Jump to content

நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்: இரா. சம்பந்தன்


Recommended Posts

நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்: இரா. சம்பந்தன்

 


நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்: இரா. சம்பந்தன்
 

பணிப்பகிஷ்கரிப்பினாலோ, சதித்திட்டங்களைத் தீட்டியோ, அத்தியாவசிய சேவைகளைக் குழப்பியோ அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவை குழப்பப்படுவதை நிறுத்தவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அத்தியாவசிய சேவைகளைக் குழப்புவது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்பதுடன் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க வேண்டுமாக இருந்தால், அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும் என தாம் முன்னெச்சரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

”சரியான தீர்மானங்களை எடுக்க முடியாவிட்டால் அது அரசாங்கத்தின் பலவீனமே. எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் எதிர்க்கட்சியின் இடையூறுகள் அதிகரிக்கும். வினைத்திறனான முறையில் நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அதனை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும்,” என பாராளுமன்றத்தில் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

பெட்ரோலியத்துறை ஊழியர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பாராளுமன்றத்தில் கருத்து வௌியிட்டது.

 

காணொளியில் காண்க…

 

http://newsfirst.lk/tamil/2017/07/நாட்டை-சிறந்த-முறையில்-ந/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா ..உங்கடையைக் கொடுங்கோ

Link to comment
Share on other sites

46 minutes ago, alvayan said:

ஐயா ..உங்கடையைக் கொடுங்கோ

இருந்தால் தானே கொடுக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

 

அதுசரி உந்த வீடியோவிலை பேசின இரண்டு பேரும் ஆளும்கட்சியிலை இருக்கினமோ இல்லாட்டி எதிர்க்கட்சியிலை இருக்கினமோ????tw_tounge:

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

அதுசரி உந்த வீடியோவிலை பேசின இரண்டு பேரும் ஆளும்கட்சியிலை இருக்கினமோ இல்லாட்டி எதிர்க்கட்சியிலை இருக்கினமோ????tw_tounge:

அதுசரி உந்த வீடியோவைவைப் பாத்தணீன்களோ

இதுதான் ஒரு எதிர்க்கட்சிக்கு அழகு.

சும்மா வாய் கிழிய விதண்டாவாதம் பண்ணாமல் நாட்டிற்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது அரசுடன் கைகோத்து இருப்பது / இதைத்தான் மேலைய்த்தேய நாடுகளில் செய்கிறார்கள் என்று சொன்னால் புரியவா போகுது அங்கு வாழும் பலருக்கு.

சபாஷ் சம்பந்தர் + சுமந்திரன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிட்கு ஒரு பிரச்சனை எண்டால் அரசுடன் கைகோக்கவேண்டும். தமிழர்க்கு ஒரு பிரச்சனை எண்டா அவர்களை அம்போ எண்டு கைவிட்டிட்டு நாட்டை விட்டு ஓட வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

அதுசரி உந்த வீடியோவைவைப் பாத்தணீன்களோ

இதுதான் ஒரு எதிர்க்கட்சிக்கு அழகு.

சும்மா வாய் கிழிய விதண்டாவாதம் பண்ணாமல் நாட்டிற்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது அரசுடன் கைகோத்து இருப்பது / இதைத்தான் மேலைய்த்தேய நாடுகளில் செய்கிறார்கள் என்று சொன்னால் புரியவா போகுது அங்கு வாழும் பலருக்கு.

சபாஷ் சம்பந்தர் + சுமந்திரன்.

 

வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர்தான் ஒரு சிறந்த எதிர்கட்சி தலைவருக்கு உதாரணம்.:10_wink:

என்னதான் இருந்தாலும் மகித்தாவுக்கு  இருக்கிற செல்வாக்கு சுமத்திரனுக்கோ சம்பந்தனுக்கோ சிங்கள மக்களிடம் ஒரு பொழுதும் கிடைக்கப்போவதில்லை.... என்பதை இந்த உத்தமர்கள் உணர வேண்டும்.... 

Link to comment
Share on other sites

ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆதரவு வழங்காது தமிழ்க் கூட்டமைப்பு – சம்­பந்­தன் தெரிவிப்பு

 
ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆதரவு வழங்காது தமிழ்க் கூட்டமைப்பு – சம்­பந்­தன் தெரிவிப்பு
  •  

ஆட்­சி­யைக் கவிழ்க்­கத் துடிக்­கும் மகிந்த அணி­யின் முயற்­சிக்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஒரு­போ­தும் ஒத்­து­ழைப்பு வழங்­காது என நேற்­றுச் சபை­யில் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தார் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­தன்.

