Jump to content

'பத்தாம் வகுப்புகூட தாண்டாத, என் மாத வருமானம் லட்சத்துக்கும் மேல்!' - 'சுயதொழில்' ராஜேஸ்வரியின் கதை #SuccessWoman


Recommended Posts

 

'பத்தாம் வகுப்புகூட தாண்டாத, என் மாத வருமானம் லட்சத்துக்கும் மேல்!' - 'சுயதொழில்' ராஜேஸ்வரியின் கதை #SuccessWoman

 
 

ராஜேஸ்வரி

ல சராசரி பெண்கள்போல கணவன், குடும்பம் என இருந்தவர்தான் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றைச் சேர்ந்த ராஜேஸ்வரி ரவிக்குமார். பிற்காலத்தில் சத்தான, ஆரோக்கியமான, சுகாதாரத்தை முன்னிறுத்தும் 'சுகா டயட் நேச்சுரல் ஃபுட்ஸ்' கம்பெனியை ஆரம்பித்து, வெற்றிகரமான தொழிலதிபராக சிறகடித்துவருகிறார். அந்தப் பயணத்தை நினைவுகூர்கிறார்.

''டாக்டருக்குப் படிக்கணுங்கிறதுதான் என் சின்ன வயசு ஆசை, கனவு. வீட்டுச் சூழல் காரணத்தால் பத்தாம் வகுப்போடு நிக்க வேண்டியதாப்போச்சு. குறிப்பிட்ட வயசு வந்ததும் கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க. 'பத்தாவதுகூட தாண்ட முடியலையே'னு அவ்வளவு ஆதங்கப்பட்டேன். அதேநேரம் நம் அம்மா மாதிரி வீட்டோடு, சமையல் அறையிலேயே இருந்திடக்கூடாது என்பதிலும் தீவிரமாக இருந்தேன். எந்த விஷயத்துக்கும் பொதுஅறிவு ரொம்ப முக்கியம். நியூஸ் பேப்பர், புத்தகங்கள் என நிறைய விஷயங்களைத் தேடிப் பிடிச்சு படிப்பேன். அப்படிப் படிக்கும்போதுதான் இயற்கை உணவுச் சார்ந்த, மருத்துவம் சார்ந்த செய்திகள் கண்ணில் பட்டுச்சு. என்னை அறியாமல் அதன்மேல் ஈர்ப்பு வந்துச்சு. அதில் ரொம்ப அக்கறைக் காட்ட ஆரம்பிச்சேன். நியூஸ் பேப்பரில் படிக்கும் விஷயங்களை கட் பண்ணி ஃபைல் பண்ண ஆரம்பிச்சேன். அதை படிச்ச பலனா, பலவித நவதானியங்களில் முதன் முறையா கஞ்சி செய்து என் கணவருக்குக் கொடுத்தேன். அதுதான் எல்லாவற்றும் ஆரம்பம். 

ராஜேஸ்வரி

என் கணவருக்கு எதுவுமே சுவையாகவும் சரியாகவும் இருக்கணும். அதில் ஏதாவது குறை இருந்தா வெளிப்படையா சொல்லிடுவார். சில நேரம் 'என்ன இந்த மனுஷன் இப்படி முகத்துல அடிச்ச மாதிரி சொல்றாரே'னு வருத்தப்பட்டு அழுதிருக்கேன். அப்படிப்பட்டவர், அந்த நவதானிய கஞ்சியைக் குடிச்சுட்டு, 'ஆஹா... ஓஹோ'னு பாராட்டி சர்டிஃபிக்கேட் கொடுத்தார். அந்தப் பாராட்டு சிறுதானிய சமையல்ல அடுத்தடுத்து  புது வகைகளை அறிமுகம் செய்யும் ஆர்வத்தை தூண்டுச்சு. சிறுதானிய சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்கிட்டு வந்து சுத்தப்படுத்தி, அரைச்சு பாக்கெட்டுகளில் அடைச்சு விற்கலாமேனு தோணுச்சு.

என் கணவர் டிடர்ஜண்ட் சோப்பு டீலரா வேலைப் பார்க்கிறதால், வீட்டுக்கு அடிக்கடி ஆள்கள் வந்து சோப்பு வாங்கிட்டுப்போவாங்க. அப்படி வரும் பல பெண்கள், 'அக்கா உங்களுக்குத் தெரிஞ்சு வேலை ஏதாவது இருந்தா சொல்லுங்க'னு கேட்டாங்க. நம்ம சமையல் விஷயத்தையே கையில் எடுக்கலாமேனு தோணுச்சு. தேனி, ராமநாதபுரம், கோவை போன்ற இடங்களிலிருந்து சிறுதானிய உணவு செய்றதுக்கு தேவையான பொருள்களை வாங்கிட்டு வந்து ரெடி பண்ணி அக்கம்பக்கத்து வீடுகளில் விற்க ஆரம்பிச்சேன். நிறைய பேர் விரும்பி வாங்கினாங்க. ஆர்டர்களும் வர ஆரம்பிச்சுது'' என்ற ராஜேஸ்வரி, புன்னகையுடன் தொடர்ந்தார். 

