Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 69

மொழி கடந்து.......

தேரே மேரே பீச் மேன்...கேசா ஹையே பந்தன்...அஞ்சானா...
மேனே நஹி ஜானா...துமே நஹி ஜானா...

இந்தப்பாடலை எனது பருவ காலத்தில் முழுமையாக பாடமாக்கி பாட முடிந்தது

கானமும் காட்சியும்அமைந்து விட்டுவிட்டால் மற்றதெல்லாம்......???

(நெடுக சீரியசா பேசப்படாது காண்)

 

 

Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் விசுகர்!

ஒரு காலத்தில் ஈழத்தமிழன் கிந்தியையும் இந்தியாவையும் நேசித்தது போல் உலகில் யாருமே நேசித்திருக்கமாட்டார்கள்.

சிங்களவர் கூட  இந்தியாவை   இவ்வளவு நேசித்ததில்லை.

எமக்கெல்லாம் அருவரியிலிருந்தே காந்தித்தாத்தா,நேரு மாமா என்று பால்சோறு போல் ஊட்டி ஊட்டி சொல்லித்தந்தார்கள்...

சிங்கள பள்ளிகளில் அரசமர வருகையை தவிர  இந்தியாவைப்பற்றி ஏதாவது சொல்லிக்கொடுப்பார்களா? ஆனால் நாம் இந்தியாவை உலகின் பிறப்பிடமாக பார்த்தோம். அயல் நாடாக பார்க்காமல் பக்கத்து வீடாக பார்த்தோம்.

தேனீர்கடைகளில் கிந்தி பாடல்கள் அலறும்.

அந்த இசையுடன்  வடையும்  தேனீரும் சேர அமிர்த மழை பொழிவது போல் ஒரு பிரமையுடன் இருந்தோம்.

சிங்கள திரைப்படங்களை விட கிந்தி படங்களை விரும்பி பார்த்தோம். கிந்தி பாடல்களை கிரமமாக கேட்டோம் ரசித்தோம். 

ஆனால் இன்று?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 70

 

ஐ நா சபை அமர்வுகள் நிறுத்தம்

இன்று மனித உரிமை பேரவையின் கூட்டத்தாெடர்

ஐநாவில் நடந்து வரும் நிலையில்

மிக முக்கிய விவாதங்கள் நடைபெறுவதற்காக

பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் அங்கு குவிந்துள்ள நிலையில்

இன்று திடீரென அமர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

காரணம் ஐநா பணியாளர்கள் சம்பள உயர்வு காேரி

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

 

இவர்கள் உலகப்பிரச்சினைக்கும்

எமது பாதுகாப்புக்கும் தீர்வு தருவார்கள் என

நாம் தற்பொழுதும் நம்புகின்றோம். நம்புவோம்1f625.png?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 71
 
எம்மவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது
 
பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோசியை
கைது செய்த போலீசார் நேற்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
 
இது செய்தி
 
இதில் வல்லரசாகும் கனவுடனுள்ள இந்தியாவும்
உலகமே வெட்கித்தலைகுனியும் கொலை கொள்ளை ஊழல் மற்றும் காட்டுமிராண்டித்தனங்களை செய்து விட்டு
ஐனநாயகம் பேசும் சிறீலங்கா போன்ற நாடுகள் கவனிக்கவேண்டியது பல உண்டு.
 
சார்கோசியின் வழக்கு சார்ந்தோ
அவரது கைது சார்ந்து
பிரெஞ்சு அரசோ அல்லது எதிரணிகளோ
ஏன் சார்கோசியின் கட்சி கூட வாய் திறக்கவில்லை.
ஒருத்தரும் எவரையும் குற்றம் சாட்டவில்லை.
சட்டம் மட்டுமே தனது வேலையை செய்கிறது.
 
இதுவே
இந்தியாவிலோ சிறீலங்காவிலோ
முன்நாள் ஐனாதிபதிக்கு எதிராக நடந்தால்??
நடக்குமா என்ன???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 72
 
என் தலைமுறையில் நடந்தது
தற்போதைய தலைமுறைக்கும் வருகுதா??
 
