Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது +  பிடித்தது 

இப்பெயரில் தொடர்ந்து பதியலாம் என முனைகின்றேன்.

முடிந்தவரை ஊக்கம் தாருங்கள்

உங்கள்  கருத்துக்களையும் இடுங்கள்.

நன்றி

1- எதற்காக  ஒவ்வொரு நாளும் மாவீரர்களுக்கு  அஞ்சலிகளை  செலுத்துகிறீர்கள் என்றொரு கேள்வியுண்டு என் மேல்.

 

பாடசாலை செல்லும் போதும் சரி

வேறு அலுவல்களாக செல்லும் போதும்  சரி

  கோயிலுக்கு  முன்னால் செல்லும்  போது

செருப்பை களட்டிவிட்டு

ஒருமுறை  தலை குனிந்து மீண்டும் செருப்பை மாட்டி  செல்வதும்

சைக்கிளில் சென்றால் சீற்றிலிருந்து எழுந்து ஒருமுறை  தலை குனிந்து  தொடர்ந்து செல்வதும்

சிறு வயதிலிருந்தே ஒரு பழக்கம்  என்னிடம்.

அதுவே மாவீரர்கள்  சார்ந்தும்.

Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பகிருங்கள் படிக்கிறோம்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 2

யூலை 1983...

 

படித்துக்கொண்டிருந்த என்னை

தெருவில் ஓடத்துரத்தியநாள்

இலங்கையனாக இருந்த என்னை

தமிழனாக மாற்றியநாள்

இலங்கை என் தாய்நாடு என்பதை

வடக்கு கிழக்கு என்றநாள்

தமிழன் என்று அடையாளமிட்டு

கொல்லப்படவேண்டியவனாக்கியநாள்..

இசுலாமிய சகோதரர்களின் சுயரூபத்தை

நான் தரிசித்தநாள்

அகப்பட்டிருந்தால்

இன்று 34வது நினைவஞ்சலி நாள்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 3

நீதி தள்ளாடுதலும் - வீரவணக்கமும்

நீதிபதி ஒருவர் நீதிமன்றை தெருவில் அதுவும் போதையிலிருந்தோருக்கு நடாத்த முற்பட்டதும் அதனைத்தொடர்ந்து அவரது பாதுகாப்பாளர் தனது துப்பாக்கிக்கு பலியாகியதும் 
நீதி காலில் விழுந்ததும் இந்தவாரச்சம்பவங்கள்.

உண்மையில் பலி கொடுத்த நீதிபதி நீதியை காலில் போடாது பதவி விலகியிருக்கணும்.
ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கு என்பதன் அடிப்படையில் அவரைப்போன்றோரும் எமக்குத்தேவை என்ற கால ஓட்டத்துக்கேற்ப நாமும் அடக்கி வாசிப்பம். ஆனால் இனி வரும் காலங்களில் நீதிபதி தீர்ப்பை வளங்கும் போது நீங்கள் சுற்றவாளியா? 
கொலையாளியா? என்ற கேள்வி வருமே..??

இந்தக்கிழமை அதிகம் கடுப்பேத்திய நிகழ்வாக இருப்பது இந்த வீரவணக்கம்

நான் அடிக்கடி சொல்வது தான் முகங்கள் தெரியும் காலமிது.
இந்த வீரவணக்கத்தை செய்பவர்கள்
ஒன்றில் போராட்ட காலத்தில் மாவீரர்களிலிருந்து தள்ளியிருந்தோர் அல்லது மாவீரரை உதாசீனம் செய்தோர். இப்போ தங்களாலும் பட்டம் கொடுக்கமுடியும் என்று நிரூபிக்கின்றார்கள். தரத்தை பார்த்தால் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இருப்பது இந்த வீரவணக்கம்

நான் அடிக்கடி சொல்வது தான் முகங்கள் தெரியும் காலமிது.
இந்த வீரவணக்கத்தை செய்பவர்கள்
ஒன்றில் போராட்ட காலத்தில் மாவீரர்களிலிருந்து தள்ளியிருந்தோர் அல்லது மாவீரரை உதாசீனம் செய்தோர். இப்போ தங்களாலும் பட்டம் கொடுக்கமுடியும் என்று நிரூபிக்கின்றார்கள். தரத்தை பார்த்தால் புரியும்.

