Jump to content

ஆசியாவின் நோபல் பரிசு இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு


Recommended Posts

ஆசியாவின் நோபல் பரிசு இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு

 
ஆசியாவின் நோபல் பரிசு இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு
  •  

ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ”ராமன் மக்சாசே” விருது இலங்கைத் தமிழ்ப் பெண் கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்படவுள்ளது.

82 வயதுடைய இவர் இலங்கையில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துள்ளார்.

இந்த விருது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக பிலிப்பைன்ஸில் வைத்து வழங்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

1957 காலப்பகுதியில் பிலிப்பைன்ஸின் அரச தலைவராக இருந்த ரெமோன் மெக்செசேவின் ஞாபகர்த்தமாக இந்த விருது வழங்கப்படவுள்ளது.

http://uthayandaily.com/story/14350.html

Link to comment
Share on other sites

ஈழத்தமிழ்ப் பெண்மணிக்கு ஆசியாவில் கிடைத்துள்ள அதியுச்ச கௌரவம்!

 
 

ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் ரமோன் மாக்சேசே விருதுகளுக்கான ஆறு வெற்றியாளர்களிடையே, இலங்கையைச் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர் கெத்ஸி சண்முகம் அவர்களும் தேர்வாகியுள்ளார்.

யுத்தத்தின்போது அநாதைகளாக்கப்பட்டோரையும் விதவைகளையும் சிறந்த உளவளத்துணை செய்து வழிப்படுத்தினார் என்பதுபோன்ற சவால் நிறைந்த பணிகளைச் செய்ததற்காகவே அவருக்கு இந்த நோபல் விருது கிடைத்துள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீள வழிப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இரக்கத்துடன் உளவியல் ரீதியிலான தைரியத்தினைக் கொடுப்பதிலும் பெண்கள் மற்றும் சிறுவர்களை அக்கறையோடு ஊக்கப்படுத்துவதிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டுள்ளார்.

இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  மற்றும் இடம்பெயர்ந்த பெரியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உளவியல் ரீதியான பணிகளை நோர்வேயின்  Save the Children அமைப்புடன் இணைந்து மேற்கொண்டுள்ளார்.

இதை விட ஜப்பான், இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டது தொடர்பாக அவரது வாழ் நாள் சேவையினை கௌரவப்படுத்தும் வகையிலே இந்த விருது வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நோபல் பரிசானது, 1957ஆம் ஆண்டு விமான விபத்தில் இறந்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் ஞாபகார்த்தமாக அவரின் பெயரிடப்பட்டே வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வருடத்திற்கான விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 31 ம் தேதி மணிலாவில் வழங்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Gethsie-Shanmugam-among-Magsaysay-Awards

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்..!

இந்தப் பெரியம்மாவை பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஏதாவது உள்குத்து இருக்குமோ?! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für கெத்சி சண்முகம்.

ஆசியாவின் நோபல் "மகசேசே" விருது பெறுகிறார்... 82 வயது ஈழத்தமிழ் பெண்மணி. கெத்சி சண்முகம்.

மணிலா: ஆசியாவின் நோபல் பரிசான மகசேசே விருது 82 வயது ஈழத் தமிழ் பெண்மணி கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபரான ரமோன் மகசேசே நினைவாக ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஈழத் தமிழ்ப் பெண்மணி கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தோனேசியா, சிங்கப்பூர் நாட்டவருக்கும் இந்த விருது பர்கிந்து வழங்கப்படுகிறது.

நன்றி  தற்ஸ்  தமிழ்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.