Jump to content

சீரியல் கில்லர் Vs சீரியஸ் போலீஸ் ஜெயித்தது யார்? - நிபுணன் விமர்சனம்


Recommended Posts

சீரியல் கில்லர் Vs சீரியஸ் போலீஸ் ஜெயித்தது யார்? - நிபுணன் விமர்சனம்

 
 

சைக்கோபாத் சீரியல் கொலையாளி ஒருவனை கண்டுபிடிக்க நடக்கும் விசாரணைகளும், கிடைக்கும் தடயங்களும், சில திருப்பங்களுமாக விரிகிறது நிபுணன். 

நிபுணன்

 

நகரத்தில் திடீரென ஒரு மர்மமான மரணம் நிகழ்கிறது. இறப்பதற்கு முன் சித்ரவதை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டு, இறந்த பின்பு துப்பாக்கியால் சுடப்பட்டு, முதுகில் நம்பர் எழுதி, முகமூடி மாட்டப்பட்டு  என சிக்னேசர் கொலையாக இருக்கிறது. இறந்தவர் யார், எதற்காக கொல்லப்பட்டார், கொன்றது யார் என விசாரணையை ஆரம்பிக்கிறது அர்ஜூன் அண்ட் டீம். ஆனால், குற்றவாளியை நெருங்கும் முன் மறுபடி அதே மாதிரி அடுத்த கொலை நடக்கிறது. விஷயம் ரொம்ப சீரியஸ் என சுதாரிக்கும் அர்ஜூன் அண்ட் டீம் கொலைக்கான தடயங்கள், குற்றவாளி விட்டுச் செல்லும் க்ளூ போன்றவற்றை கண்டுபிடிக்கிறார்கள்.  அதன் மூலம் குற்றவாளியை கண்டுபிடித்தார்களா, எதற்காக இந்தக் கொலைகள் நடக்கிறது என்பனவற்றைச் சொல்லுகிறான் இந்த நிபுணன்.

இன்வஸ்டிகேஷன் த்ரில்லருக்கு பக்காவான களம், குற்றவாளி செய்யும் கொலைகள், அடுத்த கொலைக்கான க்ளூ என முழுமையான படமாக தர முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் அருண் வைத்தியநாதன். ஆனால், அதில் பாதி கிணறுதான் தாண்டுகிறார்.

அர்ஜுன்

‘ஆக்‌ஷன் கிங்’அர்ஜூனின் 150வது படம். இத்தனை பெரிய டிராவலுக்குப் பிறகு இவர் அடிக்கும்போது மட்டும் நம்ப முடிகிற உடல்வாகு. ஒரு டி.எஸ்.பிக்கே உண்டான உடல்மொழியும், ‘இயர் ரிங் புதுசா?’ என குறும்புமாய் கதாபாத்திரத்தில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்கிறார். சீரியஸாகவே இருக்கும்  அவரது டீம் மேட்ஸாக பக்கா ஃபிட்டில் பிரசன்னா, வரலட்சுமி. வரலட்சுமியின் ஸ்டைல் படத்துக்குப் படம் ரசிக்க வைக்கிறது. அசால்ட் பேச்சும், பிரசன்னாவிடம் ‘ப்போடா’ என்ற ஜாலியாகவும், அர்ஜூனிடம் ‘எஸ் சீஃப்’ என்ற மரியாதை தொனியிலும் கலக்குகிறார். இவருக்கென்று ஒரு வசன மாடுலேஷன் செட் செய்து கொண்டிருக்கிறார். சில சமயம் நாம் யோசிப்பதற்குள் பேசிமுடிக்கிறார் என்றாலும் ரசிக்க முடிகிறது. பிரசன்னா, அர்ஜூனின் கேங்கில் இன்னொரு காப். ‘சொல்லுங்க சார்’ வேடமென்றாலும் படம் முழுவதும் பரபரவென இருக்கிறார். கொஞ்சம் ஆக்‌ஷன் சீக்வென்ஸ் வரும் நேரம் பார்த்து, வில்லன் கட்டிப்போடுவது பரிதாபம். அர்ஜூன் தம்பியாக வைபவ். அவர் ஒரு ‘ட்விட்டர் அடிக்ட்’ என காட்டும் அந்த ஐடியாவை  எங்காவது செமயாகப் பயன்படுத்துவார்கள் என்று பார்த்தால்... 