நீங்கள் கூறுவதில் உண்மைகள் உண்டு.....அவருக்கு வீரவணக்கம் செய்வதை விட அஞ்சலி செய்வது தான் அழகு....வீரவணக்கம் மாவீரர்களுக்கே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 4
 
நீதிபதி நெடுஞ்செழியன் தன்னைக்காத்து உயிர் துறந்ததாக தான் நம்பும் காவலாளியின் இரு பிள்ளைகளையும் தனது ஆயுட்காலம் வரை பொறுப்பெடுப்பதாக அறிவித்துள்ளார். என்ன தான் விமர்சனங்கள் இருந்தாலும் நல்லவற்றை எங்கும் பொறுக்குபவர்களுக்கு நல்லதொரு விடயமிது.
 
இதேபோல்
எம்மைக்காக்க உயிர் கொடுத்தவர்களின் குடும்பங்களை புலம் பெயர்ந்த நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பமாக பொறுப்பெடுத்திருந்தால்....?? இன்று அவர்கள் தத்தமது சொந்தக்காலில் நிற்கும் நிலையை அடைந்திருப்பர். இப்பொழுதும் காலம் கரைந்துவிடவில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 5
 
ஐரோப்பிய நீதி மன்றத்தீர்ப்பு
 
புலிகள் யார் என்பது எல்லாத்தமிழ் மக்களுக்கும் தெரியும். மற்றவர்களின் பரிந்துரைகள் ஏற்றல் கவுட்டல் என்பன அவரவர் சொந்த லாபநட்டம் கருதி மட்டுமே அமையும்.
ஆனாலும் சுயமாக நாம் செயற்பட இத்தீர்ப்பு எமக்கொரு சட்டப்பாதுகாப்புத்தரும்.
 
இப்போ கேள்வி என்னவெனில் இதை பயன்படுத்தி எமது இலக்கை அடைய நாம் அடைய நாம் தயாரா??
இல்லை என்பதே பதில்.
காரணம் இருந்த அனைத்தையும் நாம் உடைத்து விட்டோம். பிரித்து விட்டோம்.
ஒரு சிலர் செய்த களவாணி வேலைகளுக்காக
எம்மோடு நின்றவர் எமக்காக உழைத்தவர் அத்தனை பேரையும் ஒரே கூடையில் போட்டு ஒதுக்கிவிட்டோம்.
முடிவு??? எமக்காக எதுவுமில்லை.
எமக்காக குரல் கொடுக்க பலமான எந்த அமைப்புமில்லை.
 
இப்பவும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.
அமைப்புக்களில் சேரணும் பலப்படுத்தணும்
நல்லது கெட்டவற்றை உள்ளிருந்து பேசணும். தயாரா???
தயாரில்லை எனில் எமக்கு விடிவே இல்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 6
 
Bigboss
 
நெடுக சீரியசாகத்தான் பேசணுமா என்ன?
 
Bigboss நிகழ்ச்சியில் தம்பிமாரெல்லாம் ஓவியா ஓவியா என்று புலம்பித்திரிகிறார்கள்.
 
பாவமா இருக்கு பார்க்க...
 
40 வருசமா நம்ம மன்மதனை புரிஞ்சுக்கவே மாட்டமா?
 
நம்ம நாயகனின் புற்றுக்குள்ள போன எந்த எலியாவது கடிபடாமல் போயிருக்கா...???:grin::grin::grin:
Link to comment
Share on other sites

On 26.7.2017 at 2:58 PM, விசுகு said:

உண்மையில் பலி கொடுத்த நீதிபதி நீதியை காலில் போடாது பதவி விலகியிருக்கணும்.

எங்கையோ உதைக்குது அண்ணை.

தீர்ப்பு வராமலா போகும். வரும் ரொம்ப கடினமா வரும்.

12 hours ago, விசுகு said:
இப்போ கேள்வி என்னவெனில் இதை பயன்படுத்தி எமது இலக்கை அடைய நாம் அடைய நாம் தயாரா??
இல்லை என்பதே பதில்.

