Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 36
 
குர்திஷ்தான் சர்வசன வாக்கெடுப்பும் தமிழரும்..
 
குர்திஷ்தான் மக்களிடமிருந்து கவனிக்க எடுத்துக்கொள்ளவேண்டிய விடயம்
அவர்களது பொறுமையும் தாயகம் மீதான விடாத பிடிப்பும்.
 
சில வருடங்களுக்கு முன்னர்
அப்படியொரு தேசமே இனி இல்லை என்ற நிலையிலிருந்து
இன்று சர்வசன வாக்கெடுப்புவரை....
 
எமக்கும் காலம் மாறும்.
சர்வதேச சூழல் மாறும்
காத்திருப்போம்.
தியாகங்கள் ஒரு போதும் வீணாவதில்லை.
 
அதுவரை
எமது அரசியல் தலைவர்கள்
எமது மக்களின் தாகத்தை புரிந்து நடக்கணும்.
Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 36
 
குர்திஷ்தான் சர்வசன வாக்கெடுப்பும் தமிழரும்..
 
குர்திஷ்தான் மக்களிடமிருந்து கவனிக்க எடுத்துக்கொள்ளவேண்டிய விடயம்
அவர்களது பொறுமையும் தாயகம் மீதான விடாத பிடிப்பும்.
 
சில வருடங்களுக்கு முன்னர்
அப்படியொரு தேசமே இனி இல்லை என்ற நிலையிலிருந்து
இன்று சர்வசன வாக்கெடுப்புவரை....
 
எமக்கும் காலம் மாறும்.
சர்வதேச சூழல் மாறும்
காத்திருப்போம்.
தியாகங்கள் ஒரு போதும் வீணாவதில்லை.
 
அதுவரை
எமது அரசியல் தலைவர்கள்
எமது மக்களின் தாகத்தை புரிந்து நடக்கணும்.

அது வரைக்கும் நாட்டில் தமிழ் மக்கள் இருக்க வேணுமே.tw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 36
 
குர்திஷ்தான் சர்வசன வாக்கெடுப்பும் தமிழரும்..
 
அதுவரை
எமது அரசியல் தலைவர்கள்
எமது மக்களின் தாகத்தை புரிந்து நடக்கணும்.

விசுகு.... இதனை எம் உளுத்துப் போன... அரசியல் வாதியிடம்  எதிர் பார்ப்பது,  "கல்லில்.... நார், உரிப்பதற்கு  சமன்." tw_sleepy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 36
 
குர்திஷ்தான் சர்வசன வாக்கெடுப்பும் தமிழரும்..
 
குர்திஷ்தான் மக்களிடமிருந்து கவனிக்க எடுத்துக்கொள்ளவேண்டிய விடயம்
அவர்களது பொறுமையும் தாயகம் மீதான விடாத பிடிப்பும்.
 
சில வருடங்களுக்கு முன்னர்
அப்படியொரு தேசமே இனி இல்லை என்ற நிலையிலிருந்து
இன்று சர்வசன வாக்கெடுப்புவரை....
 
எமக்கும் காலம் மாறும்.
சர்வதேச சூழல் மாறும்
காத்திருப்போம்.
தியாகங்கள் ஒரு போதும் வீணாவதில்லை.
 
அதுவரை
எமது அரசியல் தலைவர்கள்
எமது மக்களின் தாகத்தை புரிந்து நடக்கணும்.

சிங்களம் சம்பந்தரென்ற கைத்தடியின் உதவியோடு மிகவும் நேர்த்தியாகக் காய்நகர்த்துகிறது. இப்படியொரு நிலையை எதிர்பார்த்தே குடிறே;ற ங்களையும் படைத்துறை வளாகங்களையும் நிறுவிவருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, சுவைப்பிரியன் said:

அது வரைக்கும் நாட்டில் தமிழ் மக்கள் இருக்க வேணுமே.tw_anguished:

உண்மைதான்

ஆனால் தலைவர்கள் தூரநோக்கோடு பயணிக்கணும்  சிங்களத்தலைவர்கள் போலவாவது....

