Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 51
 
நாம் தமிழர்க்கு 4வது இடம்??
 
இங்கே வெற்றி தோல்வி
எத்தனையாவது இடம்?
என்பவற்றைவிட
தேர்தலின் போது அவர்கள் காட்டிய
நேர்மை
ஒழுக்கம்
பொதுமக்களுக்கு இடைஞ்சல் தராமை
தாமாகவே ஒன்றிணைந்தது
தத்தமது செலவில் ஒன்று கூடியது
மற்றவர்களுக்கு முன்னுதாரணமான நடத்தைகள் தான் பேசப்படுகிறது
போற்றப்படுகிறது
இது இனி
நாம் தமிழரை மேலும் மேலும் தானாகவே வளர்க்கும்

 

 

Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 52
 
சுமந்திரன் - கஜேந்திரகுமார் நேருக்கு நேர்
 
 
நேற்றைய இந்த நேருக்கு நேர் பேட்டியை பலரும் இருவருக்கு இடையிலான போட்டியாக பார்க்கின்றனர். அல்லது இருவருக்கும் இடையிலான சட்ட மற்றும் அறிவுசார்ந்த பலப்பரீட்சையாக பேசி எழுதி மகிழ்கின்றனர்.
 
பொன்னம்பலத்தாரின் பேரனா? அல்லது அரச சட்டத்தரணியா? என்பது எமக்கெதற்கு???
 
உண்மையில் இந்த பேட்டி தமிழர்களுக்கு ஏதாவது நன்மை தருமா? அல்லது இப்பேட்டியினூடாக தமிழினம் எதையாவது கிரகித்து அடுத்த அடுத்த கட்டங்களுக்கு நகருமா என்பது தான் ஆரோக்கியமான தேடுதலாக இருக்கும் இருக்கணும்.
 
--------------------------------------------------------------------------------------
 
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மிகத்தெளிவாக குறிப்பிடுகிறார்
 
சுயநிர்ணயம் என்ற பேச்சே இல்லை
 
சமஸ்டி ஆட்சி இல்லை
 
வடகிழக்கு இணைப்பு இல்லை
 
பிரிக்கப்படமுடியாத தேசம் என்பது மட்டும் மிக மிக உரத்து
 
இறுக்கமாக சொல்லப்பட்டு சிங்கள மக்களின் சந்தேகங்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டிருக்கு
 
எதற்காக தீர்வு?
 
தமிழரது கோரிக்கைகள்
 
அவர்களது தியாகங்கள்
 
மறைக்கப்பட்டு
 
அதற்காக தீர்வை தருவதைவிடுத்து
 
மீண்டும் மீண்டும்
 
சிங்கள மக்களின் சந்தேகங்களுக்கு உறுதிமொழி வழங்குவதற்கு எதற்கு தீர்வு??
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 53
 
ரஜனியும் நானும்...
(ரஜனியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசப்படுவதால்)
 
சிறு வயதிலிருந்து என்னை தெரிந்தவர்களுக்கு நன்கு தெரிந்த ஒருவிடயம் நான் ரஜனியின் பரம ரசிகன் என்பது.
 
ஒரு காலத்தில் அவரைப்போல் பேசுவது
அவரைப்போல் நடப்பது
அவரைப்போல் தலையை கோதிவிடுவது
அவரைப்போல் முறைப்பது
ரஜனியின் படத்தை முதல் காட்சியே பார்ப்பது
அதேபோல் கமலின் படத்தை அவரது ரசிகர்களை நக்கலடிப்பதற்பதற்காகவே முதல்க்காட்சியே பார்ப்பது என
நானும் நண்பர்களும் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
 
இந்த ரசிப்பு பிரான்சுக்கு வந்த பின்னரும் இருந்தது
 
ஒருமுறை
ஒவ்வொரு வருடப்பிறப்புக்கு முன்பே தலைவர் படம் போட்ட கலண்டர் வீட்டில் தொங்கவிடப்பட்டிருக்கும்
வருடப்பிறப்பு அன்று லா சப்பல் கடையிலிருந்து ரஜனியின் படம் போட்ட கலண்டர் ஒன்றை எடுத்து வந்திருந்தேன்.
அதை எடுத்த மகன் (3 வயதிருக்கும்)
ரஜனியின் படம் போட்ட கலண்டரை
தலைவரது படம் முற்றாக மறைந்து போகுமாறு தலைவர் படத்துக்கு மேல் கொழுவினான்.
 