உண்மை

சட்டி சுடுகுது எண்டு அடுப்புக்குள்ள விழ எவருமே தயாரில்லைத்தான்.:grin:

On 26.7.2017 at 2:58 PM, விசுகு said:

இந்த வீரவணக்கத்தை செய்பவர்கள்

மறுபடியும் ஆயிரம் வீர வணக்கங்கள் இந்த மாவீரருக்கு.

Bilderesultat for death funeral

RIP  Sgt. Hemaratne

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 7
 
புலிகளுக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்த புலிகளின் நுண்கலைக்கல்லூரி அதிபருக்கு இலங்கை நீதிமன்றம் ஆயுட்தண்டனை விதித்திருக்கிறது.
உண்மையில் அவர் இதற்காக கவலைப்படப்போவதில்லை. தான் செய்தது தப்பென்று அவருக்கும் புலிகளுக்கும் தெரியும். காலம் இட்ட கட்டளை அந்த நேரம் அது தேவையாக இருந்தது. அதற்கான தண்டனையை அவர்கள் மனதார ஏற்பார்கள்.
 
இங்கே கேள்வி என்னவென்றால் அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் கைகளை உயர்த்தியபடி ஆயிரக்கணக்கில் சரணடைந்தார்கள். அவர்கள் எங்கே? அவர்களை கொன்றவர்களுக்கு என்ன தண்டனை?? நாட்டு மக்கள் மீது பாரபட்சமற்ற நீதி இருந்திருந்தால் இருந்தால் அவர் ஏன் போராடப்போறார்? ஆட்களை சேர்க்கப்போறார்??
காரணம் அப்படியே இருந்தால் அவருக்கு தான் செய்தது இப்பவும் சரியாகத்தானே தெரியும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 8

ராஜீவ் காந்தி கொல்லப்படாதிருந்தால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என்று ஐயா சம்பந்தர் சொல்லியிருக்கிறார்.
31-12-2016க்கு முன் தீர்வு என்றார்
இப்பொழுது ராஜீவ் காந்தியை கொல்லாதிருந்தால் தீர்வு வந்திருக்கும் என்கிறார்.
கூட்டிக்கழிச்சு பார்த்தால் தீர்வுக்கு இந்தியா தான் தடை என்பது புரியும்
சம்பந்தர் ஐயா மைக்கையும் இந்தியா போவதையும முதலில் நிறுத்துவது நல்லது. அதன் பின்னர் தான் தீர்வைப்பற்றி ஏதாவது நாம் சிந்திக்கமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/07/2017 at 6:54 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 7
 
புலிகளுக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்த புலிகளின் நுண்கலைக்கல்லூரி அதிபருக்கு இலங்கை நீதிமன்றம் ஆயுட்தண்டனை விதித்திருக்கிறது.
உண்மையில் அவர் இதற்காக கவலைப்படப்போவதில்லை. தான் செய்தது தப்பென்று அவருக்கும் புலிகளுக்கும் தெரியும். காலம் இட்ட கட்டளை அந்த நேரம் அது தேவையாக இருந்தது. அதற்கான தண்டனையை அவர்கள் மனதார ஏற்பார்கள்.
 
இங்கே கேள்வி என்னவென்றால் அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் கைகளை உயர்த்தியபடி ஆயிரக்கணக்கில் சரணடைந்தார்கள். அவர்கள் எங்கே? அவர்களை கொன்றவர்களுக்கு என்ன தண்டனை?? நாட்டு மக்கள் மீது பாரபட்சமற்ற நீதி இருந்திருந்தால் இருந்தால் அவர் ஏன் போராடப்போறார்? ஆட்களை சேர்க்கப்போறார்??
காரணம் அப்படியே இருந்தால் அவருக்கு தான் செய்தது இப்பவும் சரியாகத்தானே தெரியும்.

 

Link to comment
Share on other sites

1 minute ago, விசுகு said:
புலிகளுக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்த புலிகளின் நுண்கலைக்கல்லூரி அதிபருக்கு இலங்கை நீதிமன்றம் ஆயுட்தண்டனை விதித்திருக்கிறது.
உண்மையில் அவர் இதற்காக கவலைப்படப்போவதில்லை. தான் செய்தது தப்பென்று அவருக்கும் புலிகளுக்கும் தெரியும். காலம் இட்ட கட்டளை அந்த நேரம் அது தேவையாக இருந்தது. அதற்கான தண்டனையை அவர்கள் மனதார ஏற்பார்கள்.
 
