Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 105
 
அரசியல் சாணக்கியர் கலைஞர் அவர்களது தற்போதைய நிலை சார்ந்து...
 
கலைஞர் கருணாநிதி அவர்கள்
எழுத்தாளர் கலைஞர் என்பதைவிட
அரசியல் சாணக்கியர் என்பதே அவரது பெயராகும்.
அந்த சாணக்கியர் தனது சாணக்கிய அரசியலிலிருந்து சறுக்கியது
2009 இல் ஈழத்தமிழரை காப்பாற்ற தவறிய போது தான்.
தமிழ் தமிழ் என பேசி எழுதி வந்த அவரிடம் தமிழீழம் பெற்றுத்தராவிட்டாலும்
தமிழ் மக்கள் அழிவை தடுப்பார் என்ற நம்பிக்கை கடைசி நிமிடம்வரை ஈழத்தவரிடமிருந்தது.
அதைச்செய்யத்தவறியது மட்டுமன்றி அதற்கு நாடகங்கள் போட்டுத்துணைபோன அன்றே
அவரும் அவரது கட்சியும் சாணக்கியமும் தூள் தூளாகிவிட்டது.
தான் மேடைகளில் பேசி உணர்ச்சியேற்றிய அதே தமிழ்
தனக்கெதிராக தமிழ்த்தேசியம் என வெடித்துக்கிளம்பும் என கருணாநிதி
ஒருபோதுமே எதிர்பார்த்திருக்கவேமாட்டார்.
 
இன்று தோல்விகளை சந்தித்து
கூனி குறுகி கடைசி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருக்கும் அவரை
சிலர் வைகின்றனர்.
அவரது மரணத்தை வரவேற்கின்றனர்.
மரணத்தை வரவேற்பதும் அவருக்கு இந்த வயதில் ஒருவித விடுதலையே.
உண்மையில் என்னைப்பொறுத்தவரை அவர் இன்னும் வாழணும் கூனி குறுகணும்.
தன் கண் முன்னே துரோகத்துக்கான தண்டனையை அனுபவிக்கணும்.
 
அவரது பேச்சில் இன்றும் மயங்கி கிடக்கும் அவரது கட்சியின் கோடானுகோடி தமிழர்கள் மன்னிப்பார்களாக...
Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 106
 
 
கருணாநிதி அவர்கள்
ஏன் ஈழத்தமிழர்களாலும் அவர்கள் பால் அன்புகொண்ட தமிழர்களாலும்
ஏன் இந்தளவுக்கு விமர்சிக்கப்படுகிறார்??
அல்லது அவரது இறப்புக்கூட எதற்காக வரவேற்கப்படுகிறது?
இந்தப்படம் ஒன்றே போதுமானது
 
37896607_651986355180919_727322681166266
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 107
 
புலிகள் சார்ந்து என்னிடம் கேட்கப்படும் கேள்விகள் 3
 
1 - விடுதலைப்புலிகளை ஏன் விமர்சிப்பதே இல்லை?
 
2 - சொத்துக்கள் மற்றும் சேர்க்கப்பட்ட பணம் எங்கே??
 
3 - விடுதலைப்புலிகளுடன் உங்களின் தொடர்பு எப்படிப்பட்டது ?
 
 
ஒன்றுக்கான பதில்:
 
விடுதலைப்புலிகளின் குறிக்கோள் மீது தான் விமர்சனம் வைக்கமுடியும்
அவர்கள் அதை ஒரு போதும் மாற்றிக்கொண்டதில்லை
எதற்காகவும் எந்தநிலையிலும் உயிர் போகினும் அதை விட்டுக்கொடுத்ததில்லை.
எனவே பாதைகள் மீது விமர்சனம் வைக்கமுடியாது.
 
தமிழ்மக்கள் மீது அளவுக்கதிகமான சுமைகளை சுமத்தியது
ஆட்சேர்ப்பு வரி போன்றவற்றை சிலர் குறிப்பிடுவார்கள்
தமிழ் மக்கள் தாய்ப்பசு என்றால் புலிகள் அதன் கன்று.
தாயிலிருந்து பால் வராவிட்டால் நாலு இடி இடிக்கும் கன்று.
அது தாய்க்கு வலிக்குமா என்ன? அப்படித்தான் பார்க்கவேண்டும்.
உண்மையில் இந்த வலியை நாம் தாங்கி பெருசு படுத்தாமல் இருந்திருந்தால்
இன்று சொர்க்க பூமியில் வாழ்வோம்.
 
