Jump to content

1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பாக 'த ஹிந்து' (The Hindu) பத்திரிகையில் சுமந்திரனின் கட்டுரை


Recommended Posts

The Accord offered the best chance to resolve the Tamil national question but was undermined by successive governments in Colombo

 

 

SumanthiranJPG

M.A. Sumanthiran

July 29, 1987 was a watershed in Sri Lanka’s history. That was the day Indian Prime Minister Rajiv Gandhi signed an accord with Sri Lankan President J.R. Jayewardene in Colombo, in which Sri Lanka promised to share power with the Tamil people. One cannot also forget the attack on the Indian Prime Minister later that day by a Naval Rating at a Guard of Honour. If not for his quick reflexes, the rifle butt that was swung at him would most certainly have cracked his skull. The history of Sri Lanka would have been very different had he not survived that assault, as also the history of the Tamil people in Sri Lanka if Rajiv Gandhi was not assassinated four years later in Tamil Nadu.

A unique accord

The Indo-Sri Lanka Accord itself was unique in that it was a bilateral international agreement between two sovereign nations, where one promised the other that an internal political rearrangement would be made in order to solve the Tamil national question. It was indeed ironic that a President (Jayewardene) who popularised and deified the concept of “unity, sovereignty and territorial integrity of Sri Lanka” assured the neighbour as to how he would solve an “internal” political question and then invited the Indian Army into Sri Lanka to help implement the accord. Following on this promise, the Constitution of Sri Lanka was amended, Provincial Councils were created and two of those — North and East — were merged, albeit temporarily, but which lasted for nearly two decades.

Upon the main Tamil political party, the Tamil United Liberation Front (TULF), expressing dissatisfaction over the devolution arrangements, President Jayewardene subsequently in November 1987 gave a further written undertaking to India that those areas would be rectified. That was not followed up since by then fighting had erupted between the Indian Peace Keeping Forces (IPKF) and the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Jayewardena’s successor, Ranasinghe Premadasa, terminated the engagement with India on the strength of direct negotiations with the LTTE, thus ending the role India could play in the full realisation of the principles embodied in the accord.

 

Th27-Rajapaksa

Getty Images   | Photo Credit:

 

Although very little mention is made of the Indo-Sri Lanka Accord in the Sri Lankan government narratives thereafter, every attempt to solve the unresolved Tamil national question has indeed been on the lines of that accord, which theoretically remains in force even today. The question as to whether Sri Lanka was breaching the agreement arose when the Supreme Court by a judgment in 2006 “demerged” the Northern and Eastern provinces. That still remains a moot question. Sri Lanka though, for its part, has constantly assured India that a satisfactory power-sharing arrangement would be made. It is noteworthy that it was during President Mahinda Rajapaksa’s tenure that no less than three joint communiqués were issued with India, promising to “implement the 13th Amendment to the full and building upon it so as to ensure meaningful devolution of power”. Thus even without explicit mention of the Indo-Sri Lanka Accord, Colombo at least pays lip service to its obligations under this agreement even now.

New Constitution

A major deviation from the policy of non-acknowledgment of the accord occurred when President Maithripala Sirisena mentioned it as one of the agreements which, if implemented, would have prevented the enormous loss of life in Sri Lanka. He said this in his address to the Sri Lankan Parliament on January 9, 2016 while speaking on the resolution to set up a Constitutional Assembly to draft a new Constitution for the country. The other agreements mentioned by him are the S.W.R.D. Bandaranaike-S.J.V. Chelvanayakam Pact of 1957 and the Dudley Senanayake-Chelvanayakam Agreement of 1965.

One and a half years after that speech by President Sirisena, the Constitutional Assembly is yet to receive even an interim report from the Steering Committee, which is mandated with the task of drafting a new Constitution, although six subcommittee reports were presented in December 2016. A draft interim report was available at the same time, but has been delayed owing to political manoeuvring by different political actors whose main objective seems to be winning the next election and not solving the vexed Tamil national question, which has plagued Sri Lanka since independence and which gave rise to a three-decade bloody war.