தமிழ்மக்கள் எப்பொழுதுமே  தெளிவாகவும்  காலம் வரும் போது தெளிவான தூர  நோக்குடனான  முடிவுகளையே  எடுக்கின்றனர்

எடுத்துள்ளனர்

ஆனால் தலைவர்கள்............??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

விசுகு.... இதனை எம் உளுத்துப் போன... அரசியல் வாதியிடம்  எதிர் பார்ப்பது,  "கல்லில்.... நார், உரிப்பதற்கு  சமன்." tw_sleepy:

அது தான்எனது  பயமே  சிறி

சுயநிர்ணய  உரிமை

சமஷ்டி 

என்றாலே  இன்றைய  தமிழ்த்தலைவர்களுக்கு  

சிங்களத்தலைவர்களைவிட  கசக்கிறது

முடிவு....??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nochchi said:

சிங்களம் சம்பந்தரென்ற கைத்தடியின் உதவியோடு மிகவும் நேர்த்தியாகக் காய்நகர்த்துகிறது. இப்படியொரு நிலையை எதிர்பார்த்தே குடிறே;ற ங்களையும் படைத்துறை வளாகங்களையும் நிறுவிவருகிறது. 

உடனடியாக விழுங்கிவிடுவார்கள் என  பயத்தை  மக்களுக்கு ஊட்டியபடி

கொஞ்சம் கொஞ்சமாக  விழுங்குவதற்கு

தெரிந்தபடி  தானும் உடந்தையாகிறது தமிழரது தலைமைத்துவம்...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 37
 
தமிழர் போராட்டமும் சிலரின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதலும்...
 
தமிழரது போராட்டம் சார்ந்து தமிழர்களுக்கு
அதன் தற்போதைய தலைமையாகிய கூட்டமைப்பின் மீது
கருத்து வேறுபாடுகளும் விமர்சனங்களும் கோபதாபங்களுமுண்டு.
 
ஆனால்
அதில் தம்மை பறைசாற்ற அல்லது
நானென்றால் கிழித்திருப்பன் என கொலர் தூக்கிவிட சிலர் புறப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் தமது முதுகை ஒருமுறை திரும்பிப்பார்ப்பது
அவர்களுக்கும் அவர்களை நம்பியிருக்கும் மக்களுக்கும் நன்மை தரும்.
 
மனோ கணேசன் அவர்கள்
தனது ராஐ மூளையை பாவித்து
தன் வீட்டில் என்ன சாகசங்கள் செய்திருக்கிறார் என்று சொன்னால் நல்லது.
ஆகக்குறைந்தது வருடாவருடம் மண்ணுக்குள் தாண்டு போகும் மக்களுக்காவது
ஒரு ஒதுக்குப்புறத்தை கேட்டுவாங்கிக்கொடுங்கள்.
 
அதைவிடுத்து நாங்கள் வெந்த தணலில் நீங்கள் குளிர் காயவேண்டாமே....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 37
 
தமிழர் போராட்டமும் சிலரின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதலும்...
 
தமிழரது போராட்டம் சார்ந்து தமிழர்களுக்கு
அதன் தற்போதைய தலைமையாகிய கூட்டமைப்பின் மீது
கருத்து வேறுபாடுகளும் விமர்சனங்களும் கோபதாபங்களுமுண்டு.
 
ஆனால்
அதில் தம்மை பறைசாற்ற அல்லது
நானென்றால் கிழித்திருப்பன் என கொலர் தூக்கிவிட சிலர் புறப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் தமது முதுகை ஒருமுறை திரும்பிப்பார்ப்பது
அவர்களுக்கும் அவர்களை நம்பியிருக்கும் மக்களுக்கும் நன்மை தரும்.
 
மனோ கணேசன் அவர்கள்
தனது ராஐ மூளையை பாவித்து
தன் வீட்டில் என்ன சாகசங்கள் செய்திருக்கிறார் என்று சொன்னால் நல்லது.
ஆகக்குறைந்தது வருடாவருடம் மண்ணுக்குள் தாண்டு போகும் மக்களுக்காவது
ஒரு ஒதுக்குப்புறத்தை கேட்டுவாங்கிக்கொடுங்கள்.
 
அதைவிடுத்து நாங்கள் வெந்த தணலில் நீங்கள் குளிர் காயவேண்டாமே....

