Jump to content

முதன்முறையாக யாழ் மண்ணில் உருவாகும் பிரம்மாண்டமான நெடுந்தொடர்!


Recommended Posts

முதன்முறையாக யாழ் மண்ணில் உருவாகும் பிரம்மாண்டமான நெடுந்தொடர்!

 

597ee610d6a81-IBCTAMIL.jpg
 
597ee6110f8b9-IBCTAMIL.jpg
597ee610b4101-IBCTAMIL.jpg
 
597ee6113c7e4-IBCTAMIL.jpg

யாழ் மண்ணில் முதன் முறையாக IBC தமிழ் தயாரிப்பில் மர்மக்குழல் நெடுந்தொடர் தயாரிக்கப்பட்டு அதன் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.

அண்மையில் மர்மக்குழல் நெடுந்தொடர் நாடகத்தின் டீசர் மற்றும் ப்ரோமோ வெளியிடப்பட்டு அனைவரினதும் அமோக ஆதரவினைப் பெற்றது மட்டுமல்லாமல், மர்மக்குழல் நெடுந்தொடருக்கான அனைவரின் எதிர்பார்ப்புக்களையும் அதிகப்படுத்தியிருக்கின்றது.

இந்நிலையில் மர்மக்குழல் நெடுந்தொடருக்கான ஆரம்பப் பாடலின் காட்சிகள் வடமராட்சியின் வல்வை மற்றும் கைதடியின் திறந்த வெளியில் மிகப் பிரமாண்டனான முறையில் செட் அமைத்து காட்சிகள் பதிவுசெய்யப்பட்டன.

யாழ் மண்ணில் மட்டுமன்றி தாயகத்திலும் இதுவரையிலும் இல்லாத  பிரம்மாண்ட செட் அமைப்புடன் இப்பாடல் தயாரிக்கப்படுகின்றது.

மர்மக்குழல் நெடுந்தொடரின் ஆரம்பப் பாடலை திருமதி. பகீரதி கணேஷதுரை எழுதியிருந்ததோடு, பாடலுக்கான இசையினை தீபன் கணேஷ் வழங்கியிருகின்றார். அபயன் கணேஷ் மர்மக்குழல் நெடுந்தொடரினை இயக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/For-the-first-time-in-the-Jaffna-soil-mega-serial

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • Replies 109
  • Created
  • Last Reply

வெளியாகியது மர்மக்குழல் நெடுந்தொடர்; ஈழத்திரைத்துறையில் ஓர் புதுப்புரட்சி!

ஈழத்தின் சின்னத்திரை வரலாற்றில் புதியதொரு புரட்சியாக ஐபிசி தமிழின் பிரமாண்டமான தயாரிப்பில் ஈழத்துக் கலைஞர்களின் மண்வாசம் மிக்க படைப்பாக ’மர்மக் குழல்’ எனும் தொலைக்காட்சி நெடுந்தொடர் ஏற்கனவே அறிவித்திருந்தபடி சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

உலகத் தமிழர்க்கோர் உறவுப் பாலமாக விளங்கும் ’அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்’ (IBCதமிழ்) ஊடகத்தின் யாழ்ப்பாண அலுவலகத்திலேயே இந்த வெளியீட்டுவிழா நடைபெற்றுள்ளது.

வெளியாகியது மர்மக்குழல் நெடுந்தொடர்; ஈழத்திரைத்துறையில் ஓர் புதுப்புரட்சி!

முற்றிலும் ஈழத்துக் கதை, ஈழத்துக் களம், ஈழத்துக் காட்சி, ஈழத்து கலைஞர்கள், ஈழத்துத் தொழிநுட்பம் என எங்கள் மண்ணின் வாசனைகளைச் சுமந்த மர்மங்களும் திகில்களும் நிறைந்த படைப்பாக மர்மக்குழல் நெடுந்தொடர் வெளிவந்துள்ளது.

கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலைகளால் ஈழத்தின் தமிழ்ச் சினிமா எழுபதுகளோடு அஸ்தமனமானது. மண் வாசனை மிக்க படைப்புக்களாக வெளிவந்த செங்கை ஆழியானின் ’வாடைக்காற்று’, தர்மசேனா பத்திராஜாவின் ‘பொன்மணி’, V.S மஹேந்திரனின் குத்துவிளக்கு போன்ற திரைப்படங்கள் ஈழத் திரைப்படங்களுக்கோர் சிறப்பான எடுத்துக்காட்டுகளாகும்.

வெளியாகியது மர்மக்குழல் நெடுந்தொடர்; ஈழத்திரைத்துறையில் ஓர் புதுப்புரட்சி!

