Jump to content

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 12
 
NEYMAR + PSG - காசு பணம் துட்டு மணி மணி
 
NEYMAR - ஒரு திறமையை பாவிப்பதைவிட வெல்வதற்காக குறுக்குவழிகளை நாடும் ஒரு விளையாட்டு வீரர்.
இவரது ஆட்டங்களின்போது இவர் எந்த நேரத்தில் என்ன செய்வார் என தெரியாது ரசிகர்களை ஒரு இக்கட்டான நிலையில் வைத்திருப்பவர்.
 
PSGக்கு என்று ஒரு தரமுண்டு. அது இனிமாறும். நாறும்.
ஆனால் அதன் ஐரோப்பிய கோப்பை கனவு பலிக்கலாம். தரமா? வெற்றியா என்றால்...?
இப்பொழுதெல்லாம் வெற்றியே முன் நகர்கிறது.
 
காசு பணம் துட்டு மணி மணி...
 
19884202_1603177869714375_50858601593711
Link to comment
Share on other sites

  • Replies 339
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 13
 
நேர்மை - நடிப்பு
 
எந்த ஒருவிடயத்திலும் சில அனுபவங்களையும் பாடங்களையும்  பெற்றுக்கொள்ளமுடியும்.
சிலவேளைகளில் அது பெரும் உண்மைகளை எடுத்துரைப்பதுமுண்டு.
BIGBOSS - இலிருந்து
ஓவியாவுக்கான மக்கள் ஆதரவும் ஜூலியுடனான கடுப்பும்.
கொஞ்சம் தூர நோக்கினால் பொதுவாழ்விலுள்ளவர்கள் நேர்மையாக இருக்கணும்.
நடிகைகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
நேர்மை தவறும் பொதுநலம்சார்ந்தவர்கள் கரும்புள்ளி செம்புள்ளி குத்தப்பட்டு தூக்கி எறியப்படுவார்கள்.
மக்களுக்கு மேலும்மேலும் இனம் காட்டப்படுவார்கள் (அதைத்தான் கமலும் இறுதிவரை செய்தார் tw_anguished:)
நடிகைகள் மன்னிக்கப்படுவார்கள்.
அவர்களது கண்ணீர் விலை மதிப்பற்றது.
ஆட்சி அமைக்கும் தகுதி பெறும். :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 14

இன்று 08-08 என் நண்பனின் பிறந்தநாள்.

அதிகம் பழகியது அதிகம் பகிர்ந்தது அதிகம் புரிந்து கொண்டது என்றால் அது என் மதி தான்.

அப்படித்தான் அவனுக்கும்.

முறையால் நான் சித்தப்பா அவன் மகன் என்ற போதும் நல்ல நண்பர்கள் நாங்கள்.

உயர்தரப்படிப்பு எம்மை பிரித்தபோதும்
விடுமுறை என்றால் ஒன்றில் அவன் கொழும்பிலிருப்பான் அல்லது நான் ஊரிலிருப்பேன்.

லீவு முடியும்வரை ஒன்றாகவே எங்களை காணலாம்.

எமது வாழ்வில்
படிப்பிலிருந்து பொறுப்புக்கள், காதல், திருமணம்........ என எல்லாமே

நாங்கள் இருவரும் பேசி எடுத்த முடிவுகளே.

இன்று முழுவதும் எனது கண்கள் கலங்கி இருக்கும்.

ஏனெனில் அவன் இன்று எம்மோடு இல்லை.

எனது 
உயிருள்ளவரை உன் நினைவிருக்கும்.

வாழ்த்துக்கள் மதி.

L’image contient peut-être : 2 personnes, fleur
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம் விசுகு....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 15
 
முதல் ஈழத்தமிழ் பெண் விமானி
 
இந்த சொல் தற்பொழுது அடிக்கடி அடிபடுகிறது. ஈழத்தமிழர்கள் மிகவும் சிரமப்பட்டும் மண் பற்றோடும் உயர்நிலை அடைவதால் இவ்வாறு ஈழத்தமிழர் எவராவது உயர்வடைவதை ஈழத்தமிழினம் தானாகவே கொண்டாடுகிறது. இந்த ஒற்றுமையும் ஒருவருக்கொருவரான போற்றுதலும் எம்மிடையே மேலும் மேலும் உயர்நிலையை அடைவதை ஊக்குவிக்கும். எனவே இது வரவேற்கத்தக்கதே.
 