இங்கே கேள்வி என்னவென்றால் அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் கைகளை உயர்த்தியபடி ஆயிரக்கணக்கில் சரணடைந்தார்கள். அவர்கள் எங்கே?

இதைத்தான் நானும் கேட்கின்றேன்

உங்கள் பிள்ளைகளில் ஒருவரை அவரின் விருப்பமே இல்லாமல் வலுக்கட்டாயமா தூக்கிச் சென்று ஒரு கொலைஞனிடம் ஒப்படைத்து விட்டு பின்னர் அவன் கொன்றுவிட்டான் என்றா கதறுவீர்கள் 

கடத்தினவன் கேவலமானவன் 

கொன்றவன் - அவன் இயல்பு

அவன் இயல்பு தெரிந்தும் கடத்தி அவனிடம் கொடுத்த மிருகம்தான் கேவலமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

இதைத்தான் நானும் கேட்கின்றேன்

உங்கள் பிள்ளைகளில் ஒருவரை அவரின் விருப்பமே இல்லாமல் வலுக்கட்டாயமா தூக்கிச் சென்று ஒரு கொலைஞனிடம் ஒப்படைத்து விட்டு பின்னர் அவன் கொன்றுவிட்டான் என்றா கதறுவீர்கள் 

கடத்தினவன் கேவலமானவன் 

கொன்றவன் - அவன் இயல்பு

அவன் இயல்பு தெரிந்தும் கடத்தி அவனிடம் கொடுத்த மிருகம்தான் கேவலமானது.

இதைத்தான் நானும் கருத்துக்களாக எதிர்பார்த்தேன்

இலங்கை ஒரு  கொலைகார  அரசு

கொல்வது அதன் இயல்பு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 9

 

ஒருவரை வளர்த்து விடுதலின் பலன்???

 

எந்த ஒரு படைப்பாளியையோ

கலைஞரையோ

இணைய நண்பர்களையோ

நாம் மிக மிக கவனமாக ஆராய்ந்து

அவர்களுக்கு ஆதரவும் ஊக்கமும் கொடுக்கணும். 


எமது இனம் இவ்வாறு அவசரப்பட்டு வளர்த்துவிட்டு

கொடுத்தவிலைகள் கொஞ்ச நஞ்சமல்ல.


எமது மேடைகளில் வளர்த்துவிட்டு மிதித்த கடாக்கள் பல உண்டு.

அந்த அனுபவங்களால் மிக மிக கவனமாக இருப்பேன்.


இந்தக்கிழமை எனது தம்பிமார் ரொம்ப பாடம் படித்திருப்பார்கள்.tw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26.7.2017 at 11:28 AM, விசுகு said:

பட்டது + படிச்சது + பிடித்தது - 3

நீதி தள்ளாடுதலும் - வீரவணக்கமும்

நீதிபதி ஒருவர் நீதிமன்றை தெருவில் அதுவும் போதையிலிருந்தோருக்கு நடாத்த முற்பட்டதும் அதனைத்தொடர்ந்து அவரது பாதுகாப்பாளர் தனது துப்பாக்கிக்கு பலியாகியதும் 
நீதி காலில் விழுந்ததும் இந்தவாரச்சம்பவங்கள்.

உண்மையில் பலி கொடுத்த நீதிபதி நீதியை காலில் போடாது பதவி விலகியிருக்கணும்.
.

ஒருவர் நீதிபதியாக இருப்பதால் அவரிடம் மனிதாபிமானம் இருக்கக் கூடாது என்பது தவறான கண்ணோட்டம். நீதிபதி என்றால் ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர்....... அவர் எங்கேயோ இருக்க வேண்டும் என்பதும்  அல்ல .

இங்கே அவர் நீதியைக் காலில் போடவில்லை. மனிதாபிமானத்தையும் தோழமையையும் கையில்    எடுத்திருந்தார்.