அப்பொழுது தான் உறைத்தது தவறானவர்களை
பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்கின்றேன் என்று.
தலைவர் பற்றியும் ரஜினி பற்றியும் மகனுக்கு சிறு விளக்கம் கொடுத்துவிட்டு
ரஜினியின் கலண்டரை அகற்றிவிட்டேன்.
 
அன்றிலிருந்து நான் எவருடைய ரசிகனுமில்லை.
எந்த நடிகர் நடிகைகளின் படங்களையும் (Photo) வீட்டுக்கு கொண்டுவருவதில்லை.
தலைவர் படம் மட்டுமே வீட்டில் ஒவ்வொரு அறையிலும் உண்டு.
 
இன்றும் மக்கள் ரஜனி உட்பட எல்லோரது படங்களையும் பார்க்கிறார்கள்
தலைவரை தேடுகிறார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 54
 
 
புலம் பெயர்ந்த
தாயக விடுதலைக்காக புலத்தில் உழைத்த
எம் போன்றோரின் தாயக வருகை
 
 
2009க்கு பின்னர் ஏன் தாயகத்துக்கு வருவதில்லை என
அநேகமான உறவுகள் கேட்பதுண்டு (இங்கும் தாயகத்திலிருந்தும்)
 
எனது பதில்
எம்மவர்களை நினைத்துத்தான் வருவதில்லை என்பதாக இருக்கும்.
 
இதோ உங்களுக்கு ஒரு சாட்சி.
 
 
 
நாங்க எல்லா பின்புலங்களுடனும் தான் இறங்கியிருக்கிறம்
 
பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் அமுலில் தான் இருக்கு
 
செஞ்சு காட்டுறம்
 
-கூட்டமைப்பு வேட்பாளர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 55
 
உள்ளுராட்சித்தேர்தல் களம்
 
தாயகத்தில் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாகவும் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள்
அவர்களின் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வாக்குறுதிகள்
ஆரவாரங்கள்
அடிபிடிகள்
காலை வாருதல்
முகநூல் உட்பட விளம்பரங்களை பார்க்கின்றபோது
எல்லாவற்றையும் சரியாகக்கணித்த தலைவர்
தமிழர்களின் போராட்டம் இதுக்குத்தான் என்பதை மட்டும் கணிக்கத்தவறிவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது...☹️☹️☹️
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 56
 
 
தைப்பொங்கல்
 
அநேகமான இடங்களில் தைப்பொங்கல் தமிழர் திருநாள்
அது இந்துக்களின் விழா அன்று என்பது போன்ற விவாதங்களும் கண்டனங்களும் போய்க்கொண்டிருக்கின்றன.
 
நான் அறிந்தவரை
நான் படித்தவரை
அது இந்துக்களின் திருவிழா தான்.
 
அதை அவ்வாறே ஏற்றுக்கொள்வதில் அல்லது
இதனடிப்படையில் தொழுவதில் என்ன சிக்கல் உள்ளது என புரியவில்லை.
 
தமிழர்களில் பல மதங்களுமுண்டு.
அவரவர் தத்தமது விழாக்களை பண்டிகைகளை தொழுதல்களை
தத்தம் முறைப்படி செய்து வருகிறார்கள்.
எவரும் எவரது மதங்களையும் மாற்றும்படி அல்லது மருகும்படி கோருவதில்லை.
 
உதாரணத்துக்கு நத்தார் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.
அதேபோல் வெசாக் தினமும் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.
 
ஆனால் பொங்கல் எப்படி இவ்வாறு பந்தாடப்படுகிறது என புரியவில்லை.
அது தமிழரின் திருநாள் என்றால்
அது பற்றி பெரியவர்களுடன்
அதிலும் இந்துப்பெரியவர்களுடன் மாநாடுகளை நடாத்தி முடிவுகளை எடுப்பதே சரியானது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 56
 
 
தைப்பொங்கல்
 
அநேகமான இடங்களில் தைப்பொங்கல் தமிழர் திருநாள்
அது இந்துக்களின் விழா அன்று என்பது போன்ற விவாதங்களும் கண்டனங்களும் போய்க்கொண்டிருக்கின்றன.
 
நான் அறிந்தவரை
நான் படித்தவரை
அது இந்துக்களின் திருவிழா தான்.
 
அதை அவ்வாறே ஏற்றுக்கொள்வதில் அல்லது
இதனடிப்படையில் தொழுவதில் என்ன சிக்கல் உள்ளது என புரியவில்லை.
 
தமிழர்களில் பல மதங்களுமுண்டு.
அவரவர் தத்தமது விழாக்களை பண்டிகைகளை தொழுதல்களை
தத்தம் முறைப்படி செய்து வருகிறார்கள்.
எவரும் எவரது மதங்களையும் மாற்றும்படி அல்லது மருகும்படி கோருவதில்லை.
 