80 களின் இறுதியில்
ஒரு காலத்தில் தனது தொகுதியான காங்கேசன்துறையில்
அதிகூடிய வாக்கு வித்தியாசத்தில் வென்ற அமிர்தலிங்கம் அவர்கள்
தனது தொகுதியில் நின்றால் அன்றைய நிலையில் தோற்றுவிடுவேன் என அஞ்சி
வடபகுதியிலேயே கூட தேர்தலில் அந்த மக்களை சந்திக்கமுடியாமல்
கிழக்கில் நின்று அந்த மக்களாலும் நிராகரிக்கப்பட்ட நிலையில்
தமிழ் மக்கள் நினைத்தோம் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து
அரசியல் வாழ்விலிருந்து அமிர் அவர்கள் ஒதுங்கி விடுவார் என.
 
ஆனால் பதவி ஆசை காரணமாக
நிஐமண முறையை பயன்படுத்தி அவர் மீண்டும் பாராளுமன்றம் புகுந்தபோது
இவர் ஆபத்தானவர்
முற்றுமுழுதாக மக்களிலிருந்து அகற்றப்படணும் என்ற முடிவுக்கு  தமிழ் மக்கள்  வந்தனர்.
 
தற்போதைய உள்ளூராட்சி தேர்தலின் பின்னர்
மக்கள் ஆணையை கேலி செய்யும் முகமாக நடக்கும்
விலை பேசுதல்கள் குழிபறிப்புக்கள் மூலம்
பதவியையும் அதிகாரத்தையும் தங்கவைத்துக்கொள்ள
நடக்கும் முயற்ச்சிகளை பார்க்கும் போது....??
மீண்டும் மீண்டும்????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 73
 
துரத்துதல் = கரம் பிடித்தல்
 
மற்றய இடங்களைப்பொறுத்தவரை விபரம் தெரியாது.
எனவே அது பற்றி பேசாமல் விடுவோம்.
எனது ஊரில் உள்ளுராட்சி தேர்தலில் நின்ற
கூட்டமைப்பின் அனைத்துக்கட்சி வேட்பாளர்களது ஒரே கனவு
அல்லது குறி ஈபிடிபியை எமது பகுதியிலிருந்து துரத்துதல் என்பதாகத்தான் இருந்தது.
 
இன்றுவரும் தகவல்களின் படி
தாயகத்தின் மற்றய பகுதிகளைப்போல
எமது பகுதியிலும் ஈபிடிபியுடன் கரம் கோர்த்தே முடிவுகள் எட்டப்பட்டுள்ளன
பதவிகள் பகிரப்பட்டுள்ளன.
 
உண்மையில் அவர்கள் கரம் பிடிப்போம் என்பது தான்
மக்கள் காதுகளில் துரத்துதல் என கேட்டிருக்குமோ???
 
எல்லா மக்கள் காதிலும் ஒரே மாதிரியாக எப்படி???
ஒன்றுமே புரியல....☹️☹️☹️
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 74
 
நாம் தமிழர் + மதிமுக = முறுகல் நிலை
 
நாம் தமிழருக்கும்
மதிமுகவுக்குமிடையிலான முறுகல் மற்றும் கொள்கைகள் சார்ந்த பிடுங்குப்பாடுகளில்
ஈழத்தமிழர்கள் நாம் தலையிடவோ கருத்து வைக்கவோ தேவையில்லை என்பது தான் எனது நிலைப்பாடு.
 
வை கோ அண்ணையிடம் எப்பொழுதுமே நன்றிக்கடனுண்டு.
அதே நேரம் 2009க்கு பின்னர்
வை கோ அண்ணனைவிட அதிகம்
எமது அவலங்களை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற சீமானையும்
நன்றிக்கடனுடனேயே பார்க்கின்றேன்.
 
எனவே இது அவர்களது பிரச்சினை.
அவர்களது கொள்கை சார்ந்த (தமிழர் - திராவிடர்)
பிளவுகளால் வரும் இடிபாடுகளுக்குள் ஈழத்தமிழர்கள் செல்லவேண்டியதில்லை.
சென்றால் தேவையற்று ஏதாவது ஒரு பகுதியை பகைக்கவேண்டி வரும்.
அதிகம் ஈழத்தமிழர்பால் அன்பு கொண்ட இளைஞர்கள் கூட்டம் இருபகுதியிலுமுண்டு.
 
ஆட்களை பகைத்து
கட்சிகளை பகைத்து
அதன் மூலம் முதுகில் குத்து வாங்கிய வரலாறுகள்
எம் கண் முன்னே தானே நடந்தன....
 