2009க்கு பின்னர் தலைவர் ஒரு விடயத்தை தெளிவாக அறிவித்தார்.
இனி உங்களது முடிவுகளை நீங்களே எடுங்கள் என்று. அன்றிலிருந்து புலிகள் இல்லை.
இப்போது இருப்பவர்களுக்கு 3 நேரம் பசிக்கும் வயிறும் இருக்கிறது.
அதையும் தலைவர் தீர்க்கதரிசனமாக எப்பொழுதோ சொல்லிவிட்டார்
எனக்குப்பின் இயக்கத்தை உங்களுக்கேற்றாப்போல் பிரித்து பிரித்து விற்றுக்கொள்ளுங்கள் என்று.
அது தான் தற்பொழுது நடக்கிறது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 108
 
புலிகள் சார்ந்து என்னிடம் கேட்கப்படும் கேள்விகள் 3
 
1 - விடுதலைப்புலிகளை ஏன் விமர்சிப்பதே இல்லை?
 
2 - சொத்துக்கள் மற்றும் சேர்க்கப்பட்ட பணம் எங்கே??
 
3 - விடுதலைப்புலிகளுடன் உங்களின் தொடர்பு எப்படிப்பட்டது ?
 
இரண்டுக்கான பதில்:
 
விடுதலைப்புலிகளின் வலையமைப்பை
முழுமையாக அறிந்தவர் தலைவரைத்தவிர எவருமில்லை.
இன்றுவரை இன்ரபோல் போன்ற அமைப்புக்களாலேயே
இதனை முழுமையாக அறியமுடியவில்லை.
 
தலைவர் ஒரு சுழற்சி முறை வைத்திருந்தார்.
அதன்படி பணத்தை எந்த அலுவலகத்திலும் அமைப்பிலும் இருக்க விடமாட்டார்.
உதாரணமாக 1 லட்சம் ஈரோக்கள் அலுவலகத்தில் சேர்ந்தால்
50 லட்சம் ஈரோக்களைக்கேட்பார். (தேவையும் அப்படித்தானிருந்தது)
அங்க இங்க மாறி கடனெடுத்து அனுப்பி அந்தக்கடன் முடியமுதல்
அடுத்த தொகையை கேட்பார்.
எனவே அலுவலகங்களிலோ இங்குள்ள பிரதிநிதிகளிடமோ பணம் தங்க இடமில்லை.
 
ஆனால் எங்களால் ஒரு காலத்தில் பிரமிப்பாகவும் பெருமையாகவும் பேசப்பட்ட
தலைவரின் வலையமைப்பே இன்று எமக்கு தலையிடியாக வந்துள்ளது.
அதன் அடி நுணி அறிந்தவர் யாருமில்லை?????
 
ஆனாலும் தலைவரின் வளர்ப்பில் என்றும் நம்பிக்கையுண்டு.
அந்த நம்பிக்கை வீண் போகாது என்று இன்றும் நம்புகின்றேன்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 109
 
கலைஞர் கருணாநிதி அவர்கள் காலமானார் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
 
தமிழகத்தை பொறுத்தவரை வரலாற்றில்
மறுக்கப்படமுடியாத தலைவராகவும்
ஈழத்தமிழினத்தைப்பொறுத்தவரை மன்னிக்கப்பட முடியாத துரோகத்தை செய்தவராகவும் செல்கின்றார்.
 
எவருடைய மரணமும் வருந்தத்தக்கதே.
செல்லுங்கள் கலைஞரே.
இனி ஒருமுறை எம் தமிழர் வாழ்வில் மீள வராதீர்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 110
 
விதி வலிமையானது
 
விதி மதியைவிட வலிமையானது என்பார்கள் எம்முன்னோர். .
எனக்கு இதில் நம்பிக்கை இருந்ததில்லை.
 
ஆனால் சில அனுபவங்களும் செயல்களும் அதை எம் வாழ்வில் உறுதிப்படுத்தியே செல்கின்றன
 
கலைஞர் அவர்கள் தலைவருடைய தாயார் என்ற ஒரு காரணத்துக்காக
தனது ஆட்சியில் அவருக்கு மருத்துவம் செய்ய மறுத்தார். அலைக்கழித்தார்.
 
ஈழத்தமிழினத்தின் அழிவில்
நாடகமாடி வேசம் போட்டு நரித்தனம் செய்து
எமது மக்களின் ரத்தத்தை வைத்து மத்தியில் பேரம் பேசி சலுகைகளைப்பெற்றார்.
 