படம் ஆரம்பித்த கொஞ்சநேரத்திலேயே, எல்லா கதாபாத்திரங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய விதம் ஓகே. குடும்பத்தில் அர்ஜூன் அப்படி என்பதற்காக, ஒவ்வொரு க்ரைம் சீனுக்குப் பிறகும் அவர் ஃபேமலி சீன்கள் என்று படம் 2017க்கும் 1980ஸ்க்கும் மாறி மாறிப் பயணிப்பது அலுப்பு. குடும்ப சீன்களில் கத்திரி இன்னும் வேகமாய்ப் பணியாற்றியிருக்கலாம். மொத்தம் நாலு கொலையில் மூன்றை இடைவேளைக்குள் முடித்ததும், அந்த நான்காவது நபர் யார் என்ற ‘இண்டர்வெல் ப்ளாக்’கும் வெரிகுட் தான். ஃப்ளாஷ்பேக்கில் ஆருஷி கொலை வழக்கைக் கலந்து கொடுத்து நிஜசம்பவத்தை பதிவு செய்யும் ஐடியா ஓகே. ஆனால், அது ஏனோ தானோ என்று இருப்பதால் பழிக்குப் பழிக்கான அழுத்தம் குறைகிறது. முக்கியத் திருப்பமாக இருக்க வேண்டிய வில்லனின் முக்கியத்துவமும் பலவீனமானதாக இருக்கிறது. அர்ஜூனுக்கு பார்க்கின்சன் வியாதி இருப்பதாகக் காட்டப்படுவதும் படத்தோடு ஒன்றாமலே இருக்கிறது. அர்ஜூன் அடிவாங்குவதற்கு நியாயம் சேர்க்க மட்டுமே அந்த வியாதி கைகொடுக்கிறது. 

படம் முழுக்க நிறைந்து வழிகிறது நவீனின் இசை. சில இடங்களில் மௌனமாகவே இருந்திருக்கலாம். இரைச்சல் அதிகமாக இருந்த ஒரு ஃபீல். அர்விந்த் கிருஷ்ணாவின் கேமரா படத்தில் பரபரப்பு டோனைக் கொடுக்க முயல்கிறது. ஆனால், சேஸியாக இருக்க வேண்டிய திரைக்கதை அர்ஜூனின் வலது கை, கால் போல திடீர் திடீரென மரத்துப் போய்விடுகிறதே. 

சித்ரவதை செய்து கொலை, முகமூடி, முதுகுக்குப் பின்னால் நம்பர் என கொலைக்கான விஷயங்களை யோசித்தது போல, படத்தை விறுவிறுப்பாக்க யோசித்திருந்தால் படம் பட்டாசாக வெடித்திருக்கும்.

http://www.vikatan.com/cinema/movie-review/97201-nibunan-movie-review.html

Link to comment
Share on other sites

திரை விமர்சனம்: நிபுணன்

 

 
nibunanreview

முன்னமே க்ளூ கொடுத்து தொடர் கொலைகளை அரங்கேற்றும் சீரியல் கில்லரை, நிபுணத்துவத்தோடு அர்ஜுன் கண்டுபிடித்து தண்டிப்பதுதான் ஒருவரிக் கதை.

அர்ஜுனின் 150-வது படம். உடலையும், வசீகரத்தையும் அப்படியே வைத்திருப்பதற்கு முதலில் சபாஷ்! அன்பான மனைவி, அழகான குழந்தை, பிரியமான தம்பி என இனிமையான சூழலில் வாழும் அர்ஜுன், குற்றப் புலனாய்வு டிஎஸ்பி. என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, அரசியல் தலையீடுகளால் தப்பிக்கிற சிலரை தீர்த்துக்கட்டும் அசைன்மென்ட், அவருக்கு கொடுக்கப்படுகிறது. பிரசன்னாவும், வரலட்சுமியும் உதவி போலீஸ் அதிகாரிகள்.