எமக்கு எல்லோரும் தேவை என்ற
காலத்தின் தேவை உணர்ந்து அமைதியாக பொறுமையாக நடப்போமாக.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 74
 
நாம் தமிழர் + மதிமுக = முறுகல் நிலை
 
நாம் தமிழருக்கும்
மதிமுகவுக்குமிடையிலான முறுகல் மற்றும் கொள்கைகள் சார்ந்த பிடுங்குப்பாடுகளில்
ஈழத்தமிழர்கள் நாம் தலையிடவோ கருத்து வைக்கவோ தேவையில்லை என்பது தான் எனது நிலைப்பாடு.
 
வை கோ அண்ணையிடம் எப்பொழுதுமே நன்றிக்கடனுண்டு.
அதே நேரம் 2009க்கு பின்னர்
வை கோ அண்ணனைவிட அதிகம்
எமது அவலங்களை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற சீமானையும்
நன்றிக்கடனுடனேயே பார்க்கின்றேன்.
 
எனவே இது அவர்களது பிரச்சினை.
அவர்களது கொள்கை சார்ந்த (தமிழர் - திராவிடர்)
பிளவுகளால் வரும் இடிபாடுகளுக்குள் ஈழத்தமிழர்கள் செல்லவேண்டியதில்லை.
சென்றால் தேவையற்று ஏதாவது ஒரு பகுதியை பகைக்கவேண்டி வரும்.
அதிகம் ஈழத்தமிழர்பால் அன்பு கொண்ட இளைஞர்கள் கூட்டம் இருபகுதியிலுமுண்டு.
 
ஆட்களை பகைத்து
கட்சிகளை பகைத்து
அதன் மூலம் முதுகில் குத்து வாங்கிய வரலாறுகள்
எம் கண் முன்னே தானே நடந்தன....
 
எமக்கு எல்லோரும் தேவை என்ற
காலத்தின் தேவை உணர்ந்து அமைதியாக பொறுமையாக நடப்போமாக.

உங்களின் கருத்துதான் என் கருத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 75
 
தமிழகத்தில் தமிழ் மக்கள் விரும்பாத எதையும் இனி திணித்துவிடமுடியாது
 
இந்தநிலை தற்பொழுது அங்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது
 
இப்படியொரு நிலை தமிழகத்தில் வரவேண்டும் என்பதே தமிழர்களது கனவாக இருந்தது
 
தமிழகம் தமிழர்களது கைகளில் வந்தால் மட்டுமே உலகத்தமிழருக்கு ஒரு ஒளிவிளக்கு கிடைக்கும்.
கேட்க ஒரு நாதி இருக்கும்.
 
கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதும் ஆறுதல் தரும் விடயமாகும்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 76
 
எனது ஊர்
 
காலமும் நேரமும் உயிரும் இருக்கும் போது சிலவற்றை பதிந்துவிடவேண்டும் என்பதே அவா.
 
அந்தவகையில் இன்று எல்லோராலும் அவரவர் பிறந்த ஊர் பற்றி பேசப்படுகிறது.
எனது ஊர் பற்றியும் பேசணும் என்று தோன்றுகிறது.
 
கிழக்கு மாகாணத்திலே முரளிதரன் புலிகளுக்கிடையில் பிளவை உருவாக்கியபோது
அதை தடுத்த தலைவர் பிரபாகரன் அவர்கள்
ஒரு பேட்டியில் கேள்விக்கு பதிலளிக்கும் போது சொல்கிறார்.
தனது ஊரை நேசிப்பவனே தனது தாயகத்தை நேசிப்பான்.
ஆனால் அது பிரதேச வெறியாக மாறிவிடக்கூடாது.
முரளிதரன் அங்கு தான் தவறு செய்தார் என்கிறார்.
( இயக்கத்துக்கு துரோகம் செய்ததிலிருந்து நான் முரளிதரனை இயக்கப்பெயர் கொண்டு எழுதுவதில்லை)
 
அந்தவகையில் எனது ஊர் சார்ந்த பற்று என்பதே எனது அடிப்படை.
அதுவே நான் எனது தாயகத்தை நேசிப்பதற்கான முதல் அடி.
 
எனது ஊரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
காரணம் எமது ஊரவரின் உழைப்பு முயற்ச்சி அத்துடன் விருந்தோம்பல்.
 
இன்றும் பிரான்சிலே ஒரு திருமணவீடும் சரி
சாவீடும் சரி நிறைந்து வழிகிறது என்றால்
அவ்வழியால் போவோர் கூட்டத்தை பார்த்தே
இது புங்குடுதீவு மக்களின் கூட்டமாக இருக்கும் என்கிறார்கள் என்றால்
அதற்கு எமது இந்த விருந்தோம்பலே முதற்காலணி.
 