இதனால் ஈழத்தவர்கள் அவரது மறைவை கவலையோடு பார்க்கவில்லை
ஆனால் கொண்டாடமுயலவில்லை
 
ஆனால் விதி தலைவரது தாயாரின் பிறந்தநாளில்
கலைஞரை பறித்து இத்தினத்தை கொண்டாட அனுமதிக்கிறது.
இந்தப்பிறந்தநாளை ஈழத்தமிழர் கொண்டாடும் ஒவ்வொரு வருடமும்
கலைஞரும் ......????
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 111
 
விடுமுறையில் கற்றவை
 
பொதுவாக ஆவணி மாதத்தில் எங்காவது தங்கி
அவ்விடத்தை பற்றி நேரடியாக பார்த்து கேட்டு அறிவது எனது வழமை.
இம்முறை பிரான்சின் மலையும் அது சார்ந்த பகுதியாகிய குறிஞ்சி நிலப்பகுதியான LA SAVOIE வில்.
 
இதன் வரலாறு எமது தாயகத்துக்கும் ஊருக்கும் பயனுள்ளதாக அமையுமென்பதால்...
 
இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான காலப்பகுதியில்
இவ்விடத்தை விட்டு மக்கள் தொடர்ச்சியாக வெளியேறியபடி இருந்தனர்.
ஒரு காலப்பகுதியில் மக்களே இல்லாதநிலை ஏற்பட்டது. காரணங்கள்
 
வருடத்தில் அரைவாசிப்பகுதி கடும் குளிர்
மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்மை
போக்குவரத்து சுகாதார வசதியின்மை
வேலை வாய்ப்பின்மை
கடும் குளிர் காலப்பகுதியில் தண்ணீர் இன்மை
 
இந்தநிலையில் தான் அரசு 1960 இல்
அவசரமாக அம்மக்களின் இடப்பெயர்ச்சியை தடுக்க ஆலோசனைகளையும் திட்டங்களையும் கோரியது.
அவ்வாறான கோரிக்கைக்கு கிடைத்த திட்டம் தான்
பனிச்சறுக்கல்களுக்கான இடமாக இருப்பதால் அதை சுற்றுலா திடலாக அறிவித்து
அது சார்ந்த தொழில்துறைகள் மற்றும் நிறுவனங்களை உருவாக்க ஊக்குவித்தலாகும்.
 
1960 இல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமானது
1980களில் பாரீய வளர்ச்சி கண்டு இன்று பனிச்சறுக்கல் காலப்பகுதியில்
இவ்விடத்தில் பல மாதங்களுக்கு முன்பே இடங்களை பதிவு செய்தால் தான்
இடம் கிடைக்குமளவுக்கு வளர்ந்து அங்குள்ள மக்களுக்கும் அரசுக்கும்
பெரும் சுற்றுலா வருமானத்தை தரும் துறையாக வளர்ந்து
அந்த மண்ணையும் மக்களையும் வளம் படைத்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
 
இதைக்காணும் போது எனது ஊரின் இன்றைய நிலையே கண் முன் நின்றது.
அதுவும் மாறும் என்ற நம்பிக்கை வருகிறது.
 
எமதூர் மக்கள் புலமெங்கும்
அரசுகளுக்கு பெருவாரியான வரிகளையும் நன்கொடைகளையும்
கொடுப்பவர்களாக இன்று வளர்ந்துள்ளமையை காண்கின்றோம்.
எனவே இவர்களை எமதூர் சார்ந்து திருப்பும் போது
எமது மண்ணும் ஒருநாள் வளம் படைத்த மக்களையும் மண்ணையும் கொண்டதாக வரும்.
கனவு காண்போம்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 112
 
அதிக பேச்சு அல்லது அதிக விளம்பரம்
 
ஒரு விடயத்தை பற்றிய அதிக பேச்சு அல்லது அதிக விளம்பரம்
அந்த விடயத்தின் உண்மைத்தன்மைக்கு மேலாக ஊதிப்பெருதாக்கி
எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரிக்கச்செய்து
எதை சாதித்தபோதும் அதைவிட அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி
அந்த விடயத்தை சிறுமைப்படுத்தி விடும்.
அது சினிமாவாக இருந்தாலும் சரி பொது அமைப்புக்களாக இருந்தாலும் சரி.
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 113
 
எனது தனிப்பட்ட கருத்து
 
கடந்த சில நாட்களாக சில நேரடியாகவும்
சில தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் சகல தொடர்புகளாலும்
புங்குடுதீவு அமைப்புக்களின் இன்றைய சில செயற்பாடுகள் சார்ந்து
கேள்விகள் என்னிடம் முன் வைக்கப்பட்டன.
எழுதுவதில்லை என ஒதுங்கியிருக்க முடியாத விடயமிது.
 
