Jump to content

''காது கேளாத, வாய் பேசமுடியாத மகனை பிஹெச்.டி படிக்க வெச்சேன்!" 'சூப்பர் மாம்' விஜயலட்சுமி #CelebrateMotherhood #SuperMom


Recommended Posts

''காது கேளாத, வாய் பேசமுடியாத மகனை பிஹெச்.டி படிக்க வெச்சேன்!" 'சூப்பர் மாம்' விஜயலட்சுமி #CelebrateMotherhood #SuperMom

 
 

மகனுடன் விஜயலட்சுமி

‘'ங்களுக்குத் திருமணமாகி மூணு வருஷம் கழிச்சுதான் மனீஷ் பிறந்தான். வளர வளர செவித்திறனில் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடிச்சோம். பேச்சும் வரலை. எல்லோரும் ‘சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்த்துவிட்டால், பிரத்யேகப் பயிற்சி கொடுப்பாங்க’னு சொன்னாங்க. பள்ளியில் அவனோடு நானும் இருந்தால், இன்னும் சிறப்பா செயல்படுவான் என நினைச்சேன்'' என மெல்லியக் குரலில் ஆரம்பிக்கிறார் விஜயலட்சுமி. சென்னை, அடையாறைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர். 

''என் வாழ்க்கையில் எத்தனையோ குழந்தைகளுக்கு ட்ரீட்மென்ட் பார்த்திருக்கேன். ஒவ்வொரு குழந்தையையும் என் குழந்தையாக நினைச்சுதான் பார்ப்பேன். என் குழந்தைக்கே ஒரு குறை வந்தபோது, ஆரம்பத்தில் ஜீரணிக்க முடியாமல் தவிச்சோம். அப்புறம், எங்களை நாங்களே ஆசுவாசப்படுத்திக்கிட்டு, கடவுள் கொடுத்த குழந்தையாக வளர்க்க ஆரம்பிச்சோம். அவனுக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக்க நினைச்சேன். அதுக்காக, நான் நேசிச்ச எனக்குப் பிடிச்ச டாக்டர் தொழிலைக் கைவிட்டேன். என் குழந்தையை என்னால் மட்டும்தன் அதிகம் புரிஞ்சு பார்த்துக்க முடியும்னு நம்பினேன். அப்போ நாங்க கேரளாவில் இருந்தோம். என் கணவர் கணேஷிடம் இந்த முடிவைச் சொன்னதும் அவரும் ஏத்துக்கிட்டார். வங்கி ஊழியராக இருந்த அவர் மாற்றல் வாங்கினார். நாங்க சென்னைக்கு வந்தோம். 

இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மயிலாப்பூரில் இருக்கும் 'சில்ரன் கார்டன் ஸ்கூல்'ல மனீஷைச் சேர்த்தோம். அந்தப் பள்ளியில் பணிபுரிந்த சகுந்தலா ஷர்மா, சிறந்த ஆசிரியையாக அவனை அற்புதமாகப் பார்த்துக்கிட்டாங்க. பிறகு, சோழிங்கநல்லூரியில் இருக்கும் சில்ட்ரன் கார்டன் ஸ்கூலின் கிளையான, எலென் சர்மா பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கவெச்சோம். நான் அந்தப் பள்ளியிலேயே குழந்தைகளுக்கான மருத்துவர் மற்றும் கற்றலை மேம்படுத்தும் ஆசிரியையா பணிபுரிய ஆரம்பிச்சேன். சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியையா நான் எடுத்துக்கிட்ட பயிற்சிகளுக்குப் பின்னாடி, ஓர் அம்மாவின் தவிப்பும் இருந்ததால், முழு அர்ப்பணிப்போடு ஒவ்வொரு விஷயத்தையும் கத்துக்கிட்டேன். 

1997-ம் வருஷம், எலென் சர்மா பள்ளியின் சார்பாக நெதர்லாந்து மற்றும் லண்டனுக்குப் போனேன். காது, கண் குறைபாடு, ஆட்டிஸம் போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பது, அவங்க வளர்ந்து தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளப் பயிற்சி கொடுப்பது மற்றும் ஸ்பெஷல் டீச்சர்களுக்குப் பயிற்சி கொடுப்பது எனப் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். சில ஆராய்ச்சிகளையும் செய்தேன். பாண்டிச்சேரி, குஜராத், போபால் என நாடு முழுக்க பயணம் செஞ்சு இந்தப் பணிக்காக செயல்பட்டிருக்கேன்'' என்கிறார் விஜயலட்சுமி. 