அதன் பின்னர் போர்க்காலங்களிலும் போருக்குப் பின்னரான காலத்திலும் ஈழத் திரைப் படைப்புக்கள் என்பது முற்றுமுழுதான மண்வாசனையினையும் ஜனரஞ்சகமிக்க கதையமைப்பினையும் சுமந்து வரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் நிலவிவருகின்றன. பல குறுந்திரைப்படங்கள் வெளிவந்துள்ளபோதும் அவைகூட ஈழ மண்ணின் முற்றுமுழுதான வேரோட்டங்களைத் தாங்கியனவாக அமையவில்லை என்ற அதிருப்தி நிலையும் காணப்படுகின்றது.

போர்க்காலத்தில் விடுதலைப் போர் பற்றிய பதிவுகளையும் குமுகாய வெளிப்பாடுகளையும் மக்களின் நிதர்சன அவலங்களையும் தாங்கிய பல்வேறு குறுந்திரைப்படங்களும் முழு நீளத் திரைப்படங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்டிருந்தன. அவை ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட படைப்புக்களாக விளங்கினாலும், பனைமர ஓலைக்காலின் தடயங்களைப் போல, ஈழத்தின் ஒரு காலக்கோடுகளாகவே விளங்குகின்றன.

இதனிடையே, கடந்துபோன கால நீட்சியின் அடுத்த அத்தியாயமாகவும் புதியதோர் புரட்சியாகவும் வெளிவர இருப்பதே ஈழத்துக் கலைஞர்களின் மர்மக்குழல் நெடுந்தொடர். இதன் வருகையானது ஈழத்துச் சினிமாவின் மறுமலர்ச்சிக்கான ஆக்கமும் ஊக்கமும் மிக்க ஒன்றாக விளங்கும் என்பதை நாளைய தடயங்கள் கண்டிப்பாக எடுத்துரைக்கும் என நம்புகின்றோம்.

அதன்படி இன்றைய நாள் ஈழத்துத் திரைத்துறை வரலாற்றில் ஓர் புதிய அத்தியாயமாக இந்த மர்மக்குழல் படைப்பினை எம் மக்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். இந்த பிரமாண்டமான நெடுந்தொடரினை ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் இலண்டன் நேரம் மாலை ஆறு மணியளவில் உலகெங்கும் பரந்து வாழ்கின்ற அனைத்து தமிழ் நெஞ்சங்களும் பார்வையிட முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்!

மேலும் முதன்முதலாக தாயகத்திலிருந்து வெளிவரும் எமது படைப்புக்கு எமதருமை மக்களின் கனிவான நல்லாதரவினை வேண்டி நிற்கின்றோம்!

வெளியாகியது மர்மக்குழல் நெடுந்தொடர்; ஈழத்திரைத்துறையில் ஓர் புதுப்புரட்சி!

வெளியாகியது மர்மக்குழல் நெடுந்தொடர்; ஈழத்திரைத்துறையில் ஓர் புதுப்புரட்சி!

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/marmakuzhal-released-in-jaffna

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலைகளால் ஈழத்தின் தமிழ்ச் சினிமா எழுபதுகளோடு அஸ்தமனமானது. மண் வாசனை மிக்க படைப்புக்களாக வெளிவந்த செங்கை ஆழியானின் ’வாடைக்காற்று’, தர்மசேனா பத்திராஜாவின் ‘பொன்மணி’, V.S மஹேந்திரனின் குத்துவிளக்கு போன்ற திரைப்படங்கள் ஈழத் திரைப்படங்களுக்கோர் சிறப்பான எடுத்துக்காட்டுகளாகும்.

1990 களின் ஆரம்பத்தில்.. ஈழத்துத் திரைகளில் ஓடிய முழு நீள.. தமிழீழத் திரைக்காவியங்கள்.. ஐபிசி ஆக்களுக்கும்.. மறந்து போட்டுது போல. 

அதுமட்டுமன்றி பல குறும்படங்களும் அக்காலத்தில் வெளியாகி இருந்தன.

சிங்கள அரசின் பல பொருண்மிய தடைகள் மத்தியிலும் ஈழத்தமிழ் மக்களை மகிழ்வூட்ட வந்த அந்தப் படங்கள் மறக்கப்படுவது.. மறைக்கப்படுவது வரலாற்றுத் துரோகமாகும். :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

1990 களின் ஆரம்பத்தில்.. ஈழத்துத் திரைகளில் ஓடிய முழு நீள.. தமிழீழத் திரைக்காவியங்கள்.. ஐபிசி ஆக்களுக்கும்.. மறந்து போட்டுது போல. 