சிறீலங்காவின் அரச பிரதிநிதிகள் எவரையும்
புலத்திலுள்ளோர் வரவேற்க ஆதரவளிக்க வேண்டுமாயின்
சிறீலங்கா அரசாங்கம் தமிழருக்கான தீர்வு ஒன்றை முன் வைக்கவேண்டும்.
அதுவே எமக்கான ஆகக்குறைந்த சலுகையும் அரவணைப்புமாகும்.
 
இதய சுத்தி இருந்தால் அதற்கு கால தாமதம் தேவையற்றது.
அவ்வாறு கால தாமதம் தேவையென்றால்
ஐனநாயகமுறையில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபை உண்டு.
அவர்களின் புலத்தவருடனான செயற்பாடுகள் மற்றும் தொழிற்துறை சார் சந்திப்புக்களுக்கும்
புலத்தவரின் பங்களிப்புக்கள் வடமாகாண சபைக்கு கிடைக்க அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு
ஆதரவளித்து ஊக்கமளிக்க வேண்டும்.
 
அதைத்தவிர்த்து அல்லது போக்கு காட்டியபடி தாயகத்தில் என்னவும் செய்யலாம். ஆனால் புலத்தில்???
 
எதையும் எவரும் மறக்கவுமில்லை.
அதை மன்னிக்க மறக்க எதுவும் முன்வைக்கப்படவுமில்லை.
அதற்கான முயற்சிகளும் கண்ணுக்கெட்டியவரை தெரியவுமில்லை.
 
ஆனால் அதை கெடுக்கும் முயற்சிகளும்
எம்முள் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளும் முன்னைவிட அதிகமாக...........????
 
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 114
 
தள்ளிவிடல்
 
போன கிழமை அதிகாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அவர் எனது மக்களுடன் படித்தவர் தற்பொழுது காவல்த்துறை அதிகாரியாக இருக்கிறார்.
இரவு ஒரு பெண்ணின் அவலக்குரல் தொலைபேசி அழைப்பு வந்து
அவரை காவல்த்துறை அலுவலகத்துக்கு கூட்டி வந்திருக்கின்றோம்.
அவர் உங்கள் தமிழ் மொழி மட்டுமே பேசுகின்றார்
அதனால் எனக்கு உங்களது உதவி தேவை என்றார்.
சரி அவரிடம் அந்த பெண்ணிடமிருந்து என்ன தகவல் வேண்டும் என்பதை கேட்டு தெரிந்து கொண்டு
அந்த பெண்ணிடம் தொலைபேசியை கொடுக்கச்சொன்னேன்.
 
நான் வணக்கம் என்றதும் அந்தப்பெண் ஓ என்று அழத்தொடங்கிவிட்டார்.
சிறிய அவகாசத்தின் பின் நீங்கள் எங்கே வந்திருக்கின்றீர்கள்
இதன் அடுத்த அடுத்த கட்டங்கள் உங்களையும் உங்கள் கணவரையும்
தூரமாக்கிவிடும் என்பது தெரியுமா சகோதரி என்று கேட்டேன்.
தெரியும் எல்லாம் அனுபவித்து
முடியும்வரை பொறுத்து பார்த்துத்தான் வெளியில் வந்திருக்கின்றேன்
இனி அவரை நான் பார்க்கவே மாட்டேன் என்றார்.
உங்களுக்குள் என்ன பிரச்சினை என்றேன்.
குடிக்கிறார் அத்துடன் வாயுக்குள் எதையோ வைத்து சப்புகிறார்
மிருகமாக நடக்கிறார். அடிக்கிறார் உதைக்கிறார் கத்தியால் குத்த வாறார்.
நான் என்ன செய்தாலும் சந்தேகக்கண்ணோடு பார்க்கிறார்
எங்கும் வெளியில் போகக்கூடாது எவருடனும் பேசக்கூடாது.
எனக்காக இல்லை எனது இரு பிள்ளைகளுக்காக (4 மற்றும் 1 வயது) நான் உயிரோடு இருக்கணும்
அதனால் தான் வெளியில் வந்தேன் என்றார் (இவ்வளவும் என்னிடம் அழுதழுது சொல்ல அரை மணித்தியாலம் தேவைப்பட்டது)
 
உங்களுக்கு பிரான்சில் யாரிருக்கிறார்கள்
- எவருமில்லை அவரைத்தவிர எனக்கு எவரையும் தெரியாது.
எப்படி பிரான்சுக்கு வந்தீர்கள்?
- ஊருக்கு வந்து அங்கேயே திருமணம் செய்து அவரே என்னை இங்கு கூட்டி வந்தார்.
 