மனோகணேசன்... இப்போது, எந்த அமைச்சுப் பதவியிலும், இல்லை என நினைக்கின்றேன் விசுகு.
அத்துடன்.... அவருக்கு, உள்ள உணர்வு தன்னும்.. 
ஒரு நாட்டின் பிரதமருக்கு சமமான (சம்பளத்திலும்) எதிர்க்  கடசித் தலைவராக உள்ள..
சம்பந்தனுக்கு, அவரின் அல்லக்கை சுமந்திருக்கும் இல்லையே... என்பதுதான்...  கவலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மனோகணேசன்... இப்போது, எந்த அமைச்சுப் பதவியிலும், இல்லை என நினைக்கின்றேன் விசுகு.
அத்துடன்.... அவருக்கு, உள்ள உணர்வு தன்னும்.. 
ஒரு நாட்டின் பிரதமருக்கு சமமான (சம்பளத்திலும்) எதிர்க்  கடசித் தலைவராக உள்ள..
சம்பந்தனுக்கு, அவரின் அல்லக்கை சுமந்திருக்கும் இல்லையே... என்பதுதான்...  கவலை.

உண்மை  தான்  சிறி

எனக்கும்  மிகவும் பிடித்த  அரசியல் தலைவர் மனோகணேசன் அவர்கள்

ஆனால்  அதை  சம்பந்தப்பட்ட  தனது சக  தமிழ்  அரசியல்வாதிகளிடம்  கூறி

தமிழர்களுக்கு  ஏதாவது  கிடைப்பதை  உறுதி செய்வதைவிடுத்து

தான் என்றால் என எமது புண்ணில் இவர் வேல் பாய்ச்சவதை  ஏற்கமுடியாது

ஏதோ  சிங்களம் வைத்துக்கொண்டு  தர மறக்கிறது

அல்லது  சர்வதேசம் பறித்து தந்துவிடும் என்பதெல்லாம் வெறும் புலுடா  தானே??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, விசுகு said:

உண்மை  தான்  சிறி

எனக்கும்  மிகவும் பிடித்த  அரசியல் தலைவர் மனோகணேசன் அவர்கள்

ஆனால்  அதை  சம்பந்தப்பட்ட  தனது சக  தமிழ்  அரசியல்வாதிகளிடம்  கூறி

தமிழர்களுக்கு  ஏதாவது  கிடைப்பதை  உறுதி செய்வதைவிடுத்து

தான் என்றால் என எமது புண்ணில் இவர் வேல் பாய்ச்சவதை  ஏற்கமுடியாது

ஏதோ  சிங்களம் வைத்துக்கொண்டு  தர மறக்கிறது

அல்லது  சர்வதேசம் பறித்து தந்துவிடும் என்பதெல்லாம் வெறும் புலுடா  தானே??

விசுகு... 
முன்பொருமுறை... மனோ கணேசன், முஸ்லீம்  மக்களுக்காக  பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த போது...
ஒரு முஸ்லீம், கட்சியினர்.... மனோ கணேசன், சுன்னத்து செய்து விட்டு இதனை பேச வேண்டும் என்று, கேலி பேசினார்கள். 
அதற்கு.... தமிழ் எதிர்க்  கட்சித் தலைவர்... சம்பந்து, சுமந்து உட்பட... மிச்ச தமிழ் கோஸ்டிகளெல்லாம், ஒரு வார்த்தை பேசவில்லை. 
அதன் பின்...  தனக்கென்ன வந்தது.. என்று அவர் சும்மா.... இருக்காமல், தன்னால்... முடிந்ததை செய்து கொண்டு இருக்கின்றார்.

அடுத்த தேர்தலிலும் கூட..... மனோ கணேசனுக்கு... வடக்கு, கிழக்கு மாகாணத்தை சேர்ந்த.....

கொழும்பு தமிழ் வாக்காளர்களின்,   வாக்குகள்.. அவருக்கு கிடைக்கும் என்பதில், சந்தேகமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 38

முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதென்பது........

நான் வரும்போது சிலர் கறுப்புக் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் சென்று உங்கள் பிரச்சினை தொடர்பாக பேசித் தீர்வு காண்போம் வாருங்கள் எனறேன்.

மறுத்தனர்.

இப்போதே தீர்வைக் கூறுங்கள் என்றனர்.


ஆர்ப்பாட்டக்கார்களுக்கு நான் ஒன்றைக் கூறுகின்றேன்.

நீங்கள் உயர்த்தவேண்டியது கறுப்புக் கொடிகளை அல்ல.

சமாதானத்திற்கான வெள்ளைக் கொடிகளையே.
சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 
யாழ்.இந்துக்கல்லூரியில்.

சமாதானத்துக்கான வெள்ளைக்கொடி ஏந்தி

உங்களிடம் வந்தவர்களை காணவில்லை என்று தேடித்தான் கறுப்புக்கொடி....