தன்­னை­யும், எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யை­யும் கடு­மை­யாக விமர்­சித்த மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தினேஷ் குண­வர்­த­ன­வுக்கு சம்­பந்­தன் உட­ன­டி­யா­கவே பதி­லடி கொடுத்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற அத்­தி­யா­வ­சிய பொதுச் சே­வை­கள் சட்­டத்­தின்­கீழ், எரி­பொ­ருள் வழங்­கல் மற்­றும் விநி­யோ­கம் ஆகி­ய­வற்றை அத்­தி­யா­வ­சிய சேவை­யாக அறி­விக்­கும் பிர­க­ட­னம் மீதான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே சம்­பந்­தன் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அரசு உட­ன­டி­யா­கத் தேர்­தலை நடத்­த­வேண்­டு­மென எனக்கு முன்­னர் உரை­யாற்­றிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தினேஷ் குண­வர்­தன வலி­யு­றுத்­தி­னார். உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­த­லையோ அல்­லது மாகாண சபைத் தேர்­த­லையோ அவர் கோர­வில்லை. நாடா­ளு­மன்­றத் தேர்­த­லையே மகிந்த அணி­யி­னர் குறி­வைத்­துள்­ள­னர். அதையே அவர் கோரி­னார்.

அரசை முடக்­க­வேண்­டும்; ஆட்­சி­யைக் குழப்­ப­வேண்­டும்; ஆட்­சி­யைக் கவிழ்க்­க­வேண்­டும் என்­பதே மகிந்த அணி­யின் தொடர்ச்­சி­யான நோக்­க­மாக – அழுத்­த­மாக இருக்­கின்­றது. இது மக்­கள் ஆணைக்­குப் புறம்­பான செய­லா­கும்.

அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்த ராஜ­பக்ச மீண்­டும் போட்­டி­யிட்­டார். அதில் அவர் தோல்வி அடைந்­தார். தலைமை அமைச்­சர் பத­விக்­கா­க­வும் அவர் கள­மி­றங்­கி­னார். அதற்கு மக்­கள் ஆணை வழங்­க­வில்லை. மாற்­றுத் தரப்­புக்கே மக்­கள் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கு­ரிய ஆணையை வழங்­கி­னர்.

எனவே, தேர்­தல் ஊடாக ஆட்­சி­யைக் கவிழ்ப்­பதை விடுத்து, உரிய காலத்­துக்கு முன்­னர் அதைச் செய்ய முற்­ப­டு­வது மக்­கள் தீர்ப்­புக்கு எதி­ரான செய­லா­கும்.

குறிப்­பிட்ட காலத்­துக்கு முன்­னர் ஆட்­சி­யைக் கவிழ்க்க வேண்­டு­மா­னால் நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை கொண்­டு­வந்து அதை அர­ச­மைப்­புக்கு உட்­பட்ட ரீதி­யில் செய்­ய­லாம். இப்­படி எதை­யும் செய்­யாது – மக்­கள் ஆணைக்கு எதி­ரா­கச் செயற்­ப­டும் மகிந்த அணி உறுப்­பி­னர் தினேஷ் குண­வர்­தன என்­னி­ட­மி­ருந்து எத்­த­கைய ஆத­ரவை எதிர்­பார்க்­கின்­றார்?

ஜன­நா­ய­கக் கட்­ட­மைப்பு வலுப்­பெ­ற­வேண்­டு­மா­னால் தொழிற்­சங்க கட்­ட­மைப்பு அவ­சி­யம். அவற்­றின் கோரிக்­கை­க­ளுக்கு செவி­ம­டுக்­க­வேண்­டும்.

எனி­னும், அர­சி­யல் நோக்­கங்­க­ளோடு முறை­யற்ற விதத்­தில் அத்­தி­யா­வ­சிய சேவை­களை முடக்­கும் வகை­யில் தொழிற்­சங்­கப் போராட்­டங்­களை நடத்தி அர­சைக் கவிழ்ப்­ப­தற்­கான முயற்­சி­களை ஏற்க முடி­யாது.