The Indo-Sri Lanka Accord gave Sri Lanka the best chance to recover from the devastation caused by the anti-Tamil pogrom of July 1983, when Colombo accepted New Delhi’s good offices to solve this issue. But insincere approach by successive Sri Lankan governments, beginning with the one led by Jayawardene who tried to short-change the principles in the accord by the half-baked 13th Amendment, saw an escalation of the conflict, which has now resulted in the issue being taken to a global level. The present effort by the Sirisena-Ranil Wickremesinghe government is yet the best opportunity to arrive at a local consensus that can satisfactorily solve this issue and set Sri Lanka on a new prosperous path. But that local consensus must necessarily conform to the principles enunciated in the Indo-Sri Lanka Accord if it is to succeed. The continuation of India’s “good offices” in this regard is also vital for this success.

M.A. Sumanthiran is President’s Counsel and a Member of Parliament in Sri Lanka representing the Tamil National Alliance

http://www.thehindu.com/opinion/op-ed/thirty-years-of-soul-searching-the-lasting-legacy-of-1987/article19366349.ece

Link to comment
Share on other sites

 
61247_2017-07-28_28_07_2017_004.jpg
 
 

1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பாக 'த ஹிந்து' (The Hindu) பத்திரிகையில் சுமந்திரனின் கட்டுரை தமிழாக்கம்

Link to comment
Share on other sites

On 27.7.2017 at 10:11 PM, நவீனன் said:

The history of Sri Lanka would have been very different had he not survived that assault, as also the history of the Tamil people in Sri Lanka if Rajiv Gandhi was not assassinated four years later in Tamil Nadu.

சீச்சீ நாங்கள் அடிச்சா மொட்டை + விட்டா குடுமி

மக்களாவது மண்ணாங்கட்டியாவது.

ஆனா சீமான வைத்தாவது சரிப்பன்னிடுவோம்.

அப்படியும் இல்லை எண்டா கூகுள் ஸ்ட்ரீட் வியூ வின்னர்கள் இருக்கிறார்கள்தானே -   அவர்களையும் கட்டுமரத்தில எத்தி தமிழீழம் கண்டிடமாட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலும்விட சுமந்திரன் ............
1954 ஜனவரி மாதம் வேலுப்பிள்ளையரை வல்வெட்டியில் யாரவது போட்டிருந்தால் 
பிரபாகரனே பிறந்திருக்க மாட்ட்டார் என்ற கண்டு பிடிப்பை எழுதி இருக்கலாம். 

என்ன நடந்தது என்றே தெரியாது ........
இப்ப அரசியல்  பேச தொடக்கி இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28.7.2017 at 11:01 PM, ஜீவன் சிவா said:

சீச்சீ நாங்கள் அடிச்சா மொட்டை + விட்டா குடுமி

மக்களாவது மண்ணாங்கட்டியாவது.

ஆனா சீமான வைத்தாவது சரிப்பன்னிடுவோம்.

அப்படியும் இல்லை எண்டா கூகுள் ஸ்ட்ரீட் வியூ வின்னர்கள் இருக்கிறார்கள்தானே -   அவர்களையும் கட்டுமரத்தில எத்தி தமிழீழம் கண்டிடமாட்டம்.

அண்ணை!

நீங்கள் ஈழத்து நாசா அண்ணை ஈழத்து நாசா.....Cover Profil NASA

Ähnliches Foto

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நாங்கள் இப்படி யோசிக்க கூடாது ............

The history of Sri Lanka would have been very different had he not survived that assault, as also the history of the Tamil people in Sri Lanka if INDIRA Gandhi was not assassinated on 1984. 


இந்த ராஜீவ் என்ற அரை லூசு பிரதமராகவே வந்திருக்காதே ?

எப்பவுமே எங்கடை மூக்கையே சொறிஞ்சு சொறிஞ்சு மணக்கோணும் 

Link to comment
Share on other sites

ஏன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்றும் முக்கியமானதாகிறது?

