Jump to content

வட மத்திய மாகாண அணிக்கு நெருக்கடி கொடுத்த ஜதுசன் மற்றும் கபில்ராஜ்


Recommended Posts

வட மத்திய மாகாண அணிக்கு நெருக்கடி கொடுத்த ஜதுசன் மற்றும் கபில்ராஜ்

Untitled-collage-15-696x445.jpg
sl-v-ind-2017-live-score-728.jpg

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 23 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடரில் மேல் மாகாண வடக்கு அணியிடம், கிழக்கு மாகாணம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இரண்டு நாட்கள் கொண்ட இந்த போட்டிகளில் மேலும் மூன்று ஆட்டங்கள் இன்று வியாழக்கிழமை (27) ஆரம்பமாயி ன. இதில் வட மத்திய மாகாணத்தை எதிர்கொண்ட வட மாகாண அணி முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது. வட மேல் மாகாணத்திற்கு எதிரான போட்டியில் மேல் மாகாண மத்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தென் மாகாணத்துடனான போட்டியில் ஊவா மாகாணம் நிதானமாக ஆடி தனது முதல் இன்னிங்ஸை பூர்த்தி செய்துள்ளது.


                                                                                                                               

கிழக்கு மாகாணம் எதிர் மேல் மாகாணம் வடக்கு

மாத்தறை, உயன்வத்த மைதனத்தில் நடைபெற்ற போட்டியில் மேல் மாகாண வடக்கு அணிக்கு எதிராக கிழக்கு மாகாணம் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்த்துக்கொண்டபோதும் 10 விக்கெட்டுகளால் தோல்வியை எதிர்கொண்டது.

கடந்த புதன்கிழமை ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி 21.1 ஓவர்களில் 64 ஓட்டங்களுக்கே சுருண்டது. வசன்த டி சில்வா பெற்ற 25 ஓட்டங்களுமே அதிகமாகும். நுவன் துஷார 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் முதல் நாள் பகல்போசன இடைவேளைக்கு முன்னரே தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேல் மாகாண வடக்கு அணிக்கு கவீன் பண்டார கை கொடுக்க 9 விக்கெட்டுக்கு 282 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பண்டார 144 ஓட்டங்களை பெற்றார். சன்ஜிக ரித்ம 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 218 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் ஆட்டத்தின் கடைசி நாளான இன்று வியாழக்கிழமை (27) தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கிழக்கு மாகாண அணி சரியாக 218 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

ரமேஷ் நிலன்த (79) மற்றும் சச்சித ஜயதிலக்க (59) அரைச்சதம் பெற்றனர். எனினும் துவின்து திலகரத்ன 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியில் வெற்றிபெற ஒரு ஓட்டத்தை பெற்றால் போதும் என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேல் மாகாண வடக்கு அணி 4 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

B குழுவில் உள்ள கிழக்கு மாகாண அணிக்கு இது மூன்றாவது தோல்வியாகும். அவ்வணி ஒரு போட்டியை சமநிலையில் முடித்தது. ஆனால் மேல் மாகாண வடக்கு அணி 4 போட்டிகளிலும் வென்று அந்த குழுவில் முதலிடத்தில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

கிழக்கு மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 64 (21.1) – வசன்த டி சில்வா 25, நுவன் துஷார 5/13, பினுர பெர்னாண்டோ 4/26

மேல் மாகாணம் வடக்கு (முதல் இன்னிங்ஸ்) –  282/9d (61.1) – கவீன் பண்டார 144, சிலின்த உஷான் 50, சன்ஜிக்க ரித்ம 4/50

கிழக்கு மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 218 (51.5) –  ரமேஷ் நிலன்த 79, சச்சித ஜயதிலக்க 59, துவின்து திலகரத்ன 5/62

மேல் மாகாணம் வடக்கு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 4/0 (2.2)

போட்டி முடிவு – மேல் மாகாண வடக்கு அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி


வட மாகாணம் எதிர் வட மத்திய மாகாணம்

கொழும்பு, புளும்பீல்ட் மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் வட மாகாண அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி களமிறங்கிய வட மாகாண அணி 51.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை பெற்றது.