''இந்தத் தொழிலை முறைப்படி புரிஞ்சு செய்வோம்னு தஞ்சாவூரில் இருக்கிற INDIAN INSTITUTE OF GROPP PROCESSING TECHNOLOGY (IICPT)-க்குப்போய் பயிற்சி எடுத்துக்கிட்டேன். உணவுப் பொருள்களுக்கான விற்பனை விதிமுறைகள், தொழிலை விரிவுப்படுத்த மிஷின் வாங்குவதற்கான நடைமுறைகள், ஃபுட் புராடெக்டுகளை பேக்கிங் பண்ணினால் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள், அரசு அனுமதி போன்றவற்றைத் தெரிஞ்சுக்கிட்டேன். இப்படித்தான் 'சுகா டயட் நேச்சுரல் ஃபுட்ஸ்' ஆரம்பிச்சது. ஏழு வருஷமா பிசினஸ் பண்ணிட்டிருந்தாலும், நாலு வருஷம் முன்னாடிதான் அரசு ஒப்புதல் கிடைச்சு மற்ற மாவட்டங்களுக்கும் டெலிவரி கொடுத்துட்டிருக்கோம். 

ராஜேஸ்வரி

நீண்ட நாள் வைத்திருக்கும் உணவுப் பொருள்கள் உடலுக்குக் கெடுதல் விளைவிக்ககூடியவை. அதனால், மூன்று அல்லது நான்கு மாதங்கள் மட்டும் வரும் வகையில் பவுடர் வடிவில் எங்கள் உணவுப் பொருள்களை பாக்கெட் செஞ்சு நியாயமான விலையில் விற்பனை செய்துட்டிருக்கோம். நாம் ஆரோக்கியமாக இருக்க, ஒவ்வொரு வயதுக்கும் ஏற்ற வகையில் சத்துகள் உணவில் இருக்கணும். அதில் நாங்கள் கவனமா இருக்கோம். டயட் கஞ்சியைக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு எனத் தனித்தனியே தயாரிக்கிறோம். ஒவ்வொரு பாக்கெட்டிலும் அதில் என்னென்ன உணவுப் பொருள்களைச் சேர்த்திருக்கோம்னு கொடுத்திருப்போம். 

வரகு மற்றும் வெந்தயம் சேர்த்து செய்த ஒரு பொங்கல் மிக்ஸை, பிரீ க்ளினிக்கல் ரிப்போர்ட்டுக்காக, சாஸ்த்தா யுனிவர்சிட்டியில் கொடுத்தோம். இந்த உணவை சுகர் ஏற்றப்பட்டிருந்த எலிக்குக் கொடுத்திருக்காங்க. சில நாள்களில் அந்த எலிக்கு சுகர் குறைஞ்சிருக்கு. அதனால், இந்த உணவை மனிதர்களுக்கு சுகரை கன்ட்ரோல் செய்ய பயன்படுத்தலாம்னு சான்றிதழ் கொடுத்தாங்க. அதேமாதிரி அண்ணா பல்கலைக்கழகத்தின் நேஷனல் அக்ரோ ஃபவுண்டேஷன் நியூட்டிரிஷன் ரிப்போர்ட்டும் வாங்கியிருக்கேன்'' என்கிற ராஜேஸ்வரி, சில ரெசிப்பிகளின் பயன்களையும் குறிப்பிட்டார். 

 

''கொள்ளு, பார்லி, சோயா ஆகியவற்றைப் பொடியாக தயார்செய்து விற்கிறோம். இதை இரவில் கஞ்சியாகக் குடிக்கும்போது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் நீங்கும். மிளகு, சீரகம், இஞ்சி, உப்பு என கஞ்சி வகைகளுக்கும், அடை செய்வதற்கு தேவையான விஷயங்களை அந்த பாக்கெட்டுகளில் சேர்த்தே கொடுத்திருக்கிறோம். நூறு ரூபாயிலிருந்து அதிகபட்சம் ஐநூறு ரூபாய் வரை இந்த உணவுப் பொருள்களை பாக்கெட் செய்து விற்கிறோம். சிறியதாக ஆரம்பிச்ச இந்தக் கடையில் இப்போ பத்து பேர் வேலைப் பார்க்கிறாங்க. மாசம் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்க்க முடியுது. நமக்குத் தெரிஞ்ச சமையலை மத்தவங்களுக்கு பயன்படுற மாதிரி எப்படி கொடுக்கலாம்னு யோசிச்சா அதுதான் பிஸ்னஸ் சக்சஸ் டெக்னிக். இதுதான் நம் வாழ்க்கைனு வீட்டுக்குள்ளேயே இருந்துடாம வாசலுக்கு வந்ததால்தான் இன்னிக்கு வெற்றிப்படிகளில் நின்னுட்டிருக்கேன்'' என்கிறார் வெற்றிப் பெண்மணி ராஜேஸ்வரி ரவிக்குமார்.

http://www.vikatan.com/news/tamilnadu/97465-successful-business-woman-rajeshwaris-story.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.