உதாரணத்துக்கு நத்தார் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.
அதேபோல் வெசாக் தினமும் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.
 
ஆனால் பொங்கல் எப்படி இவ்வாறு பந்தாடப்படுகிறது என புரியவில்லை.
அது தமிழரின் திருநாள் என்றால்
அது பற்றி பெரியவர்களுடன்
அதிலும் இந்துப்பெரியவர்களுடன் மாநாடுகளை நடாத்தி முடிவுகளை எடுப்பதே சரியானது.

உந்த பிரச்சனையை கிளப்பி விட்டது சைவத்திலிருந்து மதம் மாறிய அல்லேலூயாகாரர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 57
 
நெடுக சீரியசாக இருக்கப்படாது காண்.
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மனுசனையா நீங்கள், இவ்வளவு வேலைப்பளுவுக்கிடையிலும் எங்கிருந்து இறக்குகின்றிர்கள் இவைகளை....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 58
 
பெற்றவர்கள் எம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்கள்
 
வளர்ந்து திருமணமாகி வாழும் அநேகமான பிள்ளைகளுக்கு
தம்மிடம் பெற்றோர் எதை எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிவதில்லை.
அவர்கள் எதனால் நிம்மதியாக சந்தோசமாக இருப்பார்கள் என்பதும் புரிவதில்லை.
 
தாம் சொத்து பணம் சேர்த்து
பெற்றோரையும் அதன் மூலம் கவனித்துக்கொண்டால்
அவர்கள் சந்தோசமடைவார்கள் என நினைக்கிறார்கள்.
 
உண்மையில் பெற்றோர்களது சந்தோசம் நிம்மதி என்பது
அவர்களது பிள்ளைகளின் அமைதியான
நிம்மதியான
சந்தோசமான வாழ்க்கையை பார்க்கும் போது மட்டுமே உண்டு.
 
அதை தொலைத்துவிட்டு எதை செய்தும் பலனில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

என்ன மனுசனையா நீங்கள், இவ்வளவு வேலைப்பளுவுக்கிடையிலும் எங்கிருந்து இறக்குகின்றிர்கள் இவைகளை....!  tw_blush:

ஏதாவது  கண்ணில்  பட்டால்

எனது  உறவுகளுக்கு பகிரத்தான்  அண்ணா..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 59
 
எமது உடம்பு
 
எம்மில் அநேகர்
அழகாக முகமிருத்தல்
மெலிதான உடம்பிருத்தல்
வெள்ளையாக இருத்தல்
போன்றவைகளே தமக்கிருக்கும் பாக்கியம் என கருதுகிறார்கள்
 
உண்மையில்
இலகுவான சுவாசம்
சீரான ரத்த ஓட்டம்
ஒழுங்காக கழிவு வெறியேறுதல்
என்பவை கிடைக்கப்பெற்றவர்களே பாக்கியசாலிகள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 60
 
இந்திய உயர் விருதுகள்
 
இசையானிக்கு உயர் விருது கிடைத்திருக்கிறது.
பெருமை கொள்வதைவிட வலி தான் அதிகமாகிறது.
 
தத்தமது கட்சிக்காரன்
தமக்கெதிராக செயற்படாதவன்
இன்னார் ஆட்சிக்கு வந்தால்
இன்னார் இன்னாருக்கு விருது...
 
இதெப்படி திறமைக்கு
மக்கள் விருப்பத்துக்கு கிடைத்த தகுதியாகும்???
 
அவருக்கு இசையானி பெருமையே போதும்
இசையானி
மோடிக்கு நன்றி சொல்வது இசையானியையும் விருதையும் கேலி செய்வதாகும்.
 
இந்திய வல்லரசுக்கனவுக்கு முன்னர்
இது போன்ற அரசியல் கேலிக்கூத்துக்களிலிருந்து வெளியில் வரணும்
 
அது இந்த யென்மத்தில் நடக்காது
வல்லரசுக்கனவும் தான்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 61
 
தாயகத்தின் இன்றைய அரசியல்வாதிகளின் பாதை
 
குடை பிடித்தல்
காலில் விழுதல்
பாதுகாப்பு கெடுபிடி செய்தல்
அதையும் தாண்டி
வாகனங்களில் பொய் சொல்லி மக்களை அழைத்து வந்து கூட்டம் முடிய நடுவீதியில் விடுதல்..
 