சிறப்பாக ஆடிய முஹமது அல்பார் 82 ஓட்டங்களை பெற்றார். வி. ஜதூஷன் 23 ஓட்டங்களை குவித்தார். வட மத்திய மாகாணத்திற்காக ஆகாஷ் செனரத்ன 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த வட மத்திய மாகாணம் வடக்கு வீரர்களின் பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க தடுமாறியது. குறிப்பாக சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன் வி. ஜதூஷன் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வட மத்திய மாகாண அணி 36 ஓவர்களில் 138 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஜதூஷன் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு கபிலராஜ் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இன்னும் 3 விக்கெட்டுகளே கைவசம் இருக்க வட மத்திய மாகாணம் 52 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸில் பின்தங்கி உள்ளது.

போட்டியின் சுருக்கம்

வட மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 190 (51.5) – முஹமது அல்பார் 82, ஜி. ஜதூஷன் 23, சன்தீப நிசன்சல 2/19, ஆகாஷ் செனரத்ன 5/65

வட மத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) 138/7 (36) – யொஹான் மெண்டிஸ் 61, தினெத் ஹேவாதன்திரி 34, வி. ஜதூஷன் 3/18, கே. கபிலராஜ் 2/39

நாளை போட்டியின் இரண்டாவது நாள்


ஊவா மாகாணம் எதிர் தென் மாகாணம்

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஊவா மாகாண அணி நிதானமாக ஆடி 76 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றது. ஹர்ஷ ராஜபக்ஷ 88 ஓட்டங்களை பெற்று சதம் ஒன்று பெறுவதை தவறவிட்டார். பந்து வீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 53 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்றைய நாள் ஆட்டத்தின் கடைசி தறுவாயில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென் மாகாண அணி 3 விக்கெட் இழப்புக்கு 78 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஊவா மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 198 (76) – ஹர்ஷ ராஜபக்ஷ 88, மீதும் தினெத் 26, ரமேஷ் மெண்டிஸ் 4/53, சரித் அசலங்க 2/17

தென் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 73/3 (24) – பசின்து இசிர 35

நாளை போட்டியின் இரண்டாவது நாள்


மேல் மாகாணம் மத்திய எதிர் வட மேல் மாகாணம்

கொழும்பு பி.ஆர்.சி மைதானத்தில் இன்று ஆரம்பமான இந்த மோதலில் A குழுவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் வட மேல் மாகாண அணி அந்த குழுவில் நான்காவது இடத்தில் இருக்கும் மேல் மாகாண மத்திய அணியிடம் நெருக்கடியை சந்தித்தது.

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மேல் மாகாண மத்திய அணி நிதானமாக ஆடி 204 ஓட்டங்களை குவித்தது. ஹிமேஷ லியனகே (72) மற்றும் லஹிரு விமுக்தி (60) அரைச்சதம் பெற்றனர். தரின்து ரத்னாயக்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர் வரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த வட மத்திய மாகாணம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 138 ஓட்டங்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்துள்ளது. யொஹான் மெண்டிஸ் 63 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

மேல் மாகாணம் மத்திய (முதல் இன்னிங்ஸ்) – 204 (46.1) – ஹிமேஷ லியனகே 72, லஹிரு விமுக்தி 60, தரின்து ரத்னாயக்க 5/50, அசித்த பெர்னாண்டோ 3/52

வட மேல் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 128/7 (32) – சச்சின் ஜயவர்தன 27*, ருக்ஷான் பெர்னாண்டோ 27, ஜனித் லியனகே 3/38, சஹான் நாணயக்கார 2/28

நாளை போட்டியின் இரண்டாவது நாள்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

சிறப்பாக ஆடி போட்டியை சமநிலை செய்தது வட மாகாணம்
20369036_1629098943830331_55240167005993

சிறப்பாக ஆடி போட்டியை சமநிலை செய்தது வட மாகாணம்

sl-v-ind-2017-live-score-728.jpg

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 23 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியில் இன்று வெள்ளிக்கிழமை (28) முடிவடைவந்த குழுநிலை போட்டிகள் முன்றும் சமநிலை கண்டன.

இதில் வட மாகாண அணி வட மத்திய மாகாணத்துடனான போட்டியில் மயிரிழையில் தோல்வியை தவிர்த்துக் கொண்டது. இதன்மூலம் மாகாணங்களுக்கு இடையிலான போட்டியில் வட மாகாணம் முதல் முறை அட்டம் ஒன்றை சமநிலையில் முடித்துக் கொண்டது. இதற்கு முந்தைய மூன்று குழுநிலை போட்டிகளிலும் வட மாகாணம் தோல்வியையே சந்தித்தது.

ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளும் மந்தமாக ஆடியதால் எதிர்பார்த்தது போல் போட்டி சமநிலையில் முடிந்தது. வட மேல் மற்றும் மேல் மாகாண மத்திய அணிகளுக்கு இடையிலான போட்டியும் வெற்றி தோல்வி இன்றி முடிந்தது.

வட மாகாணம் எதிர் வட மத்திய மாகாணம்

கொழும்பு பிளும்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வட மாகாண அணி துடுப்பாட்டத்தில் சோபித்தபோதும் வட மத்திய மாகாணம் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக அடியதால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

வட மாகாணம் தனது முதல் இன்னிங்ஸில் 190 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தின் கடைசி நாளான இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த வட மத்திய மாகாணம் 55.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 235 ஓட்டங்களை பெற்று முன்னிலையை அடைந்தது. சன்தீப நிசன்சல ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களை பெற்றதோடு யொஹான் மெண்டிஸ் 63 ஓட்டங்களை பெற்றார்.

வட மாகாணத்திற்கு துடுப்பாட்டத்தில் அரைச்சதம் பெற்ற முஹமது அல்பர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு வி. ஜதூஷனும் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 45 ஓட்டங்களால் பின்தங்கிய வட மாகாண அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக துடுப்பெடுத்தாடியது. அந்த அணி 45.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை பெற்ற நிலையில் வட மத்திய மாகாண அணிக்கு 231 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதன்போது வட மாகாண அணிக்காக துலாஜ் ரணதுங்க 74 ஓட்டங்களை பெற்றார். சதுரங்க அபேசிங்க 36 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் வெற்றி இலக்கை நோக்கி கடைசி நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த வட மத்திய மாகாணம் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய போதும் வெற்றி இலக்கை எட்ட இன்னும் 31 ஓட்டங்களே தேவைப்படும் நிலையில் ஆட்டநேரம் முடிவுக்கு வந்தது.

ஆட்ட நேர முடிவின்போது வட மத்திய மாகாண அணி 38.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை எடுத்திருந்தது. அபாரமாக ஆடிய தினெத் ஹேவதன்திரி ஆட்டமிழக்காது 121 ஓட்டங்களை பெற்றார்.

பேட்டியின் சுருக்கம்

வட மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 190 (51.5) – முஹமது அல்பார் 82, வி. ஜதூஷன் 23, சன்தீப நிசன்சல 2/19, ஆகாஷ் செனரத்ன 5/65

வட மத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) 235 (55.3) – யொஹான் மெண்டிஸ் 63, தினெத் ஹேவாதன்திரி 34, வி. ஜதூஷன் 3/40, முஹமது அல்பார் 3/54, சசித் லக்ஷான் 2/54, கே. கபிலராஜ் 2/62

வட மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 275/9d (49.3) – துலாஜ் ரணதுங்க 74, பராக்கிரம தென்னகோன் 42, .கே. டைரோன் 33, சதுரங்க அபேசிங்க 4/36, சன்தீப நிசன்சல 3/36

வட மத்திய மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 200/2 (38.5) – தினெத் ஹெவாதன்திரி 121*, யொஹான் மெண்டிஸ் 59, .கே. டைரோன் 2/64

போட்டி முடிவுசமநிலையில் முடிவு


 மேல் மாகாணம் மத்திய எதிர் வட மேல் மாகாணம்

கொழும்பு பி.ஆர்.சி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வட மேல் மாகாணத்திற்கு எதிராக மேல் மாகாண மத்திய அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஸ்திரமாக துடுப்பெடுத்தாடியபோதும் அது வட மேல் மாகாண அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது.

குறிப்பாக போதிய வெளிச்சம் இல்லாமல் முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டமை மேல் மாகாண மத்திய அணிக்கு பாதகமாக இருந்தது. இந்த போட்டி சமநிலையில் முடிந்த போதும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதற்கான புள்ளிகளை மேல் மாகாண மத்திய அணி பெற்றுக்கொண்டது.