மிகவும் தூரத்திலும்
தனித்தும் உள்ள ஒரு தீவை
உலகிலுள்ள எந்த தமிழருக்கும் தெரிகிறது என்றால்
அதற்கு அம்மண்ணின் மக்களின் வளர்ச்சியும் பொது சேவைகளுமே காரணம்.
 
தாயகம் செல்லும் அநேக தமிழர்கள்
எமது ஊருக்கும் சென்று வருகிறார்கள்.
அதற்கு எமது மீது உள்ள பற்றும்
சிலருக்கு எம்மை எவ்வாறு தூற்றலாம் என்பதை தேடும் காரணங்கள் இருந்தாலும்
எமது ஊரைப்பார்ப்பதும் அவர்களது தாயக பயணத்தின் ஒரு பாகமாக வந்திருக்கிறது என்பது மகிழ்வு தருகிறது.
 
90களில் போரின் தீக்கு சிக்காது ஓடத்தொடங்கிய எனது ஊர்மக்கள்
30 ஆண்டுகாலம் கடந்து மீண்டும் ஊர் திரும்புகிறார்கள்.
திரும்பும் அவர்கள் பணபலத்துடன் மட்டுமல்ல உலக நவீன அறிவியலை உள்வாங்கி திரும்புகிறார்கள்.
 
இன்னும் சில  வருடங்களில்
எனது ஊர்பூத்து குலுங்கும்.
மற்ற ஊர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக திகழும் என்பதை மட்டும்
எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 77
 
இன்று சிரிப்பு நாளாம்
சிரிப்போம் சிந்திப்போம்
 
ஒரு மரண ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.
பாடை கட்டி அதில் இறந்தவரை வைத்து தூக்கி சென்று கொண்டிருந்தார்கள்.
ஒரு வயதான தாயும் அவரது மகனும் தமது வீட்டில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
 
இதைப்பார்த்த மகன் தாயிடம் சொன்னார்.
நான் இப்படி செய்யமாட்டேன் விலையுயர்ந்த பெட்டி வாங்கி அதில் தான் உன்னை கொண்டு செல்வேன் என.
 
தாய் சொன்னார்
தம்பி இவ்வாறே என்னையும் பாடை கட்டி திறந்தபடி கொண்டு செல்
பெட்டிக்குள் வைத்துப்பூட்டினால்
அம்மாவுக்கு மூச்சு விடுவது சிரமமாக இருக்குமல்லவா.???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிக்காத பணக்கார தந்தை, மெததப்படித்த மகனுடன் காம்பிங் சென்றார்.

பொழுது சாய்ந்ததும், ரென்ற் அமைத்து அசதியில் தூங்கி விட்டனர்.

சிறிது நேரத்தின் பின் மகனை எழுப்பினார் தந்தை.

வானத்தில் என்ன தெரிகிறது, மகனே என்றார் தந்தை.

பல கோடி நட்சத்திரங்கள் தெரிகின்றன, என்றார் மகன்.

அதிலிருந்து புரிவது என்ன மகனே, என்றார் தந்தை.

இந்த பூமியைப் போல பல கோடி கோள்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளன... இது குறித்து ஆய்வுகள் இன்னும் நடந்து.....

சொல்லி முடிவதற்கிடையே, கன்னத்தில் விழுந்தது அறை.

மடயனே, நம்ம ரென்ற யாரு களவாடிக்கொண்டோடி விட்டார்கள்.

ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 78
 
தலைவர் பற்றிய பேச்சும் அரசியலும்....
 
 
தலைவரது இருப்பு சார்ந்து அரசியல்வாதிகள் பேசுவது நல்லதல்ல.
அவை சுயநலமானவை.
காலம் நேரம் பார்த்து தத்தமது தேவைக்கமைய பாவித்துக்கொள்வதற்கு
தலைவர் கருவேப்பிலையல்ல.
 
இது விடயம் சார்ந்து பேசுபவர்கள் பேச முற்படுபவர்கள்
மிக மிக பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என எதிர் பார்ப்போம்.
 
தலைவரது இருப்பு சார்ந்து
ஆய்வுகளும் நேரடி சாட்சிகளும் பதியப்பட்டு
உண்மையை மக்கள் முன்வைக்கவேண்டிய பொறுப்பு தாயக மக்களுக்குண்டு.
அதை அவர்கள் செய்யவேண்டிய காலம் வந்து விட்டதாகவே
அண்மைய பேச்சுக்களும் பிரதியிடல்களும் சொல்லி நிற்கின்றன.
 