தன்னுடன் பதினேழு வருடங்கள் தனக்கான  பாதுகாப்புக்கு கடமையில் இருந்த ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது . நீதிபதியின் கூற்றின் படி தன்னைப் பாதுகாக்க முனைந்தபடியால் தான் அவருடைய உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் நீதிபதியின்  உயிர்காத்துதன் உயிரைக் கொடுத்த அந்த நல்ல மனிதனுக்காக அவருடைய இல்லாளின் காலில் வீழ்வது என்பது மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனுக்கும் உள்ள இயல்பாகும்.
அப்படியான செயலை எல்லோராலும் செய்யமுடியாது.

அந்தக் காட்சிகளை பார்த்தபோதும் அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட அந்த வீரனின் பிள்ளைகளை நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் தான் தத்தெடுப்பதாகக் கூறிய போதும் கடவுள் ஒருவர் கண் முன்னால் தெரிந்தால் எப்படி இருப்பாரோ அப்படியேதான் நீதிபதி அவர்களும் கண்களில் தெரிந்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27.7.2017 at 2:42 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 5
 
ஐரோப்பிய நீதி மன்றத்தீர்ப்பு
 
 
 
இப்போ கேள்வி என்னவெனில் இதை பயன்படுத்தி எமது இலக்கை அடைய நாம் அடைய நாம் தயாரா??
இல்லை என்பதே பதில்.
காரணம் இருந்த அனைத்தையும் நாம் உடைத்து விட்டோம். பிரித்து விட்டோம்.
ஒரு சிலர் செய்த களவாணி வேலைகளுக்காக
எம்மோடு நின்றவர் எமக்காக உழைத்தவர் அத்தனை பேரையும் ஒரே கூடையில் போட்டு ஒதுக்கிவிட்டோம்.
முடிவு??? எமக்காக எதுவுமில்லை.
எமக்காக குரல் கொடுக்க பலமான எந்த அமைப்புமில்லை.
 
இப்பவும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.
அமைப்புக்களில் சேரணும் பலப்படுத்தணும்
நல்லது கெட்டவற்றை உள்ளிருந்து பேசணும். தயாரா???
தயாரில்லை எனில் எமக்கு விடிவே இல்லை.

இந்த விடையத்தில் பொதுவாக எல்லாச் செயற்பாட்டாளர்களும் ஒரே தராசில் நிறுத்தப்பட  முடியாது.
இருப்பினும் இறுதிக்கட்டத்தில் அநேகமான செயற்பாட்டாளர்கள் நடந்து கொண்ட விதம் எல்லாச் செயற்பாட்டாளர்களுக்கும்  கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது. போர் முடிகின்ற நிலையிலும் பல செயற்பாட்டாளர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்த நிதி எங்கே எப்போது எப்படி யாரிடம் சேர்ந்தது என்பது ஒரு பெரிய கேள்விக்குறி???

அதைவிட சில பொறுப்பாளர்கள் உண்மையிலேயே தங்கள் சக பொறுப்பாளர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டிருந்தார்.
அதற்கு போட்டியும் பொறாமையும் கூடாக காரணமாக இருந்திருக்கலாம்.
பிழைகள் நடந்துள்ளன. அவற்றை ஏற்றுக்கொண்டு அதற்கான விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டு மேலே செல்லலாம்.
ஆனால் காலம் கடந்து விட்டது.

தரம் பிரித்து யார் நல்ல செயற்பாட்டாளர் யார் கெட்ட  செயற்பாட்டாளர் என்று அறிந்து கொள்ளும் ஆவல் மக்களிடம் இன்று இல்லை.

மக்களை நம்ப வைப்பதும் அவர்களை ஒரே அணியில் இணைய வைப்பதும்  இனி வருங்காலங்களில் செயற்படும் செயற்பாட்டாளர்களின்  முறையிலேயே தங்கியுள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/07/2017 at 11:44 PM, ஜீவன் சிவா said:

இதைத்தான் நானும் கேட்கின்றேன்

உங்கள் பிள்ளைகளில் ஒருவரை அவரின் விருப்பமே இல்லாமல் வலுக்கட்டாயமா தூக்கிச் சென்று ஒரு கொலைஞனிடம் ஒப்படைத்து விட்டு பின்னர் அவன் கொன்றுவிட்டான் என்றா கதறுவீர்கள் 

கடத்தினவன் கேவலமானவன் 

கொன்றவன் - அவன் இயல்பு

அவன் இயல்பு தெரிந்தும் கடத்தி அவனிடம் கொடுத்த மிருகம்தான் கேவலமானது.

