Jump to content

புத்த மதத்தை பின்பற்றும் அக்ஷரா ஹாசன்? வாழ்த்திய கமல்


Recommended Posts

புத்த மதத்தை பின்பற்றும் அக்‌ஷரா ஹாசன்? வாழ்த்திய கமல்

கமல்ஹாசனின் இளையமகள் அக்‌ஷரா ஹாசன் புத்த மதத்தின் மீது அதீத பற்று வைத்திருக்கிறாராம். அதனால் அவர் புத்த மதத்தை பின்பற்றுகிறாரா? என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது.

 
201707281858564768_Kamal-praise-Akshara-
 
கமல்ஹாசனின் இளையமகள் அக்‌ஷரா தற்போது அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் நடிக்கிறார். அந்த அனுபவம் பற்றி அக்‌ஷராவிடம் கேட்ட போது...

“இயக்குனர் சிவா என்னிடம் ‘விவேகம்’ கதையை சொன்ன போது மிகவும் பிடித்துப்போய்விட்டது. எனவே உடனே இதில் நடிக்க சம்மதித்தேன். இந்த வேடத்தில் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அஜித்துடன் இதில் பணிபுரிந்தது ஒரு அருமையான அனுபவம். அவரிடம் மிகப்பெரிய நடிகர் என்ற எண்ணம் துளியும் கிடையாது. எல்லோருக்கும் உதவியாக இருப்பார். எங்கள் இருவருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம். எனவே அது பற்றி படப்பிடிப்பு இடைவெளியில் நிறைய பேசுவோம். என்னை அக்‌ஷராஜி என்று மரியாதையுடன் அழைத்தார். அஜித் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். அதை நேரில் பார்த்து அறியும் வாய்ப்பு ‘விவேகம்’ படப்பிடிப்பின் போது கிடைத்தது.

201707281858564768_1_Akshara-haasan2._L_

பல்கேரியா, செர்பியாவில் கடும் குளிரிலும் உறைபனியிலும் இந்த படக்குழு மிகவும் கடுமையாக உழைத்தனர். படம் வெளியாகும் நாளை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

சினிமா இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் என்ஆசை. நடிகையாகவும் வந்து விட்டேன். இரண்டையும் தொடர வேண்டும். அப்பா, அக்கா, நான் மூவரும் எல்லா வி‌ஷயங்களில் ஒத்துப்போனாலும் சில வி‌ஷயங்களில் மாறுபட்டவர்கள். அப்பா கடவுள் நம்பிக்கை இல்லாதவர், சுருதி கடவுள் நம்பிக்கை உள்ளவர். அப்பாவை போல எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் நம்புகிறவர்களை மதிப்பேன். எனக்கு புத்தர் போதனை பிடிக்கும். புத்த மத வழிபாடு பிடிக்கும். அதை செய்கிறேன். ஆனால் புத்த மதத்தில் சேரவில்லை” என்றார்.

அக்‌ஷராவின் இந்த பதிலுக்கு கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் வேறு மதத்திற்கு மாறிவிட்டாயா? லவ் யு, இன்பமாய் வாழ்க என்று குறிப்பிட்டிருக்கிறார்.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/07/28185848/1099117/Kamal-praise-Akshara-Follows-Buddhism.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.