அதேநேரம் அக்கறையின் பால் சில விடயங்களை சில தகவல்களை ஆராயாமல் சேர்த்துவிடுகின்றோம்.
 
ஈழத்தமிழ் மக்களைப் பெருமைப்பட வைக்கும் வகையில் அர்ச்சனா செல்லத்துரை அவர்கள் பெண்விமானியாக சாதனை படைத்துள்ளார். ஆனால் முதல் ஈழத்தமிழ்ப்பெண் விமானி என்பது தவறான முன்னுதாரணமாகும்.
 
அந்த பிள்ளைக்கு இதனை எடுத்துரைப்பதன் ஊடாக இனியும் இவ்வாறு தவறு ஏற்படாதவகையில் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு எமக்குண்டு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 16
 
ஒரு நாள் குளிக்காது விட்டால் நாறும் உடலை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் ஆடுகிறார்கள் மனிதர்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 17

சொந்த வாழ்விலும் சரி முகநூல் இணையவழிகளிலும் சரி

எனது நண்பர்களாக இருப்பதற்கு ஒரேயோரு விடயத்தை மட்டுமே நான் பார்ப்பதுண்டு.

தேசியத்தலைவரை அவர்கள் தலைவராக ஏற்கவேண்டுமென்பதில்லை.

அவரை ஒரு போராளியாகவாவது ஏற்றிருக்கணும் என்பது மட்டுமே.

இன்று எனது முகநூல் 600 நண்பர்களை அடைந்திருப்பதாக சொல்கிறது. 
அதற்காகவே இப்பதிவு.

மேலே நான் எழுதிய கருத்தில் மாறுபாடுடையவர்கள்

தவறுதலாக எவராவது சேர்க்கப்பட்டிருப்பின் அறியத்தாருங்கள்

அல்லது எனது நட்பில் இருப்பதா இல்லையா என்பதை நீங்களே முடிவெடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 18

ஒரு நாட்டின் சுதந்திரதினம்

ஒருவர்தனது நாட்டின் சுதந்திரதினத்தை கொண்டாடுகிறார் என்றால்

அவர் எமது எதிரியானாலும் அவரது சந்தோசத்துக்கும்

அவர் வணங்கும் கொடிக்கும் மரியாதை கொடுக்கணும்.

அந்த நாளில் அவை மீதான பகை பற்றி பேசுவதோ

அந்தக்கொடியின் சரி பிழைகள் பற்றி பேசுவதோ 
அந்த நண்பரை அந்த மக்களை கோபப்படுத்துவதாகும்.

அந்தவகையில் இன்று மௌனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 19

திடீர் லீவு?

சிலர் காலையில் எழும்பியவுடன் எந்தக்காரணமும் இன்றி முடிவெடுப்பார்கள்

இன்றைக்கு வேலைக்கு போகப்போவதில்லை என்று.

நான் வேலை செய்த இடங்களில் ஒரு போதும்

எவ்வளவு தான் சுகயீனமாக இருந்தபோதும்

இது போன்று திடீர் ஓய்வு எடுத்ததில்லை.

அதிக சுகயீனமாக இருந்தால் கூட முக்கிய நேரத்தில் மட்டுமாவது

அன்று சென்று தான் பின்னர் அனுமதியோடு லீவு எடுப்பதுண்டு.

காரணம் முதலாளிக்காகவோ மேலதிகாரிகளின் கோபதாபங்களுக்காகவோ அல்ல.

நான் இவ்வாறு திடீரென ஓய்வெடுத்தால் பாதிக்கப்படப்போவது எனது சக நண்பனே.

எமது சக நண்பன் இவ்வாறு திடீரென லீவெடுத்தால்

எமக்கு எவ்வளவு கடினமாகவும் கடுப்பாகவும் இருக்கும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 20
 
சீரியசாக மட்டும் தான் பேசமுடியுமா என்ன?
 
கோழியா?
முட்டையா?
முதலில் வந்தது??
 
(நன்றி தம்பி நெடுக்கு)
 
 
 
 

 

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 21

இன்று படப்பிடிப்பு நாளாம்.

இதோ எனது சின்ன மகளின் கமராக்கைவண்ணம்.

safe_image.php?d=AQBlvWaJwh3gnLUg&w=160&
33 Followers, 28 Following, 95 Posts - See Instagram photos and videos from @okami_19
INSTAGRAM

https://www.instagram.com/okami_19/?hl=fr

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 22
 
போட்டோக்களும் நாமும்...
 