 
30CHDASSUMANTHIRAN

ஜூலை 29, 1987 என்பது இலங்கை வரலாற்றின் முக்கியமான நாள். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனேயுடன் கொழும்பு நகரில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க இலங்கை அதில் வாக்குறுதி அளித்திருந்தது. அதே நாளில் பின்னர் நடந்த அணிவகுப்பு மரியாதையின்போது இலங்கைக் கடற்படை வீரர் ஒருவர் திடீரென துப்பாக்கியின் அடிக்கட்டையால் ராஜீவைத் தாக்க முயன்ற சம்பவத்தையும் மறக்க முடியாது. ராஜீவ் காந்தி மட்டும் உள்ளுணர்வு காரணமாகத் திரும்பிப் பார்த்துவிட்டு தலையைக் குனிந்திருக்காவிட்டால் அவருடைய மண்டை உடைபட்டிருக்கும். அவருக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தால் இலங்கையின் வரலாறே வேறு மாதிரியாகியிருக்கும்; நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படாமல் இருந்திருந்தால் இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்க்கையும் மாறியிருக்கும்.

இந்திய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது; இறையாண்மை மிக்க இரண்டு நாடுகள் பரஸ்பரம் செய்துகொண்ட சர்வதேச உடன்பாடு இது. தமிழின மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உள்நாட்டு அரசியல் அமைப்பு திருத்தியமைக்கப்படும் என்று ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு உறுதிமொழி அளித்த உடன்பாடு. இலங்கையின் ஒற்றுமை, இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பெரிய லட்சியமாக மக்களிடையே பேசிப் பிரபலப்படுத்திய அதிபர் ஜெயவர்தனே, உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கப் பக்கத்து நாட்டுக்கு வாக்குறுதி அளித்து உடன்படிக்கை செய்துகொண்டது, பிறகு அதை அமல்படுத்த இந்திய ராணுவத்தை இலங்கைக்கு வரவழைத்தது போன்றவை நகைமுரணாக அமைந்துவிட்டது. இந்த உறுதிமொழியின் பேரில் இலங்கை அரசியல் சட்டம் திருத்தப்பட்டது, மாகாணக் கவுன்சில்கள் உருவாக்கப்பட்டன, தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்த வடக்கும் கிழக்கும் ஒரே பகுதியாக தற்காலிகமாக இணைக்கப்பட்டன. இந்த ஏற்பாடு சுமார் இருபதாண்டுகள் நீடித்தன.

 

இந்தியாவின் பங்குக்கு முற்றுப்புள்ளி

இந்த அதிகாரப்பகிர்வு ஏற்பாடு குறித்து தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எஃப்) அதிருப்தி தெரிவித்தது. ஜெயவர்தனேவுக்கு அடுத்து பதவிக்கு வந்த ரணசிங்க பிரேமதாச, விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேசத் தொடங்கியதை அடுத்து இந்தியாவுடனான பரிமாற்றங்களை முறித்துக்கொண்டார். அந்த உடன்பாட்டின் பலன் கிடைப்பதில் இந்தியா ஆற்றக்கூடிய பங்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அதற்குப் பிறகு இலங்கை அரசின் அறிக்கை, பேட்டி அல்லது வெளியீடுகளில் இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டைக் குறிப்பிடுவதுகூட நின்றுவிட்டது. ஆனால், தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்று வரும்போதெல்லாம் அந்த உடன்பாட்டில் இடம்பெற்ற பிரிவுகள்தான் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. 2006-ல் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இலங்கை உச்ச நீதிமன்றம் பிரித்தபோது, இந்தியாவுடனான உடன்பாட்டை இலங்கை மீறுகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இப்போதும் அது விடையில்லா வினாவாகத் தொடர்கிறது. ஆனால், இலங்கையோ தொடர்ந்து, ‘திருப்தியளிக்கும் வகையில் அதிகாரங்கள் பகிர்ந்துகொள்ளப்படும்’ என்று உறுதியளித்துவருகிறது. அதிபர் மகிந்த ராஜபட்ச அரசின்போது வெளியான மூன்று கூட்டறிக்கைகளிலும் அதிகாரப்பரவலை அர்த்தமுள்ளதாக்க 13-வது சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் இந்த ஒப்பந்தப்படிதான் தீர்வு என்று உதட்டளவில் இலங்கை தொடர்ந்து பேசிவருகிறது.