தலைவர் வீரமரணமடைந்திருந்தால்???
மாவீரர் நாளில் அதற்கான மதிப்பை அவருக்கு தர தாயக தமிழர்கள் தயங்கக்கூடாது.
 
தேசியத்தலைவர் ஒருவர்தான்
அவர் இருந்தால் தலைவர்
இறந்திருந்தால் கடவுள்.
 
இதை எவராலும் ஈடு செய்யவோ பிரதிப்படுத்தவோ முடியாது. இயலாது.
 
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 79
 
Un Lock
 
தம்பி நிரு. பிரெஞ்சு கலை பண்பாட்டுக்கழகத்தால்
ஒரு குறிக்கோளோடு வளர்த்தெடுக்கப்படட ஈழத்தின் பிள்ளை.
அவரது திறமை, தாயகப்பற்று மற்றும்
எமது இனத்துக்கு நடந்த கொடுமைகளுக்கு நீதி கேட்கும் தன்மை சார்ந்து
அவர் மீது தனிப்பாசமுண்டு.
 
அந்தவகையில் வாருங்கள்
வந்து உங்கள் வருகையை பதிவதனூடாக
எமது வலியை உறுதிப்படுத்துவதனூடாக
ஈழத்திரைப்படத்துறையை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவதற்கான
ஆதரவுக்கரத்தை வலுப்படுத்துங்கள் என்ற கோரிக்கைக்கு
வலு சேர்க்கும் முகமாகவே நானும்
எனது மகனையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன்.
 
ஆனாலும் வழமைபோல்
எமது ஈழத்து கலைஞர்கள் செய்யும் தவறான
அளவுக்கதிகமான பேச்சு மற்றும் அதிக விளம்பரம் ஊடாக
அதிக எதிர்பார்ப்பை வளர்த்துவிடல் சார்ந்து ஒரு பயம் இருந்து கொண்டேயிருந்தது.
 
 
நாங்கள் நாவலர் குறும்படப்போட்டியை நடாத்துவதாலும்
நாவலர் தெரிவு நிர்வாகக்குழுவில் நான் இருப்பதாலும்
இது போன்ற பல குறும்படங்களை
புலம் பெயர் தேச
அதிலும் பிரெஞ்சு தேச எமது கலைஞர்கள் ஏற்கனவே தந்திருக்கிறார்கள்.
நான் பார்த்து பிரமிப்பும் பெருமிதமும் அடைந்திருக்கின்றேன் .
அந்த கலைஞர்களையும் இங்கு நினைவு கூறுவதே சரியானது.
 
எதிர்பார்த்தபடியே எமது தொண்டைக்குள் சிக்கியிருக்கும்
முள் போன்ற கருயை
அப்படியே தூக்கி வெளியே போட்ட போதும் போதாது என்ற மனநிலையே இருந்தது.
 
இருந்தபோதும் கருவுக்கும் அதை தொட்ட துணிவுக்கும் வாழ்த்துக்களை சொல்லாமல் இருக்கமுடியாது.
அதேநேரம் படப்பிப்பு நடந்த இடங்கள் எமது மண்ணோடு ஒட்டவில்லை. மற்றும் விவாதத்துக்கு ஆளான சோபா சக்தி இந்த படத்துக்கு தேவையே இல்லை.
 
மேலும் சிலவற்றை சொல்லாமல் விடுவது தவறான பாதைகளை தொடர்ந்து திறந்துவிடும் என்பதால் இதையும் சொல்லவேண்டியிருக்கிறது.
 
திரையிடலின் பின் மேடையில் இடம்பெற்ற கருத்துக்கூறல்கள் மற்றும் பேச்சுக்கள் அநாகரிகமானவை.
 
ஒரு குறும்படத்துக்கு (10 நிமிடங்கள்) 10€ கொடுத்து 2000 மக்கள் வந்திருந்த கூட்டத்தை பார்த்து உங்களிடம் 10€வுக்கு பிச்சை எடுத்தோம் என்றார்கள். எங்கள் முகத்தில் காறித்துப்பியது போலிருந்தது. அடுத்து சாதி பற்றியும் பேசினார்கள். அவரவர் தத்தமது தனிப்பிரச்சினைகளை வந்திருக்கும் மக்கள் மீது பார்வையாளர்கள் மீது திணிப்பது நல்ல பாதையன்று.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 80

இப்படித்தான்.......