இன்று வேற்றுநாட்டவர்கள் முகநூலில் இணையங்களில் தமது குழந்தைப்பருவ படங்களிலிருந்து தமது ஒவ்வொரு பருவ வளர்ச்சிகளின் படியே தமது மற்றும் தமது குடும்ப போட்டோக்களை போடுவார்கள்.
 
சிலவேளைகளில் கண்கள் பனிப்பதுண்டு. என்னிடம் சிறுவயது மற்றும் பாடசாலைப்பருவ மற்றும் எனது குடும்பப்படங்கள் எதுவுமில்லை. எல்லாம் கலவரத்தோடு போச்சு.
 
நான் மட்டுமல்ல ஈழத்தமிழர்களது நிலையே இது தான். எத்தனை இடம்பெயர்வு???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 23
 
முதலாளி + தொழிலாளி = பேச்சுவார்த்தை (கொடுக்கல் வாங்கல்)
 
ஒரு பெரிய நிறுவனத்தில் (600 தொழிலாளர்கள்) தொழிலாளர்களின் நலன் கருதி முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தும் இருவரில் ஒருவராக  நானும் இருந்தேன்.
சம்பள உயர்வு கேட்கும் போது நாம் ஒரு மணித்தியாலத்துக்கு இத்தனை சதம் தானே என கணக்கு பார்ப்போம்.
ஆனால் முதலாளிகள் அதனை வேலை செய்யும் ஆட்களின் தொகையாலும்
வருடத்துக்கு எவ்வளவு எனவும் கணக்கு போடுவார்கள்.
அது மில்லியன்களை தாண்டிவிடும். எனவே அது நிறைவேறாது.
 
ஆனால் அதே நிறுவனத்துக்கும்  முதலாளிக்கும் தொழிலாளிக்கும் நன்மை தரும்
சில சட்டங்களும் அரசகொடுப்பனவுகளும் இருக்கின்றன.
அவற்றை கேட்பதினூடாக தொழிலாளர்கள் நன்மை பெறுவதுடன் நிறுவனமும் நன்மையும்  மதிப்பும் அடையும்.
 
அவற்றையே நாங்கள் இருவரும் செய்தோம்
 
1- வீடில்லாதவர்களுக்கு வீட்டுவசதி (1% patronal et 1% logement)
2- வேலை செய்யும் காலத்துக்கு ஏற்ப சம்பள உயர்வு
3- வருட இறுதியில் நிறுவனத்தின் இலாபத்தில் ஒரு பங்கு (13வது மாத சம்பளம்)
4- மருத்துவ காப்புறுதி (Mutuelle)
5- இரவு வேலை செய்பவர்களுக்கு வாகன வசதி (Taxi)
6- குறிப்பிட்ட மணித்தியாலயத்துக்கு மேல் (5 மணித்தியாலம்) இரண்டு சாப்பாட்டுக்கு பணம்
7- தமக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து நிறுவனத்தின் பொருளாதாரத்தை சிதையாமல் பார்ப்பவர்களுக்கு கூடுதல் கொடுப்பனவு (Prime)
8- வட்டியில்லாக்கடன் வசதி
 
தொழிலாளர்களின் உரிமையை பாதுகாத்தபடி இவ்வாறு பலவற்றை செய்த திருப்தி என்றும் உண்டு.
 
உங்கள் எவருக்காவது பயன்படலாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 24
 
நல்லூர்க்கந்தன் திருவிழா
 
பார்க்க ஆசையாகவும் பெருமையாகவும் இருக்கு.
மக்கள் சந்தோசமாக கூடி ஆடி மகிழ்வதை வரவேற்கணும் ஊக்கப்படுத்தணும்.
 
ஆனால் புலம் பெயர் தமிழர்கள் இந்த விழாவுக்கு மட்டும் போவது
அந்த மக்கள் வெள்ளத்தில் கலப்பது மட்டும் ஒரு போதும் கந்தனது கருணையை தராது.
அவர்கள் வன்னிக்கும் கிழக்குக்கும் போகணும். அதுவே தர்மமும் கூட.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 25
 
ஒருவருக்கு மீனை கொடுப்பதை விட மீனை எப்படி பிடிப்பது என கற்றுக்கொடுப்பதே சரி
 
இப்படி ஒரு பழமொழியுண்டு.
இதன் அர்த்தம் பணஉதவி செய்யாமல்
பணத்தை எவ்வாறு உழைக்கலாம் என்பதை கற்றுக்கொடுத்தலாகும்.
 
