்க" எனக் கேட்ட க்ளிப்பிங்கைப் பார்த்த ஜூனியர் என்.டி.ஆர், ``நான் இங்கே `பிக் பாஸ்' நடத்துறேனா இல்லை பார் நடத்துறேனா?" எனக் கலாய்த்துவிட்டு, ``வெளுத்துப்புடுவேன் வெளுத்து. அதெல்லாம் இங்கே கிடைக்காது. மறுபடியும் கேட்காதீங்க" எனக் கண்டித்தார்.

நாமினேஷன்:

* சம்பூவும் மதுவும் `வீட்டுக்குப் போக வேண்டும்' என அழுது புலம்பிக்கொண்டே இருப்பதால், இந்த இருவரையுமே எல்லோரும் நாமினேட் செய்தார்கள். சமீர், பிரின்ஸ், மது ப்ரியா, சம்பூர்னேஷ் பாபு ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டார்கள்.

உங்களுடைய வில்லன் யார்?:

Archana

* `கார்டன் ஏரியாவில் நான்கு கூண்டுகள் உள்ளன. வேட்டைக்காரர்கள், வெளியே உள்ள விலங்குகள், கூண்டுக்குள்ளே உள்ள விலங்குகள் எனப் போட்டியாளர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறார்கள். கல்பனா, சமீர், சிவபாலாஜி ஆகியோர் வேட்டைக்காரர்கள். வெளியே சுதந்திரமாக இருக்கும் விலங்குகளாக முமைத், பிரின்ஸ், ஆதர்ஷும், கூண்டுக்குள் அடைப்பட்ட விலங்குகளாக மது ப்ரியா, கார்த்திகா, தன்ராஜ், ஹரிதேஜா, அர்ச்சனா, மகேஷ் கத்தி ஆகியோரும் இருப்பார்கள். டாஸ்க் முடியும் வரை விலங்குகள், பழங்களும் காய்கறிகளும் மட்டுமே சாப்பிட வேண்டும். வெளியே இருக்கும் விலங்குகள், கூண்டுக்குள் இருக்கும் விலங்குகளை விடுதலை செய்யவேண்டும். ஆனால், ஒருமுறை ஒரு விலங்கை மட்டுமே விடுதலை செய்ய முடியும். இது நடக்காமல் வேட்டைக்காரர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இறுதியில் வேட்டைக்காரர்களோ, விலங்குகளோ யாரேனும் ஒரு குழு வெற்றியடைவார்கள்'. ``சரிங்க சரிங்க... பண்ணிடலாம்" எனச் சொல்லிவிட்டு, சொதப்பலாக அந்த டாஸ்கைச் செய்ய, ``உங்களுக்கு லக்ஸூரி பாயின்ட்ஸும் கிடையாது... ஒண்ணும் கிடையாது" என காண்டாகிறார் `பிக் பாஸ்'.

* `வீட்டுக்குப் போகணும்', `இவ்வளவு கண்டீஷன்லாம் ஆகாது' என எங்கு திரும்பினாலும் ஒரே அழுகையாக இருப்பதால், வீட்டினருக்குக் கலகலப்பாக்க ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.  `வீட்டினர் ஒவ்வொருவருக்கும் ஒரு திரைப்படக் கதாபாத்திரம் வழங்கப்படுகிறது. அவர்களிடம் உள்ள பொருள்களைக்கொண்டே அந்தக் கதாபாத்திரம்போல மேக்கப் செய்துகொள்ள வேண்டும். அதற்கு ஏற்றதுபோல ஒரு நாடகத்தை நடித்துக்காட்ட வேண்டும். இறுதியில் அவர்களுக்குள்ளேயே சிறந்த நடிகர், சிறந்த நடிகை யார் என முடிவுசெய்துகொள்ள வேண்டும். நாடகம் முடிந்து கல்பனாவை சிறந்த நடிகையாகவும், ஆதர்ஷை சிறந்த நடிகராகவும் தேர்ந்தெடுத்தது குழு. 

Kalpana

* வார இறுதியில் எலிமினேஷன் பற்றிப் பேசும் முன், போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தார் ஜூனியர் என்.டி.ஆர். கத்தியால் செய்யப்பட்ட நாற்காலி ஒன்றை வீட்டுக்குள் அனுப்பிவைத்து, ``இந்த வீட்டில் நீங்கள் யாரை வில்லனாக நினைக்கிறீர்களோ அவரை அந்த நாற்காலியில் உட்காரவைத்து, ஏன் அவரை வில்லனாக நினைக்கிறீர்கள்?" எனச் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் வில்லனை நாற்காலியில் அமரவைத்து அறிமுகப்படுத்தி, அதற்குக் காரணம் சொல்லி, `இதை சீரியஸா எடுத்துக்காதீங்க" எனச் சமாளித்து டாஸ்க்கை ஒருவழியாக முடித்தார்கள்.