இத­னைத் தடுப்­ப­தற்கு அரசு தைரி­ய­மான முடி­வு­களை எடுத்து அவற்றைத் தைரி­ய­மாக நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டும்-­­என்­றார்.

http://uthayandaily.com/story/14311.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு உரிமைகளை பெற்று கொடுப்பதற்கும் உங்களுக்கு அந்த எழும்பு வேண்டுமுங்கோ...

Link to comment
Share on other sites

8 hours ago, ஜீவன் சிவா said:

அதுசரி உந்த வீடியோவைவைப் பாத்தணீன்களோ

இதுதான் ஒரு எதிர்க்கட்சிக்கு அழகு.

சும்மா வாய் கிழிய விதண்டாவாதம் பண்ணாமல் நாட்டிற்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது அரசுடன் கைகோத்து இருப்பது / இதைத்தான் மேலைய்த்தேய நாடுகளில் செய்கிறார்கள் என்று சொன்னால் புரியவா போகுது அங்கு வாழும் பலருக்கு.

சபாஷ் சம்பந்தர் + சுமந்திரன்.

 

நாங்கள் புலம்பெயர்ந்து வாழும் வாழும் மேலை நாடுகள்பற்றி அறிந்த, அனுபவித்த வரையில் இங்கு அரசுகள் மக்களுக்காகவே செயற்படுகின்றன. தேசியத்துக்குப் பாதகம் ஏற்பாடாது, அரசானது எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, எதிர்க்கட்சிகளும் பூரண ஆதரவுநல்கிச் செயற்படுகிறார்கள். அதனை நீங்களும் அனுபவரீதியாக உணர்திருப்பீர்கள். ஏனெனில் நீங்கள் வாழ்ந்த மேலைநாடு உலகத்திலேயே மக்கள் சந்தோசமாக வாழும் நாடுகளில் 1ம் இடத்தைப் பெற்றுள்ளது. சீறீலங்காவின் சிங்கள அரசு அப்படியல்ல. மக்களை இனரீதியாகப் பிரித்து ஆட்சிசெய்கிறது. தமிழர்களை ஓரம்கட்டிச் சிங்களவரை அரவணைத்து சட்டங்களையும் இயற்றுகிறது. தேசியத்திற்குப் பிரச்சனை என்று வரும்போது முடிவெடுக்க முடியாமல் தங்கள் சிங்கள மதகுருமாரை நோக்கி ஓடுகிறது. இதனை அறிந்துதான் அரசுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும் என்ற சம்பந்தர் ஐயா கூறிவிட்டு, அவரே அரசுக்கு ஆதரவு நல்க முயற்சிப்பதானது, சிங்கள அரசுசார்ந்து செயற்படும் அவருக்கும் முதுகெலும்பு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி நிற்கிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் அரை குறையாய் விளங்கிக்கொண்டால் இப்படியான வியாக்கியானங்கள் தான் வெளிவரும்..

 

Link to comment
Share on other sites

9 hours ago, Paanch said:

நாங்கள் புலம்பெயர்ந்து வாழும் வாழும் மேலை நாடுகள்பற்றி அறிந்த, அனுபவித்த வரையில் இங்கு அரசுகள் மக்களுக்காகவே செயற்படுகின்றன. தேசியத்துக்குப் பாதகம் ஏற்பாடாது, அரசானது எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, எதிர்க்கட்சிகளும் பூரண ஆதரவுநல்கிச் செயற்படுகிறார்கள். அதனை நீங்களும் அனுபவரீதியாக உணர்திருப்பீர்கள். ஏனெனில் நீங்கள் வாழ்ந்த மேலைநாடு உலகத்திலேயே மக்கள் சந்தோசமாக வாழும் நாடுகளில் 1ம் இடத்தைப் பெற்றுள்ளது. சீறீலங்காவின் சிங்கள அரசு அப்படியல்ல. மக்களை இனரீதியாகப் பிரித்து ஆட்சிசெய்கிறது. தமிழர்களை ஓரம்கட்டிச் சிங்களவரை அரவணைத்து சட்டங்களையும் இயற்றுகிறது. தேசியத்திற்குப் பிரச்சனை என்று வரும்போது முடிவெடுக்க முடியாமல் தங்கள் சிங்கள மதகுருமாரை நோக்கி ஓடுகிறது. இதனை அறிந்துதான் அரசுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும் என்ற சம்பந்தர் ஐயா கூறிவிட்டு, அவரே அரசுக்கு ஆதரவு நல்க முயற்சிப்பதானது, சிங்கள அரசுசார்ந்து செயற்படும் அவருக்கும் முதுகெலும்பு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி நிற்கிறது.  