இதை தெரிந்த பலரும்
தமது பிள்ளைகளுக்கு இதை சொல்லிக்கொடுத்திருக்கிறீர்களா??????
 
இல்லை என்பது தான் பதில்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 26
 
கடவுள் = நம்பிக்கை - மறுப்பு
 
கடவுள் மறுப்புக்கும் அறிவுக்கும் முடிச்சுப்போடுவதை காணக்கூடியதாக உள்ளது.
சிலர் தம்மை பகுத்தறிவாளன் என்றபடி
தாம் அறிவாளிகள் என்றும் முடிச்சு போடுகிறார்கள்.
இது தவறு.
பகுத்தறிவென்பது சில மூட நம்பிக்கைகளிலிருந்து வெளி வருவது.
அதற்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை.
அவ்வாறு கடவுள் மறுப்புக்கும் அறிவுக்கும் தொடர்பிருப்பதாக சொல்பவர்கள்
உண்மையில் இன்னோரு மூடநம்பிக்கையை புகுத்துகிறார்கள்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 27

வெளிநாட்டுப்பறப்புக்களைவிட வாழும் தேசத்தை முழுமையாக அறிதலே விருப்பமான ஒன்று எனக்கு.

அந்தவகையில் இந்தமுறை சென்ற இடம் COLMAR.

இந்த மண்ணின் கதையை நாம் படித்து வைக்கணும்.

சில தலைமுறைகளுக்கு முன்னர்வரை

சொந்த மொழி கலாச்சாரங்களுடன் வாழ்ந்த இந்தமண்ணின் மக்கள்

பின்னர் யேர்மனிய பிரெஞ்சு அரசுகளால் மாறி மாறி ஆட்கொள்ளப்பட்டு

இன்று தமது மொழி மற்றும் தேசத்தை தொலைத்து பிரெஞ்சு மக்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

அமெரிக்கர்களுக்கு இந்த சிலையை வடிவமைத்ததும்

முதன் முதலில் கல்குலேற்றரை கண்டுபிடித்ததும் இந்த மண்ணில் பிறந்தவர்களே.

அதன் ஞாபகார்த்தமாக இன்னொரு சிலை அந்த மண்ணில் இன்றும்.

மரத்தூண்களினூடே சீமெந்தால் சூழப்பட்ட அவர்களது வீடுகள்

இன்றும் அவ்வாறே காட்சி தருகின்றன. பாதுகாக்கப்படுகின்றன.

L’image contient peut-être : 1 personne, debout, herbe, plante, arbre, ciel, plein air et nature
L’image contient peut-être : 1 personne, debout, ciel et plein air
L’image contient peut-être : plein air
21432815_10209859030733546_5252597932039
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 28
 
பேனாவின் கூர்மை அறிவோமா??
 
ஆயதப்போராட்டம் மற்றும் வன்முறைக்கு எதிராக எழுதுபவர்களை கவனித்தால் ஒன்று புரியும்
இவர்களின் எழுத்துக்களில் மிகுந்த வன்முறையும் ஆத்திரப்படுத்துதலும் இருக்கும்.
 
இதனுடன் ஒப்பிடும் போது ஆயுதங்கள் சாதாரணமானவையாகிவிடும்.
 
இந்த எழுத்து வன்முறைக்கு நிகரான ஆயுதம் உலகில் எதுவுமே இல்லை எனலாம்.
 
கத்தி மட்டுமல்ல பேனாவும்இரு பக்கமும் கூர்மையானது தான்.
அதனால் தான் அது அவர்களையே பதம் பார்த்து விடுகிறது.
 
இதிலே பேனாவை ஆயுதமாகப்பாவிப்பவர்கள் கையிலே
ஆயுதமும் வந்து விட்டால்........???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 29
 
வெல்வதற்காக எதையும் செய்யும் மனநிலை.
 
நேற்று BIGBOSS நிகழ்ச்சி பார்த்தபோது சுட்டது.
 