70களின் இறுதியில் இப்படித்தானே உலகத்தமிழர் மாநாட்டில் தொடக்கி வைத்தார்கள்

அதனைத்தொடர்ந்து இன்பம் செல்வமென இப்படித்தானே வீதி வீதியாக சுட்டுவிட்டு பார்க்கும்படி போட்டு போனார்கள்.

இப்படித்தானே இப்படித்தானே முள்ளிவாய்க்கால்வரை உந்தி தள்ளினார்கள்

எம்மை அழித்த விதத்தில்
உங்களுக்கு எச்சரிக்கை தந்தார்கள்

புரிகிறதா தமிழகமே
ஏன் போராடினாய் எனக்கேட்கும் உறவுகளே புரிகிறதா ??

போராடினாலும் 
ஏன் கண்ணை மூடி கதவை மூடி
சும்மா இருந்தாலும் சாவு நிச்சயம் என்றநிலை புரிகிறதா தாய் தமிழகமே...

என்ன செய்யப்போகிறாய்?
எதனை தெரிவு செய்யப்போகின்றாய்??

தமிழன் என்று சொல்லி
தலைகுனிந்து நின்று
கழுத்தறுக்கும்வரை.......???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 81
 
புறக்கணிப்பு
 
HNB இன் மனிதாபிமானமற்ற செயலை கண்டித்து
தமிழ்மக்கள் அவ்வங்கியை புறக்கணிக்க தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
இதனூடாக அவர்களுக்கோ அல்லது அதே போன்ற மற்றவர்களுக்கோ
இழப்போ பெரும் பாதிப்போ வருமா என்ற கேள்வியை தாண்டி
இவ்வாறு நடந்தால் தமிழ் மக்கள் ஒற்றுமையாக
இது போன்ற எதிர்ப்புக்களை தொடங்குவார்கள் என்ற ஒரு படிப்பினை வந்தாலே போதுமானது.
அது இனி இவ்வாறு முடிவெடுக்கும் போது தடுக்கும் வல்லமை கொண்டது.
 
அந்தவகையில் எனது தொழிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் போது
இனி HNB யை முற்றாக தடுத்துவிடுவேன் என்பதை இங்கு அறிவிக்கின்றேன்.
பல லட்சம் வெளிநாட்டுப்பணம் வங்கிகளுக்கு செல்வது தடை செய்யப்பட்டால்
அது அவர்களது பணச்சுழற்சியை பெருமளவு பாதிக்கும்.
 
நன்றி அனைவருக்கும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 82
 
ரஐனியின் அரசியல் தத்துவம்
 
ஒரு அரச காவலர் அல்லது இராணுவம் சீருடையில் இருக்கும்போது அவரை தாக்கக்கூடாது
தாக்கினால் நீ சமூகவிரோதி அல்லது பொறுக்கி அல்லது பயங்கரவாதி.
 
இதைத்தான் ஈழம் சார்ந்தும் சொன்னார்கள்
தூத்துக்குடியிலும் சொல்கிறார்கள்
(அவர்களது படத்தில் எல்லாம்
அவர்களே இவை அனைத்தையும் சட்டத்துக்கு புறம்பாக செய்து முடிப்பார்கள்.
அது வேற கதை)
 
நீதி என்பதும் தர்மம் என்பதும் பக்கம் சாராதது
அதற்கு சீருடைகள் போர்க்கமுடியாது
போர்த்தினால் அது உடைக்கப்படும்.
சரி அல்லது பிழை என்ற இரண்டு பக்கம் தான் இருக்கு.
நடுவில் என்று ஒன்று இல்லை
 
ஆனால் மதில் மேல் பூனைகள் தான் இன்று வாழ்கின்றன.☹️
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 83
 
புலிகளை ஆதரிக்கும் பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரிய கனடாவின் தமிழ் வேட்பாளர் விஜய் தணிகாசலம்
 
 
வரலாறுகளும் தமிழரது வீரம் தியாகம் செறிந்த போராட்டமும்
எம் கண் முன்னே தான் நடந்தது.
அந்தவகையில் ஒவ்வொரு தமிழ்க்குடிமகனுக்கும்
அதை கையாளும் அல்லது தவிர்க்கும் உரிமையுண்டு.
மாற்றாக தமிழரது போராட்டத்தை காட்டிக்கொடுக்கும்
அல்லது அதை பயங்கரவாதம் என்பதாக பிரசாரப்படுத்துதல் தான் தமிழருக்கு ஆபத்தானது.
 
