Jump to content

3 ஆண்கள் திருமணம் செய்து கொண்ட வினோதம்: குவியும் பாராட்டு


Recommended Posts

3 ஆண்கள் திருமணம் செய்து கொண்ட வினோதம்: குவியும் பாராட்டு

 
முக்கோணத் திருமணம் Image captionமூன்று பேரும் இணைந்து ஒன்றாக உறவில் இருக்கின்றனர்

கொலம்பியாவில் மூன்று ஆண்கள் ஒன்றாக இணைந்து வாழ்வதை சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளதால் வெகுவாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் மூன்று பேர் திருமணம் செய்து கொள்ளும் "முக்கோணத் திருமணங்களை" நம்மால் காண முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

" விக்டர் மோசமான நகைச்சுவைகளைக் கூறுவார்" என்று மானுவேல் தெரிவிக்கிறார்.

"இதை நானும் ஆமோதிக்கிறேன்" என்கிறார் அவரது இணை அலெஜேண்ட்ரோ.

"அப்படி எல்லாம் இல்லை, நான் நல்ல நகைச்சுவைகளையே கூறுவேன்" என்கிறார் மானுவேல்.

மானுவேல், விக்டர் ஹகோ ப்ராடா, அலெஜாண்ட்ரோ இவர்கள் மூன்று பேரும் இணைந்து ஒன்றாக உறவில் இருக்கின்றனர். இவர்களின் மற்றொரு ஆண் இணையர் அலெக்ஸ் கடந்த 2014-ம் ஆண்டு இறக்கும் முன்பு வரை இவர்கள் நான்கு பேரும் இணைந்து வாழ்ந்து வந்தனர்.

"அலெக்ஸ் இறப்பதற்கு முன்பே திருமணம் செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது. நாங்கள் நான்கு பேரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினோம்" என்கிறார் விக்டர்.

"அலெக்ஸை தாக்கிய கேன்சர் எங்களது திருமணத்திற்கான திட்டத்தையும் தாக்கியது. ஆனால் நான் ஒருபோதும் மனம் தளரவில்லை " என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொலம்பியாவில் உள்ள மெடலின் நகரத்தில் வாழ்ந்து வரும் இவர்கள், அலெக்ஸ் இறந்த போது, அவரது இணையர்களாக கண்டறியப்படவும், அவரது ஓய்வூதியத்தை பெறுவதற்கும் போராட வேண்டியிருந்ததாக தெரிவிக்கின்றனர்.

நான்கு பேரும் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கான சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைப் பெற இதுவே இவர்களுக்கு மேலும் உறுதியினை தந்துள்ளது.

அலெக்ஸ் Image captionஅலெக்ஸ் கடந்த 2014-ம் ஆண்டு இறக்கும் முன்பு வரை இவர்கள் நான்கு பேரும் இணைந்து வாழ்ந்து வந்தனர்

கடந்த மாதம் இவர்கள் திருமணம் செய்வதை அங்கீகரிக்கும் வகையில் ஒரு சிறப்பு சட்ட ஆவணத்தில் வழக்கறிஞர் கையெழுத்திட்டுள்ளதை அடுத்து, நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த திருமண விழாவிற்கான திட்டமிடுதலில் இறங்கியுள்ளனர்.

" ஒரே வீட்டில், ஒரே படுக்கையை பகிர்ந்து கொண்டு நாங்கள் மூன்று பேரும் இணைந்து ஒரு குடும்பமாக வாழ முடியும் என்று அந்த ஆவணம் கூறுகிறது " என விக்டர் விளக்குகிறார்.

`கற்பனைக்கு எட்டாத ஒன்று`

அவர்கள் இணைந்து வாழ்வது முறையானது என்று ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அது முழுமையான திருமண சான்றிதழ் அல்ல. மூன்று பேர் ஒன்றாக இணைந்து திருமணம் செய்து கொள்வதை ஏற்றுக் கொள்ளும் நாடுகளைத் தவிர, கொலம்பியா போன்ற மற்ற நாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்டோரை திருமணம் செய்து கொள்வது சட்டவிரோதமானது.