அரசியல் தலைவர், பெண் மருத்துவர், வழக்கறிஞர் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். கொலையாளியை தீவிரமாகத் தேடுகிறார் அர்ஜுன். இதற்கிடையில், அவருக்கு பார்க்கின்சன் நோய் ஏற்படுகிறது. கை, கால் அடிக்கடி மரத்துப்போய், இயக்கம் தடைபடுகிறது.

தொடர் விசாரணையில், சீரியல் கில்லரின் அடுத்த குறி தான்தான் என்பதை உணர்கிறார். அதற்கான காரணம் என்ன? உயிரிழந்த மூவருக்கும் தனக்கும் என்ன சம்பந்தம்? சீரியல் கில்லர் யார்? அவரை அர்ஜுன் பிடித்தாரா? அசைன்மென்ட் என்ன ஆனது என்பதுதான் ‘நிபுணன்’.

சீரியல் கில்லர் யார் என்பதை படத்தின் இறுதிவரை சஸ்பென்ஸாக கொண்டு சென்றதில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் அருண் வைத்தியநாதன். படம் பார்ப்பவர்கள் அதை சிறிதுகூட கணித்துவிட முடியாதபடி அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. படம் முடிந்ததும் அந்த பாத்திரத்தில் நடித்த கிருஷ்ணாவின் பெயரைப் போடும் நிபுணத்துவம் ஓ.கே!

அர்ஜுனின் குடும்பத்தை அவ்வப்போது காட்டுவது, வேகமாகப் பயணிக்கும் திரைக்கதைக்கு முட்டுக்கட்டை போட்டு, சலிப்பைத் தருகிறது.

காட்சிகளின் பின்னணியில் வரும் தொலைக்காட்சி செய்திகளில்கூட கவனம் செலுத்தியிருப்பது அருமை. ஆருஷி கொலை வழக்கை பின்னணியாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார். ஆனால், கொலைக்கான காரணம் சினிமாத்தனமாக உள்ளது. காட்சியமைப்புகளும் நம்பும்படி இல்லை.

தன் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு எழும் நேரத்தில், ‘‘கிரிமினல்ஸைக்கூட சமாளிச்சுடலாம். பிரஸ்ஸை சமாளிக்க முடியாது’’ என்று அர்ஜுன் சொல்வது, காவல் துறையின் எதார்த்த நிலையைக் காட்டுகிறது.

போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில், வழக்கம்போல அர்ஜுன் கச்சிதம்! அவரது மனைவியாக வரும் ஸ்ருதி ஹரிஹரன், காவல் அதிகாரியுடைய மனைவியின் நிலை என்ன என்பதை மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறார். படத்தில் அர்ஜுனுக்குப் பிறகு கவனம் ஈர்ப்பது இவர்தான்.

கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ள பிரசன்னா, வரலட்சுமி சில இடங்களில் காமெடியும் செய்கின்றனர். படத்தின் மொத்த பளுவையும் தூக்கி அர்ஜுன் மீது வைக்காமல் இவர்களும் இடையிடையே ஸ்கோர் செய்கின்றனர்.

இடைவேளை வரை ரசிகர்களுக்கு அறிமுகமே இல்லாமல், திடீரென முளைக்கும் வில்லன் கதாபாத்திரம், திரைக்கதையோடு ஒட்டவில்லை.

நவீனின் இசை சில இடங்களில் தேவைக்கு அதிகமாக ஒலிக்கிறது. பாடல்கள் பரவாயில்லை. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு நேர்த்தி.

வழக்கமான த்ரில்லர் படங்களைத் தவிர்த்து புதுமையாக சொல்ல முயன்றுள்ளனர். திரைக்கதையில் இன்னும் நிபுணத்துவம் காட்டியிருந்தால், ‘நிபுணன்’ நன்கு ஈர்த்திருப்பான்!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19389649.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.