ஒரு நாடும் மக்களும் அதன் அரசும் அரசியல்வாதிகளும் மாற்றம் தேவை என்று நியாயமாய் போராடும்போதும் + அரசுக்கு ஒத்துழைப்பை வழங்குவது நியாயமானது. இதனால்தான் நோர்வே இன்றும் முதலிடத்தில். அதற்குள் அப்படியான மாற்றமே தேவை இல்லை என்பவர்களுக்கு பதில்தர எனக்கு விருப்பமில்லை.

4 hours ago, Sasi_varnam said:

எல்லாவற்றையும் அரை குறையாய் விளங்கிக்கொண்டால் இப்படியான வியாக்கியானங்கள் தான் வெளிவரும்..

 

அதைத்தான் நானும் விலாவாரியா சொல்கின்றேன் + விளக்க முயற்சிக்கின்றேன்.

மறுபடியும் சட்டி சுடுகுதெண்டு நெருப்புக்குள்ளதான் குதிப்பன் எண்டா நான் ஒண்டும் பண்ண முடியாது. சட்டிய தூக்கி வெளியில வைக்கணும். அதுக்குத்தான் இந்த முயற்சி நடக்குது. 

இல்லை நெருப்புக்குள்ள குதிக்கணும் + அந்த வெக்கையில குளிர் காயனும் என்று நீங்கள் நினைத்தால் - நல்லூர் கந்தனுக்கு அரோகரா.:grin:

Link to comment
Share on other sites

சிறிலங்காவை எந்தவிதத்திலும் நோர்வேயுடன் ஒப்பிட முடியாது. சிறிலங்கா முற்று முழுதான இனவாத நாடு. சிறுபான்மையினரை நசுக்கி கொண்டிருக்கும் நாடு. சிறிலங்கா இனவாத நாடு இல்லாமல் இருந்திருந்தால் இவ்வளவு போரும் அழிவும் வந்திருக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

ஒரு நாடும் மக்களும் அதன் அரசும் அரசியல்வாதிகளும் மாற்றம் தேவை என்று நியாயமாய் போராடும்போதும் + அரசுக்கு ஒத்துழைப்பை வழங்குவது நியாயமானது. இதனால்தான் நோர்வே இன்றும் முதலிடத்தில். அதற்குள் அப்படியான மாற்றமே தேவை இல்லை என்பவர்களுக்கு பதில்தர எனக்கு விருப்பமில்லை.

அதைத்தான் நானும் விலாவாரியா சொல்கின்றேன் + விளக்க முயற்சிக்கின்றேன்.

மறுபடியும் சட்டி சுடுகுதெண்டு நெருப்புக்குள்ளதான் குதிப்பன் எண்டா நான் ஒண்டும் பண்ண முடியாது. சட்டிய தூக்கி வெளியில வைக்கணும். அதுக்குத்தான் இந்த முயற்சி நடக்குது. 

இல்லை நெருப்புக்குள்ள குதிக்கணும் + அந்த வெக்கையில குளிர் காயனும் என்று நீங்கள் நினைத்தால் - நல்லூர் கந்தனுக்கு அரோகரா.:grin:

சரி ...சரி.... நீங்கள் தான் இப்ப சூடா  இருக்கிற சட்டிய தூக்கி வைக்கிறேன், குட்டிய தூக்கி வைக்கிறேன் எண்டு ஊரில நிக்கிறியள். அல்லாட காவல்ல எல்லாம் நல்லபடி நடக்கும்.

Link to comment
Share on other sites

On 28/07/2017 at 8:23 PM, nunavilan said:

சிறிலங்காவை எந்தவிதத்திலும் நோர்வேயுடன் ஒப்பிட முடியாது. சிறிலங்கா முற்று முழுதான இனவாத நாடு. சிறுபான்மையினரை நசுக்கி கொண்டிருக்கும் நாடு. சிறிலங்கா இனவாத நாடு இல்லாமல் இருந்திருந்தால் இவ்வளவு போரும் அழிவும் வந்திருக்காது. 

தெரியுதில்லை 

அதுக்குத்தான் மாற்றம் தேவை என்று மாற்றங்களும் + நிர்ப்பந்தங்களும் நடக்கின்றன. இதுக்குள்ளே நீங்கள் வேற புதுசா பழைய கதையுடன்.