25 வருடங்களாக ஒவ்வொரு நொடியும் பிள்ளைக்காகவும் சிறப்புக் குழந்தைகளுக்காகவுமே வாழ்ந்துவரும் இந்தத் தாய், ''இப்போ எனக்கு 57 வயசு. எங்கள் மகன் மனீஷை பி.எஸ்ஸி, பயோடெக், எம்.எஸ்ஸி, பயோடெக் என முடித்திருக்கிறார். மனீஷுக்கு எதையுமே விஷுவலா சொல்லிக்கொடுத்தாதான் புரியும். அதனால், முடிந்தவரை எல்லாத்தையும் அவனுக்கு நேரடியா காட்டிதான் கற்பிச்சோம். உதாரணமா, நாடாளுமன்றத் தேர்தலை அவனுக்குப் புரியவைக்க, சிறப்பு அனுமதி வாங்கி, நாடாளுமன்றத்துக்கே அழைச்சுட்டுப் போய் சொல்லிக்கொடுத்தோம். ஜெர்மனி, நெதர்லாந்து, லண்டன் எனப் பல இடங்களுக்கு அழைச்சுட்டுப் போயிருக்கோம். ஸ்கூல், காலேஜுக்காக இடம் மாறும்போதெல்லாம், அவனுக்காகக் கிட்டத்தட்ட 12 வீடுகள் மாறியிருப்போம். எந்தச் சூழலிலும் அவன் தனிமையாவோ, தாழ்வாவோ தன்னை நினைச்சுக்கக்கூடாதுனு நாங்க இன்னொரு குழந்தையைப் பெத்துக்கலை'' என்கிற விஜயலட்சுமி, சில நிமிட அமைதிக்குப் பிறகு தொடர்கிறார். 

‘‘சென்னை, படூர் 'ஹிந்துஸ்தான் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ்' கல்லூரியில் பி.எஸ்ஸி., பயோடெக்கும், மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் எம்.எஸ்ஸி., பயோடெக்கும் முடிச்சுட்டு அங்கேயே ரிசர்ச் பண்ணிட்டிருந்தான். இப்போ அதையும் வெற்றிகரமாக முடிச்சுட்டான். மனீஷை இன்னிக்கு நார்மல் குழந்தைகளுக்கு இணையா வளர்த்ததுக்குப் பின்னாடி, ஒரு பெற்றோராக உழைப்பும் அன்பும் அர்ப்பணிப்பும் மிக அதிகம். படிப்பில் பிலோ ஆவரேஜா இருக்கும் பிள்ளைகளைப் பற்றி அவங்க பெற்றோர் கவலைப்படுறதைப் பார்த்திருக்கேன். குழந்தைகளை 'படி படி' எனக் கட்டாயப்படுத்தும், நச்சரிக்கும் பெற்றோர்களையும் கவனிச்சிருக்கேன். ஒரு சிறப்புக் குழந்தையைப் பெற்றோர் நினைச்சா முதுநிலை பட்டதாரி ஆக்க முடியும்போது, ஆவரேஜ் குழந்தையையும் அம்மா நினைச்சா சூப்பர் குழந்தையா ஆக்கலாம்தானே? 

 

மனீஷுக்கு வரும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி கல்யாணம். நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிஞ்சிருக்கு. பொண்ணு பெயர் மானஸி. ஃபைன் ஆர்ட்ஸ் ஸ்டூடண்ட். நல்லா ஓவியம் வரைவாங்க. அவங்களும் மனீஷ் மாதிரியே காது கேளாத, வாய் பேச முடியாதவங்க. மனீஷ் படிச்ச பள்ளியில்தான் மானஸியும் படிச்சிருக்காங்க. திருமணம் குறித்த பேச்சு வந்தது. மனீஷ், மானஸியிடம் பதினைந்து முறைக்கும் மேலே சைகை மொழியில் பேசினான். ரெண்டுப் பேருக்கும் ஒருத்தரையொருத்தர் பிடிச்சுப்போச்சு. கல்யாணத்தை முடிவு பண்ணிட்டோம். 27 வருஷமா மனீஷ்கூட தாயாக மட்டுமில்லாமல், ஒரு தோழியாக இருந்திருக்கேன். அவன் வாழ்க்கை முழுக்கவும் இருக்க ஒரு தேவதை எங்க வீட்டுக்கு வரப்போறாங்க. அதுதான் இப்போ எங்களின் மொத்த சந்தோஷம்'' என முகமும் குரலும் பூரிக்கச் சொல்கிறார் விஜயலட்சுமி.

http://www.vikatan.com/news/tamilnadu/97565-a-mother-drvijayalakshmis-success-story.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.