திரும்பவும் முதலில் இருந்தா.....???.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 39
 
தாயகத்தில் கடன் தொல்லைகளால் குடும்பமாக தற்கொலை
 
இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.
போருக்கு பின்னரான காலப்பகுதியில் வங்கிகளும் வெளிநாட்டு முகவர்களும் தனியாரும்
தமது வைப்பிலிலுள்ள பணத்தை
எப்படியாவது போரின் பின் செய்வதறியாது நிற்கும் மக்களின் பணத்தேவையை குறிவைத்து கொடுத்த போதே
அந்த மக்கள் இவர்களின் வலைக்குள் மாட்டிக்கொண்டார்கள்.
 
இன்று தாயகப்பகுதியில்
ஒவ்வொரு மக்களும் மில்லியன் கணக்கான பணத்தை பெற்று
கடனாளிகளாக ஆகி இருக்கிறார்கள்.
 
கொடுத்தவர்கள் தவணைமுடிய
அல்லது தமது பணத்தை இதற்கு மேல் இவர்களிடம் விடமுடியாது என்றநிலைக்கு வரும் போது?????
 
இவ்வாறான அநியாயச்சாவுகள் இனி அடிக்கடி செய்தியாகும் ......
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 40
 
கத்தலோன் (Catalogne) தன்னை தனிநாடாக விடுவித்துள்ளது.
மகிழ்ச்சியான செய்தி மட்டுமல்ல ஈழத்தமிழருக்கு.
 
விடுதலை என்பது ஒரு நீர் ஊற்று.
அதை எவரும் நிரந்தரமாக அடைத்துவிடமுடியாது.
 
ஈழத்தமிழரை நரித்தனமாக முதுகில் குத்தி அழிக்க முயன்று
அதுவும் தமிழரின் தியாகத்தின் முன் வீரத்தின் முன் தோற்றுவிட
தாங்கள் வகுத்த அத்தனை தர்மங்கள் சட்டங்கள் விதிகளையும் மீறி
தமக்குள் எதிரிகளானாலும் தனி நாடு கேட்டால் இது தான் கதியென
எமக்கு மட்டுமல்ல தமக்குள் உரிமை கேட்கும் மக்களுக்கும்
எமது அகோர அழிவைக்காட்டி
பயமுறுத்திச்சொல்லி நின்றவர்கள் இவர்கள் தான்.
 
ஆனாலும் அவர்களையும் மீறி
இன்று அந்த நீறுற்று உடைத்து கிளம்புகிறது.
வரவேற்போம் நம்பிக்கையோடு.
அடுத்தது நாமாக இருப்போம்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 41
 
இலங்கையும் சிங்கப்பூர் கனவும்
 
இப்பொழுதெல்லாம் எதெற்கெடுத்தாலும் சிங்கப்பூராக வரப்போகின்றோம்
எமது நகரங்களையும் சிங்கப்பூராக்குவோம் என்ற கோசத்தை பார்க்கமுடிகிறது.
 
50 களில் இதே சிங்கப்பூரின் தந்தை சொன்னது :
இலங்கை மாதிரி நான் சிங்கப்பூரை கொண்டு வரணும் என்று.
 
அந்தாள் எடுத்த ஒரு முடிவு இன்று உலகுக்கு முன்னுதாரணமாக.
 
இலங்கை அந்த முடிவை எடுக்காததால்
இன்று உலகுக்கு முன்னால் சீரளிவுக்கு முன்னுதாரணமாக...
 
இப்பவும் ஒன்றும் காலதாமதமில்லை... ஆனால் தலைவர்கள்......???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 42
 
சீமானுக்கு பிறந்ததின வாழ்த்து
 
சீமானுக்கான வாழ்த்தும் ஆதரவும் நன்றி மறக்கலாகாது என்பதற்காகத்தான்
 
எமது மக்களின் அழிவை
என்னைவிட அதிகம் பேசியவர்
அநேக மக்களிடம் கொண்டு சென்றவர் சீமான்
 
2009க்கு பின் திராவிட கட்சிகளால் இனி முடிந்தது ஈழமக்களது எழுச்சி
இனி நாம் வாலையும் தலையையும் காட்டி ஆட்சியை கொண்டு செல்வோம் என்ற நயவஞ்சகத்துக்கு
ஆணி அடித்தவர் சீமான்
 
தமிழர்கள் ஒன்று படாமல்
தமிழகம் தமிழர் கையில் வராமல்
இந்திய ஓநாய் எம்மை வாழவிடப்போவதில்லை
அதை தற்போது ஏற்படுத்தாவிட்டாலும்
ஒரு கணக்கெடுக்கப்படும் சக்தியாக உருவாகி இருக்கிறார்கள் நாம் தமிழர்கள்.
 