கனடாவின் தமிழ் வேட்பாளர் விஜய் தணிகாசலம்
தனது கட்சிக்கு ஒரு முகமும்
தமிழ் மக்களுக்கு இன்னொரு முகமும் காட்டி
தமிழர்களின் நம்பிக்கை பெற்று தேர்தலில் வென்றிருக்கின்றார்.
 
இங்கே எனது கவலை எல்லாம்
தம்பி விஜய் தணிகாசலத்தின் மனதில்
புலிகள் சார்ந்து தான் அறிவித்த அறிவித்தல் தான்
தன்னை வெல்ல வைத்தது என்ற நினைப்பு வந்து விடக்கூடாது என்பதே.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 84

ஒரு காட்சிப்பதிவின் தாக்கம் மிக மிக அதிகம்

நடுத்தர வர்க்கம் அல்லது

மத்திய வாழ்வு என்ற சொல் அடிக்கடி பாவிக்கப்படுவதை பார்த்திருக்கின்றோம்.

எம்மில் அநேகமானவர்கள் இந்த நடுத்தர வர்க்கத்தினர் தான்.

நேற்று எனது வாகனத்துக்கு முன்னுக்கு சென்று கொண்டிருந்த

இந்த வாகனத்தை பார்த்ததும் நடுத்தர வர்க்கத்தின்  வாழ்வு  முறைக்கு

இதைவிட உதாரணத்தை பதியமுடியாது என்று தோன்றியது.

நீங்களும் பாருங்களேன்.

L’image contient peut-être : voiture et plein air
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 85
 
சிங்களத்தின் நிகழ்ச்சி நிரல்
 
விசுவமடுவில் இராணுவ அதிகாரிக்கான பிரியாவிடை சார்ந்து
ஆளமாக சிந்திக்கணும் தமிழ் மக்கள்.
 
இது ஒரு இராணுவ அதிகாரியின் குண செயல் காரியங்கள் சார்ந்ததல்ல.
 
முள்ளிவாய்க்காலுக்கு பின்னர்
தமிழ் மக்களை யுத்தத்தால் வெல்லலாம்
ஆனால் அவர்களின் மனங்களை வெல்லமுடியுமா என்று
அன்று எழுந்த கேள்விக்கான விடையிது.
 
இதன் தொடர்ச்சியாக அடுத்த தேர்தலில் சிங்களவர்கள்
அந்தப்பகுதியில் தேர்தலில் நின்று வெல்லமுடியும்??
 
இனியாவது தமிழ் பிரதிநிதிகள்
தமது சுயநல மற்றும் ஊழல் நிலைகளிலிருந்து விலகி
தமிழ் மக்களின் நலன் சார்ந்து தூர நோக்குடன் சிந்தித்து செயலாற்றணும்.
 
அல்லாதுவிடில் அடுத்த முறை
அம்மக்களின் வாக்குகள் தேசியக்கட்சிகளுக்கே செல்லும்.
பின்னர் வாயிலும் வயிற்றிலும் அடித்து அழுதாலும்.....????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 86
 
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு இல்லை.
சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம்
 
விடுதலைப்புலிகள் குற்றங்களை தடுப்பவர்களேயன்றி
குற்றங்களை செய்பவர்களோ
அல்லது குற்றங்களுக்கு துணை போறவர்களோ கிடையாது என்பது
தமிழர்களுக்கு நன்கு தெரிந்த விடயம் தான்.
 
ஆனால் இந்த தீர்ப்புக்கு உறுதுணையாக இருந்த சுவிஸ் வாழ் தமிழர்களைநாம் கனம் பண்ணணும்.
 
எத்தனையோ கோடி பணம்
மக்களிடம் நம்பிக்கை மற்றும் வாக்குறுதி அடிப்படையில்
சேர்க்கப்பட்ட நாடுகளில் சுவிஸ் முதலிடம் பெறுகிறது.
இங்கே கணவன் மனைவிக்கு கூடதெரியாமல் பணங்கள் கைமாறப்பட்டன.
2009க்கு பின் முற்றுமுழுதாக நிலைமைகள் தடுமாற்றமடைந்த வேளைகளில்
உண்மையான நிதிநிலமை ஒவ்வொருவரையும் தாக்கிய வேளையில்
அம்மக்கள் அனுபவித்த அனுபவித்துக்கொண்டிருக்கின்ற வேதனைகள் சுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
 
ஆனாலும் இந்த தீர்ப்புக்கு
புலிகளுக்காக உழைத்த நபர்களை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கக்கூடாது
காட்டிக்கொடுக்கக்கூடாது என்ற
அந்த மக்களின் பெரும் நெஞ்சார்ந்த தியாகமான முடிவே காரணம்.
ஒரு சிலரைத்தவிர அனைத்துமக்களதும் ஒத்துழைப்பு கிடைக்காது இருந்திருந்தால்
தீர்ப்பு பாரதூரமாக இருந்திருக்கும். அது புலிகளுக்கு மட்டுமன்றி ஈழத்தமிழினத்துக்கே உலை வைத்திருக்கும்.
 