கேப்டனுக்கு குதிரை ரேஸ்:

Prince

* கேப்டனுக்கான தேர்வுக்கும் வித்தியாசமான போட்டி ஒன்றை யோசித்துவைத்திருந்தது `பிக் பாஸ்' குழு. பெரிய சைஸ் பொம்மை குதிரை அது. அதில் போட்டியாளர்கள் ஏறி அமர்ந்துகொள்ளவேண்டும். யார் அதிக நேரம் ஆடுகிறார்களோ அவர்கள்தான் கேப்டன். ஈஸியாகத் தோன்றுகிறதா, அங்கேதான் ட்விஸ்ட். ஆடிக்கொண்டிருக்கும்போதே இடையிடையில் பஸர் ஒலிக்கும். அப்போது குதிரையில் அமர்ந்திருப்பவருக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுக்கப்படும். அதை, குதிரையில் ஆடிக்கொண்டே, ஒரே மூச்சில் குடிக்க வேண்டும். தண்ணீர் குடித்ததால் ஏற்படும் நெருக்கடியையும் தாங்கிக்கொண்டு, யார் அதிகநேரம் குதிரையில் ஆடுகிறாரோ, அவரே கேப்டன். எப்பூடி..? கலந்துகொண்ட மூவரில், சிவபாலாஜி முதலில் இறங்கிவிட, மீதம் இருக்கும் பிரின்ஸையும் கல்பனாவையும் உற்சாகப்படுத்த, பாட ஆரம்பித்தார் மது ப்ரியா. கடைசியில் பிரின்ஸ் வெற்றி பெற்று கேப்டன் ஆனார்.

டென்ஷனான சம்பூ:

* ஏதோ ஒரு காரணத்துக்காக, வீட்டிலிருந்து கார்டன் ஏரியாவுக்கும் கழிவறைக்கும் செல்லும் வழி அடைக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே நான்கு சுவருக்குள் அடைப்பட்ட ஃபீலிங்கில் இருந்த சம்பூ, மேலும் வெறியானார். கையில் இருந்த தலையணையை விசிறியடித்து டென்ஷனான சம்பூவை அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்த முயற்சிசெய்தார்கள். ஆனால், சம்பூ இன்னும் இன்னும் கோபமாகி ``என்ன விளையாடுறீங்களா?" என கேமரா முன் கத்தினார். சிறிது நேரத்திலேயே  கன்ஃபெஷன் ரூமுக்கு அழைக்கப்படுகிறார் சம்பூர்னேஷ். ``என்னால இந்த நாலு சுவருக்குள்ள இருக்க முடியலை. நான் கிளம்புறேன்" எனச் சொல்ல, ``நீங்க உங்க விருப்பத்தோடுதானே உள்ளே வந்தீங்க. `பிக் பாஸ்' விதிமுறைகளை மாற்ற முடியாது. நீங்க இங்கே இருக்கும்வரை விதிகளைக் கடைப்பிடிச்சுதான் ஆகணும்" என்றார் பிக்பாஸ். ``இல்லை, நான் இங்கேயிருந்து போயே ஆகணும்" என பரணியின் தெலுங்கு வெர்ஷன்போல சம்பூ பேச, ``சரி, கன்ஃபெஷன் ரூமிலிருக்கும் இடதுபுறக் கதவைத் திறந்து நீங்கள் வெளியே போகலாம்" என அனுப்பிவைக்கிறார் `பிக் பாஸ்'.

* திடீரென முமைத் கான் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைக்கப்பட்டார். ``சில சட்டப் பிரச்னைகள் காரணமாக நீங்கள் `பிக் பாஸ்' வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது. தன் உடைகளை பேக் செய்யும் முமைத்தைப் பார்க்கும் மற்றவர்கள், `ஏதோ விளையாடுகிறார்போல' என எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், சீரியஸாகக் கிளம்புவதைப் பார்த்ததும் `என்ன காரணம்?' எனக் கேட்டு நச்சரித்தார்கள். ஆனால், அவர்களுக்குக் காரணம் என்ன என எதுவும் சொல்லாமல் கிளம்பினார் முமைத். அவரின் `தோஸ்த்து... படா தோஸ்த்து' தன்ராஜ் கதறி அழ ஆரம்பிக்க, `பேபி... இட்ஸ் ஓகே. நான் போயே ஆகணும்" என சமாதானம் செய்து அங்கிருந்து வெளியேறினார் முமைத். 

திடீர் ரீஎன்ட்ரி:

நள்ளிரவு திடீரென விளக்குகள் ஒளிர்கின்றன. கன்ஃபெஷன் ரூமிலிருந்து முமைத் ஒவ்வொருவர் பேராகச் சொல்ல ஆரம்பிக்கிறார். எல்லோரும் முமைத் திரும்ப வரப்போகிறார் என உற்சாகமானார்கள். அதேபோல ஸ்டோர் ரூமிலிருந்து கம்பேக் கொடுத்தார் முமைத். 