நான் காவல்த்துறை அதிகாரியிடம் என்ன சொல்லவேண்டும்
- எனக்கு அவரிடமிருந்து பாதுகாப்பும் நிம்மதியாக நானும் பிள்ளைகளும் வாழ ஒரு வீடும் தரச்சொல்லுங்கோ.
 
சரி சொல்கின்றேன் நல்லதொரு அதிகாரியிடம் வந்திருக்கின்றீர்கள்.
நீங்கள் கேட்பதை அவரிடம் சொல்கின்றேன்.
இனியாவது இங்கு மொழியை படியுங்கள் சொந்தக்காலில் நில்லுங்கள். அழுதபடி விடை தந்தார்.
 
அதிகாரியிடம் விடயத்தை சொல்லி உதவும்படி சொன்னேன்.
கணவரை கைது செய்திருக்கின்றோம்.
முடிந்தவரை அவர் கேட்பதை செய்து கொடுக்கின்றோம் என்றவர்
என்னிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார்
 
மொழி தெரியாது
நாடு திசை திக்கு எதுவுமே தெரியாது
எந்த வருமானமும் கிடையாது
ஒருவரை மட்டுமே நம்பி அவரிடம் எப்படி உங்கள் ஆட்கள் ஒரு பெண்ணை கொடுக்கிறார்கள்??
இந்த ஒன்றுமின்மை தான் அவரை தவறு செய்ய தூண்டுகிறது.
 
இதே கேள்வியை உங்களிடம் முக்கியமாக தாயகத்திலுள்ள எனது மக்களிடம் நான் வைக்கின்றேன்.
 
மொழி தெரியாது
நாடு திசை திக்கு எதுவுமே தெரியாது
எந்த வருமானமும் கிடையாது
ஒருவரை மட்டுமே நம்பி அவரிடம் எப்படி உங்கள் ஆட்கள் ஒரு பெண்ணை கொடுக்கிறார்கள்??
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 115
 
ஒருவரை தொடர்ந்து ஏமாற்ற முடியுமா?
 
தமிழரை தொடந்து ஏமாற்ற முடியும் என்கிறது சிங்களம்.
தொடர்ந்து ஏமாற்றி வெற்றியும் கண்டு வருகிறது.
 
இந்தமுறை ஆப்பு தமிழருக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும்  சேர்த்து.
 
மகிந்தவே தொடர்ந்து இருக்கட்டும்
இருக்கும் சாட்சிகளை வைத்து தொடர்ந்து முயற்சிக்கலாம் என்ற போது
நல்லாட்சியை ஏற்போம் என்றவர்களுக்கும் சேர்த்து ஆப்பு இறங்கியிருக்கிறது.
 
சாணக்கியமானவர்கள் சில கோடிகளை சேர்த்ததை தவிர
தமிழர் தலையில் மீண்டும் மீண்டும் அரைத்தல் தொடர்கிறது தொடரும்.
 
இன்னொரு மொந்தையில் சாணக்கியர்கள் வலம் வர தயாராவார்கள்.
வருவார்கள் வெல்வார்கள்.
 
இனி......???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 116

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்?

நல்லாட்சியை எமது சாணக்கியத்தால் உருவாக்கியது நாங்கள் தான்.

அதை வேறு எவராலும் செய்திருக்கவே முடியாது என

இதுவரை தமிழ் மக்களுக்கு தாங்கள் செய்த பெரும் தீர்வாக

நெஞ்சை நிமிர்த்தியபடி இருந்தனர் கூட்டமைப்பினர்.

இப்பொழுது அது இல்லை எல்லாமே

மகிந்த மைத்திரியில் நரி விளையாட்டு எனத்தெரிய வருகிறது.

ஏற்கனவே பெரு நரி என்று இருந்த ரணிலுக்கே ஆப்பு இறுக்கியிருக்கிறார்கள்.