அதுமட்டுமன்றி பல குறும்படங்களும் அக்காலத்தில் வெளியாகி இருந்தன.

சிங்கள அரசின் பல பொருண்மிய தடைகள் மத்தியிலும் ஈழத்தமிழ் மக்களை மகிழ்வூட்ட வந்த அந்தப் படங்கள் மறக்கப்படுவது.. மறைக்கப்படுவது வரலாற்றுத் துரோகமாகும். :rolleyes:tw_angry:

உன்மைதான் 

இப்ப எல்லோரும் படம் எடுக்க வெளிக்கிட்டினும் இருந்தாலும் கிசி கிசு வராமல் இருந்தால் சரிப்பா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உன்மைதான் 

இப்ப எல்லோரும் படம் எடுக்க வெளிக்கிட்டினும் இருந்தாலும் கிசி கிசு வராமல் இருந்தால் சரிப்பா 

இதை நான் மென்மையாக மறுக்கிறேன் த.கா.ராஜா...., திரைப்படம் என்றால் கூடவே கிசுகிசுவும் பூவும் நாரும்போல் வரத்தான் செய்யும். கிசு கிசு அத் திரைப்படத்துக்கு ஒரு மறைமுகமான விளம்பரமும்கூட ....அதனால் சம்பந்தப் பட்டவர்களே அதை ஆங்காங்கே தூவி விடுவார்கள்.  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

இதை நான் மென்மையாக மறுக்கிறேன் த.கா.ராஜா...., திரைப்படம் என்றால் கூடவே கிசுகிசுவும் பூவும் நாரும்போல் வரத்தான் செய்யும். கிசு கிசு அத் திரைப்படத்துக்கு ஒரு மறைமுகமான விளம்பரமும்கூட ....அதனால் சம்பந்தப் பட்டவர்களே அதை ஆங்காங்கே தூவி விடுவார்கள்.  tw_blush:

 இந்திய சினிமாக்கு துவினால் வியாபாரம் பணம் சம்பாத்தியம் ஈழத்து சினிமாக்கு தூவினால் கொஞ்சம் நாறித்தான் போகுமென நினைக்கிறம் எங்க சனம்  கண்ணு காது மூக்கு பல்லு எல்லாம் வச்சி கதையை கட்டிடும் அதுக்குத்தான் சொல்ல வந்தேன் ஏற்கனவே ஒரு கிசி கிசு வந்து  நாரவைத்து போனதுதான் மிச்சம் அண்ண :10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

இதை நான் மென்மையாக மறுக்கிறேன் த.கா.ராஜா...., திரைப்படம் என்றால் கூடவே கிசுகிசுவும் பூவும் நாரும்போல் வரத்தான் செய்யும். கிசு கிசு அத் திரைப்படத்துக்கு ஒரு மறைமுகமான விளம்பரமும்கூட ....அதனால் சம்பந்தப் பட்டவர்களே அதை ஆங்காங்கே தூவி விடுவார்கள்.  tw_blush:

ஐயனே! :(

அந்த தம்பி எவ்வளவு கஸ்ரப்பட்டு "தனிக்காட்டு ராஜா" எண்டு பேரை மாத்தி வைச்சிருக்கு...இதற்குள் நீங்கள்  த.கா.ராஜா என்று சுருக்கினால் அந்த இளம் மனது வேதனைப்படாதா? இல்லை நியாயமா? tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ஐயனே! :(

அந்த தம்பி எவ்வளவு கஸ்ரப்பட்டு "தனிக்காட்டு ராஜா" எண்டு பேரை மாத்தி வைச்சிருக்கு...இதற்குள் நீங்கள்  த.கா.ராஜா என்று சுருக்கினால் அந்த இளம் மனது வேதனைப்படாதா? இல்லை நியாயமா? tw_blush:

இல்லை கு.சா.....! பெயர் கொஞ்சம் பெரிசாய் இருக்கு. சும்மா காட்டு ராஜா என்டு சொன்னால் அவர் யோசிக்கத் தொடங்கிடுவார், இவர் இப்ப எதைக் காட்டச் சொல்லுறார் ..... அறிவையா ,புலமையையா அதெல்லாம் இருந்தால் நான் காட்டிட மாட்டேனா என்று குழம்பிடுவார். அதுதான் தா.கா.ராஜா....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் அவர் தில்லான காட்டு ராஜா என்று பெயரை வைக்கில்லை.:unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அந்த வகையில் இன்று காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373909
    • ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு- கிழக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரியதையடுத்தே, இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முற்பகல் குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பாக வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373977
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.