Sampoornesh Babu

`பிக் பாஸ்' வீட்டிலிருந்து வெளியேறிய சம்பூவை மேடையில் அழைத்து ``என்ன ஆச்சு?" என விசாரித்தார் ஜூனியர் என்.டி.ஆர். ``என்னால நாலு சுவருக்கு நடுவுல இருக்க முடியலை. அதனால்தான் கிளம்பினேன்" எனத் தழுதழுத்தபடி பேசுகிறார். ஆனா, வீட்டுக்குப் போய் ஃபேஸ்புக் பார்த்தபோதுதான் என்னை எல்லாரும் எப்படி எல்லாம் கலாய்ச்சிருக்காங்கனு தெரிஞ்சது. அப்பதான் ரொம்ப கஷ்டமா இருந்தது" எனச் சொன்ன சம்பூவை ``கூல்டவுன் பர்னிங் ஸ்டார், எல்லாம் சரியாகிடும்" எனத் தேற்றி அனுப்பிவைத்தார் ஜூனியர் என்.டி.ஆர்.

கத்தி சிக்கன்:

Jr NTR

எலிமினேஷன் பரபரப்புக்கிடையில், “மகேஷ் கத்திகாரு, நீங்க சிக்கன் கறியைப் பிரமாதமா சமைப்பீங்கனு சொன்னீங்க. ஆனா, அதை ஒருநாள்கூட செஞ்சு நான் பார்த்ததில்லை. என்ன செய்வீங்களோ தெரியாது. இன்னிக்கு அதைச் செய்றீங்க, நான் சாப்பிடுறேன்" என ஜூனியர் என்.டி.ஆர் கண்டிஷன்போட, கிச்சனுக்குப் போய் மசாலாக்களைப் பறக்கவிட்டு சிக்கன் கறி செய்து கொடுக்கிறார் மகேஷ் கத்தி. ஸ்டோர் ரூமிலிருந்து `பிக் பாஸ்' மேடைக்கு டோர்டெலிவரியானது சிக்கன் கறி. அதை மேடையில் சாவகாசமாக உட்கார்ந்து சாப்பிட்டு ``வாவ், பின்னிட்டீங்க மகேஷ் காரூ. இந்த ரெசிப்பிக்கு நானே ஒரு பேர் வெக்கிறேன், `கத்தி சிக்கன்' ” என முழு கிண்ணத்தையும் காலி செய்தார். 

எலிமினேஷன்:

Madhu Priya

இறுதியில் மது ப்ரியாதான் எலிமினேட் ஆகிறார் என அறிவிக்கப்பட்டதும் மேடைக்கு வந்தார் மது. `பிக் பாஸ்' என்ன கற்றுத் தந்தது, கேப்டன் ஆன பிறகு கல்பனாவின் மாற்றம், மோசமான ஹவுஸ் மேட், நல்ல ஹவுஸ் மேட், ஒவ்வொரு ஹவுஸ் மேட் பற்றியும் ஒரு வாக்கியம் எழுதுவது, மார்க் கொடுப்பது எனப் பல டாஸ்க்குகள் மேடைலேயே மது ப்ரியாவுக்குக் கொடுக்கப்பட்டு, ஜோதிக்குக் கொடுத்ததுபோல ஸ்பெஷல் பவர் மதுவுக்கும் கொடுக்கப்பட்டது. ``இரண்டு நபர்களைக் குறிப்பிட வேண்டும். மது சொல்லும் இரண்டாவது நபர், முதல் நபருக்கு வேலைக்காரராக ஒரு வாரம் பணியாற்ற வேண்டும். இதுதான் மதுவுக்குக் கொடுக்கப்பட்ட பவர். கல்பனாவுக்கு அர்ச்சனா வேலைக்காரராக இருக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டு, ``விடுதலை... விடுதலை'' என ஜாலியாகக் கிளம்பினார் மது ப்ரியா.

புதுமுகம்:

deeksha panth

 

“14 நான்கு பேர் போன `பிக் பாஸ்' வீட்டுல, இப்போ 11 பேர்தான் இருக்காங்க. அதனால அந்தப் பதினொன்னை பன்னெண்டா மாத்தலாம்னு `பிக் பாஸ்' முடிவுபண்ணியிருக்கார். யார் வர்றாங்கனு நீங்களே பாருங்க" என அறிமுகம் தந்துவுடன் தீக்‌ஷா பன்த் செம பெர்ஃபாமன்ஸுடன் மேடைக்கு வந்தார். இங்கு பிந்து மாதவியைப் புது கன்டஸ்டன்ட்டாகச் சேர்த்ததுபோல அங்கு தீக்‌ஷாவைப் புதிதாகச் சேர்த்தார்கள். அவரின் என்ட்ரி... அடுத்த பதிவில்!

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/97917-telugu-bigg-boss-second-week-highlights.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.