எங்கே போகின்றோம்???
நாம் கனவு கண்ட தேசம் என்ன???
எதை நோக்கிப்போகின்றோம்?
மக்களை எந்தவழிக்கு பழக்குகின்றோம்??
தமிழக அரசியல்???
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 62
 
உள்ளுராட்சி தேர்தல் - தாயகம்
 
தாயக தேர்தல் சார்ந்து தெரிவுகளை செய்வதற்கு
அந்த மக்களுக்கே உரிமையுண்டு.
அது அவர்களின் கைகளில்.
 
தாயக விடுதலை சார்ந்து உழைத்தவன்
அந்த உணர்வுடன் வாழ்பவன் என்ற ரீதியில்
தனியே கூட்டமைப்பை மட்டும் தொடர்ந்து பலப்படுத்துவது
சிங்களத்துக்கு இன்னும் சில காலத்துக்கு தமிழரை ஏமாற்றுவதற்கு
இடமளித்தாகிவிடும் என்ற பயமுண்டு.
 
எனவே இன்னுமொன்றை பலப்படுத்தி
சிங்களத்துக்கு ஒரு செய்தியை
தாயக மக்கள் சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்குண்டு
 
இதுவரை நடந்த தேர்தல்களில்
தாயக மக்கள் சரியாகவே காய் நகர்த்தியுள்ளனர்.
இதையும் பார்க்கலாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 63

உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளும் எம்மவரும்...

கொஞ்ச இளசுகள் வென்றிருக்கு. கிளம்பிட்டனம் சில அதி அக்கறையாளர்கள்.
என்னைவிட கூட்டமைப்பு மீது அக்கறை கொண்டவர் எவருமில்லை.

ஆனால் தவறுகளை திருத்தணும். பார்க்கலாம் எனும் நிலையில் தமிழினம் இருக்க காலம் இடம் தராது.

புலிக்களைவு செய்தமை
இளைஞர்களை உள்வாங்க மறுத்தமை
ஒரு சிலரின் ஐனநாயகமற்ற தனி முடிவுகளுக்குள் தமிழினத்தின் தலைவிதியை ஒப்படைத்தமை

தாயக மக்களின் பயத்தையும் தீர்ப்பையும் 
புரிந்து கொண்டு கூட்டமைப்பு தனது தவறுகளை திருத்தி
அடுத்த தலைமுறையின் வரவை உள்வாங்கி
செயற்படணும். அதுவே எம் இனத்துக்கு இன்று தேவை. அதையே தேர்தல் முடிவுகள் சொல்கின்றன.
தாயக மக்கள் எப்பொழுதும் தெளிவாகவே வாக்களித்துள்ளனர். இம்முறையும் அப்படியே.

அப்புறம் மகிந்த சிங்களப்பகுதிகளில் வந்தது
எப்ப அவர் வராமலிருந்தார்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

 

ஆனால் தவறுகளை திருத்தணும். பார்க்கலாம் எனும் நிலையில் தமிழினம் இருக்க காலம்

ஈ பி டி பி உடன் பேச்சுவார்த்தை நடக்குதாமே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மக்களது எண்ணங்களை  புரிந்து  கொள்ளாமல்

எதிரிக்கு  எதிரி  நண்பன்  என்ற  ரீதியில்

பேயுடனும்   கூட்டுச்சேரும்  தவறான  பாதை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 64
 
யாழ் மாநகரசபைக்கு
ஈபிடிபியுடன் கூட்டமைப்பு சமரசத்துக்கு வந்திருக்கிறது.
தமிழரசுக்கட்சியை பற்றி தெரிந்தவர்களுக்கு
இது ஆச்சரியமான விடயமில்லை.
ஆனால் இனி இந்தக்கூட்டுக்கு
சாணக்கியர்கள் சொல்லப்போகும்
அரசியல் பதில்களையும்
கடந்து போகணுமே என்பது தமிழினத்தின் விதி..
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 65
 
கமல் - ரஐனி = அரசியல் பிரவேசம்
 
 
கமலின் அவசர அரசியல் பிரவேசத்தை பார்த்தவர்களுக்கு
அவரது அவசர பிரவேசம் உறைத்ததோ இல்லையோ
இது ரஐனியின் வருகையை தடுக்கும் நடவடிக்கை என்பது மட்டும் புரிந்திருக்கும்.
 
இதைப்புரிந்து கொள்ள பெரிதாக ஒன்றும் தேவையில்லை
அமெரிக்க ரசிய அரசியலை புரிந்தாலே போதும்.
 
எங்காவது அமெரிக்கா
அவசரமாக முன்னேறுகிறது காலடி வைக்கிறது என்றால்
அது இன்னொருவரை தடுப்பதற்காகவே இருக்கும்.
அதே போல் ரசியாவும்.
 