வெல்வதற்காக
ஒரே குடும்பமாக நண்பர்களாக பழகுபவர்களில் ஒருவர்
சக நண்பரின் மேல் மிளகாய்த்தூளை கரைத்து ஊற்றுகிறார்கள்.
வெல்வதற்காக எதையும் செய்யலாம் என முடிவெடுத்திருந்தால்
கெட்ட பெயரோடு இன்று தமிழருக்கென்று ஒரு நாடு இருந்திருக்கும்.
ஆனாலும் அத்தனை அக்கிரமங்களையும்
போர்க்குற்றங்களையும் செய்து வென்ற சிங்களம்
உலகத்தால் ஒதுக்கப்பட்டா விட்டது?????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 29
 
ஆறுமுக நாவலர் பற்றி அதிகம் பேசப்படுகிறது.
தயவு செய்து ஒருவரை விமர்சிக்க முன்னர் அவர் பற்றி முழுமையாக அறியுங்கள்.
காலம் சூழ்நிலைகளை உணருங்கள்.
 
குறும்படப்போட்டிக்கான விருதுக்கு
நாவலர் பெயரை வைத்தபோது வந்த எதிர்ப்பும் இவ்வாறானதே.
 
தமிழும் சைவமும் அழியும் நிலையிலிருந்த சூழ்நிலையில்
அதைக்காத்தவர்கள் வரிசையில் முதன்மையானவர் ஆறுமுக நாவலர் அவர்கள்.
 
 
நாளை ஒரு காலத்தில் பிரபாகரன் பற்றியும் இவ்வாறு விவாதங்கள் நடக்கக்கூடும்.
 
போற்றுதற்குரியதை நல்லதை எடுத்துக்கொள்வோம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 30
 
நேற்றைய BIGBOSS பார்த்தவர்களுக்கு ஒன்று புரிந்திருக்கும்.
தமிழகத்தின் அரசியல்நிலை இது தான்.
ஒருத்தர் நாடகம் கதை வசனம் உணர்ச்சி வயப்படுதல் மற்றும் ஏமாற்றுதல் (சினேகன்)
மற்றவர்
ஒன்றை
அடைவதற்காக எதையும் சவாலாக ஏற்று மூர்க்கத்தனமாக வெல்லும்வரை போராடுபவர் (சுயா)
 
இரண்டு பேருமே தமிழகத்துக்கு ஆபத்தானவர்கள் என்பது தான்
தமிழக அரசியல் தரும் பாடம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 31
 
பிள்ளைகளின் திருமணம்
 
இப்பொழுதெல்லாம் வளர்ந்த மக்களை வைத்திருப்பவர்களுக்கு
அவர்களது திருமணம் சார்ந்து முடிவுகளை எடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.
 
என்னைப்பொறுத்தவரையும்
என் பிள்ளைகளைப்பொறுத்தவரையும்
எனது இறகுகளின் கீழ் அவர்களுக்கிருக்கும் பாதுகாப்பு
சுதந்திரம் வேறு எங்கும் கிடைக்கப்போவதில்லை என்பதை
நானும் பிள்ளைகளும் உணர்கின்றோம்.
 
ஆனாலும் சமூகமும் காலமும் எனது ஆயுளும் உந்தி தள்ளுகின்றன.
 
இது தான் அநேகமான பெற்றோர்களின் நிலையாக உள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 32
 
உண்மையான
பிரபலமான
கள்ளங்கபடமற்ற ஒருவருக்கு
விளம்பரம் தேவையில்லை என்கிறார்கள்?
 
அப்புறம் கடவுளுக்கு ஏன் இத்தனை விளம்பரம்?????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 33
 
அந்த முருகனுக்கே இவர் நிகரானவர்.
அ.....ந்..... த முருகனுக்கே இவர் நிகரானவர்.........
 
நாம் எதையும் மறக்கவுமில்லை
மன்னிக்கவுமில்லை
 
அவர்களை புதைக்கவுமில்லை
விதைத்தோம்
எம்முள் விதைத்தோம்.............
 
L’image contient peut-être : 1 personne, ciel et plein air
 
 
L’image contient peut-être : 5 personnes, feu
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 34

வித்தியாவுக்கான நீதி

சொந்த பந்தம்
ஊர் உறவு 
லஞ்சம் 
பணத்திமிர் 
அரச அதிகாரம் 
அடக்குமுறை 
சட்ட ஆளுமை 
அத்தனையையும் தாண்டி.....

சில மாதங்களாக தலையை குனிந்த எனது மண் தலை நிமிர்கிறது.

நீதிக்காக வீதியில் இறங்கிய
போராடிய 
இதற்காக கடைசிவரை உழைத்த
அனைவருக்கும் நன்றிகள்

தர்மம் வாழும்
நிலைக்கும்
நீ அதற்காக  இறுதிவரை  போராடினால்......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.