 

புதிய அரசியல் சட்டம்

இந்திய-இலங்கை உடன்பாட்டை அமல்படுத்தியிருந்தால் பெருமளவுக்கு உயிரிழப்புகள் நேர்ந்திருக்காது என்று அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறினார். புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்கு புதிய அரசியல் சட்டசபையை உருவாக்குவதற்கான தீர்மானத்தின் மீது 2016 ஜனவரி 9-ல் பேசுகையில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட இன்னும் இரு உடன்படிக்கைகள் 1957-ல் எஸ்டபிள்யுஆர்டி பண்டாரநாயக-எஸ்ஜேவி செல்வநாயகம் இடையிலான ஒப்பந்தம், 1965-ல் டட்லி சேனநாயகே-செல்வ நாயகம் இடையிலான ஒப்பந்தம் ஆகியவை. சிறிசேனா அப்படிப் பேசி ஒன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ‘முன்னுரிமைப் பணிகள் பட்டியல் தயாரிப்புக் குழு’ இடைக்கால அறிக்கையைக் கூட தாக்கல் செய்யவில்லை. ஆனால் ஆறு துணைக் குழுக்கள் தங்களுடைய அறிக்கையை 2016 டிசம்பரில் அளித்துவிட்டன. வரைவு இடைக்கால அறிக்கை தயாராகியிருந்தாலும் வெவ்வேறு அரசியல் தலைவர்களின் நோக்கங்களுக்கேற்ப தாக்கல் செய்யப்படாமலேயே இருக்கிறது.

1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப் படுகொலையால் ஏற்பட்ட பெரிய அவமானத்திலிருந்து இலங்கை அரசு தப்பிக்க இந்திய-இலங்கை உடன்பாடு ஒரு வாய்ப்பைத் தந்தது. அந்த உடன்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்ற உள்ளார்ந்த எண்ணம் அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகளுக்கு இல்லை. 13-வது திருத்தம் மூலம் தமிழர்களுக்குக் கிடைத்த அரைகுறை உரிமைகளைக்கூட சேதப்படுத்தும் முயற்சிகள் இலங்கை அரசுகளால் மேற்கொள்ளப்பட்டன. போர்க்குற்ற நடவடிக்கைகளுக்காக உலக அளவில் கண்டிக்கப்படும் நிலையிலிருந்து தப்பிக்க சிறிசேன-ரணில் விக்கிரமசிங்கே அரசு தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறது. அதில் ஒன்றுதான் உள்நாட்டு அளவில் கருத்தொற்றுமை அடிப்படையில் தீர்வு காண்பது. அப்படி காணப்படும் கருத்தொற்றுமைகூட இந்திய-இலங்கை உடன்பாட்டின் அடிப்படையில் அமைந்தால்தான் வெற்றிகரமாக அமையும். இந்த முயற்சிகளில் இந்திய அரசின் ஒத்துழைப்பும் வெற்றிக்கு மிகமிக அவசியம்.

-எம்.ஏ. சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்.

© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி

http://tamil.thehindu.com/opinion/columns/article19389770.ece

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

எப்பவுமே எங்கடை மூக்கையே சொறிஞ்சு சொறிஞ்சு மணக்கோணும் 

என்ன செய்வது 

எண்ட மூக்கத்தான் சொறியலாம் 

உங்கட மூக்கை சொறிந்தால் அடிக்க வர மாட்டீங்கள் / இப்படித்தான் மற்றவர்களின் மூக்கை சொறிஞ்ச பலர் அடி வாங்குகினம்.:grin:

2 hours ago, Maruthankerny said:

இந்த ராஜீவ் என்ற அரை லூசு பிரதமராகவே வந்திருக்காதே ?

ஒரு கதை

ஒரு ஆசிரியர் மாணவனிடம் கேள்வி கேட்டார்

// எனது வயதை சொல்லு பாப்பம் // எண்டு 

மாணவனும் ஒரு கணமும் தாமதிக்காம சொன்னான்  52 எண்டு 

அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் கேட்டார் எப்படியப்பா சரியா சொன்னாய் என்று 

இல்லை எனது பக்கத்து வீட்டு அண்ணாவுக்கு 26.

உனது பக்கத்துவீட்டு அண்ணாவுக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று மறுபடியும் கேட்டார் 

--

மாணவனும் சிரித்தவாறே கூறினான் எனது பக்கத்து வீட்டு அண்ணா அரை லூசு என்று.

 

 

உங்கட வயது 104 இல்லைத்தானே :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.