இப்போ எதை சொல்லப்போகிறார்கள் சாணக்கியர்கள் தமிழ் மக்களிடம்?? 
தான்தோன்றித்தனமாக இருவர் மட்டுமே                                                                                                                                                                                                                              தமிழரின் தலைவிதியை நிர்ணயிப்பவர்களாக                                                                                                                                                                                                                       இதுவரை நடந்து வந்த நிலையிலிருந்து                                                                                                                                                                                                                     கூட்டமைப்பின் எல்லா கட்சியினருடனும் கலந்தாலோசித்து முடிவு தருகின்றோம் என்பதனூடக

இவர்கள் சொல்ல வருவது பழியை எல்லோர் தலையிலும் போடப்போகின்றோம் என்பதைத்தானே??

நன்மை எமக்கு தீமை உங்களுக்கு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 117
 
ஒரு நல்ல கனவு?
 
மைத்திரி மகிந்த ரணில் சர்வதேசம் என
நேற்றிரவு ஆட்டம் பார்த்து
களைச்சுப்போய் மூளையே ஊசலாட படுத்தனா.
 
ஒரு கனவு
முப்படைகளும் சுற்றி நிற்க
தலைவர் கம்பீரமா நடந்து வாறார்
என்னை அறியாமலேயே
கையெடுத்து கும்பிட்டன்
கனவு தான் என்று தெரிந்த பின்பும்
அதை கெடுக்க விரும்பாமல்
வாழ்வில் முதல் தடவையாக தொடர்ந்தன் கனவை...
 
நிஐமாய் வருவாயா ராசா....
 
Link to comment
Share on other sites

On 10/27/2018 at 5:10 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 117
 
ஒரு நல்ல கனவு?
 
மைத்திரி மகிந்த ரணில் சர்வதேசம் என
நேற்றிரவு ஆட்டம் பார்த்து
களைச்சுப்போய் மூளையே ஊசலாட படுத்தனா.
 
ஒரு கனவு
முப்படைகளும் சுற்றி நிற்க
தலைவர் கம்பீரமா நடந்து வாறார்
என்னை அறியாமலேயே
கையெடுத்து கும்பிட்டன்
கனவு தான் என்று தெரிந்த பின்பும்
அதை கெடுக்க விரும்பாமல்
வாழ்வில் முதல் தடவையாக தொடர்ந்தன் கனவை...
 
நிஐமாய் வருவாயா ராசா....
 

     இது உங்கள் கனவு மட்டும் இல்லை பலருடைய கனவும் இதுதான். இந்த கனவு நிறைவேற எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎27‎/‎2018 at 4:10 AM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 117
 
ஒரு நல்ல கனவு?
 
மைத்திரி மகிந்த ரணில் சர்வதேசம் என
நேற்றிரவு ஆட்டம் பார்த்து
களைச்சுப்போய் மூளையே ஊசலாட படுத்தனா.
 
ஒரு கனவு
முப்படைகளும் சுற்றி நிற்க
தலைவர் கம்பீரமா நடந்து வாறார்
என்னை அறியாமலேயே
கையெடுத்து கும்பிட்டன்
கனவு தான் என்று தெரிந்த பின்பும்
அதை கெடுக்க விரும்பாமல்
வாழ்வில் முதல் தடவையாக தொடர்ந்தன் கனவை...
 
நிஐமாய் வருவாயா ராசா....
 

தலைவரும்,கருணாவும் ஒன்றாக இருந்து சாப்பிடுகின்ற மாதிரி எனக்கும் ஒரு கனவு வந்தது ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 118
 
 
என்ர பொடி தனது முகநூலில் போட்டிருக்கு.
 
என்ர அப்பாவும் நானும் விளையாடியதை யார் படம் பிடிச்சது என எழுதியிருக்கிறார்.
(Qui nous a filmé ?)
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தலைவரும்,கருணாவும் ஒன்றாக இருந்து சாப்பிடுகின்ற மாதிரி எனக்கும் ஒரு கனவு வந்தது ?

 

உங்களது  கனவும்   பலிக்கட்டும்

அவர் இப்போ இலங்கையின் கோடிசுவரர்களின் வரிசையில்4வது  இடத்திலிருக்கிறார்

இனி  தலைவரோட எல்லாம்  சாப்பிடமாட்டார்

ஆனால் கடைசி நேரத்தில தலைவரோட அவர் போய் சாப்பிட்டிருந்தா....?

தமிழினம்  வென்றிருக்கும்

ஆனால் அவரோட  நான் இருந்து  சாப்பிட்டிருக்கின்றேன்

தோளில்  கை  போட்டு படமும் இருக்கு.

ஆனால்  அதுக்காக  இப்பொழுது  வெட்கப்படுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

ஆனால் அவரோட  நான் இருந்து  சாப்பிட்டிருக்கின்றேன்

 தோளில்  கை  போட்டு படமும் இருக்கு.