இனி ரஐனியின் அரசியல் பிரவேசம்?????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி விசுகு இப்படி ........!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 66
 
எல்லாவற்றிற்கும் ஒருவிலை இருக்கு???
 
 
கனடிய பிரதமரின் பெருந்தன்மை கண்டு
இந்தக்கிழமை ஒரே அவரது புகழ்பாடுதல் தான் நடக்கிறது.
ஆனால் போரை செய்கின்ற அமெரிக்காவின் வாலில் தொங்கியபடி தான் கனடா இன்றும் உள்ளது.
போரை நிறுத்தும் அளவுக்கு கனடா வலுவான வல்லரசு தான்.
ஆனாலும் பிரதமர் கண்ணீர்வடித்தபடி
இந்தப்போரில் என் கை சுத்தம் என்பது போல் கை கழுவுகிறார் என்று தான் தோன்றுகிறது.
 
கனடாவில் 25 ஆயிரம் பேரை குடியேற்றுவதென்பது
கனடாவுக்கே தேவையானது. அது வேற விடயம்.
 
முள்ளிவாய்க்கால் நடந்து கொண்டிருந்தபோது
லட்சக்கணக்கான தமிழர்கள் கனடாவின் வீதியெங்கும் திரண்டு அழுத போது வராத பாசம்
இன்றும் கதறக்கதற ஒரு சில ஈழத்தமிழர்களை
அவர்களது விருப்பத்துக்கு மாறாக
சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின்
ஆபத்தான பிரதேசம் என்ற கோரிக்கைகளையும் மீறி கனடா நாடு கடத்தியே வருகிறது.
 
இவற்றை பார்க்கும் போது
கனடிய பிரதமரின் எண்ணைய் மற்றும் பணபலம் கொண்ட அரபிய மக்கள் மீதான
பாசஅழுகை மற்றும் மீட்பு நடவடிக்கை என்பது
எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு என்பதையே மீண்டும் மீண்டும் எடுத்து இயம்புகிறது..
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14.2.2018 at 1:23 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 64
 
யாழ் மாநகரசபைக்கு
ஈபிடிபியுடன் கூட்டமைப்பு சமரசத்துக்கு வந்திருக்கிறது.
தமிழரசுக்கட்சியை பற்றி தெரிந்தவர்களுக்கு
இது ஆச்சரியமான விடயமில்லை.
ஆனால் இனி இந்தக்கூட்டுக்கு
சாணக்கியர்கள் சொல்லப்போகும்
அரசியல் பதில்களையும்
கடந்து போகணுமே என்பது தமிழினத்தின் விதி..
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், புன்னகைப்பவர்கள், பலர் அமர்ந்துள்ளனர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், திருமணம் மற்றும் உட்புறம்
 
எல்லாரும் சந்தோசமாய் இருக்கினம். எல்லாம் சுபமே முடியும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 67
 
  பூனைக்கு விளையாட்டாம் - எலிக்கு.....???
 
 
சிரியாவுக்கு விமானம் போனதாம். அதில் தமிழ் விமானியாம்.
அவர் வீர புருசராம் என போய்க்கொண்டிருக்கிறது
எம்மவர் பொழுது போக்கு.
 
நாம் அல்லல் பட்ட
போரால் பாதிக்கப்பட்ட
கொடுக்கமுடியாத விலையையும் தியாகத்தையும்
செய்த இனமா? சந்தேகமாக இருக்கிறது.
 
அப்படி இருந்திருந்தால் அல்லல் படும் ஒரு மக்கள் கூட்டத்தின் இல்லல்களில்
இவ்வாறு
கேலிகளும் கிண்டல்களும் நகைச்சுவை விருந்துகளையும் வைக்கமுடியுமா?
 
நாம் உதவக்கூட வேண்டாம்
இவ்வாறு நகைப்புக்களையாவது தவிர்க்கலாமே????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 68

இலங்கை இசுலாமியத்தமிழர்கள் மீதான தாக்குதல்கள் பற்றி...

இலங்கை இசுலாமீய தமிழர்கள் 
தம்மை 
தமது ரத்தங்களை 
தமது உறவை இனம் கண்டிருந்தால்...
இன்று தமிழருக்கென்று ஒரு நாடிருந்திருக்கும்.

இப்பொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை
சிங்களம் சொல்கிறது
யார் உனக்கு தேவையென்று
யார் உனக்கு பகைவன் என்று.

இதுவே உனக்கும்  எனக்கும் கடைசி சந்தர்ப்பம்1f625.png?

வா சகோ
வந்து சேர்
நாம் ஒன்றானால்.....???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.