ஜீவன் சூப்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாத்தியார் said:

ஒருவர் நீதிபதியாக இருப்பதால் அவரிடம் மனிதாபிமானம் இருக்கக் கூடாது என்பது தவறான கண்ணோட்டம். நீதிபதி என்றால் ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர்....... அவர் எங்கேயோ இருக்க வேண்டும் என்பதும்  அல்ல .

இங்கே அவர் நீதியைக் காலில் போடவில்லை. மனிதாபிமானத்தையும் தோழமையையும் கையில்    எடுத்திருந்தார்.

தன்னுடன் பதினேழு வருடங்கள் தனக்கான  பாதுகாப்புக்கு கடமையில் இருந்த ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது . நீதிபதியின் கூற்றின் படி தன்னைப் பாதுகாக்க முனைந்தபடியால் தான் அவருடைய உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் நீதிபதியின்  உயிர்காத்துதன் உயிரைக் கொடுத்த அந்த நல்ல மனிதனுக்காக அவருடைய இல்லாளின் காலில் வீழ்வது என்பது மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனுக்கும் உள்ள இயல்பாகும்.
அப்படியான செயலை எல்லோராலும் செய்யமுடியாது.

அந்தக் காட்சிகளை பார்த்தபோதும் அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட அந்த வீரனின் பிள்ளைகளை நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் தான் தத்தெடுப்பதாகக் கூறிய போதும் கடவுள் ஒருவர் கண் முன்னால் தெரிந்தால் எப்படி இருப்பாரோ அப்படியேதான் நீதிபதி அவர்களும் கண்களில் தெரிந்தார்

இளஞ்செழியனாக அவர் அங்கு   செயற்படவில்லை

வீதியில்   போதையிலிருந்த இருவரது சண்டைக்கு நீதி  வழங்க முனைந்து

தனது பாதுகாப்பாளரை பலி  கொடுத்தமையே

அவரது குற்ற  உணர்வுக்கும்  மனக்குமுறலுக்கும் காரணம்

இனி  அவரது தீர்ப்புக்கு  அழுது காலில் விழுபவர்களை  என்ன  சொல்லப்போகிறார்  இந்த  குற்றவாளி  என்பதே எனது கருத்து

நன்றி வாத்தியார் கருத்துக்கும் நேரத்துக்கும்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாத்தியார் said:

இந்த விடையத்தில் பொதுவாக எல்லாச் செயற்பாட்டாளர்களும் ஒரே தராசில் நிறுத்தப்பட  முடியாது.


இருப்பினும் இறுதிக்கட்டத்தில் அநேகமான செயற்பாட்டாளர்கள் நடந்து கொண்ட விதம் எல்லாச் செயற்பாட்டாளர்களுக்கும்  கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது. போர் முடிகின்ற நிலையிலும் பல செயற்பாட்டாளர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்த நிதி எங்கே எப்போது எப்படி யாரிடம் சேர்ந்தது என்பது ஒரு பெரிய கேள்விக்குறி???

அதைவிட சில பொறுப்பாளர்கள் உண்மையிலேயே தங்கள் சக பொறுப்பாளர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டிருந்தார்.
அதற்கு போட்டியும் பொறாமையும் கூடாக காரணமாக இருந்திருக்கலாம்.
பிழைகள் நடந்துள்ளன. அவற்றை ஏற்றுக்கொண்டு அதற்கான விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டு மேலே செல்லலாம்.
ஆனால் காலம் கடந்து விட்டது.

தரம் பிரித்து யார் நல்ல செயற்பாட்டாளர் யார் கெட்ட  செயற்பாட்டாளர் என்று அறிந்து கொள்ளும் ஆவல் மக்களிடம் இன்று இல்லை.