ஆனால், பலதாரமணம் அல்லது கூட்டுத் திருமணம் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், அலெஜேண்ட்ரோ, மானுவேல் மற்றும் விக்டர் ஆகியோரின் சட்டப்பூர்வ வெற்றி என்பது ஒரு பெரிய முன்னேற்றம் என்றே கூறலாம்.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹாடர் அவிரம் கூறுகையில், 2004-ம் ஆண்டு கூட்டுத் திருமணம் குறித்த ஆராய்ச்சியை தொடங்கிய போது மிகவும் குறைவான எண்ணிக்கையே தென்பட்டதாகவும், ஆனால் 2012-ம் ஆண்டிலிருந்து மாற்றங்கள் நடைபெறுவதை காண முடிகிறது என்றும் தெரிவித்தார்.

அமெரிக்காவின் லவ்விங் மோர் என்ற அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில், கூட்டுத் திருமணத்தில் ஆர்வமுள்ள 4000-க்கும் அதிகமானோர் ஒன்றுக்கும் மேற்பட்டோரை திருமணம் செய்து கொள்வது சட்டப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டால், திருமணம் செய்துகொள்ள விருப்பமிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

உலகெங்கிலும் ஒரு பாலின திருமணத்தை பரவலாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வந்துள்ளதே மாற்றங்கள் ஏற்படுவதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் புதிய தடைகளை உடைப்பதற்கான வழி இதுதான் என்றும் பேராசிரியர் அவிரம் நம்புகிறார்.

`இது சரியானது என தோன்றுகிறது`

கூட்டுத் திருமணத்திற்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் அபூர்வமான ஒன்றாக இருந்தாலும், கொலாம்பியாவில் நடைபெற்றுள்ள இதுபோன்ற நிகழ்வுகள் முக்கோண உறவுகளில் இருப்பவர்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது.

ஃப்ளோரிடாவை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு தாயான டெயானா ரிவாஸ், "இது மிகவும் ஊக்கமளிக்கும் ஒன்றாக இருக்கிறது " என்று கூறுகிறார்.

"எனக்கு ஆண் மற்றும் பெண் என இரு பாலினரிடமும் விருப்பம் இருந்தது" என்று தெரிவித்த அவர், " ஆனால், நான் மேனியை திருமணம் செய்து கொண்டு கடந்த 5 ஆண்டுகளாக உறவில் இருக்கிறேன்" என்றும் கூறினார்.

டெயானாபடத்தின் காப்புரிமைDEANNA RIVAS Image captionஆசிரியையான டெயானா தற்போது தனது கணவர் மேனி மற்றும் 20 வயதான மெலிசாவுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

ஆனால், அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பின்பு, உணர்வு ரீதியிலான ஒரு ஆதரவினை தனது கணவரால் மட்டும் தந்துவிட முடியாது என நினைத்த டெயானா மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

"நான் மகிழ்ச்சியாக இல்லை. என்னுடைய உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்த முடியவில்லை. என்னுடைய மற்றொரு பாகத்தை நான் இழந்தேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் மெலிசாவை சந்தித்த போது இது சரியென்று தோன்றியது"

கலை ஆசிரியையான டெயானா தற்போது தனது கணவர் மேனி மற்றும் 20 வயதான மெலிசாவுடன் சேர்ந்து வருவாய், குழந்தை வளர்ப்பு, வீட்டு வெலைகள் மற்றும் படுக்கையையும் பகிர்ந்து வாழ்ந்து வருகிறார்.

டெயானாவின் கணவர் மேனி இதுகுறித்து தெரிவிக்கையில், "இது என்னுடைய விருப்பம் என்பதை விட இது மனைவியின் விருப்பம் என்று கூறும் போது தான் மக்கள் புரிந்து கொள்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேனிபடத்தின் காப்புரிமைDEANNA RIVAS Image captionமேனி மற்றும் டெயானாவிற்கு பிறந்த இரண்டு குழந்தைகளுக்கும் பாதுகாவலராய் மெலிசாவை அவர்கள் அங்கீகரித்துள்ளனர்

தொடக்கத்தில் மூன்று பேருக்கும் ஒருவர் மீது ஒருவர் பொறாமை இருந்ததை ஒத்துக்கொண்டாலும், மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டனர்.