வாழ்க வளமுடன் சீமான்
நாம் தமிழர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 43

லக்‌ஷ்மி என்கிற குறும்படம்

ஊரில் என்றால் இதற்கு பெயர் இக்கரைக்கு அக்கரை பச்சை

இதையே ஆண் செய்திருந்தால் அதற்கு பெயர் சின்னவீடு

ஆனாலும் எல்லோரும் எழுதுவது போல அந்த பெண்ணின் நடிப்புக்காக பார்க்கலாம்..
டொட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 44
 
மீண்டும் சீமான் பற்றி அதிகம் பேசப்படுகிறது. எழுதுபவர்கள் யாரென்று பார்த்தால் சீமான் ஒன்றுமே இல்லை அவரை கணக்கெடுக்கவே தேவையில்லை என்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
 
ஒன்று மட்டும் எழுதலாம்
சீமானது பேச்சுக்களை வரிக்கு வரி உற்று நோக்கி
அவரது ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தம் பிடிப்பவர்கள்
 
மேடைகளில் எழுதிச்செல்லாமல் பேசியதுண்டா??
 
பேட்டிகளுக்கு அதுவும் அதி சாமானியர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துண்டா??
 
செய்து பாருங்கள்
சீமானையும் அவ்வாறே தாண்டிச்செல்லுங்கள்
 
அதுக்குத்தான் தலைவர் அதிகம் பேசுவதில்லை
பேட்டிகள் கொடுப்பதில்லை
வருடத்துக்கு ஒரு உரையுடன் நிறுத்திவிடுவார்
 
அதிலிருந்தாவது சிலவற்றை புரிந்து கொள்ள முயல்வோம்
 
சீமான் செய்வது கத்துவது தான்
அதுதான் அவரது கடமையும் தேவையும் கூட.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 45

புங்குடுதீவு தொடர்பான விபரங்கள் - 2017

Page0001.png

Page0002.png

Page0003.png

நன்றி : மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம்.

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 46
 
 
மனச்சாட்சி உள்ளோர் கவனத்துக்கு மட்டும்
புலம்பெயர் தேசங்களில் மாவீரர் நாள்
 
இந்த முறை என்னவோ தெரியவில்லை.
கொத்து ரொட்டிக்கடை அடிபாடு இல்லாமல் போய் பேச்சாளர்கள் பெருமளவில் விவாதிக்கப்படுகிறார்கள்
 
கொத்து ரொட்டிக்கு லைக் விழுவது லைக் குறையுது போல.
 
பேச்சாளர்களாக யாரை அழைப்பது என்பதை நிகழ்வை நடாத்துபவர்களே தீர்மானிக்கணும்.
அவை ஒரு அமைப்பாக இயங்குபவை.
எனவே தனி நபர்களின் முடிவுகளாக அவை இருக்கமாட்டா.
உண்மையிலேயே அவற்றை விமர்சிப்பது அல்லது மாற்றங்களை கொண்டு வருவது நோக்கமென்றால்
நாமும் அதன் செயற்குழுவில் அடுத்த வருடமாவது இருக்க முயற்ச்சிப்போம்.
 
புலத்தில் மாவீரர் நாளை செய்து முடிப்பதென்பது அவ்வளவு சுலபமானதல்ல.
அதற்காக பல நூற்றுக்கணக்கானவர்கள் செய்யும் பணிகளும் நாட்களும் தியாகங்களும் எண்ணில் அடங்கா.
உலகிலேயே மிக அசிங்கமான வேலை என்பது
எதுவும் செய்யாது இருந்து கொண்டு
ஏதாவது செய்பவரை விமர்சிப்பது
அல்லது தடக்கி விடுவது தான்.
 
நன்றி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 47
 
கூட்டமைப்பின் இன்றையநிலை
 
இன்று ஒவ்வொரு கட்சியாக கூட்டமைப்பிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றன.
மிக தவறான அதே நேரம் சிலரின் திட்டமிட்ட காய் நர்த்துதல்களுக்கு இவர்களே பலியாகும் செயல் இது.
 
கூட்டமைப்பை தாங்கள் கைப்பற்றவேண்டும் என்பதும்
தாங்கள் மட்டுமே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக வீட்டுச்சின்னத்துடன் தமது ஆட்சியை தொடரவேண்டும் என்பதும்
தமிழரசுக்கட்சியின் 2009க்கு பின்னரான திட்டமிடலின் தொடர்ச்சி தான் இன்றைய நிலமை.
 