ஆனால்  அதுக்காக  இப்பொழுது  வெட்கப்படுகின்றேன்.

வெட்கப்படாதீர்கள் விசுகு ஐயா!

கருணா அம்மானும், டக்ளஸ் தேவானந்தாவும் மகிந்தவின் தலைமையில் தமிழர்களின் காவல் தெய்வங்களாக இருப்பார்கள்.

தோழர் தேவானந்தா பாரிஸ் வரும்போது அவருடன் சேர்ந்து விருந்துண்ண விண்ணப்பம் வைக்கின்றேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

வெட்கப்படாதீர்கள் விசுகு ஐயா!

கருணா அம்மானும், டக்ளஸ் தேவானந்தாவும் மகிந்தவின் தலைமையில் தமிழர்களின் காவல் தெய்வங்களாக இருப்பார்கள்.

தோழர் தேவானந்தா பாரிஸ் வரும்போது அவருடன் சேர்ந்து விருந்துண்ண விண்ணப்பம் வைக்கின்றேன்?

எதுக்கு

சுத்தி  மூக்கைத்தொடுவான்?

மகிந்தவோட கை  கொடுக்க  எனக்கு  இவர்கள் தேவையில்லை

போன  கிழமையும் ஒரு  அழைப்பு  வந்தது

நாங்க தான் புறக்கணித்தோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

எதுக்கு

சுத்தி  மூக்கைத்தொடுவான்?

மகிந்தவோட கை  கொடுக்க  எனக்கு  இவர்கள் தேவையில்லை

போன  கிழமையும் ஒரு  அழைப்பு  வந்தது

நாங்க தான் புறக்கணித்தோம்

 விசுகு ஐயா பெரிய கை என்று தெரியும்?

புறக்கணிக்காமல் மகிந்த மாத்தயாவோடும் பேசிப் பாக்கிறதுதானே. சம்சும், சைக்கிள் கோஸ்டி, விக்கி எல்லாரும் ஏறிச் சறுக்கி விழுந்து கிடக்கினம். ஏன் தமிழீழம், சமஸ்டி என்று சறுக்கிற குதிரையில ஏற்வேண்டும்? அபிவிருத்தி, பொருளாதாரம், கைதிகள் விடுதலை எல்லாம் மகிந்த மனம் வைத்தால்தானே கிடைக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

 விசுகு ஐயா பெரிய கை என்று தெரியும்?

புறக்கணிக்காமல் மகிந்த மாத்தயாவோடும் பேசிப் பாக்கிறதுதானே. சம்சும், சைக்கிள் கோஸ்டி, விக்கி எல்லாரும் ஏறிச் சறுக்கி விழுந்து கிடக்கினம். ஏன் தமிழீழம், சமஸ்டி என்று சறுக்கிற குதிரையில ஏற்வேண்டும்? அபிவிருத்தி, பொருளாதாரம், கைதிகள் விடுதலை எல்லாம் மகிந்த மனம் வைத்தால்தானே கிடைக்கும்?

கனவு  காணுங்கள்- அப்துல்  கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 119
 
படிப்பில் பிள்ளைகளின் புள்ளிகள்?
 
இந்த பெற்றோர்களுக்கு
அதிலும் தமிழ்ப்பெற்றோர்களுக்கு திருப்தி இருப்பதில்லை.
எவ்வளவு தான் புள்ளிகள் எடுத்தாலும்
அதற்கு மேல் ஏன் எடுக்கவில்லை ஏன் முயலக்கூடாது என்பார்களே தவிர
போதும் என்று ஒரு போதும் சொல்வதில்லையே அப்பா என்றாள் என் மகள்.
சரியான கேள்வி தான். இருந்தாலும் அதற்கொரு காரணம் இருக்குமல்லவா?
 
நீ குழந்தையாக இருக்கும் போது
சிறிது பாலைக்குடித்தவுடன் வேண்டாம் என்பாய்.
அப்படியே விட்டுவிடுவதில்லை நாம்.
இன்னும் கொஞ்சம் கொஞ்சம் என தந்து
உன்னை நிமிர்த்தி தலையில் தட்டி கைகளை மேலே குலுக்கி விடுவோம்.
சாப்பாடு ஊட்டும் போதும் இப்படித்தான்
அம்புலிமாமா கதைகள் சொல்லி இன்னும் கொஞ்சம் ஊட்டிவிடுவோம்.
அது போலத்தான் இதுவும் என ஏன் எடுக்கப்படாது?
 