2020-ஆம் ஆண்டு திருமண விழாவை நடத்தவும் அவர்கள் திட்டமிடுள்ளனர்.

இவர்களுடன் இணைந்து வாழ்ந்து வரும் மெலிசா இதுகுறித்து தெரிவிக்கையில் " மிகவும் அழகாக மற்றும் இயல்பாக இருப்பவற்றை நான் விரும்புவேன். பூக்களால் சூழப்பட்ட அடுக்குகள் மற்றும் வானவில் வண்ணங்கள் போன்றவற்றை விரும்புவேன்" என்று கூறினார்.

ஆனால், இவர்களின் திருமணம் சட்டப்பூர்வமாக இருக்காது. அவர்கள் கண்டிப்பாக ஒரு மாற்று வழியை கண்டுபிடித்தாக வேண்டும்.

மேனி மற்றும் டெயானாவிற்கு பிறந்த இரண்டு குழந்தைகளுக்கும் பாதுகாவலராய் மெலிசாவை அவர்கள் அங்கீகரித்துள்ளனர். கூடிய விரைவில் மெலிசாவும் தனது பெயரை ரிவாஸ் என்று மாற்றவுள்ளார்.

கூட்டுத் திருமணத்திற்கு முறையான அனுமதி இல்லாததால், மற்ற தம்பதிகள் போன்று வரி சலுகைகள் உள்ளிட்டவற்றை இவர்களால் பெற இயலாது.

`இதில் எந்தவொரு தவறும் இல்லை`

ஆனால், இதுபோன்ற முன்னெடுப்புகளுக்கு சில தடைகளும் உருவாகியுள்ளன. கத்தோலிக்கத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள கொலம்பியாவில் கூட கூட்டுத் திருமணத்திற்கு அனுமதியளித்த வழக்கறிஞர் விசாரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

இது திருமணத்தின் புனிதத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் அல்லது குடும்பங்கள் பிரிவதை ஊக்குவிக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.

சில ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமத்துவத்திற்கான தங்களது போராட்டம் மற்றும் முந்தைய உத்திரவாதங்களை கொச்சைப்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது என்றும் விமர்சித்துள்ளனர்.

மேலும், கூட்டு உறவில் அல்லது முக்கோண உறவில் இருக்கும் பலர் நம்பிக்கையவற்றவர்களாக இருக்கிறார்கள் என்றும், பொது இடத்தில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும், பாரம்பரியமான திருமண முறையை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் தெரிவிப்பதாகவும் பேராசிரியர் அவிரம் தெரிவித்துள்ளார்.

கூட்டுத் திருமணத்தில் ஈடுபடுவோர் நீடித்த உறவில் சிக்கல் இல்லாமல் வாழ்வது போன்ற பல முன்மாதிரிகள் மக்களுக்கு தேவைப்படுகின்றனர். அதன் மூலம் மட்டுமே மாற்றங்கள் உருவாகும்.

http://www.bbc.com/tamil/global-40719518

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசீல காட்டு மிருகங்கள் போல வாழ்வுக்கு போகுது மனிதம். tw_confused:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
    • 22 ம்திகதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கும் என செய்திகள் கசிந்துள்ளது. ஈரானின் அணு ஆலைகள் தான் இஸ்ரேலுக்கு கண்ணுக்குள் குற்றிக்கொண்டு இருக்கிறது  நீண்ட நாட் களாக . தாக்குதல் இடமும் அவ்விடமாக  இருக்க நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆயுதங்களை அமெரிக்கா கட்டம் கட்டமாக அனுப்பி விட்டு ஈரானின் எண்ணையையும் களவாக பெற்று கொள்கிறது. (ஆதாரங்களை அமெரிக்க ஊடகங்களில் தேட வேண்டாம்)  
    • ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்😏.............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.