அவர்களது சூழ்ச்சிக்கு இன்று
ஒவ்வொரு கட்சிகளாக வெளியேறி வலுவூட்டுகிறார்கள்.
 
உண்மையில் இவர்கள் தான் தமிழரசுக்கட்சியை
கூட்டமைப்பிலிருந்து தூக்கி எறிந்திருக்கணும்.
அதுவே தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதாகவும்
தமிழ் மக்களை சூழ்ச்சியிலிருந்து காப்பதாகவும் இருந்திருக்கும்
 
ஆனால் மாறாக இவர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி
தமிழ் மக்களை சில காலத்துக்கு தமிழரசுக்கட்சியிடம் அடிமையாக்குகிறார்கள்
வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய செயல் இது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 48
 
 
வை. கோ அண்ணாவின் கால மாற்றம்?
 
 
வை. கோ அவர்கள் திமுக வை விட்டு வெளியேற்றப்பட்டபோது சொன்னது
மகனை முதல்வராக்க என்னை வெளியேற்றுகிறார் கலைஞர் என்று.
 
இன்று அதே வை. கோ அவர்கள் கருணாநிதியின் மகனை தானே முதல்வராக்கியே தீருவேன் என்கிறார்.
 
பாவம் அவர் அரசியல் தெரியாது முழிக்கிறார்
அல்லது விழுகிறார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 48
 
 
வை. கோ அண்ணாவின் கால மாற்றம்?
 
 
வை. கோ அவர்கள் திமுக வை விட்டு வெளியேற்றப்பட்டபோது சொன்னது
மகனை முதல்வராக்க என்னை வெளியேற்றுகிறார் கலைஞர் என்று.
 
இன்று அதே வை. கோ அவர்கள் கருணாநிதியின் மகனை தானே முதல்வராக்கியே தீருவேன் என்கிறார்.
 
பாவம் அவர் அரசியல் தெரியாது முழிக்கிறார்
அல்லது விழுகிறார்

எனது கருத்தின்படி வைகோ ஒரு அரசியல் வியாபாரி என்றே நினைக்கின்றேன்.

இவர் மக்கள் நல அரசியல்வாதியாக இருந்திருப்பாராயின் கட்சித்தாவல்களுக்கு சந்தர்ப்பமேயிருந்திருக்காது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 49
 
விட்டுக்கொடுத்தல்
 
எதை யாருக்கு எதற்காக விட்டுக்கொடுப்பது என்பது மிக மிக முக்கியம்
 
பிழையானவர்களுக்கு விட்டுக்கொடுக்கத்தொடங்கினால்
உனது தலங்களும் அவர்களது சுடுகாடாகும்
 
இன்றைய தலைவர்களுக்கு பேசக்கூட தைரியம் இல்லை
 
இதனால் தான் தேசியத்தலைவர்
எதை யாருக்கு எதற்காக விட்டுக்கொடுப்பது என்பதில் மிக மிகத்தெளிவாகவும்
எம் பாதுகாப்பை நாமே வைத்திருக்கணும் என்பதில் மிக மிக உறுதியாகவும் இருந்தார்.
அதுவே இன்றும் உணரப்படுகிறது.
தீர்க்கதரிசி தான்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 50
 
ஆழிப்பேரலை எம் மக்களை அழித்த துயரநாள் இன்று.
 
அழிக்கப்பட்டது எமது மக்களின் உயிர் உடமைகள் மட்டுமல்ல
எமது பாதுகாப்பும் பலமும் தான்.
இதை இன்றுவரை உணராதவர்கள் பலருண்டு எம்முள்.
 
ஆழிப்பேரலை நடந்து 72 மணித்தியாலயத்துள்
அவ்வளவு துயரங்களையும் இழப்புக்களையும் அழிவுகளையும் தாண்டி
வல்லரசு நாடுகளே செய்து முடிக்கமுடியாத துப்பரவு சுகாதாரம்
மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தலை முடித்து
தலை நிமிர்ந்து நின்றது எமது பலமான அமைப்புக்களும் தலைமையும்.
 
அப்பொழுது தான்
முன்னைவிட அதிகமாக
அழிக்கப்படவேண்டியவர்கள் இவர்கள் என முடிவெடுத்தது சர்வதேசம்........☹️
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.