மக்களை நம்ப வைப்பதும் அவர்களை ஒரே அணியில் இணைய வைப்பதும்  இனி வருங்காலங்களில் செயற்படும் செயற்பாட்டாளர்களின்  முறையிலேயே தங்கியுள்ளது 

அதைத்தான் நானும் குறிப்பிட்டேன்

பிழைகள்

விமர்சனங்களை  நாமும் செயற்பாட்டாளர்களாக இருந்து கொண்டே  வைக்கணும்

அதுவே தீர்வைத்தரும்

பார்வையாளர்களால் ஒரு   போதும் தீர்ப்பை தரமுடியாது

அது  சரியாகவும் இருக்காது

என்னைப்பொறுத்தவரை காலம்  கடந்து செல்லவில்லை

ஆனால் அவ்வாறு நாம் தோடர்ந்து காலம் கழித்து வருகின்றோம்

ஒரு  சிலரது தலையில் போட்டுவிட்டு நாம் வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்கும்வரை......???

இதையே  எழுதினேன்.

நன்றி வாத்தியார்  சகோதரா

 நேரத்துக்கும்  கருத்துக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இளஞ்செழியனாக அவர் அங்கு   செயற்படவில்லை

வீதியில்   போதையிலிருந்த இருவரது சண்டைக்கு நீதி  வழங்க முனைந்து

தனது பாதுகாப்பாளரை பலி  கொடுத்தமையே

அவரது குற்ற  உணர்வுக்கும்  மனக்குமுறலுக்கும் காரணம்

இனி  அவரது தீர்ப்புக்கு  அழுது காலில் விழுபவர்களை  என்ன  சொல்லப்போகிறார்  இந்த  குற்றவாளி  என்பதே எனது கருத்து

நன்றி வாத்தியார் கருத்துக்கும் நேரத்துக்கும்....

 

போதை, வீதித்த தகராறு என்பதெல்லாம் நீதிபதி அவர்களின் உயிரைப் பறிப்பதற்காக விரிக்கப்பட்ட வலையாகவே எடுக்கப்பட வேண்டியுள்ளது.

அது எவ்வாறாயினும் நீதிபதி ஒருவரின் கண் முன்னே வீதியில் ஒரு தகராறு நடக்கும் பொது நீதிபதி அவர்கள் தனது பாதுகாப்புக்கு கருதி  கண்டும் காணாதது போலச் செல்வதே குற்றமாகும்.

உண்மையான நீதிபதியாக நடந்து அந்த இடத்தில் வாகனத்தை வீட்டுக் கீழிறங்கியதும் தனது பாதுகாப்பு அதிகாரிகளை சம்பவத்தைக் கட்டுப்படுத்த அனுப்பியதும்  அவரது குற்றமென்றால் அது எப்படி ???

அப்படியென்றால் காவல் அதிகாரியைக் குறிவைத்துச் சுட்டவரை எப்படி அழைப்பது??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

போதை, வீதித்த தகராறு என்பதெல்லாம் நீதிபதி அவர்களின் உயிரைப் பறிப்பதற்காக விரிக்கப்பட்ட வலையாகவே எடுக்கப்பட வேண்டியுள்ளது.

அது எவ்வாறாயினும் நீதிபதி ஒருவரின் கண் முன்னே வீதியில் ஒரு தகராறு நடக்கும் பொது நீதிபதி அவர்கள் தனது பாதுகாப்புக்கு கருதி  கண்டும் காணாதது போலச் செல்வதே குற்றமாகும்.

உண்மையான நீதிபதியாக நடந்து அந்த இடத்தில் வாகனத்தை வீட்டுக் கீழிறங்கியதும் தனது பாதுகாப்பு அதிகாரிகளை சம்பவத்தைக் கட்டுப்படுத்த அனுப்பியதும்  அவரது குற்றமென்றால் அது எப்படி ???

அப்படியென்றால் காவல் அதிகாரியைக் குறிவைத்துச் சுட்டவரை எப்படி அழைப்பது??? 

வித்தியா கொலை  உட்பட 

அவரது இன்றைய  பொறுப்புக்களை

ஆபத்துக்களை அவர்  உணரணும் முதலில்.

அதை விடுத்து நீதி  மன்றத்தை  

வீதியில்  போதையிலிருப்பவர்களிடம் நடத்த நினைத்தது எப்படி  சரியாகும்??

 போதையில் வீதியில் நிற்பவர்களுக்கு  நாம் சமாதானம் செய்வோமா?? 