இங்கு இப்போது வந்துபோகும் கள உறவுகளுடன் உரையாடுங்கள் / உங்கள் முகமூடிகளை கிழித்து எறிந்துவிட்டு - உண்மைகள் சிலவேளை புரியலாம். 

புரியல்லையா - நல்லூர் கந்தனுக்கு அரோகரா எண்டு சொல்லிட்டு இருக்க வேண்டியதுதான்

****

Link to comment
Share on other sites

Quote

 

இங்கு இப்போது வந்துபோகும் கள உறவுகளுடன் உரையாடுங்கள் / உங்கள் முகமூடிகளை கிழித்து எறிந்துவிட்டு - உண்மைகள் சிலவேளை புரியலாம். 

புரியல்லையா - நல்லூர் கந்தனுக்கு அரோகரா எண்டு சொல்லிட்டு இருக்க வேண்டியதுதான்.

 

உங்கு வந்து போன  பின்பும் அதே செய்தி தான்.

போர் முடிந்து இவ்வளவு காலமாகியும் உந்த பயங்கரவாத சட்டத்தை ஏன் நீக்க முடியவில்லை என கூறுங்கள் பார்க்கலாம்.

 

Link to comment
Share on other sites

16 minutes ago, nunavilan said:

உங்கு வந்து போன  பின்பும் அதே செய்தி தான்.

போர் முடிந்து இவ்வளவு காலமாகியும் உந்த பயங்கரவாத சட்டத்தை ஏன் நீக்க முடியவில்லை என கூறுங்கள் பார்க்கலாம்.

 

இது அரசியல் சம்பந்தப்பட்டது - எனக்கு தெரியாது

நான் மக்களின் வாழ்க்கை நிலையை வைத்தே அரசியலைப் பார்ப்பவன்.

மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் - அது மேம்பாடு

பயங்கரவாத சட்டமும் நிச்சயமாக நீக்கப்படும்.

அதுவும் நீக்கப்பட்டால் - முன்னாள் புலி உறுப்பினர் ஒரு தலைமை நீதிபதியை சுட முயற்சித்ததிற்கு எப்படி தண்டிக்கலாம் + வித்தியா கொலை வழக்கில் சிலரை எப்படி இப்பவும் உள்ள வைத்திருக்கலாம். ஆவா குழு + வாள் வெட்டு கோஷ்டியை எப்படி இப்பவும் உள்ள வைத்திருக்கலாம். போதைப் பொருள் கடத்தலில் அகப்பட்டவர்களை இப்பவும்  பிணை கொடுக்காமல் வைத்திருக்கிறார்களே.

இந்த சட்டம் அப்போது எமக்கு எதிரானது - இப்ப சாதகமானது // குரங்குகளை ஒழிக்க 

இதுவரை பொறுத்த நாம் இன்னமும் பொறுப்பமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்துக்கு... ஒரு கருணாநிதி போல்....
ஈழத்துக்கு ... கிடைத்த அரசியல் வியாதி தான்... சம்பந்தன்.

சம்பந்தனை எந்தக்  காலத்திலும்... நம்ப முடியாத  சுயநல அரசியல்வாதி அவர். 
இதில்.... மாற்றுக கருத்துக்கு இடமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

இது அரசியல் சம்பந்தப்பட்டது - எனக்கு தெரியாது

நான் மக்களின் வாழ்க்கை நிலையை வைத்தே அரசியலைப் பார்ப்பவன்.

மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் - அது மேம்பாடு

மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். நானும் சந்தோசப்படுகின்றேன்.
ஆனால் சந்தோசப்படும் மக்கள் எப்படி சந்தோசமாக  இருக்கின்றார்கள்?
எந்த விதத்தில் சந்தோசமாக இருக்கின்றார்கள்.
எல்லாம் காசு.

காசு இருந்தால் அம்மாவை தவிர எல்லாவற்றையும் வாங்கலாம்.

அது தான் ஈழத்தில் வசிக்கும் எம்மவரிடமும் நடக்கின்றது.

வெளிநாட்டு பணவரவு இருப்பவனுக்கு தடையற்ற வீதியும்...தடையற்ற உணவுவகைகளும் இருந்தாலே போதுமானது.

