Jump to content

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் யாருக்கு?


Recommended Posts

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் யாருக்கு?

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

 
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் யாருக்கு?
 
லண்டன்:

இங்கிலாந்தில் நடந்து வரும் 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ‘கிளைமாக்ஸ்’க்கு வந்து விட்டது. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியாவும், முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மிதாலிராஜ் தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி, ஆச்சரியப்படும் வகையில் அசத்தி வருகிறது. லீக் சுற்றில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 3-வது இடத்தை பிடித்த இந்திய அணி அரைஇறுதியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை பதம் பார்த்து 2-வது முறையாக இறுதி சுற்றை எட்டியது. இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த இந்திய அணி அதில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை வரலாறு படைக்கும் உத்வேகத்துடன் இந்திய வீராங்கனைகள் வரிந்து கட்டி நிற்பார்கள். கேப்டன் மிதாலி ராஜ் (ஒரு சதம், 3 அரைசதத்துடன் 392 ரன்), முந்தைய ஆட்டத்தில் 171 ரன்கள் குவித்த சூறாவளி ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு அதிகமாக நிலவுகிறது. பூனம் ரவுத்தும் (295 ரன்), மந்தனாவும் (232 ரன்) கடந்த சில ஆட்டங்களில் சோபிக்கவில்லை. மந்தனா இங்கிலாந்துக்கு எதிரான தொடக்க லீக்கில் 90 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். அதே போல் முக்கியமான இந்த ஆட்டத்தில் எழுச்சி பெற்றால் அது அணிக்கு வலுவூட்டுவதாக அமையும்.

இந்திய அணி மகுடம் சூடினால் உலக கோப்பையை வென்ற முதல் ஆசிய அணி, மொத்தத்தில் 4-வது அணி என்ற பெருமையை பெறும். 2005-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடிய இந்திய வீராங்கனைகளில் மிதாலி ராஜ், வேகப்பந்து வீச்சாளர் கோஸ்வாமி ஆகியோர் இந்த சீசனிலும் களத்தில் இருக்கிறார்கள். பெண்கள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற மகத்தான சாதனைகளுடன் வலம் வரும் இவர்களுக்கு இது தான் கடைசி உலக கோப்பையாகும். அதனால் கோப்பையை உச்சிமுகர்வதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

பந்து வீச்சில் இந்தியாவின் பலம் சுழல் தான். இந்த உலக கோப்பையில் சுழற்பந்து வீச்சு மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய (41 விக்கெட்) அணி என்ற பெருமை இந்தியாவையே சாரும். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா 12 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் நம்பிக்கை நாயகியாக மின்னுகிறார்.

மூன்று முறை சாம்பியனான இங்கிலாந்து அணி தொடக்க லீக்கில் இந்தியாவிடம் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதன் பிறகு வரிசையாக வெற்றிகளை குவித்த இங்கிலாந்து அணி கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது. பியூமோன்ட் (387 ரன்), கேப்டன் ஹீதர் நைட் (363 ரன்), விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் (351 ரன்) ஆகியோர் தான் இங்கிலாந்து அணியின் தூண்கள். இவர்களை சீக்கிரம் சாய்த்து விட்டால் இங்கிலாந்தின் முதுகெலும்பை உடைத்து விடலாம்.

இந்த உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 377 ரன்களும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 373 ரன்களும் குவித்து இங்கிலாந்து மலைக்க வைத்தது. நடப்பு தொடரில் சராசரியாக அதிக ரன்ரேட்டை (5.79) கொண்டுள்ள அணி இங்கிலாந்து தான். உள்ளூரில் விளையாடுவது அந்த அணிக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும். அது மட்டுமின்றி லீக்கில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வெறியில் இருக்கிறார்கள். அந்த எண்ணத்துடன் இருப்பதை ஹீதர் நைட்டும் ஒப்புக்கொண்டார். அதனால் இறுதி ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. மைதானத்தில் 27 ஆயிரம் ரசிகர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 62 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 26-ல் இந்தியாவும், 34-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டத்தில் முடிவு இல்லை. உலக கோப்பையில் இவ்விரு அணிகளும் சந்தித்துள்ள 10 ஆட்டங்களில் 4-ல் இந்தியாவும், 6-ல் இங்கிலாந்தும் வெற்றி கண்டு இருக்கின்றன.

மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் வெற்றி யாருக்கு என்பதை கணிப்பது கடினம். ஆனால் சூழ்ந்திருக்கும் உச்சக்கட்ட நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணிக்கே வெற்றிக்கனி கிட்டும். சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.4¼ கோடியும், தோற்கும் அணிக்கு ரூ.2 கோடியே 12 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: மந்தனா, பூனம் ரவுத், மிதாலி ராஜ் (கேப்டன்), தீப்தி ஷர்மா, ஹர்மன்பிரீத் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி, சுஷ்மா வர்மா, ராஜேஷ்வரி கெய்க்வாட், கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூனம் யாதவ் அல்லது எக்தா பிஷ்ட்,

இங்கிலாந்து: வின்பீல்டு, டானி பியூமோன்ட், சாரா டெய்லர், ஹீதர் நைட் (கேப்டன்), நதாலி ஸ்சிவர், பிரான் வில்சன், கேத்ரின் புருன்ட், ஜெனி குன், லாரா மார்ஷ், அன்யா சிரப்சோலே, அலெக்ஸ் ஹர்ட்லி.

இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/23080906/1098023/India-v-England-today-clash-in-finals-at-ICC-WWC-2017.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை வருசமா இதுவும் நடக்குது.. எவராவது அக்கறை எடுத்துப் பார்க்கிறியளா..?! சினிமால வாற நடிகைகள் பற்றிய கிசு கிசுன்னா.. விழுந்தடிச்சுப் பார்க்கிறாங்ய்யா..!:rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

இத்தனை வருசமா இதுவும் நடக்குது.. எவராவது அக்கறை எடுத்துப் பார்க்கிறியளா..?! சினிமால வாற நடிகைகள் பற்றிய கிசு கிசுன்னா.. விழுந்தடிச்சுப் பார்க்கிறாங்ய்யா..!:rolleyes:tw_blush:

Bild könnte enthalten: 1 Person, Text

:grin: :grin: tw_lol:  :D:  tw_love:

Link to comment
Share on other sites

மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 229 ரன்கள் இலக்கு நிர்ணயம் #WWC17Final

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன.  இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்கு நிலையான தொடக்கம் கிடைத்தது. ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் பறிக்கொடுத்து விழுந்தது. இதனால் ரன் குவிப்பில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டாலும், பிரான் வில்சன் மற்றும் டெய்லர் பார்ட்னர் ஷிப் அந்த அணிக்கு கைக்கொடுத்தது. 

ஜுலன் கோஸ்வாமி


இதனால், இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது. பிரான் வில்சன் 51, டெய்லர் 45 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில், ஜுலன் கோஸ்வாமி மூன்று விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். பூனம் யாதவ் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

 

இதையடுத்து 229  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது. 

114/2 (29.0/50 ov, target 229)
 
இந்தியா
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து வெற்றி 9 ஓட்டங்களால்.

உலகக் கோப்பையை மீண்டும் கைப்பற்றியது. tw_blush:

Link to comment
Share on other sites

மகளிர் உலக கோப்பை: பரபரப்பான போட்டியில் நூலிழையில் கோப்பையை தவறவிட்ட இந்தியா

லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசாத்தில் வென்ற இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்துபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து

தொடக்கத்திலேயே அதிர்ச்சி

தனது வெற்றி இலக்கான 229 ரன்களை நோக்கி பேட் செய்ய தொடங்கிய இந்தியா இரண்டாவது ஓவரிலேயே 5 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் மந்தானா ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் மித்தாலி ராஜ் பொறுப்பாக விளையாடினாலும் 17 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார்.

அரைச்சதம் எடுத்த பூனம் ராவத், ஹர்மன்ப்ரீத் கவுர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅரைச்சதம் எடுத்த பூனம் ராவத், ஹர்மன்ப்ரீத் கவுர்

அரைச்சதம் எடுத்த பூனம் ராவுத், ஹர்மன்ப்ரீத் கவுர்

இரண்டு விக்கெட்டுக்களை இந்தியா இழந்த நிலையில், பூனம் ராவத் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் நேர்த்தியாகவும், அவ்வப்போது அடித்தாடியும் இந்திய அணிக்கு சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்தினர்.

86 ரன்கள் எடுத்த பூனம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption86 ரன்கள் எடுத்த பூனம்

இரண்டு சிக்ஸர்களின் உதவியோடு 80 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து விளையாடிய பூனம் ராவத், மிக சிறப்பாக விளையாடி 115 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் வேதா கிருஷ்ணமூர்த்தி பொறுப்பாக விளையாடி 35 ரன்கள் எடுத்தார்.

ஆனால், ஒரு கட்டத்தில் வேதா கிருஷ்ணமூர்த்தி, ஜுலன் கோஸ்வாமி ஆகியோர் தொடர்ந்து ஆட்டமிழக்க ஆட்டம் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

4-ஆவது முறையாக உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து

இறுதியில் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இந்தியா 219 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால் 9 ரன்கள் வித்தியாசாத்தில் இறுதியாட்டத்தில் வென்ற இங்கிலாந்து அணி நான்காவது முறையாக மகளிர் உலக கோப்பையை வென்றது.

இறுதியாட்டத்தில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் இறுதியில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 229 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்திய அணிக்கு 229 வெற்றி இலக்குபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்திய அணிக்கு 229 வெற்றி இலக்கு

இன்றைய போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் நைட், இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்யும் என்று அறிவித்தார்.

வின்ஃபீல்ட்டின் விக்கெட்டை இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ராஜேஸ்வரி காயக்வாட் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் நைட் 1 ரன்னில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். இந்திய பந்துவீச்சாளர் பூனம் யாதவ் 2 விக்கெட்டுக்களை எடுத்தார்.

அரைச்சதம் அடித்த ஸ்கிவர்படத்தின் காப்புரிமைICC Image captionஅரைச்சதம் அடித்த ஸ்கிவர்

துல்லியமான பந்துவீச்சு

இங்கிலாந்து அணி ஒரு பக்கம் விக்கெட்டுக்களை இழந்து கொண்டிருந்தாலும், அந்த அணியின் ஸ்கிவர் மற்றும் பிரண்ட் ஆகியோர் நன்கு அடித்தாடினர்.

துல்லியமாக பந்துவீசிய ஜுலன் கோஸ்வாமிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதுல்லியமாக பந்துவீசிய ஜுலன் கோஸ்வாமி

ஆனால், இந்திய பந்துவீச்சாளரான ஜுலான் கோஸ்வாமியின் துல்லியமான மற்றும் நேர்த்தியான பந்துவீச்சால் இங்கிலாந்து அணியால் விரைவாக ரன்கள் குவிக்க முடியவில்லை. தான் பந்துவீசிய 10 ஓவர்களில் 23 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை ஜுலான் கோஸ்வாமி எடுத்தார்.

இறுதியில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி 229 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

http://www.bbc.com/tamil/sport-40699888

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.