மேல் மாகாண மத்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களை பெற்ற நிலையில் வட மேல் மாகாண அணி முதல் இன்னிங்ஸில் 187 ஓட்டங்களுக்கே சுருண்டது.

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேல் மாகாண மத்திய அணி சன்தீர சமரவிக்ரமவின் சதத்தால் (133), 283 ஓட்டங்களை பெற்றது.

இதன்படி வட மேல் மாகாணத்திற்கு போட்டியின் கடைசி தறுவாயில் 301 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் தனது இரண்டாவது இன்னிஸை ஆடிய வட மேல் மாகாண அணி ஆட்ட நேர முடிவில் 8 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 42 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

மேல் மாகாணம் மத்திய (முதல் இன்னிங்ஸ்) – 204 (46.1) – ஹிமேஷ லியனகே 72, லஹிரு விமுக்தி 60, தரின்து ரத்னாயக்க 5/50, அசித்த பெர்னாண்டோ 3/52

வட மேல் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 187 (61.3) – சச்சின்த பீரிஸ் 51, ஜனித் லியனகே 4/64, டிஷக மனோஜ் 2/49

மேல் மாகாணம் மத்திய (இரண்டாவது இன்னிங்ஸ்) – 283 (71.3) – சதீர சமரவிக்ரம 133, மனெல்கர் டி சில்வா 33, தரிந்து ரத்னாயக்க 5/114, சசின் ஜயவர்தன 4/30  

வட மேல் மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 42/2 (8) – லியோ பிரான்சிஸ்கோ 22*, விஷாத் ரன்திக்க 0/1

போட்டி முடிவு சமநிலையில் முடிவு

ஊவா மாகாணம் எதிர் தென் மாகாணம்

ஹம்பாந்தோட்டை மஹிந்த ரஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் இரண்டாவது நாளான இன்று தென் மாகாணம் தனது முதல் இன்னிங்ஸில் நிதானமாக ஆடி ஓட்டங்களை அதிகரித்துக் கொண்டது.

ஊவா மாகாணம் முதல் இன்னிங்ஸில் பெற்ற 198 ஓட்டங்களை கடப்பதற்கு டில்ஷான் டி சொய்ஸாவின் சதம் தென் மாகாண அணிக்கு கைகொடுத்தது. அந்த அணி 95 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இந்து 261 ஓட்டங்களை பெற்றது. சொய்சா சரியாக 100 ஓட்டங்களை பெற்றார். வேறு எந்த வீரரும் 35 ஓட்டங்களை தாண்டவில்லை.

இவன்க சன்ஜுல மற்றும் ஹர்ஷ ரஜபக்ஷ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 63 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஊவா மாகாண அணி கடைசி நாள் அட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஹர்ஷ ராஜபக்ஷ ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை குவித்தார்

இதன்படி போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்தது. எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற தென் மாகாண அணி அதற்கான புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

ஊவா மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 198 (76) – ஹர்ஷ ராஜபக்ஷ 88, மீதும் தினெத் 26, ரமேஷ் மெண்டிஸ் 4/53, சரித் அசலங்க 2/17

தென் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 261 (95) –  டில்ஷான் டி சொய்ஸா 100, பசின்து இசிர 35, இவன்க சன்ஜுல 3/62, ஹர்ஷ ராஜபக்ஷ 3/39

ஊவா மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 128/4 (29) – ஹர்ஷ ரஜபக்ஷ 51*, யேஷான் விக்கிரமாரச்சி 36, சரித் அசலங்க 2/21

போட்டி முடிவு சமநிலையில் முடிவு 

http://www.thepapare.com

23 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான மாகாணங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் பங்குகொண்டுள்ள வட மாகாண வீரர்கள் குறித்த ஒரு பார்வை

Link to comment
Share on other sites

42 minutes ago, நவீனன் said:

மாகாணங்களுக்கு இடையிலான போட்டியில் வட மாகாணம் முதல் முறை அட்டம் ஒன்றை சமநிலையில் முடித்துக் கொண்டது. இதற்கு முந்தைய மூன்று குழுநிலை போட்டிகளிலும் வட மாகாணம் தோல்வியையே சந்தித்தது.

வாழ்த்துக்கள் அணியினருக்கு

ஆரம்பம் இது - நெடுதூரப் பயணம் இன்னமும் இருக்குது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.