அடிப்படை உரிமைகள் அவனுக்கு அவசியமற்றது. சொந்தம் உறவுகள் எல்லாம் அவசியமற்றது.

காசு.

காசு வருது அனுபவி ராசா அனுபவி....

இதுதான் இன்றைய இலங்கைத்தமிழர்களின் அரசியல்.

ஏன் நீங்களே உலகம் சுற்றும் வாலிபனாக வலம் வந்தீர்கள்.

இது அங்கிருக்கும் எல்லோராலும் முடியுமா?

உங்கள்/உங்களைச்சார்ந்தவர்களின் நிலையை வைத்து பிறரை/பிறரின் அரசியலை எடை போடாதீர்கள்.
இன்றைய சுகபோகத்தை விரும்பி எதிர்கால சந்ததியினரை நட்டாற்றில் தள்ளிவிடாதீர்கள் என்றுதான் சொல்கிறோம்.

அதற்காக உங்கிருப்பவர்களை இரத்தக்களரி காணச்சொல்லவில்லை.

இனியாவது அரசியல் பம்மாத்துக்களை இனம் காணுங்கள் என்றுதான் சொல்கின்றோம். :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் இருக்கும் போது தானே இத்தனை அ ட்டூழியங்களும் அரங்கேறுகின்றதே. இந்தச் சட்டம் உண்மையான குற்றவாளிகளை தப்புவித்து அப்பாவிகளை தண்டிக்க உதவுகிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரின் திருமலையில்

கண்னியாவை சூள இப்ப அல்லா இருக்கிரார். 

கடர்கரைசேனைக்கும் அல்லா வந்திட்டாடடர்.(விகரையை தவிர வேறு மதத்தினர் புதிதாககட்ட முடியது) ஆனால் இவர்களுக்கு அனுமதி எப்படி கிடைத்தது ?

தோப்பூர் 12 டிவிசன் கொண்டு தனி முஸ்லிம் அலகு ஆகுகிறது.

 

Just now, ஜீவன் சிவா said:

இது அரசியல் சம்பந்தப்பட்டது - எனக்கு தெரியாது

நான் மக்களின் வாழ்க்கை நிலையை வைத்தே அரசியலைப் பார்ப்பவன்.

மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் - அது மேம்பாடு

பயங்கரவாத சட்டமும் நிச்சயமாக நீக்கப்படும்.

அதுவும் நீக்கப்பட்டால் - முன்னாள் புலி உறுப்பினர் ஒரு தலைமை நீதிபதியை சுட முயற்சித்ததிற்கு எப்படி தண்டிக்கலாம் + வித்தியா கொலை வழக்கில் சிலரை எப்படி இப்பவும் உள்ள வைத்திருக்கலாம். ஆவா குழு + வாள் வெட்டு கோஷ்டியை எப்படி இப்பவும் உள்ள வைத்திருக்கலாம். போதைப் பொருள் கடத்தலில் அகப்பட்டவர்களை இப்பவும்  பிணை கொடுக்காமல் வைத்திருக்கிறார்களே.

இந்த சட்டம் அப்போது எமக்கு எதிரானது - இப்ப சாதகமானது // குரங்குகளை ஒழிக்க 

இதுவரை பொறுத்த நாம் இன்னமும் பொறுப்பமே. 

Norway இல் பயங்கரவாத தடை சட்டத்தை வைத்தா இப்படியனவர்களை தண்டிக்கிறார்கள்?

(Please excuse me for spelling mistakes) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் காணிக்கு தமிழ் அமைச்சர் பணம் கொடுத்து விடுவிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஐக்கிய இலங்கையில் தமிழனுக்கு மட்டும் தான் நடக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீச்சீ அப்பிடி யார் சொன்னது? நாட்டுக்கு இப்போ பணப்பிரச்சினை. கைகொடுப்பது அமைச்சரின் கடமை. 

Link to comment
Share on other sites

6 hours ago, putthan said:

தமிழர்களின் காணிக்கு தமிழ் அமைச்சர் பணம் கொடுத்து விடுவிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஐக்கிய இலங்கையில் தமிழனுக்கு மட்டும் தான் நடக்கும்....

எங்கு இது நடந்தது ??

Link to comment
Share on other sites

3 minutes ago, Dash said:

எங்கு இது நடந்தது ??

இன்னமும் வாசிப்பு வேண்டும் தலைவா.

பல இடங்களில் நடந்தது + நடக்க இருக்குது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.