நன்றி சுவிஸ் வாழ் தமிழீழச்சொந்தங்களே...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 87
 
அகதிகள் தினம்
 
இன்று அகதிகள் தினம் என்கிறார்கள். எவ்வளவு கேவலம் இது.
 
அகதிகள் ஒரு போதும் உருவாகுவதில்லை
உருவாக்கப்படுகிறார்கள்.
ஆனால் அகதிகளை உருவாக்கியவர்களே
அதை ஒரு நாளாக அறிவித்து ஞாபகம் கொள்கிறார்கள்.
 
நானும் ஒரு அகதி தான்.
அகதியாக உருவாக்கப்பட்டவன்.
என்னை அகதியாக்கிவனை நான் ஒரு போதும் மறந்ததில்லை.
மன்னிப்பதில்லை.
என்ன காரணத்துக்காக அவர்கள் என்னை அகதியாக்கினார்களோ
அதை மேலும் மேலும் என்னுள் வலுவாக்குவேன்.
வளர்ப்பேன்.
அதை என் பேரனுக்கும் பூட்டனுக்கும் ஊட்டியே சாவேன்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 88
 
உரு படம்
 
போன வாரம் உரு படம் பார்க்கப்போயிருந்தேன்.
 
தாயகத்திலுள்ள ஈழத்து சினிமாவின் வில்பன்னர்களாலும்
அபிமானிகளாலும் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை
அறிந்து சென்றதைவிட உணரமுடிந்தது.
 
தாயக கருவை
தாயகத்திலிருந்தபடி
உருவாக்குவதன்பது கடினமானது அல்லது
முடியாது என்ற எனது கணிப்பை உருமாற்றிய படமிது
 
குறும்படம் என்பதை தகர்த்து
பெரும் விருட்சமாக
அது எம்மை ஆட்கொள்கிறது.
இயலாமையால் வலிக்க வைக்கிறது
அழ வைக்கிறது
 
எதை யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை.
அந்தளவுக்கு எல்லோரும் பிரகாசிக்கின்றனர்.
 
ஆனால் முடிவில் எனக்கு உடன்பாடில்லை.
மௌனித்ததன் பின் இனி தமிழ்மக்கள் தடியை எடுப்பார்கள் என்பதாக
கற்பனை செய்யக்கூட முடியவில்லை.
 
ஆனாலும் ஒரு பொறிதான் எல்லாவற்றிற்கும் முன்னகர்வாக இருந்திருக்கிறது
 
வாழ்த்துக்களும் நன்றிகளும்.
 
Gnanadas Kasinathar
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 89
 
புலிக்கொலை
 
ஒரு புலியை பல பேர் சேர்ந்து அடித்து துன்புறுத்தி கொன்றிருக்கிறார்கள்.
அதற்கு முன்னர் அப்புலி பல மக்களை காயப்படுத்தியதாக கொல்லமுயன்றதாக சொல்கிறார்கள்.
அப்படியானால் கொல்லப்படவேண்டியது தான்.
 
ஆனால் கொல்லப்பட்ட முறை தான் தவறு.
செல்பி எடுக்க துணிவோ வீரமோ இருந்தால் தன்னந்தனியாக தாக்கி கொன்றிருக்கவேண்டும்.
அதைத்தான் தமிழர்கள் வீரம் என்பர்.
 
பலபேர் அதிலும் கோரமான ஆயுதங்களுடன் தன்னந்தனியே நின்ற புலியைக்கொன்றுவிட்டு
தை வீரம் என்பது கேலிக்கு மட்டுமல்ல காற்றுப்புகா இடத்திலெல்லாம் புகுந்து வீரம் புரிந்த தமிழரை இகழ்வதாகும்.
 
 
என்னவோ தெரியவில்லை நேற்றிரவு நித்திரை வரவில்லை.
இந்த புலி இழப்பும் வலிக்கிறது. இனி மேலாவது புலிகள் மீது எம் போன்றவர்களின் அக்கறையையும் கவனத்தில் எடுங்கள் செல்பிக்காரர்களே...
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.