அது உனது உடல் நலத்துக்கும் சக்திக்கும்
இது உனது எதிர்காலத்துக்கும் வளர்ச்சிக்கும் என்றேன் நான்.
 
சிரித்துக்கொண்டு போனாள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎29‎/‎2018 at 6:27 AM, விசுகு said:

உங்களது  கனவும்   பலிக்கட்டும்

அவர் இப்போ இலங்கையின் கோடிசுவரர்களின் வரிசையில்4வது  இடத்திலிருக்கிறார்

இனி  தலைவரோட எல்லாம்  சாப்பிடமாட்டார்

ஆனால் கடைசி நேரத்தில தலைவரோட அவர் போய் சாப்பிட்டிருந்தா....?

தமிழினம்  வென்றிருக்கும்

ஆனால் அவரோட  நான் இருந்து  சாப்பிட்டிருக்கின்றேன்

தோளில்  கை  போட்டு படமும் இருக்கு.

ஆனால்  அதுக்காக  இப்பொழுது  வெட்கப்படுகின்றேன்.

தலைவரோட இறுதி விருந்து சாப்பிடடவர்கள் எல்லாம் மாண்டு போனார்கள் என்பது தெரியாதோ விசுகு அண்ணா 

On ‎10‎/‎29‎/‎2018 at 6:40 AM, கிருபன் said:

வெட்கப்படாதீர்கள் விசுகு ஐயா!

கருணா அம்மானும், டக்ளஸ் தேவானந்தாவும் மகிந்தவின் தலைமையில் தமிழர்களின் காவல் தெய்வங்களாக இருப்பார்கள்.

தோழர் தேவானந்தா பாரிஸ் வரும்போது அவருடன் சேர்ந்து விருந்துண்ண விண்ணப்பம் வைக்கின்றேன்?

டக்லசை கொலை செய்யத் திரிந்தவர்களே மு.வாய்க்காலின் போது அவரைப் பிடித்து தப்பி வந்தார்கள்...அவர் துரோகி அவரிடம் என்ன உதவி கேட்பது என்று நினைத்திருந்தால் அவ்வளவு பேரும் சிறையிலையே  மாண்டு இருப்பார்கள்.

"தக்கன பிழைக்கும்"

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

தலைவரோட இறுதி விருந்து சாப்பிடடவர்கள் எல்லாம் மாண்டு போனார்கள் என்பது தெரியாதோ விசுகு அண்ணா 

அப்ப இங்கு புலம்பெயர் பாதி செத்து இருக்கணும் .

8 hours ago, ரதி said:

டக்லசை கொலை செய்யத் திரிந்தவர்களே மு.வாய்க்காலின் போது அவரைப் பிடித்து தப்பி வந்தார்கள்...அவர் துரோகி அவரிடம் என்ன உதவி கேட்பது என்று நினைத்திருந்தால் அவ்வளவு பேரும் சிறையிலையே  மாண்டு இருப்பார்கள்.

"தக்கன பிழைக்கும்"

நீங்கள் நினைப்பது  சின்ன பிள்ளைதனமானது    அப்ப சுரேஷ் பிரேமசந்திரன் போன்றவர்கள்  யார் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 120

சிரிப்பே இவரிடம் தோற்றுப்போகும்.....

எம்மோடு பழகியவர்கள் அதிலும் எமக்கு நம்பிக்கை தந்தவர்கள்

கொல்லப்படுவதென்பது மிகவும் கொடுமையானது.

அப்படித்தான் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறப்பும்.

அவரது சிரித்த முகத்தை மட்டுமே நாம் பார்த்திருக்கின்றோம்.

ஒரு நாள் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது

எம்மனதிலிருந்த கேள்வியை நண்பர் ஒருவர் கேட்டுவிட்டார்.

அண்ணா எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கிறீர்களே உங்களுக்கு கோபமே வராதா என்று?

அதே சிரித்த முகத்துடன்

ஓ நீங்கள் பார்த்ததில்லை அல்லவா என்றபடி

அவருக்கு பாதுகாப்பாக நின்ற போராளியை திரும்பிப்பார்த்தார்.

அந்த போராளியின் முகத்தில் தெரிந்த இறுக்கம் அவரது இன்னொரு பக்கத்தை எமக்கு உணர்த்தியது.

இன்று அவரது ஞாபகம் வந்து கொண்டே இருக்கிறது.

வீரவணக்கம் அண்ணா மற்றும் அனைத்து போராளிகளுக்கும்.

L’image contient peut-être : 6 personnes, personnes souriantes, texte

 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.