தேவையற்று  ஒரு போதையிலிருந்தவரிடம்  தனது பணியாளரை பறி  கொடுத்ததே அவரது மனச்சாட்சியை  உறுத்தி  வருகிறது

அதன் தொடர்ச்சியான  அவரது செயல்களும் அந்த குற்ற  உணர்வே..

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 10

தமிழரசுக்கட்சியின் செயலாளர் திரு. மாவை சேனாதிராசா அவர்களுக்கு பவளவிழா கொண்டாடப்படுகிறது.


அந்த விளம்பரத்தை பார்த்தபோது தமிழரசுக்கட்சி புலம்பெயர் மக்களால் நடாத்தப்படுகிறதா என்றே எண்ணத்தோன்றுகிறது.

விழாவில் வாழ்த்துரை வழங்குபவர்கள் அத்தனை பேரும் புலம் பெயர்ந்தவர்கள்.

விழாவை நடாத்துவது கனடா அமைப்பு.

சரி விழா நடக்கும் இடம் புலம் என்றால் அது தான் இல்லை.

நடப்பது யாழ்ப்பாணத்தில்.

20525709_1859840321000923_21343749343676
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 11
 
வரலாற்றில் இன்றைய நாள்.
 
ஒரு மக்கள் தலைவன் எப்படி இருக்கணும் என்பதற்கும் ஒரு போராளி எப்படி இருக்கணும் என்பதற்கும் தலைவரே உதாரணம்.
 
நாலாவது உலக வல்லரசின் இராணுவத்துக்கு முன்னால் என் மக்கள் கவனம் என்று சொல்ல எம் தலைவரால் மட்டுமே முடியும். அந்தளவுக்கு எதையும் விட மக்களை நேசிப்பவர் அவர்.
 
L’image contient peut-être : 2 personnes, personnes debout et plein air
Inuvaijur Mayuran

வரலாற்றில் இன்றைய நாள்
********************************

04.08.1987 - 04.08.2017
(30வது ஆண்டில்)

சுதுமலை பிரகடனம்.

“எனது பேரன்பிற்குரிய மக்களே! இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பினை வழங்குவதை தவிர வேறு வழியில்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குகிறோம். எனினும் இந்த ஒப்பந்தத்தின்மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிட்டுமென்று நான் நம்பவில்லை. சிங்களப் பேரினவாத வேதாளம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி ஏப்பமிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தனித் தமிழீழம் அமைவதிலேயே தங்கியுள்ளது என்பது எனது மாறுபடாத நம்பிக்கையாகும். இடைக்கால அரசை ஏற்றுக்கொள்ள தேர்தல் ஒன்றில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமக்கு ஏற்படலாம். அதேவேளை, எந்த சந்தர்ப்பத்திலும் நான் தேர்தல் ஒன்றில் போட்டியிடவோ, அல்லது முதல் மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ளவோ மாட்டேன் என்பதை உறுதியாக உங்களிடம் கூறிகொள்ள விரும்புகிறேன்.”

- வே. பிரபாகரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 11

 

ஏன் இங்க வந்தனீ??? - குறும்படம்

ஒவ்வொரு தமிழரையும் நித்திரை கொள்வது போல் நடித்தபடி உலகம் கேட்கும் கேள்வி இது.

அதே கேள்வியை குறும்படம் மூலம் முன் வைத்தபடம்.

தம்பி ஐனா போன்ற தாயகப்பற்றுள்ள இளைஞர்களின் கூட்டு முயற்ச்சி.


இந்த குறும்படத்தை நாவலர் குறும்படப்போட்டிக்கான தெரிவின் போது பார்க்க முடிந்தது.

பரிசுகளை அள்ளிச்சென்ற படம் என்று சொல்வதைவிட

எந்த பரிசை இதற்கு தவிர்க்கலாம் என நடுவர்கள் திண்டாடிய தமிழரின் வரலாற்று காவியமிது.

நாவலர் விருதை எதற்காக உருவாக்கினார்களோ அதற்கான முழுத்திருப்தியை தந்தபடம்.

தொடரட்டும் தங்கள் கலைப்பணி. வாழ்க வளமுடன்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.